மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 30 ஏப்ரல், 2020

படித்ததில் ரசித்தது : கண்ணதாசன் கவிதை

காலத்தால் அழியாத செட்டிநாட்டுக் கவிஞன் கண்ணதாசன்... செட்டிய வீட்டில் மாமியார் மருமகள் சண்டை இருந்தாலும் வெளியில் தெரியாது... பெரிய பெரிய வீடுகளில் வாழும் அவர்கள் அப்படியெல்லாம் சண்டை போட்டுக் கொள்ளும் மனிதர்களாகவும் தெரிவதில்லை...

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

‘அப்பாக்களை எப்போது முழுதாய் அறிவோம்?’ - திரு. பார்த்திபராஜா

ல்லூரி விரிவுரையாளர் திரு. பார்த்திபராஜா அவர்களின் கட்டுரை... நீளமான பகிர்வுதான்... முகநூலில் பகிர்ந்து கொண்ட போது தனபாலன் அண்ணன்தான் இங்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார். அவருக்கு நன்றி.

சனி, 25 ஏப்ரல், 2020

சினிமா விமர்சனம் : தியா (கன்னடம்)

ஒரு பெண்ணுக்கு இரு வேறு சூழலில் இரு வேறு மனநிலையில் ஏற்படும் காதல்கள்தான் கதை... 

வியாழன், 23 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : உலக புத்தக தினம்

ன்று உலக புத்தக தினமாம்... நேற்று பூமி தினமாம்... சமீபமாய்த்தான் இவையெல்லாம் அட்சய திரிதியை போல பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கின்றன. படிக்கும் காலத்தில் எல்லாம் இப்படித் தினங்கள் எல்லாம் இல்லவே இல்லை.

புதன், 22 ஏப்ரல், 2020

சினிமா : க்ரைம் படங்கள்

சில நாட்களாகவே தினம் ஒரு பதிவு என்பதாய் ஆகிவிட்டது... கொஞ்சம் வாசிப்பு... சின்னதாய் ஒரு பதிவு என்பதாய் நாட்கள் நகர்கிறது. ஊருக்குக் காலையும் மதியமும் மட்டுமே பேச முடிகிறது... இரவில் இணையம் இழுக்க மறுப்பதால் அலுவலகம் போய்விட்டு வந்து நீண்ட நேரம் பேசுவது போல் இப்போது முடிவதில்லை...

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : கந்தர்வன் கதைகள் - 1

னது பதிவுகளுக்குக் கருத்துச் சொல்லும் நட்புக்கள் அனைவருக்கும் நன்றி. தங்கள் கருத்துக்கு பதில் இட என் கணிப்பொறி இடமளிப்பதில்லை. அலுவலகம் என்றால் கூட ஒரு சிலருக்கேனும் கருத்திட முடியும்... கொரோனா வீட்டிலிருந்து வேலை என ஆக்கி வைத்திருக்கிறது... அலுவலகத்தில் ஆறு மணிக்கெல்லாம் கடையை மூடி... நடையைக் கட்டலாம். வீட்டில் என்னும் போது ஏழு மணியானாலும் முடிவதில்லை... அப்பத்தான் முக்கியமாய் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்... மேலும் என் கணிப்பொறி ஏனோ கருத்துக்களுக்கான பதிலை விரும்புவதில்லை... எனவே தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

திங்கள், 20 ஏப்ரல், 2020

சினிமா : கெட்டியோளானு எண்ட மலாஹா (மலையாளம்)

கெட்டியோளானு எண்ட மலாஹா (ketiyolaanu Ente Malakha)...

பேரைத் தமிழ்ப்படுத்தியது சரியான்னு தெரியலை... சரி அத விடுங்க... இவன் என்னடா வெறும் மலையாளப் படத்துக்கா எழுதிக்கிட்டு இருக்கானேன்னு கூடத் தோணலாம்... கதைகள் இழுக்கின்றனவே... எப்படிக் கதையாகினும் படத்தை ஒரு ஈடுபாட்டோட பார்க்க முடிவதே இதற்குக் காரணம். 

சனி, 18 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : ஆடும் தீபம்

டும் தீபம்...

