மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

வலைச்சரத்தில் கும்மிப்பாட்டு


கிராமங்களில் நடவின் போதும்திருவிழாக்களின் போதும் குலவைப் பாடல்கள் பாடுவார்கள். பாடுபவரின் குரல் அவ்வளவு அழகாக இருக்கும். ரோட்டோரத்தில் நடவு நடும் போது ரோட்டில் துண்டை விரித்து அதன் மேல் நாற்று முடியை வைத்து கேலி முறைக்காரர்கள்ஊரின் பெரிய மனிதர்கள் போகும் போது குலவைப் பாடலைப் பாடி பணம் போட வைத்து விடுவார்கள். எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் செவ்வாயின் போது தினமும் சாமி கும்பிடும் போது குலவைப்பாடல் பாடுவார்கள். சித்தப்பா பெண் அவ்வளவு அழகாகப் பாடும். ஆத்தா குலவை போடுங்கன்னு சொன்ன உடனே

'தெற்குத் தெருவிலே
தேரோடும் வீதியிலே
தேங்காய் குலைபறிச்சு
வாறாளாம் மாரியாத்தா'  

அப்படின்னு கணீருன்னு பாடும்.  பாட்டை நிப்பாட்டும் போது மற்றவர்கள் 'உலுலுலு'ன்னு குலைவை போடுவார்கள். கேட்பதற்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். இந்த முறை என் மனைவியின் அம்மா ஊரில் திருவிழாவிற்குச் சென்றபோது ஒரு சின்னப்பெண்... பத்து வயது இருக்கும்... அவ்வளவு அருமையாக மைக் இல்லாமல் கணீர்க்குரலில் பாடியதைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. இன்னும் கிராமங்களில் குலவைப்பாடல் இளவயதினரிடமும் தொற்றிக் கொண்டிருப்பது சந்தோஷமான விஷயம்தானே... எங்க ஸ்ருதி மொளக்கொட்டில் எல்லாக் காலும் போட்டு கொட்டும்... எனக்கே ஆச்சர்யமாக இருக்கும்.. நான் மொளக்கொட்டப் போறது இல்லைங்கிறது வேற கதை... இதைப் போல குலவைப்பாடல் நிறைய இருக்குங்க... இன்னும் சில உங்கள் பார்வைக்காக...

‘மதுவாம் மதுக்குடமாம்
மதுக்கேத்த தெம்மாங்காம்
மதுவ இறக்கி வைக்க
மனங்குளிர்வா மாரியாத்தா...’

***

‘எல்லாரு வீட்டுலயும் எண்ண
ஊத்தி விளக்கெறியும்
மாரியாத்தா வாசலிலே
எளநித்தண்ணி நின்னெறியும்...’

இப்படி நிறையப் பாடல்களைச் சொல்லமாம்...  தொடர்ந்து வாசிக்க... இங்கே சுட்டுங்கள் 

குறிப்பு : கலையாத கனவுகள் தொடர்கதை வலைச்சரப் பணியின் காரணமாக இன்று மாலைக்குள் பதியப்படும்...

நன்றி...
-'பரிவை' சே.குமார்

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அசத்தல்... தொடர்க.. வாழ்த்துக்கள்..