மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஹைக்கூ / கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹைக்கூ / கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஜனவரி, 2015

சிறு கவிதைகள் சில...


னைத்த மழை
சந்தோஷத்தைக்
கொடுக்கவில்லை...
ஒழுகும் அரசுப் பேருந்து..!

*

ரங்களை மட்டுமின்றி
விலங்குகளையும் இழந்து
விதவையானது காடு..!

*

ந்தோஷத்தில்
குதிக்கும் மீனின்
கண்ணுக்குத் தெரியவில்லை
காத்திருக்கும் கொக்கு..!

*

சாதிச் சங்கப்
பலகைகள் தாங்கி
சமத்துவபுரம்..!

*

ழையில் நனைந்த
உன்னால்
நனைந்தது மனசு..!

*

முழங்கிய வானம்
இசைக்க வில்லை...
ஏக்கத்தில் விவசாயி..!

*

ரணத்தை நோக்கி
பைக்கில் பயணம்...
அறியாமல் பிராய்லர்...!

*

குழந்தையாய்
குதூகலித்தது மனசு...
எதிரே ஐஸ்வண்டி..!

******
இன்னும் வரும்...
-\பரிவை' சே.குமார்

வெள்ளி, 9 ஜனவரி, 2015

சிறு பூக்கள்

பாடப் புத்தகத்தையும்
மறக்க வைத்தது...
முகப் புத்தகம்..!

*****

ஏற்ற இறக்கங்களில்
பாரம் சுமக்க வைக்கிறது...
முடிவறியா வாழ்க்கை..!

*****

காலைக் கடித்தது
புதுச் செருப்பு...
கோவில் வாசலில்
செருப்பை இழந்தவர்..!

*****

சாதிகள் இல்லையடி பாப்பா
பாடம் சொன்ன வாத்தியாருக்கு
சாதிச் சங்கத்தில்
பாராட்டு விழா..!

*****

வாசலில் பூக்கும்
அழகிய கோலங்களை
தனதாக்கிக் கொண்டது
மார்கழி..!

*****

வாழ வேண்டிய
காதலைக் கொன்று
வாழ்ந்தது சாதி..!

*****

கழுதை மீது
ஊர்வலம்..
காதலுக்கு மரியாதை..!
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 3 ஜனவரி, 2014

சிறுபூக்கள் : கவிதைகள் மூன்று

புத்தகத்துக்குள் பொத்தி வைத்த
மயிலிறகு குட்டிபோட்டதோ
இல்லையோ - உன்
கைபட்டு வந்ததால்
என்னை கட்டிப்போட்டது.!

********

பூக்களைப் பறிக்காதீர்கள்
உடைந்த போர்டுக்கு கீழே
உயிருள்ள ரோஜா
பறிக்கப்பட்ட் போது
கண்ணீர் விட்டது காம்பு..!

********

குடைக்குள் நாம்
 உரசும் உடம்பும்...
மருகும் கண்களுமாய்...
மனசுக்குள் இதுவரை
சொல்லாத காதல்
மழைக்கால காளானாய்...!

(கிறுக்கல்கள் தளத்தில் பகிர்ந்த சிறுகவிதைகளில் சில)
-'பரிவை. சே.குமார்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

சிறு பூக்கள்...





ஆடுவெட்டிப் பூஜை
அமர்க்களமாய்...
வீட்டில் தாயை
தேடி அலையும் குட்டி..!

*****



தாலாட்டு..!
சந்தோஷ தூக்கம்
குழந்தைக்கு...
பழைய நினைவுகளை
திரும்பிப் பார்த்த
சோகத்தில் தாய்..!

*****



நேற்று முதல்   
காணவில்லை காற்றை..!
வீழ்ந்து கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!

*****




உனக்குப் பிடிக்கும்
என்பதால் வழியெங்கும்
ரோஜா - எனது
இறுதி ஊர்வலம்..! 

- கிறுக்கலில் கிறுக்கியது மீள்பதிவாக மீண்டும்....

