மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஜூலை, 2013

மருத்துவர் தினத்தில் சில நினைவுகள்


இன்று மருத்துவர் தினமாம். இந்த முகநூலின் பயன்பாடு அதிகமான பின்புதான் நிறைய தினங்களை அறிய முடிகிறது. 

இன்றைக்கு பெரும்பாலான மருத்துவமனைகள் பணம் ஒன்றே பிரதானம் என்ற நிலையில்தான் இருக்கின்றன.மருத்துவர்களும் லட்சங்களைக் கொட்டி படித்துவிட்டு லட்சியக் கொள்ளையர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் பணி புரிந்தாலும் தனியாக மருத்துவமனை வைத்து அரசு மாத்திரை மருந்துகளை வைத்து தொழில் நடத்தும் டாக்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சினிமாவில் காட்டுவது போல் சுவாசம் நின்ற பிறகும் இருப்பது போல் மருத்துவக் கருவிகளை மாட்டி பணம் பறிப்பவர்களும் மருத்துவமனைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு பக்கம் இப்படியிருந்தாலும் மனித நேயத்தோடும் மக்கள் நலனுக்காக தங்களது தொழிலை நடத்தும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தேவகோட்டையில் தற்போது பிரபலமாக இருக்கும் மகப்பேறு மருத்துவர் ஒருவர் மருத்துவமனை ஆரம்பித்த புதிதில் எங்கள் மூத்த அக்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அது முதல் எங்க வீட்டில் எல்லாருக்கும் அங்குதான் பிரசவம் பார்த்தார்கள். 

எங்கப்பா மீது அந்த டாக்டருக்கு ஒரு தனி மாரியாதை, அப்பா என்றுதான் அவரும் அழைப்பார். இரவில் ஆண்கள் தங்க அப்போது இல்லை இருந்தும் அப்பா படுத்துக் கொள்ள அனுமதிப்பார். யாரை பிரசவத்துக்கு கூட்டிச் சென்றாலும் சுகப் பிரசவமாத்தான் இருக்கணும், ஆபரேசன் பண்ணக்கூடாது என்று அப்பா டாக்டரிடம் சொல்லிவிடுவார். அவரும் சிரித்துக் கொள்வார். அபரேசன் பண்ண மாட்டார். 

என் மனைவிக்கு அவர்தான் செக்கப் செய்து கொண்டிருந்தார். பிரசவம் அவரிடமே பார்ப்போம் என்று அப்பா சொன்ன போது என்னவளின் வீடு மதுரை என்பதால் அங்கே பார்ப்போம் என்று மாமா சொல்லிவிட்டார். மகப்பேறில் பிரபலமான மருத்துவமனை, செக்கப் போகும் போதெல்லாம் குழந்தை நல்லாயிருக்கு சுகப்பிரசவம்தான் என்று சொன்னார்கள். 

வலி வந்து கூட்டிப் போய் காட்டினால் அங்கு தங்கச் சொல்லிவிட்டார்கள். ஊசி மருந்து என மாற்றி மாற்றி போட்டார்கள். காலையில் பிரசவம் ஆகும் பிரச்சினையில்லை இட்லி சாப்பிட சொன்னார்கள். ஒரு இட்லி கூட சாப்பிட்டிருக்க மாட்டார். வந்து கூப்பிட்டார்கள்... என்ன என்று கேட்டபோது ஸ்கேன் பண்ண வேண்டும் என்றார்கள். இப்போதானே பண்ணி நல்லாயிருக்கு சாப்பிட சொல்லுங்கன்னு சொன்னீங்க என்றதும் இல்ல மறுபடி செய்யணும் என்றார்கள். 

ஸ்கேன் பண்ணிவிட்டு குழந்தை கொடி சுத்தி கிடக்கு உடனே ஆபரேசன் பண்ணனும் என்று சொல்ல, நாங்கள் சண்டைக்குப் போக, பின்னர் மாமா அப்பாவெல்லாம் வந்து பேசி முடிவில் ஆபரேசனுக்கு ஒத்துக் கொள்ள ஆபரேசன் தியேட்டர் கொண்டு சென்றார்கள். அங்கு ஒரு நர்ஸ் எம்புட்டு தின்னு இருக்கா பாரு என்று சொல்லியிருக்கிறார். அரை மயக்கத்தில் அதை கேட்டதாக பின்னர் சொன்னார். சாப்பிட சொன்னதும் அவர்கள்தான்... அரை இட்லி சாப்பிடுவதற்குள் கூப்பிட்டவர்கள் அவர்கள்தான்... பின்னர் இது போன்ற பேச்சுக்கள் வேறு.

