மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 23 டிசம்பர், 2021

பிக்பாஸ்-5 : பாவப்பட்ட பாவனி

பிக்பாஸ்-5 பரபரப்பான இறுதி வாரங்களுக்குள் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது. இதுவரை நடந்த நான்கு சீசன்களைப் போல் எந்தவிதமான அதிரடி விளையாட்டுக்களும் இதுவரை கொடுக்கப்படவில்லை என்றாலும் இந்த முறை கொடுத்த விளையாட்டுக்கள் எல்லாம் வித்தியாசமாய் ரசிக்க வைக்கும்படி இருந்தது. அதேபோல் இந்த முறை காதல், கத்திரிக்காய் - பாவனிக்கு அமீரின் முத்தம், வருணுக்கு அக்சராவின் முத்தம் தவிர்த்து - எதுவும் இல்லாதது ஆறுதல். மேலும் இதுவரை எந்தவொரு குழுவும் சேராமல் எல்லாருமே தனித்துப் போட்டி போடுவது மிகச் சிறப்பு.

திங்கள், 20 டிசம்பர், 2021

பிக்பாஸ் : பாவனி Vs அமீர்

பிக்பாஸ் சீசன் - 5 எழுபத்தைந்து நாட்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. நேற்றைய அபிநய்யின் வெளியேற்றத்துக்குப் பின் இறுதிப் பத்துபேர் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இன்னும் நான்கு வாரங்களே இருக்கும் நிலையில் வரும் வாரங்களில் இரட்டை வெளியேற்றமோ அல்லது வார இடையில் வெளியேற்றமோ இருந்தால்தான் இறுதி மூன்று என்ற இடத்துக்கு வர முடியும். கூட்டம் அதிகம் என்பதால்தான் இந்த முறை இரகசிய அறைக்கு யாரும் அனுப்பப்படவில்லை.

புதன், 15 டிசம்பர், 2021

பிக்பாஸ் : தாமரை Vs பாவனி

பிக்பாஸில் ப்ரியங்காவின் செயல்பாடுகள் குறித்து நீண்ட கட்டுரை எழுதலாம். அதுக்கு முன்னர் பாவனியைச் சுற்றும் பிரச்சினைகளைப் பற்றி இன்னும் பார்க்க வேண்டியது இருக்கிறது.

திங்கள், 13 டிசம்பர், 2021

பிக்பாஸ் : அபிநய் Vs பாவனி

பிக்பாஸ் பார்த்தாலும் அது குறித்தான பதிவுகளைத் தொடர்ந்து எழுத முடிவதில்லை. கடந்த நான்கு சீசன்களை விட இந்த சீசன் மிகவும் நன்றாகவே இருக்கிறது. பத்து வாரங்களைக் கடந்த நிலையில் குழுக்களாகப் பிரியாமல் அவரவர் தங்களது விளையாட்டை விளையாடுவது என்பது இந்த சீசனில் மட்டும்தான். ஒருவேளை அபிஷேக் இருந்திருந்தால் பிரியங்கா, அபிநய், பாவனி, அபிஷேக் என ஒரு குழு உருவாகியிருக்கலாம் என்றாலும் அபிஷேக் எல்லாப் பக்கமும் காய் நகர்த்தி, எல்லாரும் தனது பேச்சை மட்டுமே கேக்க வேண்டும் என்றுதான் நினைத்திருப்பார். அப்படி எதுவும் நடக்காமல் வந்தார்... அதே போல் விளையாண்டார்... சென்றார்... அவ்வளவுதான்.

சனி, 20 நவம்பர், 2021

நூல் விமர்சனம் : மலையாளத் திரையோரம்

லையாளத் திரையோரம்...

ஆசிப் மீரான் அண்ணன் எழுதியிருக்கும் மலையாளத் திரைப்பட விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூல். இதில் மொத்தம் 19 படங்கள் குறித்தான விமர்சனப் பார்வை இடம் பெற்றிருக்கிறது.

ஞாயிறு, 14 நவம்பர், 2021

நூல் விமர்சனம் : ஸ்னேஹி எனும் நாய்

 ஸ்னேஹி எனும் நாய்...

சகோதரர் கவிஞர் சிவமணி அவர்களைச் சிறுகதை ஆசிரியராக மாற்றியிருக்கும் சிறுகதை தொகுப்பு.

சனி, 13 நவம்பர், 2021

பிக்பாஸ் - 5 : 10. ராஜூவை குறி வைக்கும் போட்டியாளர்கள்

'என்ன பிக்பாஸ் எழுதலையா..?' என்ற கேள்விகள் என்னை நோக்கிச் சிலரிடமிருந்து வந்தது. கிட்டத்தட்ட பத்து நாட்களாக எழுதவில்லை எனபதற்கான காரணம் பிக்பாஸில் விறுவிறுப்பு இல்லை என்பதைவிட கொஞ்சம் பிரச்சினைகளில் சிக்கி இருந்ததால் எழுதும் மனநிலை இல்லாமலேயே இருந்தது.

மனசு பேசுகிறது : ஷார்ஜாவில் புத்தக வெளியீடு

வியாழன் மாலையை இனிதாக்கிய நிகழ்வாக ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இரண்டு தமிழ் நூல்களின் வெளியீடு அமைந்தது, எப்பவுமே அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழும விழா சிறப்பாகத்தான் அமையும் என்பதை நேற்றைய நிகழ்வும் எடுத்துக்காட்டியது. அதேபோல் விழாவுக்குப் பின்னான உரையாடல்கள் மன அழுத்தத்தைத் தீர்க்கும் மருந்து என்பதையும் நேற்றும் நாங்கள் அனுபவித்து மகிழ்ந்தோம். 

ஞாயிறு, 7 நவம்பர், 2021

பிலாலுக்கு பிரிவு உபச்சார விழா

பிரச்சினைகளுக்கு இடையே நகரும் வாழ்க்கையில் நேற்றைய நாள் நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களைச் சந்தித்து நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நாளாக அமைந்தது. சகோதரர் பிலால் அலியார் துபையிலிருந்து பஹ்ரைனுக்குப் பதவி உயர்வுடன் மாறிச் செல்வதற்காக ஆசிப் அண்ணனின் 'சத்திரத்தில்' சிறியதாய் ஒரு பிரிவு உபச்சார விழா, மனநிறைவாய் நடந்தது.

