மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 25 ஜூன், 2021

மனசு பேசுகிறது பாரத் முதல் பலகை வரை

bharatwriters.com தளத்தில் இந்த வாரத்தில் எனது சிறுகதையான 'கமலம்' வெளியாகியிருக்கிறது. இன்றும் நாளையும் தளத்தில் இருக்கும். ஞாயிறன்று அடுத்த இதழ் மாற்றி விடுவார்கள். முடிந்தவர்கள் இன்று அல்லது நாளை வாசித்து உங்களோட 'LIKE'-யைத் தட்டி விட்டீங்கன்னா, ஏதோ கொடுக்கிற காசுல முன்னப் பின்ன வரும்ன்னு சொல்றாங்க... செய்வீர்களா..?

வெள்ளி, 11 ஜூன், 2021

சினிமா : மலையாளமும் தமிழும்

மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபார்க்காமல் படம் வெளியிடும் எண்ணம் நம் தமிழர்களுக்கு (கவனிக்க : 'நாம்' இல்லை) எப்போதும் இருப்பதில்லை. கொரோனா உச்சத்தில் கூட தியேட்டரில் நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி கொடுங்கள் என அரசிடம் கேட்டவர்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் தளபதிகள்தானே நாம்.

ஞாயிறு, 6 ஜூன், 2021

வேரும் விழுதுகளும் - 'வேரும் தூணும்' - சகோதரி ஹேமா

'வேரும் விழுதுகளும்'
அமீரக எழுத்தாளர் வாசிப்பாளர் குழுமத்தின் எழுத்தாளரும் தோழருமான 'பரிவை' சே.குமார் அவர்களின் 'வேரும் விழுதுகளும்' புத்தகம் ஒரு பார்வை. முகநூலை திறந்தால் அவருடைய பல சிறுகதைகளுக்கு பல அமைப்புகளிலிருந்து அவர் பரிசுகளை வாங்குவதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம். விருதுகள் என்றால்தான் பயம். பரிசுகள் என்றால் முழுமையாக நம்பலாம்.😆😆😆

சனி, 5 ஜூன், 2021

புதிய நாவலிருந்து - புவனாவும் கண்ணனும் கவர்கிறார்களா..?

ழுதி முடித்திருக்கும் நாவலில் இருந்து ஒரு பகுதி உங்கள் கருத்துக்காக... இதற்கு முன்னும் பின்னும் கதை நிறைவாக நகர்ந்திருப்பதாய் நான் உணர்ந்தேன்... இந்தப்பகுதி உங்களுக்கு அதை உணர்த்தலாம் என்று நினைக்கிறேன். வேரும் விழுதுகளும் ஒரு வாழ்வைப் பேசியதைப் போல் இதுவும் வாழ்க்கையை, குடும்பப் பிரிவை, அதன் வலியைப் பேசியிருக்கிறது. இறைவன் நினைத்தால், சகோதரர் தசரதன் மனசு வைத்தால் இதுவும் நாவலாக விரைவில் மலரும். நன்றி.

செவ்வாய், 1 ஜூன், 2021

கி.ரா.வின் 'புறப்பாடு' போல் ஒரு நிகழ்வு

சென்ற வெள்ளியன்று கி.ரா. நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் ஆசிப் மீரான் அண்ணன் கி.ராவின் 'புறப்பாடு' என்னும் கதை பற்றிப் பேசினார். கதையைச் சுருக்கமாய் சொல்வதை விட, அப்படியே வாசிக்கிறேன் அப்போதுதான் அதிலிருக்கும் நகைச்சுவையும் வட்டார வழக்கின் சுவையும் உங்களால் ரசிக்க முடியும் எனச் சொல்லி முழுக்கதையையும் வாசித்தார்.