கேலக்ஸியின் முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டியை மகிழ்வுடன், எங்களால் முடிந்தளவுக்குச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம் என்பதை முகநூல் எங்கும் நண்பர்கள் தங்கள் வாழ்த்துக்களால் நிறைத்து வைத்திருப்பதைப் பார்க்கும் போது புரிகிறது. மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அதேசமயம் அடுத்தடுத்த போட்டிகளை இதைவிட இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டுமே என்ற பயமும் தொற்றிக் கொள்கிறது.
மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..
வெள்ளி, 24 நவம்பர், 2023
ஞாயிறு, 29 அக்டோபர், 2023
சினிமா விமர்சனம் : லியோ
அமீரகம் வந்து ஒரு நாலைந்து படம்தான் தியேட்டரில் பார்த்திருப்பேன். லியோவுக்கு வரலைன்னு சொன்னவனை ஒரு வாரத்துக்கு முன்னாடியே டிக்கெட் புக் பண்ணி, படம் வெளியான அன்று இரவுக்காட்சிக்கு கூட்டிச் சென்றார்கள் தம்பிகள்.
திங்கள், 9 அக்டோபர், 2023
பிக்பாஸ் : பவா பிரம்மா அல்ல
பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா வெளியேறியதாகச் செய்திகள் வருகின்றன... மகிழ்ச்சி.
வெள்ளி, 22 செப்டம்பர், 2023
மதுரை கேலக்ஸி பதிப்பகம் நடத்தும் முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி - 2023
சென்ற வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட கேலக்ஸி பதிப்பகம், இந்த ஓராண்டுக்குள் பல நூல்களை - குறிப்பாக அரபி மொழியில் பாரதி கவிதைகள், ஆத்திசூடி, இலங்கையின் பிரபலமான எழுத்தாளர் காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீனின் மைவண்ணம் இராமகாவியம் - வெளியிட்டு பதிப்புத் துறையில் தனக்கென இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலும் பல வளர்ந்த, வளரும் எழுத்தாளர்களின் படைப்புக்களை எந்தவித எதிர்பார்ப்புமின்றி புத்தகமாக்குவதையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
எழுத்தையும் எழுத்தாளர்களையும் நேசிக்கும் கேலக்ஸி, மண் சார்ந்து எழுதும் எழுத்தாளர் ஒருவருக்கு ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாள் - பதிப்பகம் ஆரம்பித்த நாள் - ஆண்டு விழாவில் 'பாண்டியன் பொற்கிழி' - கேடயமும், சட்டகமிட்ட சான்றிதழும், பணமுடிப்பும் - என்னும் விருதை வழங்க இருப்பதாக அறிவித்து, அதைத் தனது முதலாமாண்டு விழாவிலேயே தொடங்கியும் வைத்திருக்கிறது.
யார் வேண்டுமானாலும் கேலக்ஸியில் தங்கள் புத்தகங்களைக் கொண்டு வரலாம், ஒரே ஒரு நிபந்தனைதான்... தாங்கள் அனுப்பும் உங்களது படைப்புகள் கேலக்ஸியின் குழுவால் வாசிக்கப்பட்டு, அந்தப் படைப்பு பிடிக்கும் பட்சத்தில் கேலக்ஸி உங்களின் படைப்பைக் கொண்டு வரும். அதற்கென எந்தக் கட்டணமும் பெறுவதில்லை. அப்படிப்பட்ட கேலக்ஸி எழுத்தாளர்களுடனான தனது நெருக்கத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகமாக்கும் வகையில் ஒரு உலகளாவிய சிறுகதைப் போட்டியினை அறிவித்திருக்கிறது. நமது சிறுகதை எழுத்தாளர்கள் எல்லாரும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். களத்தில் இறங்குங்க. கலக்குங்க.
விபரங்கள் கீழே
மொத்தப் பரிசுத்தொகை : ரூ. 12000
முதல் பரிசு : ரூ. 5000
இரண்டாம் பரிசு : ரூ. 3000
மூன்றாம் பரிசு : ரூ. 2000
சிறப்புப் பரிசு ( இருவருக்கு) : ரூ. 1000
இறுதித்தேதி : 20/10/2023
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : galaxybs2022@gmail.com
விதிமுறைகள் :
• கதைகள் 1200 முதல் 1500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.