சனி, 6 நவம்பர், 2021

வேரும் விழுதுகளும் " 'உணர்வுகளை அசைத்துப் பார்த்தது' - எழுத்தாளர் பால்கரசு சசிகுமார்

நாவல் வாசிப்பின் பின் தனது கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க வைத்ததில் என் எழுத்து வெற்றி பெற்றிருக்கிறது என்பது மகிழ்ச்சி. அதேசமயம் வட்டார வழக்கு அறியாதவர்களுக்கு வாசிப்பு அயற்சியைத் தரும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். 

வட்டார வழக்கில் எழுதுவதே எனக்கு வரும் என்பதைவிட, இந்நாவல் இந்த வழக்கில் இல்லை என்றால் இதன் ஜீவன் கண்டிப்பாக இத்தனை அழுத்தமாய் எல்லார் மனதுக்குள்ளும் போய் அமர்ந்திருக்காது. சாதாரண வாழ்க்கைக் கதையாக, ஒரு குடும்பக் கதையாக, பத்தோடு பதினொன்றாகத்தான் இருந்திருக்கும்.

தன் கதையோடு இதனை ஒப்பிட்டு எழுதிய பால்கரசுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

----- 


வேரும்_விழுதுகளும். நாவல் விமர்சனம்.

ண்பர் நித்யாகுமார் (பரிவை சே.குமார்) எழுதிய 'வேரும் விழுதுகளும்' நாவல் விமர்சனம்.

இந்நாவலில் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது தென்தமிழகத்தின் குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் பண்பாட்டு அடையாளங்களின் ஒன்றான வட்டாரப் பேச்சு வழக்கு, அந்த மொழிநடையில் சரளமாக எழுதியிருப்பது ஒரு வாசகனாய் என்னை மிகவும் கவர்ந்தது.

கிராமத்து வாழ்வியலில் வட்டாரப் பேச்சு வழக்கு மொழி மட்டுமின்றி, கிராமத்து வாழ்க்கையே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வரும் காலத்தில் மறந்தவற்றை மீட்டெடுக்கும் விதமாக ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆங்காங்கே தூவிச் செல்வது இந்நாவலின் சிறப்பாக நான் கருதுகிறேன்.

'விடிஞ்சு வெள்ளக்கோழி கூவிருச்சு'

'கருக்கல்ல'

'வாடா வடுவா'

'ஆத்துப் பூத்து வருது'

'நான் அக்காடான்னு இருக்கேன்'

'மானம் வெட்டரிச்சுருச்சு'

'பொண்டுகசட்டிப் பய'

'லாத்தலாம்'

'கட்டய நீட்டிக்கிறேன்'

'கட்டுக் கட்டுனும் திரியிற மனுசன்'

'ஏண்டி ஆளாளுக்கு என்னய ஆயிறிய'

என இதுபோன்ற வார்த்தைகளுக்கிடையில் இரட்டை அர்த்தங்கள் தரும் நகைச்சுவை வார்த்தைகளும் நாவலில் ஆங்காங்கே சிறப்பாக வந்திருக்கிறது. மதுரை வட்டார வழக்கு மொழியறியாதவர்கள் இந்நாவலை வாசிக்கையில் மொழிச்சிக்கல் அயர்ச்சியைத் தரும் என்றே நினைக்கிறேன்.

இந்நாவலின் கதைக்கரு ஒரு கிராமத்தில் வசிக்கும் கந்தசாமி தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் தன் பிள்ளைகளுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுப்பது என்ற ஒற்றை வரிக் கதையாக இருந்தாலும், அவரை மையப்படுத்தி, அவரின் மகள்கள், மகன்களின் குடும்பங்களை வைத்துப் பிண்ணப்பட்ட கதைக்களம் உரையாடல்கள் மூலமாகவே நகர்த்தப்பட்டாலும் விறுவிறுப்பாகவே நகர்வது நாவலின் பலம்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையும், சொத்து பிரித்தல், கொடுக்கல் வாங்கல் என நகரும் கதைக்குள் கண்ணதாசன் மற்றும் கந்தசாமி என்னும் கதாபாத்திரங்கள் மூலம் கிராமத்து வாழ்வியலைச் சொன்னதுடன் விவசாயம் செய்வதில் இருக்கும் கஷ்டத்தையும், அத்தனை கஷ்டத்திற்கும் பின்னே கிடைக்கும் ஆத்ம திருப்தியையும் மெல்லிய உணர்வுகளுடன் மயில்தோகையின் வருடலைப் போல் எழுத்தாளர் கதையில் சொல்லியிருப்பது என்னைப்போன்ற கிராமத்து அடித்தட்டிலிருந்து வந்த வாசகர்களின் உணர்வுகளை மெல்ல அசைத்துப் பார்க்கத்தான் செய்கிறது.

தீபாவளி, பொங்கல், கோவில் திருவிழாக்கள் போன்ற கிராமத்து நிகழ்வுகளில் குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்று கூடுவதும், தங்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன மனஸ்தாபங்களைப் பேசித் தீர்த்துக் கொள்வதும் கொடுக்கும் ஆனந்தமும் ஆத்மார்த்த அன்பும் வேறெதிலும் கிடைப்பதில்லை. இந்நாவலை வாசிக்கையில் என் கடந்த கால வாழ்க்கை ஞாபகத்தில் வந்து போனது.

எங்களுடையது மிகப் பெரிய குடும்பம் - அப்பாவின் குடும்ப உறவுகள், அம்மாவின் குடும்ப உறவுகள் என ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் - எல்லோரும் பொங்கல் திருவிழாவின் போது எங்கள் கிராமத்தில் ஒன்று கூடுவதும், குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்துக் கொண்டாடுவதுடன் குடும்பத்தின் மூதாதையர்களை நினைவு கூறும் விதமாகப் பொங்கல் வைத்து கொண்டாடும் நிகழ்வுகளை இக்கதை என் கண்முன்னே உணர்வுப்பூர்வமாய் நிறுத்தியது எனலாம்.

இன்று குடும்ப உறவுகளுக்குள் போட்டியும் பொறாமையுமே நிறைந்து இருக்கிறது. பெரும்பாலான குடும்பங்களில் விட்டுக் கொடுக்கும் மனோபாவமும் சகிப்புத்தன்மையும் இல்லாமல் போய்விட்டதாலேயே குடும்ப உறவுகள் சிதைவடைந்து கிடப்பதைப் பார்க்கும் போது மனம் வருந்துகிறது.

