கல்லூரியில் படிக்கும் போது எங்களது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களில் தொடர் வற்புறுத்தலினால் எழுத ஆரம்பித்து, அதன் தொடர்ச்சியாய் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவை பிரசுரமாகி, அவ்வப்போது வரும் மணியார்டர் என நகர்ந்தாலும் பெரிதாய் எதுவும் எழுதிவிடவில்லை என்பதே உண்மை.
மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..
சனி, 17 ஜனவரி, 2026
ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025
சதீஷ் குமார் பார்வையில் 'உன்மத்தம்'
எழுத்தாளனாய் எழுதிவிட்டேன், இனி வாசகர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனக் கடந்து போனாலும் நம் எழுத்தின் மீதான ஒரு பார்வையாவது வந்தால் சிறப்பாக இருக்குமே என்ற எண்ணம் ஒவ்வொரு புத்தகம் வெளியான பின்னும் மனசுக்குள் தோன்றத்தான் செய்யும்.
புதன், 9 ஜூலை, 2025
மனசின் பக்கம் : உன்மத்தம் நாவலிலிருந்து...
உன்மத்தம் எனது 11-வது புத்தகம் (6-வது நாவல்). இந்த நாவல் ஒரு காலத்தில் நாடக நடிகராய் இருந்தவரின் கடந்த கால நினைவுகளையும் நிகழ்கால நிகழ்வுகளையும் பேசியிருக்கிறது.
ஞாயிறு, 29 ஜூன், 2025
கேலக்ஸி ஆண்டு விழாவும் உன்மத்தம் வெளியீடும்
கடந்த சனிக்கிழமை மாலை ஜெசிலா மேடத்தின் 'Proactive Excel Safety Consultancy' நிறுவனத்தில் கேலக்ஸியின் நான்காமாண்டு துவக்க விழா - மூன்றமாண்டு நிறைவு விழா - மிகச் சிறப்பாக, மகிழ்வாக, மன நிறைவோடு நடந்து முடிந்தது.
ஞாயிறு, 11 மே, 2025
மனசு பேசுகிறது : மயக்கும் குரலாள் மகதி
மகதி-
தொலைக்காட்சியில் நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி ஜீ-யின்'சரிகமப'. இந்நிகழ்ச்சி சிறுவர்கள், பெரியவர்கள் என மாற்றி மாற்றி நடக்கும். கடந்த ஆறு மாதமாக 'சரிகமப - லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4' நடைபெற்று, இன்று அதன் இறுதிப் போட்டியை எட்டியிருக்கிறது.
திங்கள், 13 ஜனவரி, 2025
சான்றோர்... பாலர் : பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன்
நேற்றுக் காலை 'அப்பா உங்ககிட்ட பேசணுமாம் குமார்' என வாட்சப்பில் அனுப்பியிருந்தார் மேகலை. எதிர்பாராத நிகழ்வாய் அமைந்த அம்மாவின் இறப்புக்குப் பின் ஐயாவிடம் எப்படிப் பேசுவது..? என்ன பேசுவது..? என்ற மன தைரியமில்லாத நிலையில் இருந்து வருகிறேன் என்பதே உண்மை.