மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 21 செப்டம்பர், 2013

மனைவி


நீயும் நானும்
காதலித்த தருணங்களில்
வாய் ஓயாது
பேசியபடி நீயும்...
ரசித்தபடி நானும்...
சாலையில் வருவோர்
பற்றிய கவலையின்றி
செல்வோமே..!

மழையில் நனைந்து
நான் வரும்
வேளைகளில்
துப்பட்டா துறந்து
துடைப்பாயே..!

உனக்குப்
பிடிக்காத போதும்
எனக்காக
நண்பன் வீட்டில்
மீன் சமைத்தாயே..!

எல்லாம் எனக்கு
மீண்டும் வேண்டும்..!

வயசையும்...
வாரிசுகளையும்...
காரணம காட்டி
காதலைக்
கட்டிப் போட்டுவிட்டாயே...
நியாயமா..?

(2010 நெடுங்கவிதைகள் தளத்தில் கிறுக்கியது...)
-'பரிவை' சே.குமார்

14 எண்ணங்கள்:

கோமதி அரசு சொன்னது…

அருமையான கவிதை.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
குமார்(அண்ணா)

வயசையும்...
வாரிசுகளையும்...
காரணம காட்டி
காதலைக்
கட்டிப் போட்டுவிட்டாயே...
நியாயமா..?


என்ன வரிகள் நன்று நன்று மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நியாயமல்ல

Unknown சொன்னது…

காதலித்த போது தேவதைன்னு சொன்னீங்க ,இன்னைக்கி தேவைதானான்னு நினைக்காம அதே காதலோட சொல்லிப் பாருங்க ...நியாயம் கிடைக்கும் !

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நீ இப்பதான் ரொம்ப அழகா இருக்கே பிள்ள என்று சொல்லி பாருங்க குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதானே...? இதெல்லாம் நியாயம் கிடையாது... ஹிஹி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நல்ல கவிதை

சசிகலா சொன்னது…

அழகான கவிதை. நியாயமான கேள்வி இதே கேள்வியை ஆணும் பெண்ணும் மாறி மாறி கேட்டுக்க வேண்டியது தான்.

பெயரில்லா சொன்னது…

ஆதாம்- ஏவாள் ஜோடிக்குப் பின்னே அடுத்த ஜோடி இது தான்
என்று ஊர் சொல்லும் அளவிற்கு நிலைமை கட்டாயம்
மாறத் தான் வேண்டும்.

Asiya Omar சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு.

r.v.saravanan சொன்னது…

காலங்கள் உருண்டோடுகின்றன எண்ணங்கள் அங்கேயே நிற்கின்றன
இருந்தும் உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கிறது குமார்

Zubair siraji சொன்னது…

நல்லத்தாயிருக்கு

ஸ்ரீராம். சொன்னது…

காதலுக்கு எது வயது? :))

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.