கண்ணதாசன் தன்மானம் பார்க்காமல் குடும்ப உறவுகளை ஒன்றிணைக்க தன் சித்தப்பா மகளின் கணவர் சுரேஷ் காலில் விழுந்து கும்பிட்டு வீட்டிற்குக் கூப்பிடுவதும், தன் சொந்த மச்சினன் இல்லையென்றாலும் தனது சித்தப்பா மீதும் அந்தக் குடும்பத்தின் மீதும் வைத்திருக்கும் அன்பின் காரணமாக இவன் நம் காலில் விழுந்து விட்டானே என அதுவரை முறுக்கிக் கொண்டிருந்த சுரேஷ் மனம் வருந்தி, தன் பிடிவாத குணத்தைத் தூக்கியெறிவதிலிருக்கும் நெகிழ்ச்சிதான் விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துகிறது.

மண் பாத்திரத்தில் சமைத்துக் குடும்பமே கூடியமர்ந்து கைநிறைய வாங்கிச் சாப்பிட்டு, புரையேறிக் கண்ணீர் பெருகும் அளவுக்கு வாய்நிறைந்த சோற்றோடு உறவுகளின் கேலிப்பேச்சில் மகிழ்ந்து வாழ்ந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நம்மோடு சேர்ந்து வீட்டுச் சுவர்களும் அந்த மகிழ்வைச் சுமந்து வாழ்ந்த வாழ்க்கை எத்தனை இனிதானது. இன்றைய பொருளாதார வளர்ச்சி, நகரமயமாக்கல், அறிவியல் வளர்ச்சி போன்ற காரணத்தால் கிராமத்து வாழ்வென்பது சிட்டுக் குருவிகளைப் போன்று அரிதாகிப் போய்விட்டது.

இக்காலத்திற்கு மிகவும் தேவையான நாவல் வேரும் விழுதுகளும்.

-பால்கரசு-

12/10/2021

-'பரிவை' சே.குமார்.

வேரும் விழுதுகளும் : 'கிராமத்துக்குள் சென்ற உணர்வு' - எழுத்தாளர் நௌஷாத்கான்

தோ ஒன்று நம்மை ஆக்கிரமித்து இருக்கும் போது அதிலிருந்து மீள முடியாமல் இருக்கும் நிலையில் எப்போதேனும் ஏதோ ஒரு ஆசுவாசம் கிடைக்கும். அப்படித்தான் நேற்றைய இரவைச் சகோதரர நௌஷாத்தின் 'வேரும் விழுதுகளும்' விமர்சனம் கொடுத்தது.

வியாழன், 4 நவம்பர், 2021

பிக்பாஸ் - 5 : 9. நமுத்துப்போன கமலின் வாரம்

 தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

செவ்வாய், 2 நவம்பர், 2021

பிக்பாஸ் - 5 : 8. 'இசை'யால் வசமிழந்த மது

பிக்பாஸில் போன வாரத்தில் தாமரையின் காயினை எடுத்த விதமே பேசுபொருளாக அமைந்தது. அதுவே வாரத்தை நகர்த்திக் கொண்டிருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தாமரை கோபமாகப் பேசினாலும் கிராமத்தாளாக வார்த்தைகளை விட்டாலும் மற்றவர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து மீண்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சின்னப்பொண்ணு பாடிய நாட்டுப்புறப் பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் செம.

வியாழன், 28 அக்டோபர், 2021

பிக்பாஸ் - 5 : 7. நெருப்பாய் மாறிய 'காற்று' தாமரை

மலின் வருகைக்குப் பின், அபிஷேக்கின் வெளியேற்றத்துக்குப் பின் வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் சுறுசுறுப்பு குறைவாக இருப்பதாகவே எல்லாரும் காட்டிக் கொண்டார்கள். இனி வரும் வாரங்கள் பஞ்ச பூதங்களைப் பிரதிபலிக்கும் விதமாக ஐந்து காயின்களையும் வைத்து நகர்த்தப்படும், வாரம் ஒரு காயினை வைத்திருப்பவர் நாட்டாமை ஆகலாம் என பிக்கி கொளுத்திப் போட்டு முதல் வாரத்தில் பிரச்சனைக்குரிய இசையின் நெருப்பை அடுப்படிக்குள் வைத்தார்.

திங்கள், 25 அக்டோபர், 2021

பிக்பாஸ் -5 : 6. ஆள நினைத்து வீணாப்போன அபிஷேக்

காயினை எடுக்கவும் அடிச்சிக்கவுமாத்தான் இருந்தானுங்க, பிக்கி கூப்பிட்டு காயினை யார் யார் வச்சிருக்கீங்களோ அவங்களே வச்சிக்கங்க, உங்களுக்கு இன்ன இன்ன சக்தி கிடைக்கும் அப்ப சக்திமான் மாதிரி ஆகிக்கங்க, ஆனாலும் சூனாபானாக்களாச் சூதனமாப் பொழச்சிக்கங்க, கருவாட்டுப் பானையை பத்திரப்படுத்தாட்டி நாய் தூக்கிட்டுப் போற மாதிரி எவனாச்சும் ஆட்டையைப் போட்டுட்டா அந்தச் சக்தியெல்லாமே அவனுக்குப் போயிரும், அம்புட்டுத்தான்னு சொல்லிட்டாரு.

வெள்ளி, 22 அக்டோபர், 2021

பிக்பாஸ் - 5 : 5. அசிங்கப்பட்ட அபி

பிக்பாஸில் பட்ஜெட் போட்டி தொடர்ந்து கொண்டிருந்தது, காயின் கை மாறிப் போய்க் கொண்டேயிருந்தது, எல்லாரும் திருட்டுப் பேய்களாக உலாவிக் கொண்டிருக்க, ராஜூம் அண்ணாச்சியும் மட்டுமே இது எங்களுக்கு வேண்டாம் என்ற மனநிலையில் சுற்றினார்கள். சின்னப்பொண்ணுக்கும் தாமரைக்கும் நாங்க கொடுப்போம் என சிங்கர் அணி உலகுக்கே சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆமாம் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். தனுஷ் படத்தில் மச்சான் நீ கேளேன்... நீ கேளேன்னு கருணாஸ் சொல்ற மாதிரி நீ அம்மாவுக்கு கொடு, அக்காவுக்கு கொடுன்னு மற்றவர்களை ஏதோ கொடுக்க மாட்டேன்னு சொல்ற மாதிரியும் இவங்க மட்டும் விட்டுக் கொடுக்குற மாதிரியும் காட்டிக்கிட்டாங்க.

