மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

சிறுகதைகளும் புத்தகப் பரிசுகளும்

ப்போது இங்கு ரமதான் நோன்பு என்பதால் இந்த ஒரு மாதம் மதியம் மூணு மணி வரைக்கும்தான் வேலை... அதன் பின் அறைக்கு வந்து சாப்பிட்டு கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்துப் பின் ஒரு மணி நேர நடைப்பயிற்சி முடித்து, வந்து குளித்து ஊருக்குப் பேசி, நான் மட்டுமே சமையல் என்பதால் தோசை அல்லது இட்லியுடன் இரவு உணவை முடித்தபின் வாசிக்க, எழுத, படம் பார்க்க என நேரம் கிடைக்கிறது. இப்போது வாசிப்பில் இருக்கும் புத்தகம் 'நிலம் பூத்து மலர்ந்த நாள்'. காட்டு வழியே பாணர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன்... எழுத்தாளர் கே.வி. ஜெயஸ்ரீ தன் வசீகரிக்கும் எழுத்தால் இழுத்துச் செல்கிறார்.

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

வாராரு... வாராரு... அழகர் வாராரு...

ன்று அழகர் வைகையில் இறங்கும் நிகழ்வு... நான்கு வருடத்துக்கு முன் திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்குப் பயணமாவதை கோவிலுக்கே சென்று பார்த்து, தல்லாகுளத்தில் எதிர்சேவையில் மீண்டும் அழகரின அழகைப்பருகி, வைகையில் இறங்கும் முன் ஒரு முறை தரிசித்து, மாலை அண்ணாநகர் பக்கமாய் போய் மீண்டும் அவரைச் சந்தித்து... கோவிலில் மட்டுமே சற்றே தள்ளி நின்று பார்த்தோம்... மற்ற இடங்களில் எல்லாம் அவரின் பல்லக்கை, தங்கக் குதிரை வாகனத்தை தொட்டு வணங்கி, மிக அருகில் அவரைக் காணும் வாய்ப்பு அமைந்தது.

சனி, 24 ஏப்ரல், 2021

வாசிப்பை நேசிப்போம்

நேற்று உலக புத்தக தினம்... புத்தக வாசிப்பு என்பது ஒரு போதை... வாசிக்க ஆரம்பித்தவன் அவ்வளவு எளிதில் அதைக் கைவிட்டு விடமாட்டான். தினமும் ஏதோ ஒரு பக்கத்தையாவது வாசிக்கத்தான் செய்வான். இணையம் வீரியமான பின்னே நிறைய வாசிக்கக் கிடைப்பதும் பல விஷயங்களை அறிய உதவுவதும் சிறப்பு.

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

மனசு பேசுகிறது : விவேக்கும் வாக்சினேசனும்

'ஜனங்களின் கலைஞன்' விவேக்கின் மரணத்துக்குப் பின்னே அவர் குறித்தான நல்ல செய்திகள் எல்லாம் நிறைய வலம் வந்து கொண்டிருக்கின்றன... இருக்கும் போது ஒருவனைக் கொண்டாடாத, அல்லது கொண்டாடத் தெரியாத நாம் அவர் இறந்த பின்னே அவரின் நல்ல குணங்களை எல்லாம் வெளியில் சொல்லிச் சிலாகிக்க ஆரம்பிக்கிறோம்... இறந்த பின்பு பாரத் ரத்னா கொடுப்பதைப்போல.  

சனி, 17 ஏப்ரல், 2021

மனசு பேசுகிறது : விவேக் முதல் விஷால் வரை

னங்களின் கலைஞன் விவேக்கின் மரணம் தமிழகத்தையே அழ வைத்திருக்கிறது. எதிர்பாராத மரணம் என்பது எத்தனை வேதனையைக் கொடுக்கும் என்பதை உணர முடிகிறது.  சமீபத்திய மரணங்கள் நாளைய விடியல் நமக்கு இருக்குமா..? என்ற பயத்தையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சில மரணங்கள் சட்டென நிகழ்ந்து விடும்... இப்பத்தானே பேசிக் கொண்டிருந்தார்... எப்படி ஆனது என்ற கேள்வியே நமக்குள் எழும்... அப்படித்தான் இன்றைய விடியல் இருந்தது. 

புதன், 14 ஏப்ரல், 2021

சினிமா : மண்டேலா

 மண்டேலா

ஓரு ஓட்டுத்தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்ற நிலை இருந்தால்... அந்த ஓட்டு இவருடையதுதான் என்பதும் தெரிந்திருந்தால்... ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் இன்றைய தமிழகத்தில் என்னவெல்லாம் நிகழும் என்பதுதான் படத்தின் கதை.