• கதைக்களம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக மற்றவர்களின் மதங்களைப் புண்படுத்தும், இழிவுபடுத்தும் கதைகளாக இருக்கக் கூடாது. அப்படியான கதைகள் நிராகரிக்கப்படும்.
• கதைகளை மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும். கண்டிப்பாக யுனிகோட் (Unicode) எழுத்துருவில் World பைலாகத்தான் அனுப்பவேண்டும். தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
• கதை உங்களது சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். பிறரது கதைகளையோ, மொழிபெயர்ப்புக் கதைகளையோ, இதற்கு முன் பத்திரிக்கைகளிலோ இணைய இதழ்களிலோ வெளியான கதைகளையோ அனுப்பக் கூடாது.
• ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்பலாம்.
• பரிசுத்தொகை பணமாகவோ, புத்தகமாகவோ (வெற்றி பெற்றவர் விருப்பத்தின் பேரில்) வழங்கப்படும்.
• இறுதி நாளுக்குப் பின் கால நீட்டிப்பு செய்ய இயலாது என்பதால் அதற்குப் பின்வரும் கதைகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
• யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம், வயது வரம்பு இல்லை.
• போட்டிக்கான கதை தங்களது சொந்தப் படைப்பே, வேறு இதழ்களுக்கோ, போட்டிகளுக்கோ அனுப்பப்படவில்லை, போட்டி முடியும் வரை வேறு எதற்கும் அனுப்பமாட்டேன் என்ற உறுதிமொழி கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். அப்படி அனுப்பியது தெரிய வந்தால் தங்கள் கதை போட்டியில் இருந்து நீக்கப்படும்.
• தங்களது முகவரி மற்றும் செல்போன் எண்ணை மறக்காமல் மின்னஞ்சலில் குறிப்பிட வேண்டும்.
• இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் கதைகள் எங்கள் பதிப்பத்தில் புத்தகமாக வெளியிடப்படும்.
• இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் கதையை எழுதிய எழுத்தாளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.
• போட்டி முடிவுகள் நவம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.
• நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
-பரிவை சே.குமார்
திங்கள், 18 செப்டம்பர், 2023
மனசு பேசுகிறது : 'தூங்காநகர் நினைவுகள்' நூல் திறனாய்வுக் கூட்டம்
தூங்காநகர் நினைவுகளை இன்னும் விரித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்ததையும், எழுத்தாளனே மிகச் சிறந்த சோம்பேறி என்பதால் அது நிகழவில்லை என்பதையும் சொல்லி, இதை இன்னும் விரிவாக எழுத வேண்டும், அதுவும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் எனச் சொன்னார். அப்போது திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய தொல்லியல் நூலைப் பற்றியும் அதில் தனது பங்கும் கொஞ்சம் இருப்பது குறித்தும் அதற்காக எப்படி அவர் உழைத்தார் என்பதையும் அது ஆங்கில நூலாக எல்லா இடத்திலும் எப்படிச் சென்று சேர்ந்திருக்கிறது என்பதையும் சொன்னார். மேலும் தனது காலத்து மதுரையை, அதாவது 1948க்குப்பின்னான மதுரையைக் குறித்து தூங்காநகர் நினைவுகள் தொகுதி இரண்டை இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள், காலம் வாய்ப்பளித்தால் எழுதி முடிக்க வேண்டும் எனச் சொன்னார். அதற்கான குறிப்புகள் முப்பதுக்கு மேல் தன் கைவசம் இருப்பதாகச் சொன்னார்.
திங்கள், 21 ஆகஸ்ட், 2023
மனசின் பக்கம் : எழுத்து கொடுத்த இடம்
தொடர்ந்து எழுதிக்கிட்டு இருப்பது கூட ஏதோ ஒரு வகையில் வரம்தான். இப்போது வரை ஏதாவதொன்றை கிறுக்கிக் கொண்டுதான் இருக்கிறேன். சில நாட்களுக்கு முன் ஒரு சகோதரர் 'உங்களுக்குப் பிரச்சினை இல்லைண்ணே... தசரதன் புத்தகம் கொண்டு வந்து அவரே எல்லாத்தையும் பார்த்துக்கிறார். நானெல்லாம் புத்தகம் போட்டு அதை எல்லார்க்கிட்டயும் கொண்டு போய் சேர்க்க ஓடிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. என்னமோ தெரியல இப்பல்லாம் ஓடவும் முடியல... அடுத்தடுத்து நகர்வதில் கூட ஒரு தயக்கம் வருது' என்று சொன்னார்.