வியாழன், 21 அக்டோபர், 2021

பிக்பாஸ் - 5 : 4. பிக்கப் ஆகாத பிக்பாஸ்

சென்ற வார இறுதியில் கமல் வந்தார், என்னத்தைப் பேச என நினைத்துக் கதைகளில் நீந்தி - நீச்சலின் ஊடே நானும் ஐந்து வயதில், எங்கண்ணன் என்னய வளர்த்த விதம் என்றவற்றைத் தவறாமல் சொல்லி- பேசிக் கொண்டே போனார். இடையிடையே ஆம்புலன்ஸ் அரசியல் பேசினார்.

சனி, 16 அக்டோபர், 2021

பிக்பாஸ் - 5 : 3. சொல்லிக்க ஒன்றுமில்லை

பிக்பாஸ் சீசன்-5 கடந்த வாரத்தில் என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி விரிவான அலசல் தேவையில்லை என்றே நினைக்கிறேன். போன சீசனைவிட  ரொம்பவே மொக்கயாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

சனி, 9 அக்டோபர், 2021

பிக்பாஸ்-5 : 2. கண்ணீர் கதைகள்

பிக்பாஸில் இந்த வாரம் சொந்தக்கதை சோகக்கதை வாரம் என்பதால் - அடுத்த வாரமும் இதுதான் தொடரும் - நான்கு பேர் கதை சொல்லி முடித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களும் அதேதான் தொடர்ந்தது.

வியாழன், 7 அக்டோபர், 2021

பிக்பாஸ் 5 : 1. ஆரம்பிக்கலாங்களா..?


பிக்பாஸ் 5...

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

சினிமா : ஹோம் (மலையாளம்)

 ஹோம்...

சின்னதாய் ஒரு முன்கதை அதுதான் அந்தக் குடும்பத் தலைவனை முன்னிறுத்தும் கதை என்றாலும் அதை வெளிக்கொணர மழை இரவில் மகன் சொல்லும் 'உனக்குச் சொல்லிக்கிற மாதிரி என்ன இருக்கு... அரைப்பக்கத்தில் எழுதிடலாமே உன்னுடைய அறுபது வருட வாழ்க்கையை...' என்ற எள்ளல் வார்த்தை தேவைப்படுகிறது.

சனி, 14 ஆகஸ்ட், 2021

எதிர்சேவை - விமர்சனக் கூட்டம்

சில நிகழ்வுகள் நமக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும், அப்படியான ஒரு நிகழ்வுதான் நேற்றைய மாலையை மகிழ்வான மாலையாக, மறக்க முடியாத மாலையாக மாற்றிய 'எதிர்சேவை' விமர்சனக் கூட்டம்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

மன்றில் தேர்வு : நிர்மலாவின் முடிவு (சிறுகதை)

ங்கப்பலகை முகநூல் குழுமத்தில் திரு. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் 'மன்றில் சிறுகதைப் பட்டறை' ஒன்றை நடத்துகிறார். அதில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று ஒரு கரு கொடுக்கப்படும். அதற்கு புதன்கிழமைக்குள் எழுதப்படும் கதைகளில் இருந்து ஒரு கதை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறியதாய் ஒரு பரிசுத் தொகையும் அவர்கள் கொண்டு வர இருக்கும் சிறுகதைத் தொகுப்பில் அக்கதைக்கு ஒரு இடமும் வழங்கப்படும். கருவுக்கு எழுதுதல் என்பது சற்று கடினமே என்பதால் நான் தொடர்ந்து எழுதுவதில்லை. முதல் முறை எழுதிய போது பரிசுக்குத் தேர்வாகவில்லை என்றாலும் நல்ல கதை என அவர் போன் பண்ணிப் பேசினார். அதன்பின் இடையில் இருமுறை எழுதிப் பார்த்தேன் ஒரு பயிற்சிக்காக.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

மீண்டும் துளிர்த்த நட்பு

ல்லூரி நட்பென்பது அவ்வளவு எளிதில் மறந்து விடக்கூடியதல்ல... அது புரிதலுடன் கூடிய நட்பென்பதால் இப்போது வரை அந்த மூன்றாண்டுகளில் துறைக்குள், துறை தாண்டிய நட்பில் என்னென்ன செய்தோம் என்பதும் யார்யார் நம் நண்பர்களாய் இருந்தார்கள் என்பதும் நியாபகத்தில் உண்டு.

புதன், 21 ஜூலை, 2021

சினிமா விமர்சனம் : வெள்ளையானை

மீண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது... மாட்டிக்காம ஓடிடு' என்றுதான் தோன்றியது என்றாலும் விவசாயம், விவசாயி என்ற ஈர்ப்பின் காரணமாக பார்க்கலாம் என்று தோன்றியது.

சனி, 10 ஜூலை, 2021

புத்தக விமர்சனம் : மாயமான் (சிறுகதைகள்)

மாயமான்...

கி.ராவின் வட்டார வழக்குச் சிறுகதைகளின் தொகுப்பு,  சபரிநாதன் அவர்களின் தொகுப்பாய் காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் 2018-ல் வெளிவந்த புத்தகம் இது.

ஞாயிறு, 4 ஜூலை, 2021

சினிமா : ஆணும் பெண்ணும் (மலையாளம்)

ணும் பெண்ணும்...

மலையாளத்தில் சமீபத்தில் சின்னச்சின்னக் கதைகளின் தொகுப்பாய்... ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை என்றாலும் கதைகள் சொல்லும் விஷயம் ஒரே மாதிரியானதாய் இருக்கும் படங்கள் நிறைய வருகின்றன. அப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் விசுத ராத்திரிகள் என்றொரு படம் பார்த்தேன். அதில் பேசப்பட்ட கதைகள் எல்லாமே ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றியது. அதே போல் சமீபத்தில் பார்த்த படம் ஆணும் பெண்ணும்.

சனி, 3 ஜூலை, 2021

நூல் அறிமுகம் : செம்மீன்


றுத்தம்மா,
பரீக்குட்டி,
செம்பன்குஞ்சு,
சக்கி,
பழனி,

இவர்களைச் சுற்றி நகரும் ஒரு வாழ்க்கைக் கதை.

