மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 14 அக்டோபர், 2013

கண்ணீரில் கரையும் காதல்



வீசியெறிந்த வார்த்தைகள்
பொறுக்க ஆளின்றி
வீடெங்கும் இரைந்து
கிடக்கின்றன...

கோபத்தில் எட்டி
உதைத்த பாத்திரங்கள்
எடுப்பாரின்றி உருண்டோடி
சிதறிக்கிடக்கின்றன...

விசிறியடித்த புத்தகங்கள்
கிழிந்தும் மடங்கியும்
காற்றில் படபடத்துக்
கொண்டிருக்கின்றன...

கழற்றி எறிந்த சட்டை
கசங்கிய இதயமாய்
விழுந்து கிடக்கிறது...

எப்போதும் இப்படி
என்றால் பழகிவிடும்...
எப்போதாவது இப்படி
என்னும்போதுதான்
வலியின் உச்சம்
பழகிக் கொள்ள மறுக்கிறது...

மனங்களைக் காதலித்து
வாழ்க்கை என்னும் 
பந்தத்தில் இணைந்த
புரிந்த மனங்களுக்குள்
எப்படிப் புகுந்தது இது..?

யோசனையில் இறங்கும்
கண்ணீரில் கரைகிறது காதல்...

-'பரிவை' சே.குமார்

35 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

காதல் கரையாது. பலவீனங்களும் இணைந்ததுதான் வாழ்க்கை என்ற புரிதலுக்குப்பின் இன்னும் இறுகும்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எப்போதாவது இப்படி என்றால் சிரமம் தான்...

கவிதை வானம் சொன்னது…

காதல் என்றாலே சோகம் இருக்க வேண்டும் ....அதில்தான் சுகம்

Unknown சொன்னது…

கரைவதற்கு காதல் என்ன அச்சு வெல்லமா?கால வெள்ளம் உங்கள் வலியையும் அடித்துக் கொண்டு சென்று விடும் !மீண்டும் இனிக்கத் தொடங்கிவிடும் !

பெயரில்லா சொன்னது…

ஏன் ? காரணம் சந்தேகமோ ?
பொய்க்காதல் கரையும் . உண்மைக் காதல் கண்ணீரிலும் பொங்கி வழியும்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

யோசனையில் இறங்கும்
கண்ணீரில் கரைகிறது காதல்...// அருமை..

பெயரில்லா சொன்னது…

வணக்கம்.
சே.குமார்

மனங்களைக் காதலித்து
வாழ்க்கை என்னும்
பந்தத்தில் இணைந்த
புரிந்த மனங்களுக்குள்
எப்படிப் புகுந்தது இது..?

இந்த வரிகளை சிந்திக்க வேண்டிய வரிகள் கவிதை நன்று வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராமலக்ஷ்மி சொன்னது…

கவிதை அருமை குமார்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

எப்போதாவது இப்படி
என்னும்போதுதான்
வலியின் உச்சம்
பழகிக் கொள்ள மறுக்கிறது...


கவிதை நன்றாகவுள்ளது நண்பா.

ஆத்மா சொன்னது…

மனங்களைக் காதலித்து ???

காதல் என்பதை விடவும் வறுமை என்பதும் இவ்வாறானவற்றுக்கு வழி வகுக்கும்

இங்கு எதுவோ தெரியாது

வாழ்த்துக்கள்

துரை செல்வராஜூ சொன்னது…

எப்போதும் இப்படி
என்றில்லாமல் -
எப்போதாவது தான் இப்படி
எனும் போது...!

மனதின் சோகத்தை மயிலிறகால் வருடுவதைப்போல இருக்கின்றது.

விரைவில் சரியாகிவிடும்!..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

////////
மனங்களைக் காதலித்து
வாழ்க்கை என்னும்
பந்தத்தில் இணைந்த
புரிந்த மனங்களுக்குள்
எப்படிப் புகுந்தது இது..?

////////

இது புரியாமல் தான் பலகுடும்பங்கள் குழப்பத்தில் இருக்கிறது...

Unknown சொன்னது…

கவிதை அருமை!எப்போதும் இப்படியென்றால்....................காதல்?????

மகேந்திரன் சொன்னது…

காதலின் நிதர்சனம் சொல்லும் கவிதை...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

பால கணேஷ் சொன்னது…

எப்­போ­தும் ­இப்­ப­டி ­என்­றால் ­ம­னம் ­வெ­றுத்­து ­வி­டும். எப்­போ­தா­வ­து ­இப்­ப­டி ­என்­றால் ­வே­த­னை ­எ­னி­னும் ­சீக்­கி­ரம் ­க­ரைந்­து ­அ­து ­மா­றி­வி­டும்! கா­த­லின் ­இ­யல்­பை ­அ­ழ­காய் ­சொல்­லி­ய­து ­க­வி­தை!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படம் மிக அருமை. கவிதையும் தான்.....

ஜீவன் சுப்பு சொன்னது…

Awesome...! Awesome.....!

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

உள்மன ஓசைகளைக் கவிதையாக்குகிறேன் பேர்வழி என்று ஏதாவது உளறிக்கொட்டும் கவிதைகள் சலிப்பூட்டும்.
உங்களின் உள்மன ஓசை “நம்வீட்டு நிகழ்வு இவருக்கு எப்படித் தெரிந்தது?” என்று வியக்க வைக்கிறது!

அதிலும்,
“எப்போதும் இப்படி
என்றால் பழகிவிடும்...
எப்போதாவது இப்படி
என்னும்போதுதான்
வலியின் உச்சம்
பழகிக் கொள்ள மறுக்கிறது”
என்னும் வரிகள் மிகஇயல்பும் அருமையுமாக வந்திருக்கின்றன.
வாழ்த்துகள் கவிஞரே!
தொடர்ந்து எழுதுங்கள்!

Harini Resh சொன்னது…

இயல்பான வரிகள்.
வாழ்த்துகள்

சாய்ரோஸ் சொன்னது…

எதார்த்தமான விஷயத்தை அற்புதமாக கவிதையாய் எழுதியிருக்கிறீர்கள்... கண்ணீரில் கரையும் காதல்...
கடைசி டச்... ரொம்பவே அற்புதம்..மனம் கவர்ந்தது எழுத்து....

அருணா செல்வம் சொன்னது…

ஊடல் இல்லாதக் காதல்
கூடலில் சுவைக்காதாம்.... வள்ளுவர் வாக்கு.

காதலில் இதெல்லாம சகஜமப்பா....

கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீராம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முத்துராசன் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பகவான்ஜி அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி. ஸ்ரவாணி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க நண்பா கருண்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ.ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ராமலெக்ஷ்மி அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முனைவரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஆத்மா அவர்களே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துரை அண்ணா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ.சௌந்தர்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க சகோ.யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ. மகேந்திரன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜெயக்குமார் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கணேஷ் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெங்கட் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க நண்பா சுப்பு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முத்து நிலவன் ஐயா...
உங்களைப் போன்ற தமிழறிஞர்களின் வாழ்த்துக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
தங்கள் வாயால் கவிஞரே என்று சொல்லியிருப்பது மிக்க மகிழ்ச்சி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. ஹரிணி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சாய்ரோஸ்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோதரி. அருணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

சிற்சில சமயங்களில் புரிதலில் வரும் சிறு இடைவெளிகளினால் நிகழும் ஒரு சம்பவமே இங்கு கவிதையாய் முகிழ்ந்ததாய் உணர்கிறேன்!

ezhil சொன்னது…

எப்போதாவதுதானே இப்படி... இந்த சகிப்புத்தன்மையும் காதல்தான்...