ஒரு பெண்... அதுவும் ஆதரவற்ற பெண்... இந்தச் சமூகத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் எது மாதிரியான பிரச்சினையைச் சந்திக்கப் போகிறாள் என்பது நாம் அறிந்தது... பார்த்ததுதானே... இங்கே எல்லாப் பெண்களுக்கும் ஒரே பிரச்சினைதான்... ஆம் அது காமக் கழுகுகளின் கோரப் பிடிக்குள் சிக்குதல். அதிலிருந்து மீண்டு வெளியேறும் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினையே இந்நாவல்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

சினிமா : ஹெலன் (மலையாளம்)

'ஆமா உங்க மக பேர் என்ன சார்..?'

'ஹெலன்...' சொல்லும் போதே தந்தையின் முகத்தில் பெருமிதம் பொங்கும்.

ஆம்... படத்தின் பெயரே ஹெலன்தான்.

2019 நவம்பரில் வெளியான படம்.  நேற்றிரவுதான் பார்த்தேன்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : பார்த்த சினிமாக்களும் எழுத்தும்

கொரோனா என்னும் கொடும் நோயின் பிடிக்குள் உலகமே சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலை எப்போது மாறும் என்பது யாருக்கும் தெரியாது. நம் நாட்டிலும் பொழைக்க வந்த நாட்டிலும் தினந்தோறும் எகிறிப் போய்க் கொண்டிருக்கும் பாதிப்பு / இறப்பு எண்ணிக்கையைப் பார்க்கும் போது வருத்தமும் பயமுமே ஆட்கொள்கிறது.  யாருக்கு வரும்..? எப்போது வரும்..? எப்படி வரும்..? என்பதெல்லாம் தெரியாது... ஆனாலும் வரும். நேற்று காரைக்குடியில் ஒரு நாலு வயதுக் குழந்தைக்கு வந்திருக்கிறது... இந்தச் செய்தியைக் கேட்டபோது அந்தக் குழந்தை மீண்டு(ம்) வர வேண்டும் என்றுதான் பிரார்த்தித்தேன்.

புதன், 15 ஏப்ரல், 2020

பிரமாண்டமும் ஒச்சமும் (சி.சு.செல்லப்பா படைப்புலகம்)

பிரமாண்டமும் ஒச்சமும் (சி.சு.செல்லப்பா படைப்புலகம்)...

சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலைப் படித்த போது, அதன் வசீகரத்தில் இருந்து மீண்டு வர வெகு நேரமானது. அவ்வளவு நேர்த்தியாய்க் கதை வாடிவாசலைச் சுற்றியே நகர்த்தப்பட்டிருக்கும்.சி.சு.செல்லப்பாவின் எழுத்தில் வாசித்த ஒரே ஒரு கதையும் அதுதான்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

எதிர்சேவை விமர்சனம் : எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்

குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அண்ணன் எப்போதும் என் மீது பிரியம் கொண்டவர். சென்னைக்குப் போனபோது யாரையும் சந்திக்க முடியாத சூழலிலும் தொடர் போன் அழைப்பின் மூலம் தனது வீட்டுக்கே வர வைத்தவர் இவர். இவரின் திருமண ஒத்திகைக்கு எனது அணிந்துரை வேண்டுமெனச் சொன்ன போது நானெல்லாம் எழுதி என யோசித்தேன். விடவில்லை... நீதான் எழுதுறேன்னு சொல்லி வாங்கினார்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

எதிர்சேவை விமர்சனங்கள் : சுடர்விழி & பாரதி

திர்சேவை... சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. இந்தப் 12 கதைகளுமே நம்மைச் சுற்றியுள்ள யாரேனும் ஒருவரது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அல்லது நாம் மறந்து போன நிகழ்வுகளை நமக்கு நினைவூட்டுகின்றன.

சனி, 11 ஏப்ரல், 2020

சினிமா : பாரம்

பாரம்...