வெள்ளி, 25 ஜூன், 2021

மனசு பேசுகிறது பாரத் முதல் பலகை வரை

bharatwriters.com தளத்தில் இந்த வாரத்தில் எனது சிறுகதையான 'கமலம்' வெளியாகியிருக்கிறது. இன்றும் நாளையும் தளத்தில் இருக்கும். ஞாயிறன்று அடுத்த இதழ் மாற்றி விடுவார்கள். முடிந்தவர்கள் இன்று அல்லது நாளை வாசித்து உங்களோட 'LIKE'-யைத் தட்டி விட்டீங்கன்னா, ஏதோ கொடுக்கிற காசுல முன்னப் பின்ன வரும்ன்னு சொல்றாங்க... செய்வீர்களா..?

வெள்ளி, 11 ஜூன், 2021

சினிமா : மலையாளமும் தமிழும்

மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபார்க்காமல் படம் வெளியிடும் எண்ணம் நம் தமிழர்களுக்கு (கவனிக்க : 'நாம்' இல்லை) எப்போதும் இருப்பதில்லை. கொரோனா உச்சத்தில் கூட தியேட்டரில் நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி கொடுங்கள் என அரசிடம் கேட்டவர்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் தளபதிகள்தானே நாம்.

ஞாயிறு, 6 ஜூன், 2021

வேரும் விழுதுகளும் - 'வேரும் தூணும்' - சகோதரி ஹேமா

'வேரும் விழுதுகளும்'
அமீரக எழுத்தாளர் வாசிப்பாளர் குழுமத்தின் எழுத்தாளரும் தோழருமான 'பரிவை' சே.குமார் அவர்களின் 'வேரும் விழுதுகளும்' புத்தகம் ஒரு பார்வை. முகநூலை திறந்தால் அவருடைய பல சிறுகதைகளுக்கு பல அமைப்புகளிலிருந்து அவர் பரிசுகளை வாங்குவதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம். விருதுகள் என்றால்தான் பயம். பரிசுகள் என்றால் முழுமையாக நம்பலாம்.😆😆😆

சனி, 5 ஜூன், 2021

புதிய நாவலிருந்து - புவனாவும் கண்ணனும் கவர்கிறார்களா..?

ழுதி முடித்திருக்கும் நாவலில் இருந்து ஒரு பகுதி உங்கள் கருத்துக்காக... இதற்கு முன்னும் பின்னும் கதை நிறைவாக நகர்ந்திருப்பதாய் நான் உணர்ந்தேன்... இந்தப்பகுதி உங்களுக்கு அதை உணர்த்தலாம் என்று நினைக்கிறேன். வேரும் விழுதுகளும் ஒரு வாழ்வைப் பேசியதைப் போல் இதுவும் வாழ்க்கையை, குடும்பப் பிரிவை, அதன் வலியைப் பேசியிருக்கிறது. இறைவன் நினைத்தால், சகோதரர் தசரதன் மனசு வைத்தால் இதுவும் நாவலாக விரைவில் மலரும். நன்றி.

செவ்வாய், 1 ஜூன், 2021

கி.ரா.வின் 'புறப்பாடு' போல் ஒரு நிகழ்வு

சென்ற வெள்ளியன்று கி.ரா. நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் ஆசிப் மீரான் அண்ணன் கி.ராவின் 'புறப்பாடு' என்னும் கதை பற்றிப் பேசினார். கதையைச் சுருக்கமாய் சொல்வதை விட, அப்படியே வாசிக்கிறேன் அப்போதுதான் அதிலிருக்கும் நகைச்சுவையும் வட்டார வழக்கின் சுவையும் உங்களால் ரசிக்க முடியும் எனச் சொல்லி முழுக்கதையையும் வாசித்தார்.

சனி, 29 மே, 2021

அமீரகத்தில் கி.ரா. நினைவஞ்சலி

கிட்டத்தட்ட ஒன்னறை ஆண்டுகளுக்குப் பிறகு அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் வட்ட உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு நேற்றைய நாளை இனிமையாக்கியது. அலுவலகம், வீடு என எங்கும் நகராமல் நகர்ந்த வாழ்க்கைக்கு நேற்றைய மாலையில் கடற்கரையில் பேசிச் சிரித்த நிமிடங்கள் மனதை மடை மாற்றி விட்டதாக உணர முடிந்தது. 

திங்கள், 24 மே, 2021

சினிமா : நிழலும் களவும்

கொரோனா... கொரோனான்னு அதன் பின்னால் போகும் மனதை இழுத்து நிறுத்தி, தினம் கேட்கும் இழப்புக்கள், நண்பர்கள் வட்டம், முகநூல் வட்டமென எல்லாப் பக்கமும் இருந்து தினம் தினம் வந்தடையும் துக்கச் செய்திகளை விடுத்து சமீபத்தில் பார்த்த இரு மலையாளப் படங்களைக் குறித்து கொஞ்சம் எழுதலாம் என்பதால்தான் இந்தப் பதிவு.

புதன், 19 மே, 2021

மனசு பேசுகிறது : அழுத்தம் கொடுக்கும் கொரோனா

கொரோனா குறித்து எழத வேண்டாம் என்றே தோன்றியது... இரண்டு நாட்களாக ஏதாவது எழுதலாம் என்று நினைத்துப் பின் தொடர் மரணச் செய்திகளால் மனம் எதிலும் ஒட்டாமல் போய்விட்டது. இத்தகைய சூழலில் என்ன எழுதுவது என்ற எண்ணம்தான் மனம் முழுவதும் நிறைந்து நிற்கிறது. 

திங்கள், 17 மே, 2021

மனசு பேசுகிறது: கொரோனாவின் கோரப்பிடிக்குள்

 கொரோனா...

தொலை தூரத்தில் சீனாவில் ஒரு வைரஸ் வந்திருக்கிறதாம்... ஆட்கள் எல்லாம் சாகிறார்களாம் என்பதாய்த்தான் 2020-ன் தொடக்கம் இருந்தது. பக்கத்து வீட்டுப் பையன் அங்கே டாக்டருக்குப் படிக்கிறான் என்பதால் அவனை எப்படி ஊருக்கு கொண்டு வருவது என்ற அவனின் பெற்றோரின் புலம்பலின் போது தெரியவில்லை அதன் வீரியம் கட்டு விரியனாய் கட்டவிழ்ந்து போகும் என்பது.

வியாழன், 13 மே, 2021

நாயாட்டும் ஜாதி அரசியலும்

நாயாட்டு...

