மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

சில கவிதைகளும்... சிக்கன நன்றியும்...


தற்கெடுத்தாலும்
குற்றம் சொல்லும் சுற்றம்
பூத்தது தவறா...
குமரியான சிறுமி..!

***

விடியலைத் தேடும்
பயணம்...
சோர்வாய் எரிந்தது
தெரு விளக்கு..!

***


ரம் நடுவிழா...
அமைச்சர் காருக்குப்பின்
ஊர்வலமாய் கார்கள்...
மாசுபட்டது காறறு...

***


கானகத்தில் மழை...
நனைந்த குருவிகளின்
சப்தத்தை கேலி
செய்தது மரங்கொத்தி
மரம் விழும் வரை..!

***


'ம்மா பசிக்குது'
அழுத குழந்தையை
அணைத்து அழுதாள்...
உடற்பசி அடங்கிய
திருப்தியில் உறங்கும்
கணவன்...

***


லையுடன் நிற்பவனை
அறியவில்லை...
ஓடும் நீரில்
துள்ளும் மீன்..!

-------------

நட்பே வணக்கம்...


எனக்கு 'இலக்கியத்தேனீ' என்ற விருதினை அளித்து சந்தோஷப்பட்ட முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கும், வலைமனையில் எனது தளத்தையும் அறிமுகம் செய்த அதீதம் இணைய இதழுக்கும் அதனை எனக்குத் தெரிவித்த திரு. எல்.கே மற்றும் நண்பர்களுக்கும், வலைச்சரத்தில் பலமுறை பலரால் அறிமுகமானாலும் ஒவ்வொரு முறை அறிமுகமாகும் போதும் அடையும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை... அந்த வகையில் சென்ற வாரம் என்னை அறிமுகம் செய்த சகோதரர் மாய உலகம் அவர்களுக்கும் உங்கள் அன்பின் முன்னால் என் நன்றி சிறியதுதான்... இருப்பினும் நன்றி மறப்பது நன்றல்ல என்பதால் நன்றி. (தனிப்பதிவாக சொல்ல ஆசைதான்... நேரமின்மை... பொறுத்துக் கொள்ளுங்கள் உறவுகளே...)


அலுவலகத்தில் எட்டு மணி நேர வேலைக்கான சம்பளத்தில் ஏறக்குறைய 15 மணி நேரப்பணி அதுவும் கணிப்பொறி முன்னால்...(சம்பளம் மட்டுமே... மற்ற சலுகைகள் இல்லை) என்ன செய்வது அடிமை வாழ்க்கை... எனவே மனவலியுடன் முதுகு வலியும் இம்சிக்கிறது. அதனால்தான் மனசு பொலிவிழந்து இருக்கிறது... விரைவில் மீண்டு வருகிறேன்...

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 12 செப்டம்பர், 2011

வாழும் வரை...



மௌனங்களால் தொலைந்தவைகளில்
மரணிக்காமல் உன் நினைவுகள்...

செல்லச் சீண்டல்களும்...
சில நேரச் சண்டைகளும்...
உணர்வுக்குள் உறையாமல்
இன்னும் இம்சிக்கின்றன...

உன் கரங்களின் காமத்தால்
உடைந்த வளையல்கள்
பத்திரமாய் பறைசாற்றிக்
கொண்டிருக்கின்றன உன் அன்பை...

காக்கா கடி கடித்துக் கொடுத்தாலும்
என் வாயில் இருப்பதை எடுக்க
நீ செய்த ஜாலங்கள்...

உனக்குப் பிடித்த இனிப்பை
சாப்பிடும் போதெல்லாம்
வந்து வந்து போகின்றன...

எனக்காக நீயும்...
உனக்காக நானும்...
அழுது சிரித்தும்...
சிரித்து அழுதும்...
இருக்கிறோம்

இன்றோ வலியறியா
இதயத்தில் வலி சுமந்து
வாழ்கிறேன்...

நட்பா... காதலா..
யோசித்த வேளையில்
வீணான நாட்களால்
பிறக்குமுன்னே மரணித்தது
நம் காதல்...

புதிய உறவின் பாதையில்
பூக்கள் இருந்தாலும்
அரிதாய்ப் பிறக்கும் குறிஞ்சியாய்...
பூத்துக் கொண்டுதான் இருக்கின்றன
உன் நினைவுகள்...

மரணிக்கும் காலத்தால்
நினைவுகள் மக்கிப் போனாலும்
இன்னும் பசுமையாய்
என்னுள்ளே உன் நினைவுகள்...

-'பரிவை' சே.குமார்

Thanks  - Google (Photo)