-'பரிவை' சே.குமார்

புதன், 13 பிப்ரவரி, 2013

காதலர்களுக்காக... சில கவிதைகள்


புற்களே...
பூக்களைத் தூவுங்கள்
செருப்பில்லாமல்
என் காதலி..! 



காதலே நீ...
பேசிச் சென்ற
நாட்களைவிட...
பேசாமல் கொன்ற 
நாட்களே அதிகம்...! 




மழைக்கு ஒதுங்கினோம்
நிழற்குடையில்...
ஏனோ விலகமறுத்தது
மனசு..!




நீ நீரருந்திய 
டம்ளரை நான்
யாரையும் பயன்படுத்த
 விடுவதில்லை...
என்னைத் தவிர..!




நீ பூத்தது அறியாமல்
உன் வீட்டு வாசலில்
பூக்களோடு நான்..!




உன் அழைப்புக்காக
காத்திருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் மனசு போல
கனத்துக் கிடந்தது 
கையிலிருக்கும்
செல்போன்..!




துணைக்கு வருவாயா
தூறலே...
வெயிலில் என்னவள்..!


நண்பர்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்....


(எனது கிறுக்கல்கள் வலைப்பூவில் எழுதியவை பிப்ரவரி-14  பகிர்விற்காக மீண்டும் ஒருமுறை இங்கே)


(படங்களுக்கு நன்றி இணையம் மற்றும் ஓவியர். இளையராசா)


-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 24 ஜூலை, 2012

சிறு பூக்கள்..!




சாமிக்குப் படையலாய்
கறியும் சாராயமும்...
கும்பிட்ட மனங்களுக்கு
படையலே சாமியாய்..!

*************************

தவளைகள் தாலாட்டும்
மழை இரவு...
உறங்காமல் தவிக்கும்
உன் நினைவுகள்..!

*************************

சாம்பலாய் உதிர்ந்தது
இதயப் பந்து...
உதட்டில் உக்கிரமாய்
சிரித்தது சிகரெட் நெருப்பு..!

*************************

சப்பரத்தில் சாமி
அனாதையாய்...
மல்லுக்கு நிற்கிறது
சாதி ஆரவாரமாய்..!

*************************

தழுவிய காற்று
சங்கடப்பட்டது...
மொட்டையாய் மரம்..!

-'பரிவை' சே.குமார்

சனி, 30 ஜூன், 2012

சிறு பூக்கள்..!





அலையவிட்ட மனங்களை
அறியவில்லை...
அலையும் கூந்தல்..!

***

குளிக்க மறுத்தது
உன் உதடு தொட்ட
என் கைக்குட்டை..!

***

மேகம் விலகியதால்
வெட்கப்பட்டு சிரித்தது
முழு நிலவு..!

***

உணர்வுகளெல்லாம்
அவளாகிப் போக
உறவுகள் எல்லாம்
அந்நியமாய்..!

***

ஆடும் மயிலென
நாசி தட்டிச் செல்கிறது
முன் இருக்கைப்
பெண்ணின் கூந்தல்..!

-'பரிவை' சே.குமார்

புதன், 24 நவம்பர், 2010

சிறு பூக்கள் 24/11/2010



செப்படி வித்தை செய்தாயோ
எப்படி விலக்கினாலும்
விலகாமல் நினைவில் நீ..!

***

புல்லறுபடுவது அறியாமல்...
அடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி..!

***

அக்னிப் பிழம்பாய் வார்த்தைகள்...
வெட்கி நின்றது வெடித்த இதயம்...
வேலையில்லா காதலன்..!

***

உபயோகமற்று
மரங்கொத்தி வீடு...
வீதியில் கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!

***

ரோஜாவாய் மலர்ந்த
இதழ்கள் வீசும் பேச்சில்
முற்களாய் வார்த்தைகள்..!


-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

சிறு பூக்கள் - 15/10/2010


தாவணியில் சிரித்தாய் நீ...
தனியே சிரித்தேன் நான்...
பைத்தியம் என்கிறார்கள்..!