காவலர்களால் பாதிக்கப்பட்டவர்களைத்தான் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்... அதேபோல் அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்ட காவலர்களை மிஞ்சிமிஞ்சிப் போனால் வேறொரு துறைக்கு மாற்றுவார்கள்... அதையும் பார்த்திருக்கிறோம்... மற்றபடி காவல்துறையில் இருக்கிறார் என்றால் அவர்களின் அடாவடிச் செயல்களை வைத்து மிகப்பெரிய பலம் பொருந்திய மனிதர்களாகத்தான் நாம் நினைத்திருக்கிறோம்.. இதில் சாதி அரசியலுக்குப் பழியாகும் மூன்று காவலர்கள் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.

புதன், 12 மே, 2021

'வீரியமாய் கிளைக்கட்டும் மண்ணின் செடி' - தேவா சுப்பையா

'எதிர்சேவை' சிறுகதைத் தொகுப்பு 2020-ல் வெளியாகியிருந்தாலும் இப்போதும் நண்பர்கள் படித்துக் கருத்திடுவது மகிழ்வைத் தருகிறது. சமீபத்தில் எழுத்தாளர், கவிஞர் சிவமணி எழுதியிருந்தார். இப்போது எழுத்தாளர், கவிஞர், வலைப்பதிவர், நடிகர் எனப் பன்முகங்கள் கொண்ட, எங்கள் மண்ணின் மைந்தர் தேவா சுப்பையா அண்ணன் எழுதியிருக்கிறார்.

திங்கள், 3 மே, 2021

17வது திருமண நாளில்...

திருமணத்துக்கு முன் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் திருமணத்துக்குப் பின் அப்படியான ஏனோ தானோ வாழ்க்கையெல்லாம் வாழ்ந்து விடமுடியாது. அதுவரை தனி ஒருவனாய் சுற்றித் திரிந்து விட்டு நம்மை நம்பி வந்த ஒருவருக்கான, நம் குழந்தைகளுக்கான வாழ்க்கை என நம்மை முன்னிறுத்தி குடும்பத்தைச் சுமக்க வேண்டிய வாழ்க்கைக்குள் அடைபட்டுப் போகிறோம்.

எனது பார்வையில் 'எதிர்சேவை' - கவிஞர் சிவமணி

கோதரர் கவிஞர் / எழுத்தாளர் / மகாகவி இணை ஆசிரியர் திரு. சிவமணி அவர்கள் எதிர்சேவையை வாசித்துவிட்டு என்னைப் போனில் அழைத்தது கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும் இந்த வருடத்தில் மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்கள் தங்களின் விழாக்களை விமரிசையாகக் கொண்டாட முடியாத நிலையில், தல்லாகுளத்தில் லெட்சோப லெட்சம் மக்கள் கூடியிருந்து 'கோவிந்தா' கோஷம் விண்ணைப்பிளக்க நடக்க வேண்டிய எதிர்சேவை நிகழ்வு அழகர் கோவிலுக்குள் நிகழ்ந்த அன்று என்பது எதிர்பாராமல் நிகழ்ந்ததுதான் என்றாலும் மகிழ்வான ஒன்று.

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

சிறுகதைகளும் புத்தகப் பரிசுகளும்

ப்போது இங்கு ரமதான் நோன்பு என்பதால் இந்த ஒரு மாதம் மதியம் மூணு மணி வரைக்கும்தான் வேலை... அதன் பின் அறைக்கு வந்து சாப்பிட்டு கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்துப் பின் ஒரு மணி நேர நடைப்பயிற்சி முடித்து, வந்து குளித்து ஊருக்குப் பேசி, நான் மட்டுமே சமையல் என்பதால் தோசை அல்லது இட்லியுடன் இரவு உணவை முடித்தபின் வாசிக்க, எழுத, படம் பார்க்க என நேரம் கிடைக்கிறது. இப்போது வாசிப்பில் இருக்கும் புத்தகம் 'நிலம் பூத்து மலர்ந்த நாள்'. காட்டு வழியே பாணர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன்... எழுத்தாளர் கே.வி. ஜெயஸ்ரீ தன் வசீகரிக்கும் எழுத்தால் இழுத்துச் செல்கிறார்.

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

வாராரு... வாராரு... அழகர் வாராரு...

ன்று அழகர் வைகையில் இறங்கும் நிகழ்வு... நான்கு வருடத்துக்கு முன் திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்குப் பயணமாவதை கோவிலுக்கே சென்று பார்த்து, தல்லாகுளத்தில் எதிர்சேவையில் மீண்டும் அழகரின அழகைப்பருகி, வைகையில் இறங்கும் முன் ஒரு முறை தரிசித்து, மாலை அண்ணாநகர் பக்கமாய் போய் மீண்டும் அவரைச் சந்தித்து... கோவிலில் மட்டுமே சற்றே தள்ளி நின்று பார்த்தோம்... மற்ற இடங்களில் எல்லாம் அவரின் பல்லக்கை, தங்கக் குதிரை வாகனத்தை தொட்டு வணங்கி, மிக அருகில் அவரைக் காணும் வாய்ப்பு அமைந்தது.

சனி, 24 ஏப்ரல், 2021

வாசிப்பை நேசிப்போம்

நேற்று உலக புத்தக தினம்... புத்தக வாசிப்பு என்பது ஒரு போதை... வாசிக்க ஆரம்பித்தவன் அவ்வளவு எளிதில் அதைக் கைவிட்டு விடமாட்டான். தினமும் ஏதோ ஒரு பக்கத்தையாவது வாசிக்கத்தான் செய்வான். இணையம் வீரியமான பின்னே நிறைய வாசிக்கக் கிடைப்பதும் பல விஷயங்களை அறிய உதவுவதும் சிறப்பு.

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

மனசு பேசுகிறது : விவேக்கும் வாக்சினேசனும்

'ஜனங்களின் கலைஞன்' விவேக்கின் மரணத்துக்குப் பின்னே அவர் குறித்தான நல்ல செய்திகள் எல்லாம் நிறைய வலம் வந்து கொண்டிருக்கின்றன... இருக்கும் போது ஒருவனைக் கொண்டாடாத, அல்லது கொண்டாடத் தெரியாத நாம் அவர் இறந்த பின்னே அவரின் நல்ல குணங்களை எல்லாம் வெளியில் சொல்லிச் சிலாகிக்க ஆரம்பிக்கிறோம்... இறந்த பின்பு பாரத் ரத்னா கொடுப்பதைப்போல.  

