மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

கமலுக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கமலுக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 பிப்ரவரி, 2013

'மன்னிப்புக் கேள்'-தணிக்கைத் துறை :: ‘கருத்து சுதந்திரம்'-சசிதரூர்



 'மன்னிப்புக் கேள்' - தணிக்கைத் துறை

விஸ்வரூபம் திரைப்படம் விவகாரத்தில் மத்திய தணிக்கைத்துறை மீது குற்றம் சாட்டிய தமிழக அரசு மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது.விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

முத்தரப்பு பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து 144 தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை தணிக்கை துறை வெளியிட்டுள்ள செய்தியில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் தணிக்க‌ை சான்று அளித்ததில் தவறு நடந்ததாக , கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல்கள் வாதாடினார்.இந்த விஷயத்தில் தவறான தகவல் தந்தததாக தமிழக அரசு வக்கீல், நவநீதிகிருஷ்ணன் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்துள்ளது

-----****-----

 ‘கருத்து சுதந்திரம்' - சசிதரூர்

நாட்டில் சமீபத்திய விஸ்வரூபம் திரைப்படம், ஆஷிஸ்நந்தியின் பேச்சு ஆகியவற்றுக்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளை பார்க்கும் போது சமுதாயம் சகிப்புதன்மை அற்று இருப்பதையே வெளிக்காட்டுகிறது என்றும், கருத்து சுதந்திரம் பறிபோய் வருகிறது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சசிதரூர் கவலை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்: விஸ்வரூபம் சர்ச்சை , தாழ்த்தப்பட்டோர் குறித்து எழுத்தாளர் ஆஷிஸ் நந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு இந்த சமூகத்தில் எதிரொலித்திருக்கிறது. இது கலாச்சாரம் என்ற பெயரில் வளர்ந்து வந்துள்ளமை போட்டி மனப்பாங்கு கொண்ட சகிப்புத்தன்மையற்று போனதையே காட்டுகிறது.

எழுத்து, கருத்து சுதந்திரம் நீதிபதி மற்றும் அரசு மூலம் தான் வழிபிறக்கும் என்றால் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கின்றோம். இது குறித்து நானும் அதிகம் பேச விரும்பவில்லை. எந்தவொரு விமர்சனமும் யாரையும் புண்படுத்தக்கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை. இதே நேரத்தில் கருத்து சுதந்திரம் பறிபோவது சரியல்ல. எந்தவொரு விஷயமானாலும் விவாதிக்கவோ, வாதிடவோ நமக்கு உரிமை உண்டு. சமூகத்திற்கு ஒரு சவாலாக இருந்து வரும் இந்த விஷயத்தில் ஒரு சம நிலை ஏற்பட வழி பிறக்க வேண்டும்.

தணிக்கை துறை சான்று :

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்து இருக்க கூடாது. தணிக்கை துறை சான்று அளித்த பின்னர் இந்த நடவடிக்கை சரியானது அல்ல. படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருந்த போதும், எதிர்ப்பு வரும் தேவையற்ற காட்சிகள் இருக்கும் யாரும் நினைத்தால் காட்சிகளை ரத்து செய்ய சொல்லி படத்தயாரிப்பாளரிடம் வாதிடலாம். ஆனால் தடை விதிக்க முன்வரக்கூடாது.

ஆஷிஸ்நந்தியின் பேச்சுக்காக அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுகிறது. இது தேவையற்றது. சல்மான் ருஷ்டி கோல்கட்டாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இன்னும் நாம் பின்தங்கி இருப்பது கவலை அளிக்கிறது. இவ்வாறு சசி தரூர் கூறினார்.

நன்றி : தினமலர்

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் கடந்து வந்த பாதை



டிசம்பர் 7:  "விஸ்வரூபம்' படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.

டிசம்பர் 9:  முதலில் டீ.டி.எச். மூலம் "விஸ்வரூபம்' வெளியாகும்  என்ற அறிவிப்பு வந்தது.

டிசம்பர் 9:  டீ.டி.எச். குறித்து திரையரங்க உரிமையாளர்களுடன் கமல் பேச்சு நடத்தினார்.

டிசம்பர் 11: டீ.டி.எச். வெளியீட்டிற்கு திரையரங்க உரிமையாளர் சங்கம் தரப்பில் எதிர்ப்பு.