-----------------------

 தூரத்துப் பச்சை
நீயாக வேண்டும்...
துடிக்கும் இதயம்...
காதலர் தினம்..!

-----------------------

ரீங்காரமிடும் வண்டுகளைத்
தேடின கண்கள்...
துண்டாகிக் கிடந்தது
வெட்டுப்பட்ட மரம்..!

----------------------- 

கரு மேகத்திற்கு
போட்டியாய்
மழை நேர தார்ச்சாலை..!

-----------------------

நீந்த மனமின்றி
கரையில் வாத்து...
நீருக்குள் மிதக்கும்
மடிந்த மீன்கள்.

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

சிறு பூக்கள் - III



பசியோடு ஆடு...
வருத்தப் பட்டது
கிளைகளை இழந்த
மரம்..!

---------
 
வண்டிப் பந்தயம்...
ஓடிய மாடுகளை விட
விரட்டிய மனிதர்கள்
மூச்சிரைத்தபடி..!

---------


எங்கும் போகலாம்...
தொட்டிக்குள்
விடப்பட்டதறியாமல்
சந்தோசப்பட்டது மீன்..!

---------


பிரிவு வருத்தமே...
இருந்தும் மனசுக்குள்
சுகமாய் உன்
நினைவின் நிழல்கள்..!

-'பரிவை' சே.குமார்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

சிறுபூக்கள் - II



மனதைக் கவர்ந்தது
வானவில்...
மழலைச் சிரிப்பைக்
காணும் வரை..!

****

சொந்த வீடு சுகமே...
சந்தோஷமாய் ஊஞ்சலாடியது
தூக்கணாங்குருவி..!

****

கோவிலில் அன்னதானம்
குருக்கள் வீட்டில்
கொதித்தது அரிசி..!

****

கல்லூரிச் சாலை...
இரு மருங்கிலும் மரங்களாய்
மாணாக்கர்கள்..!

****

மக்கும் குப்பையாக நான்
மக்காத குப்பையாய்
உன் நினைவுகள்...!

-'பரிவை' சே.குமார்

வலைச்சர வாரத்தில்...

நான்காம் நாள் கட்டுரையான சிறுகதை சிற்பிகள் படிக்க...

ஐந்தாம் நாள் கட்டுரையான விளைச்சல்கள் படிக்க...

சனி, 7 ஆகஸ்ட், 2010

சிறு பூக்கள் - I


பூமிக்கு நிழலாய் நான்
எனக்கு நிழலாய் யார்?
கேள்வியுடன் மரம்..!
***
பணத்தால் பூஜை
சிரித்தது விக்கிரகம்...
மனசுக்குள் புழுக்கமாய்
ஏழை பூசாரி...!
***
அனைத்தும் குஞ்சுகள்
நம்பிக்கையோடு
அடைகாத்தது கோழி..!
***
உன் புன்னகையை
ஒரு முறை பூக்கவிடு...
பலமுறை எழுதுகிறேன்
கவிதை..!
***
அழகாய் பூத்திருந்தன
கோயில் படிக்கட்டுகளில்
காதல் ஜோடிகள்..!

-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 20 ஜூலை, 2010

சிறு பூக்கள்...


பிரியாணியில் கோழி...
மிச்சத்தை கொத்திப்
பார்த்தது குஞ்சு..!

-----
நாடு காக்க வேண்டுதல்
பிள்ளையாரிடம்...
காணாமல் போனது சிலை..!

-----

சந்தோஷமாய்
பறந்து பார்த்தது
குருவிக்குஞ்சு...
கன்னிப் ப்யணம்..!

-----

நெருக்கத்தில் புழுக்கமாய்
நெஞ்சுக்குள் மறக்க
முடியாத காதலி..!

-----

மங்கள நிகழ்ச்சி
வாசலில் கட்டப்பட்டது...
வெட்டப்பட்ட வாழை..!

-'பரிவை' சே.குமார்.




எனது முந்தைய ஹைக்கூ கவிதைகளை படிக்க இங்கே சொடுக்கவும். கிறுக்கல்கள்.