எல்லாம் முடிந்து தேவகோட்டை வந்து ஸ்ருதிக்கு தடுப்பூசி போட எங்கள் டாக்டரிம் போனபோது என்ன சுகப்பிரசவம்தானே என்று கேட்டார். இல்ல ஆபரேசன் என்றதும் எதுக்கு ஆபரேசன் எல்லாம் நல்லாத்தானே இருந்தது. சரி ஆபரேசனுக்கு அப்பா ஒத்துக்க மாட்டாரே... எப்படி விட்டார் என்று கேட்டார். நடந்ததை சொன்னதும் இப்படியும் இருக்கிறார்கள் என்று சொன்னார். அதன் பிறகு மதுரை மருத்துவமனையை மறந்துவிட்டோம். அடுத்து விஷாலும் ஆபரேசன் பண்ணித்தான் பிறந்தான் ஆனால் இந்த முறை காரைக்குடியில்...

எங்க ஊரில் இன்னொரு டாக்டர் இருந்தார். ஏழைகளின் தோழன் எனலாம்... பக்கத்து வீட்டுக்காரர் போல பேச்சு... டோக்கனெல்லாம் தேவையில்லை... அவர் அறைக்குள் எத்தனை பேர் நிக்கலாமோ அத்தனை பேர் உள்ளே சென்று அவர் மேஜையைச் சுற்றி நிற்கலாம். அதுதான் அவருக்கும் பிடிக்கும்.

'உங்களுக்கு என்ன பண்ணுது?' என்று பெரியவர் ஒருவரிடம் கேட்கும்  போதே 'பெரியத்தா கால் வலி எப்படியிருக்கு?' என்பார். 'தம்பி என்ன விஷயம்?' என்று பக்கத்தில் நிற்பவனை கேட்பார். இப்போ பெரியவரின் பதிலுக்கு 'வெளிக்கி வெள்ளையா போகுதா மஞ்சளா போகுதா'ன்னு கேட்பார். ஆனால் எல்லாருக்கும் சரியான மருந்து மாத்திரை எழுதுவார். 

அவரது மருத்துவமனையிம் அறைகளுக்கு சிந்து, கங்கை, பிரமபுத்திரா என நதிகளின் பெயரை வைத்திருப்பார். நோயாளிகளை பார்த்துக் கொண்டே நர்ஸை அழைத்து 'கோதாவரியில பென்சிலின் போட்டுட்டு வா' என்பார். எங்க ஊரில் எல்லாம் உடம்பு சுகமில்லை என்றால் அவருகிட்ட போனா போதும் சரியாயிடும் என்று போய் பார்த்தார்கள். 

எனது பெரியப்பா மகன் ஊரில் ஒருவருக்கு முடியலை இவரிடம் என்று கூட்டிப் போனார். அப்போது இரவு எந்த நேரத்தில் போனாலும் இவர் பார்ப்பார். அழைப்பு மணியை அழுத்தியதும் ஒருவர் கைலியை கட்டிக் கொண்டு வந்து கதவை திறந்து இருக்கிறார். அண்ணனும் டாக்டரைப் பார்க்கணும் என்றதும் கைலியுடன் வந்தவர் இருங்க ஐயாவை வரச் சொல்லுறேன்னு சொல்லி உள்ளே போய் இருக்கிறார். கொஞ்ச நேரத்தில் உள்ளே இருந்து அழைப்பு வர சென்றால் கைலியுடன் இருந்தவர் நாந்தான் டாக்டர், என்ன சின்னப்பய மாதிரி தெரியுறேன்னா வளரலையேப்பு என்று சொல்லியிருக்கிறார். மிகவும் நல்ல மனிதர், இன்னமும் கிராமத்து மக்கள் அவரைத் தேடி வரத்தான் செய்கிறார்கள்.
இப்படி இன்னும் சிலரையும் சொல்லிக் கொண்டு போகலாம்...

இது போன்ற நல்ல மருத்துவர்களுக்கு மருத்துவர் தின வாழ்த்துக்களை சொல்வதில் எள்ளளவும் சந்தோஷம் குறைவதில்லை. வாழ்க மக்கள் நலன் காக்கும் மருத்துவர்கள்...