டிசம்பர் 29: டீ.டி.எச். நிறுவனங்களுடன் கமல்ஹாசன் ஒப்பந்தம்.

ஜனவரி 9: "என்னை தொழில் செய்ய விடாமல்'  தடுக்கிறார்கள் என்றார் கமல்.

ஜனவரி 12: திரையரங்க சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு.



ஜனவரி 14: டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளிலும்,

பிப்ரவரி 2-ம் தேதி டீ.டி.எச். மூலமும் "விஸ்வரூபம்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 22: "விஸ்வரூபம்' படத்துக்கு தடை கோரி முஸ்லிம்  அமைப்புகள் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு.

ஜனவரி 23.  "விஸ்வரூபம்' படத்துக்கு அரசு திடீர் தடை.

ஜனவரி 24:  கமல்ஹாசன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு.

ஜனவரி 26:  உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் "விஸ்வரூபம்' படத்தை பார்த்தார்.

ஜனவரி 29:  படத்துக்கு தடை இல்லை என நீதிபதி அறிவித்தார்.



ஜனவரி 30:  தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து "விஸ்வரூபம்' படத்துக்கு தடை விதித்தது உயர் நீதிமன்றம்.

ஜனவரி 30: மதச்சார்பற்ற நாட்டை தேடிப் போவேன் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கமல்ஹாசன்.

ஜனவரி 30: சில காட்சிகளை நீக்க கமல் சம்மதம் தெரிவித்தார்.

ஜனவரி 31: சட்டம் - ஒழுங்கு பிரச்னையால்தான் விஸ்வரூபத்துக்கு தடை என தமிழக அரசு அறிவித்தது. 



பிப்ரவரி 1: அரசு முன்னிலையில் பேச்சு நடத்த கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்புகள் ஒப்புதல்.

பிப்ரவரி 2: குறிப்பிட்ட சில ஒலிக் குறிப்புகளை நீக்க கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்ததால்,  விஸ்வரூபம் சர்ச்சை முடிவுக்கு வந்தது.


நன்றி : தினமணி

-'பரிவை' சே.குமார்

புதன், 30 ஜனவரி, 2013

கமலுக்கு ஆதரவாக விஜயகாந்த் அறிக்கை



-'பரிவை' சே.குமார்

"தமிழகம் நான் வெளியேற வேண்டும் என விரும்புகிறது" கமல் பேட்டி



விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக சென்னையில் பேட்டியளித்த கமல் , "என்னுடைய படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்ய முடியும். என்னுடைய இந்த படத்தை எடுத்திருப்பதாக பெரும் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய திரையுலகை அனுபவத்தையும் எனக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டும் இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்தபடத்துக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன்.

படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இப்போது நான் உங்களுக்கு பேட்டி அளித்து கொண்டு இருக்கும் இந்த வீடு ‌எனது இல்லை. கோர்ட்டில் வழக்கு நடந்தபோது நீதிபதி கேட்டார். ஒருவரின் முதலீடுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா என்று கேட்டார். நான் இப்போதும் சொல்கிறேன். நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன்.


எனக்கு மதம் கிடையாது, அரசியல் கிடையாது. எனக்கு மனிதநேயம் முக்கியம். மனதில் பட்டதை தைரியமாக எடுத்து சொல்பவன். இந்தப்படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் கிடையாது. எதற்காக எனது படத்தை தடை செய்கிறார்கள் என்று புரியவி‌ல்லை.

என்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். ஒருவேளை தமிழகம் மதச்சார்ப்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால் நிச்சயம் வேறு ஒரு மாநிலத்தை தேடி போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார். வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டை தேடி போவேன்.

இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் முஸ்லிம்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள்.


கேரளாவில் மலபார், ஐதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு பேசினார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பிய நிருபர் ஒருவர், நீங்கள் தமிழகத்தை வெளியேற வேண்டும் என விரும்புகிறீர்களா என கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகம் தான் நான் வெளியேற வேண்டும் என விரும்புகிறது என கமல் வேதனையுடன் தெரிவித்தார்.


செய்தி : தினமலர்.
-'பரிவை' சே.குமார்