சனி, 17 ஏப்ரல், 2021

மனசு பேசுகிறது : விவேக் முதல் விஷால் வரை

னங்களின் கலைஞன் விவேக்கின் மரணம் தமிழகத்தையே அழ வைத்திருக்கிறது. எதிர்பாராத மரணம் என்பது எத்தனை வேதனையைக் கொடுக்கும் என்பதை உணர முடிகிறது.  சமீபத்திய மரணங்கள் நாளைய விடியல் நமக்கு இருக்குமா..? என்ற பயத்தையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சில மரணங்கள் சட்டென நிகழ்ந்து விடும்... இப்பத்தானே பேசிக் கொண்டிருந்தார்... எப்படி ஆனது என்ற கேள்வியே நமக்குள் எழும்... அப்படித்தான் இன்றைய விடியல் இருந்தது. 

புதன், 14 ஏப்ரல், 2021

சினிமா : மண்டேலா

 மண்டேலா

ஓரு ஓட்டுத்தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்ற நிலை இருந்தால்... அந்த ஓட்டு இவருடையதுதான் என்பதும் தெரிந்திருந்தால்... ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் இன்றைய தமிழகத்தில் என்னவெல்லாம் நிகழும் என்பதுதான் படத்தின் கதை.

புதன், 24 மார்ச், 2021

மனசு பேசுகிறது : எழுத்தால் இணைந்த உறவு

ழுத்தாளர் கரன்கார்க்கி....
வடசென்னையின் முந்தைய தலைமுறை மனிதர்களின் வாழ்க்கையை எழுதும் ஒரு சிறந்த எழுத்தாளர்.

செவ்வாய், 23 மார்ச், 2021

மனசின் பக்கம் : கல்கோனா இணைய இதழ் ஒரு பார்வை

'கல்கோனா' இதழை கருணாகரன் அண்ணன் மின்னஞ்சலில் அனுப்பிக் கொடுப்பார். வாசித்து விட்டு எதுவும்  எழுதுவதில்லை... இந்த இதழ் வாசித்தபின் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருப்பவரின் இதழைப் படித்தது குறித்துப் பகிர்ந்து கொள்ளுவதுதான் எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் அவர் அனுப்புவதற்கு நாம் செய்யும் மரியாதை எனத் தோன்றியது.

ஞாயிறு, 21 மார்ச், 2021

மனசு பேசுகிறது : அகவை 77-ல் ஐயா

 ன்று ஐயாவுக்கு அகவை 77...

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாய் அவரின் பிள்ளைகளில் ஒருவனாய் வாழும் வாய்ப்பு... தமிழ்த்துறையில் பயின்ற நண்பனின் மூலமாகவே ஐயாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. 

வெள்ளி, 19 மார்ச், 2021

வேரும் விழுதுகளும் : 'வாழ்ந்தேன்' - நந்தா

வேரும் விழுதுகளுக்குமான அடுத்த விமர்சனம் என் எழுத்தை நேசிக்கும் நந்தா அண்ணனிடம் இருந்து வந்திருக்கிறது. எதிர்சேவையைக் கொண்டாடியவருபவர்களில் இவரும் ஒருவர். எதிர்சேவைக்குத் தேனித் தமிழ்நாடு முற்போக்கு கலையிலக்கிய மேடையில் கிடைத்த விருதை, நேரில் சென்று பெற்றுக் கொண்டவரும் இவர்தான். எப்போதும் என் எழுத்தின் வளர்ச்சியில் மகிழ்பவர் என்பதால் அவரின் உள்ளார்ந்த விமர்சனப் பார்வை எனக்கு மிகவும் முக்கியமானது.

வியாழன், 18 மார்ச், 2021

வேரும் விழுதுகளும் : 'நல்லாயிருக்கு' - சுபஸ்ரீ

புத்தகம் வெளிவருவது மகிழ்வென்றால் அது குறித்த நிறை குறைகளை மறைக்காமல் சொல்லும் விமர்சனம் அதைவிட மகிழ்வைக் கொடுக்கும். எதிர்சேவை நல்லதொரு வரவேற்பைப் பெற்ற நிலையில்,  மீண்டும் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் முயற்சியில் 'வேரும் விழுதுகளும்' நாவல் வெளிவந்த பின், கிராமத்துக் கதை, வாழ்க்கையைப் பேசும் கதை, இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் வித்தியாசமான கதைக்களத்தில் பயணிக்கும் போது நாம் சாமானியர்களின் பின்னால் பயணிக்கிறோம். இதையும் ஒருவர் நம்பிக்கையுடன் புத்தகமாக்குகிறாரே என நினைத்துப் பயம் எனக்குள் இருக்கத்தான் செய்தது.

சனி, 13 மார்ச், 2021

மனசு பேசுகிறது : தேர்தல் தொல்லைகளும் கதைகளும்

ந்தத் தேர்தல் வந்தாலும் வந்துச்சு முகநூல்ல அடிச்சி ஆடுற நண்பர்கள் போடுற பதிவுகளையே பார்க்க... இல்லையில்லை சகிச்சிக்க முடியலை... தமிழகத்தை இத்தனை வருட கால ஆட்சியில் தூக்கி நிறுத்தாத கழகங்கள் இந்தத் தேர்தலுக்குப் பின் தான் தூக்கி நிறுத்தப் போற மாதிரி இரு சாராரும் மாத்தி மாத்திப் பதிவுகளைப் போடுறதைப் பார்க்கும் போது தேர்தல் வரை முகநூல் பக்கமிருந்து விடுதலை வாங்கிக்கலாம்ன்னு தோணுது.

ஞாயிறு, 7 மார்ச், 2021

மனசு பேசுகிறது : பிறந்தநாளும் விழுதுகளும்

 மார்ச் - 7.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

எதிர்சேவையும் வேரும் விழுதுகளும்

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 'வேரும் விழுதுகளும்' நாவலும் இரண்டாம் பதிப்பாக 'எதிர்சேவை' சிறுகதைத் தொகுப்பும் விற்பனைக்கு இருக்கும் படங்களை சகோதரர் தசரதன் அனுப்பிக் கொடுத்த போது மிகவும் மகிழ்வாக இருந்தது.  நம் புத்தகமெல்லாம் ஒரு பதிப்பகத்தின் வரிசையில் தனக்கென ஒரு இடம் பிடிக்கும் என்றெல்லாம் நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அதைச் சாதகமாக்கியது கலக்கல் ட்ரீம்ஸ்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

'நகர்ந்து செல்லும் அழகிய சித்தரிப்புக்கள்' - பேரா. மு.பழனி இராகுலதாசன்

ர இருக்கும் வேரும் விழுதுகளும் புத்தகத்துக்கு மதிப்பு மிகு எனது பேராசான், என்னை வழி நடத்தும் தந்தை முனைவர். மு.பழனி இராகுலதாசன் அவர்கள் எழுதிய அணிந்துரை.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

மனசு பேசுகிறது : வேரும் விழுதுகளும் நாவலாய்...

