மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

மனசின் பக்கம் : எழுத்து கொடுத்த இடம்

தொடர்ந்து எழுதிக்கிட்டு இருப்பது கூட ஏதோ ஒரு வகையில் வரம்தான். இப்போது வரை ஏதாவதொன்றை கிறுக்கிக் கொண்டுதான் இருக்கிறேன். சில நாட்களுக்கு முன் ஒரு சகோதரர் 'உங்களுக்குப் பிரச்சினை இல்லைண்ணே... தசரதன் புத்தகம் கொண்டு வந்து அவரே எல்லாத்தையும் பார்த்துக்கிறார். நானெல்லாம் புத்தகம் போட்டு அதை எல்லார்க்கிட்டயும் கொண்டு போய் சேர்க்க ஓடிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. என்னமோ தெரியல இப்பல்லாம் ஓடவும் முடியல... அடுத்தடுத்து நகர்வதில் கூட ஒரு தயக்கம் வருது' என்று சொன்னார்.