நனைத்த மழை
சந்தோஷத்தைக்
கொடுக்கவில்லை...
ஒழுகும் அரசுப் பேருந்து..!
*
மரங்களை மட்டுமின்றி
விலங்குகளையும் இழந்து
விதவையானது காடு..!
*
சந்தோஷத்தில்
குதிக்கும் மீனின்
கண்ணுக்குத் தெரியவில்லை
காத்திருக்கும் கொக்கு..!
*
சாதிச் சங்கப்
பலகைகள் தாங்கி
சமத்துவபுரம்..!
*
மழையில் நனைந்த
உன்னால்
நனைந்தது மனசு..!
*
முழங்கிய வானம்
இசைக்க வில்லை...
ஏக்கத்தில் விவசாயி..!
*
மரணத்தை நோக்கி
பைக்கில் பயணம்...
அறியாமல் பிராய்லர்...!
*
குழந்தையாய்
குதூகலித்தது மனசு...
எதிரே ஐஸ்வண்டி..!
******
இன்னும் வரும்...
-\பரிவை' சே.குமார்

















