தரணி செழித்திருக்கும் வேளையிலே... தை மகளின் வரவை உற்சாகமாகக் கொண்டாடும் என் உறவுகளுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். பொங்கல் வாழ்த்தாய் 2013-ல் மனசில் எழுதிய கவிதை கொஞ்சம் மாற்றங்களுடன் மீள்பதிவாய்...
களத்து மேடு காத்திருக்க
களம் நிறையும் நெல்லுக்காக
காத்திருக்கும் வேளையிலே...
வாசலிலே கோலமிட்டு
வண்ணங்கள் அதில் கொடுத்து
வீட்டினுள்ளே கோலமிட்டு
இரும்படுப்பை அதில் வைத்து...
கோலமிட்ட புதுப்பானையில்
கொத்தாய் மஞ்சள் கட்டி
சுத்தமான பசும்பாலோடு
புத்தரிசிப் பால் கலந்து இட்டு...
பொங்கி வரும் வேளையிலே
சந்தோஷம் பொங்கவே...
பச்சரிசி வெல்லமிட்டு
பக்குவமாய் பொங்கல் வைத்து...
குடும்பத்தோடு உறவுகளும்
கூடிக் களித்திடவே...
இந்நாளை நமக்களித்த
தை மகளுக்கு நன்றி சொல்வோம்...
பொங்கலோ பொங்கலென
கூடியே சொல்லிடுவோம்...
மங்களமாய் நம் வாழ்வு
மகிழ்ந்தே சிறக்கட்டும்...
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...
-'பரிவை' சே.குமார்.
