மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 29 மே, 2021

அமீரகத்தில் கி.ரா. நினைவஞ்சலி

கிட்டத்தட்ட ஒன்னறை ஆண்டுகளுக்குப் பிறகு அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் வட்ட உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு நேற்றைய நாளை இனிமையாக்கியது. அலுவலகம், வீடு என எங்கும் நகராமல் நகர்ந்த வாழ்க்கைக்கு நேற்றைய மாலையில் கடற்கரையில் பேசிச் சிரித்த நிமிடங்கள் மனதை மடை மாற்றி விட்டதாக உணர முடிந்தது. 

திங்கள், 24 மே, 2021

சினிமா : நிழலும் களவும்

கொரோனா... கொரோனான்னு அதன் பின்னால் போகும் மனதை இழுத்து நிறுத்தி, தினம் கேட்கும் இழப்புக்கள், நண்பர்கள் வட்டம், முகநூல் வட்டமென எல்லாப் பக்கமும் இருந்து தினம் தினம் வந்தடையும் துக்கச் செய்திகளை விடுத்து சமீபத்தில் பார்த்த இரு மலையாளப் படங்களைக் குறித்து கொஞ்சம் எழுதலாம் என்பதால்தான் இந்தப் பதிவு.

புதன், 19 மே, 2021

மனசு பேசுகிறது : அழுத்தம் கொடுக்கும் கொரோனா

கொரோனா குறித்து எழத வேண்டாம் என்றே தோன்றியது... இரண்டு நாட்களாக ஏதாவது எழுதலாம் என்று நினைத்துப் பின் தொடர் மரணச் செய்திகளால் மனம் எதிலும் ஒட்டாமல் போய்விட்டது. இத்தகைய சூழலில் என்ன எழுதுவது என்ற எண்ணம்தான் மனம் முழுவதும் நிறைந்து நிற்கிறது. 

திங்கள், 17 மே, 2021

மனசு பேசுகிறது: கொரோனாவின் கோரப்பிடிக்குள்

 கொரோனா...

தொலை தூரத்தில் சீனாவில் ஒரு வைரஸ் வந்திருக்கிறதாம்... ஆட்கள் எல்லாம் சாகிறார்களாம் என்பதாய்த்தான் 2020-ன் தொடக்கம் இருந்தது. பக்கத்து வீட்டுப் பையன் அங்கே டாக்டருக்குப் படிக்கிறான் என்பதால் அவனை எப்படி ஊருக்கு கொண்டு வருவது என்ற அவனின் பெற்றோரின் புலம்பலின் போது தெரியவில்லை அதன் வீரியம் கட்டு விரியனாய் கட்டவிழ்ந்து போகும் என்பது.

வியாழன், 13 மே, 2021

நாயாட்டும் ஜாதி அரசியலும்

நாயாட்டு...

காவலர்களால் பாதிக்கப்பட்டவர்களைத்தான் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்... அதேபோல் அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்ட காவலர்களை மிஞ்சிமிஞ்சிப் போனால் வேறொரு துறைக்கு மாற்றுவார்கள்... அதையும் பார்த்திருக்கிறோம்... மற்றபடி காவல்துறையில் இருக்கிறார் என்றால் அவர்களின் அடாவடிச் செயல்களை வைத்து மிகப்பெரிய பலம் பொருந்திய மனிதர்களாகத்தான் நாம் நினைத்திருக்கிறோம்.. இதில் சாதி அரசியலுக்குப் பழியாகும் மூன்று காவலர்கள் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.

புதன், 12 மே, 2021

'வீரியமாய் கிளைக்கட்டும் மண்ணின் செடி' - தேவா சுப்பையா

'எதிர்சேவை' சிறுகதைத் தொகுப்பு 2020-ல் வெளியாகியிருந்தாலும் இப்போதும் நண்பர்கள் படித்துக் கருத்திடுவது மகிழ்வைத் தருகிறது. சமீபத்தில் எழுத்தாளர், கவிஞர் சிவமணி எழுதியிருந்தார். இப்போது எழுத்தாளர், கவிஞர், வலைப்பதிவர், நடிகர் எனப் பன்முகங்கள் கொண்ட, எங்கள் மண்ணின் மைந்தர் தேவா சுப்பையா அண்ணன் எழுதியிருக்கிறார்.

திங்கள், 3 மே, 2021

17வது திருமண நாளில்...

திருமணத்துக்கு முன் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் திருமணத்துக்குப் பின் அப்படியான ஏனோ தானோ வாழ்க்கையெல்லாம் வாழ்ந்து விடமுடியாது. அதுவரை தனி ஒருவனாய் சுற்றித் திரிந்து விட்டு நம்மை நம்பி வந்த ஒருவருக்கான, நம் குழந்தைகளுக்கான வாழ்க்கை என நம்மை முன்னிறுத்தி குடும்பத்தைச் சுமக்க வேண்டிய வாழ்க்கைக்குள் அடைபட்டுப் போகிறோம்.

எனது பார்வையில் 'எதிர்சேவை' - கவிஞர் சிவமணி

கோதரர் கவிஞர் / எழுத்தாளர் / மகாகவி இணை ஆசிரியர் திரு. சிவமணி அவர்கள் எதிர்சேவையை வாசித்துவிட்டு என்னைப் போனில் அழைத்தது கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும் இந்த வருடத்தில் மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்கள் தங்களின் விழாக்களை விமரிசையாகக் கொண்டாட முடியாத நிலையில், தல்லாகுளத்தில் லெட்சோப லெட்சம் மக்கள் கூடியிருந்து 'கோவிந்தா' கோஷம் விண்ணைப்பிளக்க நடக்க வேண்டிய எதிர்சேவை நிகழ்வு அழகர் கோவிலுக்குள் நிகழ்ந்த அன்று என்பது எதிர்பாராமல் நிகழ்ந்ததுதான் என்றாலும் மகிழ்வான ஒன்று.