கிராமங்களில் திட்டும் போது நீ எல்லாம் எதுக்குப் பூமிக்குப் பாரமா இருக்கே... போய்ச் சேர வேண்டியதுதானே என்பார்கள்...  அப்படியான ஒன்றைத்தான் இந்தப்படம் பேசுகிறது... இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பேசியிருக்கலாம்தான்... ஆனாலும் சொல்ல வந்ததைச் சொல்லியிருக்கிறது என்பதில் திருப்தி அடையலாம்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : ஒரு சிறு இசை

ரு சிறு இசை...

வண்ணதாசன் இசைத்திருக்கும் அழகான புல்லாங்குழல் இசைதான் இந்தச் சிறுகதைத் தொகுப்பு. கவிஞராய் அவர் எழுதும் கவிதைகள், சின்னச் சின்னச் செய்திகள் என முகநூலில் வாசித்திருக்கிறேன்... ரசிக்க வைக்கும் எழுத்து அது... ஆனால் சிறுகதை வாசித்ததில்லை... இதில் இருக்கும் எழுத்தோ அழுத்தம் கொடுக்கும் எழுத்து... ஆர்ப்பாட்டமில்லாத அன்பைச் சொல்லும் எழுத்து.

புதன், 8 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : கொரோனாவும் கதைகளும் ஒரு உதவியும்

லகெங்கும் தலைவிரித்தாடும் கொரோனா வைரஸால் அடுத்து என்னாகுமோ என்ற பயம் மனசுக்குள் எப்போதும் மையம் கொண்டிருக்கிறது... வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் தற்போதைய சூழலில்... ஆனால் கொரோனா சுத்தமாக அழிகிறதோ அல்லது அழிக்கப்படுகிறதோ அல்லது மனித இனம் படும் பாட்டைப் பார்த்து அதுவாகவே தொலைந்து போகிறதோ... எது எப்படியோ இந்தப் பீதியிலிருந்து நாமெல்லாம் இறையருளால் மீண்டு வரும் போது மிகப்பெரிய பொருளாதாரச் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்... எகிறும் விலைவாசி, வேலை இன்மை, பசி, பஞ்சம், பட்டினி என மிகப்பெரிய சுழலில் மாட்ட வேண்டியிருக்கும்... அப்போதுதான் உண்மையான உயிர்ப் பிரச்சினை மேலோங்கும்... அதை நினைக்கும் போதுதான் இன்னும் மனசுக்குள் வருத்தமும் அழுத்தமும் பயமும் கூடுகிறது.

திங்கள், 6 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது: கொரோனாவும் முகநூலும் சினிமாவும்

கொரோனா வைரஸ் சீனாவால் திட்டமிட்டு ...

கொரோனாவின் கோரத்தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் எல்லாருமே பாதுகாப்பாய் இருங்கள். அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிருங்கள். அசைவம் சாப்பிடவில்லை என்றால் செத்துவிடுவேன் எனக் கடைகளில் காத்து நின்று நோயை விலை கொடுத்து வாங்காதீர்கள். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதை விடுத்து அவர்கள் கேட்டுக் கொள்வதைப் போல் வீட்டுக்குள் இருங்கள்... உங்கள் உயிர் மட்டுமின்றி வீட்டார்.... அக்கம் பக்கத்தாரின் உயிரும் முக்கியம் என்பதை உணருங்கள்.

சனி, 4 ஏப்ரல், 2020

மனசின் பக்கம் : மதம் மறந்து மனிதம் பேணுங்கள்

தம் பிடித்து ஆடும் மனிதர்களைப் பற்றி எழுதும் எண்ணத்துடன்தான் அமர்ந்தேன். இவர்களைப் பற்றி என்ன எழுதுவது என்ற அயற்சியுடன் எழுதும் மனநிலையும் அற்றுப் போய் அமர்ந்தவன் பஹத் பாசில் நடித்த டிரான்ஸ் படத்தைப் பார்க்கலாமென ஆரம்பித்தால் ஏனோ படத்துடன் ஒட்ட முடியவில்லை... இவ்வளவுக்கு பஹத் என்னும் நடிப்பு ராட்சஸனின் இதில் அடித்து ஆடியிருக்கிறான் என்று எல்லாருமே சிலாகித்து எழுதியிருந்தும் மனநிலை ஒட்டவில்லை என்றால் அது எப்படிப்பட்ட படமாகினும் நம்மை ஈர்க்காது.