வேரும் விழுதுகளும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு வருகிறது. இரண்டு நாட்கள் முன்புவரை அது குறித்தான எந்த விபரமும் தெரியாமல்தான் இருந்தது. தசரதன் அட்டைப்படம் அனுப்பிய பின்புதான் புத்தகம் வெளிவருகிறது என்பது உறுதியானது.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

சட்டைக்காரி

 ந்த எழுத்து என்ன கொடுத்தது..?

என்னடா இது எப்ப எழுதினாலும் இந்த வரியை எழுதுகிறான் என நீங்கள் நினைக்கலாம்... ஆனால் இந்த வார்த்தைகள் நான் அடிக்கடி கேட்கும், கடந்து வரும் வார்த்தைகள்... இதைத் தாண்டித்தான் என் எழுத்துப் பயணம் போய்க் கொண்டிருக்கிறது.

திங்கள், 8 பிப்ரவரி, 2021

மனசின் பக்கம் : கூட்டாஞ்சோறு கொஞ்சம் காரமாய்...

னவரி இருபத்தி ஆறாம் தேதி நாங்கள் தங்கியிருக்கும் தளத்தின் முதலாளி தங்கள் கம்பெனி ஆட்கள் இணைய வசதியை இங்கு மாற்றிக் கொண்டு வருகிறார்கள் எனச் சொல்லி, நாங்கள் பயன்படுத்திய இணைய வசதியை ரத்து செய்து விட்டான்... இங்கு 'ர்' இல்லை என நினைக்க வேண்டாம்... யாரையும் மரியாதைக் குறைவாக பேச நினைப்பதில்லைதான் என்றாலும் இணையத்தை ரத்து செய்து விட்டு போனில் கேட்கும் போதெல்லாம் ஒவ்வொரு கதையாகச் சொன்ன மலையாளியை, இணையம் இப்ப வராது அடுத்த வாரம்தான் வரும் எனத் தெனாவெட்டாகப் பேசிய அவனின் மனைவியின் குணத்தை வைத்து 'ன்' போதுமானது எனத் தீர்மானிக்கலாம். 

திங்கள், 25 ஜனவரி, 2021

மனசு பேசுகிறது : எதிர்சேவைக்கு விருது

திர்சேவைக்கு தேனி தமிழ்நாடு முற்போக்கு கலையிலக்கிய மேடையின் 'தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது' கிடைத்திருக்கிறது. நேற்று நடந்த விழாவிற்கு மனைவியும் செல்ல முடியாத நிலையில் சகோதரர் நந்தகுமார் அவர்கள் பெற்றுக் கொண்டார். அவரின் மகளுக்கு அங்கு விருது வழங்கப்பட்டதால் அவர் சென்றதால் அதை அவரே வாங்கிக் கொண்டார். என் புத்தகத்தை தேனி திரு.விசாகனிடம் அறிமுகம் செய்தவரும்... புத்தகத்துக்கான அறிமுக கூட்டத்தை நடத்தியவரும் இவரே என்பதால் விருதையும் அவரே பெற்றுக் கொண்டதில் பெருமையும் மகிழ்ச்சியும்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

மனசின் பக்கம் : பிக்பாஸ் டூ பிரகாஷ்

மிழ்டாக்ஸ்.காம் இணையத் தளத்தில் பிக்பாஸ் பதிவுகள் எழுதும் வாய்ப்புக் கிடைத்த போது இப்போது இருக்கும் வேலை பளுவில், விடுமுறை தினத்தில் கூட வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது தொடர்ந்து எழுதும் வாய்ப்புக் கிடைக்குமா..? அதுபோக தினமும் இதற்கென ஒரு மணி நேரம் ஒதுக்கிப் பார்க்க முடியுமா என்ற யோசனையே முன் நின்றது.  

வெள்ளி, 15 ஜனவரி, 2021

மனசு பேசுகிறது : மாட்டுப் பொங்கலும் மனசும்

ன்று மாட்டுப் பொங்கல்... மனம் முழுவதும் ஊரில்தான் இருந்தது... சென்ற ஆண்டு சிரமங்களுடன் பயணித்தபோதும் பொங்கலுக்கு ஊரில் இருந்தேன்... மாட்டுப் பொங்கல் என்பது ஊரே கூடிக் கொண்டாடும் ஒரு நிகழ்வு என்பதால் மகிழ்வுக்குக் குறைவிருக்காது. அதை அனுபவித்து வாழ்ந்திருந்தால் மட்டுமே அதன் மகிழ்வுக்கு எல்லையே இல்லை என்பது புரியும்.

வெள்ளி, 8 ஜனவரி, 2021

மனசின் பக்கம் : மன நிறைவான செய்திகள்

பிக்பாஸ் தொன்னூறு நாட்களைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட 50 பதிவுகள் எழுதியிருக்கிறோம் தமிழ்டாக்ஸ் தளத்தில்... உண்மையிலேயே தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிருப்பவர் தமிழ்டாக்ஸ் தளத்தின் இணையாசிரியர் சிவமணிதான்... இப்ப இருக்கும் ஏழு பேரில் ஆரிக்கே வெளியில் வாக்குகள் அதிகம் கிடைப்பதைப் பார்க்கலாம்... ஆனால் வீட்டுக்குள் எல்லாருக்குமே பிடிக்காத ஒரு மனிதர் என்றால் அது ஆரிதான்.

வெள்ளி, 1 ஜனவரி, 2021

மனசு பேசுகிறது : 2020 - இழந்ததும் பெற்றதும்

கொரோனாவின் வருடமான 2020-ன் ஆரம்பத்தில் ஊருக்கு வரும்போது இங்கு மிகப்பெரிய பிரச்சினை... அதிலிருந்து வெளிவந்து அதன் பின் ஊருக்கு வந்தபின் உடல் நிலையின் காரணமாக தேவகோட்டைக்கும் மதுரைக்கும் அலைந்ததுதான் மிச்சமாய் இருந்தது.