-'பரிவை' சே.குமார்

ஞாயிறு, 30 ஜூன், 2013

நீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில் அதிகப்படியான சர்க்கரையை சேர்த்துக் கொள்வது ஒரு முக்கிய காரணமாகும். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை. அதிலும் ஆரோக்கியம் என்று நினைக்கும் காய்கறிகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த காய்கறிகளே உயிருக்கு ஆப்பு வைத்துவிடும். ஏனெனில் சில காய்கறிகளில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் அதிகம் இருக்கும். இத்தகைய காய்கறிகள் இனிப்பாக இருக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் அனைத்து காய்கறிகளையுமே நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்பதில்லை. உதாரணமாக, பூசணிக்காய் இனிப்பாக தான் இருக்கும். ஆனால் இதனை நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிடலாம். மேலும் சில காய்கறிகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. சரி, இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத சில காய்கறிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, நீரிழிவு இருந்தால், அவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

உருளைக்கிழங்கு 

 உருளைக்கிழங்கில் மாவுப்பொருள் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

சேனைக்கிழங்கு 

 பொதுவாக கிழங்குகள் அனைத்திலுமே மாவுப்பொருளானது அதிகம் இருக்கும். அதிலும் சேனைக்கிழங்குகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சொல்ல முடியாத அளவில் அதிகரிக்கும். எனவே இந்த கிழங்கை உணவில் சேர்க்கக்கூடாது.

பீன்ஸ் 

  பீன்ஸ் இனிப்பாக இல்லாவிட்டாலும், இதில் ஸ்டார்ச் மிகவும் அதிகம் உள்ளது. அதற்காக பீன்ஸ்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அவற்றை நீரில் வேக வைத்து, அதுவும் அளவாக சாப்பிட வேண்டும்.

பீட்ரூட் 

   பீட்ரூட் ஒரு வேர் காய்கறி என்பதால், இது மண்ணில் உள்ள அனைத்து இனிப்புக்களையும் உறிஞ்சி, மிகவும் இனிப்பான சுவையில் உள்ளது. அதற்காக இதனை அறவே தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் இதில் மற்ற நன்மைகளும் அடங்கியிருப்பதால், இதனை 2-3 வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும்.

ஸ்குவாஷ் (Squash) 

  ஸ்குவாஷ் ஒரு இனிப்புச் சுவையுடைய குளிர்கால காய்கறி. இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் அதிகம் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள், இநத் காய்கறியில் எவ்வளவு தான் நன்மைகள் இருந்தாலும், அறவே தவிர்க்க வேண்டும்.

பச்சை பட்டாணி 

    பச்சை பட்டாணியில் ஸ்டார்ச் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளையும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

தக்காளி 

   தக்காளி சேர்க்காத உணவுகளை பார்க்கவே முடியாது. இருப்பினும் இது இனிப்புச் சுவையுடையதால், இதனை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் உணவுகளிலும் தக்காளியை அளவாக பயன்படுத்த வேண்டும்.

சோளம் 

     சோளத்தில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஸ்வீட் கார்ன். இதன் பெயரிலேயே, இது மிகவும் இனிப்பானது என்பது தெளிவாக தெரிவதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதில் எண்ணற்ற அளவில் ஸ்டார்ச் நிறைந்துள்ளது.

வாழை வகைகள் 

       இந்தியாவில் வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றை அதிகம் சமைத்து சாப்பிடுவோம். ஆனால் இந்த உணவுப் பொருட்களிலும் ஸ்டார்ச் அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக வாழைப்பழத்தில் இனிப்புச் சுவை அதிகம் உள்ளது. எனவே இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரைவள்ளி  

உருளைக்கிழங்குடன் ஒப்பிடுகையில் சர்க்கரைவள்ளி கிழங்கில் ஸ்டார்ச் குறைவாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய கிழங்கை அறவே தவிர்க்க வேண்டும்.

*************

நீரிழிவு நோய் குறித்த விக்கிபீடியா தகவல் :

நீரிழிவு (diabetes) என்பது வளர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். ஆனால், நீரிழிவு என்பது ஒரு நோயல்ல; இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படுவதாகும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.

நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு இன்சுலின் உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுபடுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாததால், இவற்றைச் சாதாரணமாக முற்றிலுமாகக் குணமாக்க முடியாது. கணைய மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் மறைந்துவிடுகிறது.

நன்றி : விக்கிபீடியா & தட்ஸ் தமிழ் இணைய இதழ்

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

பத்து ரூபாயில் சிறுநீரக கல்லுக்கு சிறந்த தீர்வு..!


இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இந்த உபயோகமான தகவலை முகநூல் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டார்கள்.இப்போது நம்மில் நிறைய நண்பர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது .

அதனால் இது போன்ற நல்ல தகவல்கள் நாம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று இன்று ஒரு தகவல் பக்கத்தில் பதிவு செய்கிறேன் உங்களுடைய நண்பர்களுக்கும் கட்டாயம் பகிர்வு செய்யுங்கள்

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.

வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்

நன்றி : இன்று ஒரு தகவல்

நன்றி : மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு...

-'பரிவை' சே.குமார்