மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 26 ஆகஸ்ட், 2020

மௌன ஒத்திகைகள் - சிவமணி

விதை என எழுத ஆரம்பித்தால் நீளமாய்த்தான் வளர்ந்து நிற்கும் நமக்கெல்லாம்... ஹைக்கூ என ஆயிரக்கணக்கில் கிறுக்கி வைத்திருந்தாலும் நீள் கவிதைகளே அதிகம் எழுத வருமென்பதால் அந்தப் பாதையில் இருந்து யூடர்ன் எடுத்து சிறுகதைப் பாதையில் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்தாலும் கவிதைகள் மீது எப்போதும் காதல் உண்டு... அவ்வப்போது அது வெளியிலும் வரும்... அதுவும் காதல் கவிதைகள் என்றால் அலாதிப் பிரியம்தான்...

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கலக்கலில் 'சலூன்'

லக்கல் ட்ரீம்ஸ் தளத்தில் நேற்று 'சலூன்' என்னும் சிறுகதை வெளியாகியிருக்கிறது... தொடர்ந்து ஒரு மாதத்தில் இது மூன்றாவது கதைப் பகிர்வு... எதிர்பாராதது.

நம்மகிட்ட புத்தகம் போட்டவருங்கிற பாசத்தில் தசரதனோ... நம்மாளுதான் எப்படி எழுதினாலும் போட்டிருவாருன்னு நானோ எப்போதும் நினைத்ததில்லை... 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

சினிமா விமர்சனம் : குஞ்சன் சக்சேனா - த கார்கில் கேர்ள் (இந்தி / தமிழ்)

'அடைப்பை உடைத்துக் கொண்டு வெளியில் வா... சிறகடித்துப் பற...' என்பதை குஞ்சனின் அப்பா அவளிடம் சொல்கிறார்... இதுதான் உத்வேகமான வார்த்தை... இதுதான் அவளைச் சிறகடித்துப் பறக்க வைக்கிறது.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

மனசின் பக்கம் : கதைகள்

பிரபலங்கள் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் யாவரும்.காமில் 'பனைமரம்' என்னும் சிறுகதை வெளியானதைத் தொடர்ந்து கலக்கல் ட்ரீம்ஸ் தளத்தில் 'நாகர்' வெளியானது. அதைத் தொடர்ந்து வாசகசாலைக்கென கதை எழுத நம்மால் முடியுமா என்ற யோசிப்பில் இருக்கும் போதே 'வசந்தி' அதில் வெளியானது.

சனி, 1 ஆகஸ்ட், 2020

நானழுத கண்ணீரும் வானழுக வில்லையடி

ன்னைப் பொறுத்தவரை வேலை நேரத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பதே பிடிக்கும் என்பதை விட, சுற்றியிருப்பவர்கள் சத்தமும் தொந்தரவு கொடுக்காது என்று நினைப்பேன்... மேலும் பார்க்கும் வேலையிலிருந்து சிந்தனை வேறெங்கும் செல்லாது. சிறு வயது முதலே பாடல் கேட்டுக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ படிப்பது, எழுதுவது என்பது என்னோடு ஒட்டிக் கொண்ட பழக்கம். அது இப்பவும் தொடரத்தான் செய்கிறது. இதே பழக்கம் ஸ்ருதியிடம் அதிகம்... விஷாலிடம் இப்போது மெல்ல எட்டிப் பார்க்கிறது.