மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 3 ஜனவரி, 2014

சிறுபூக்கள் : கவிதைகள் மூன்று

புத்தகத்துக்குள் பொத்தி வைத்த
மயிலிறகு குட்டிபோட்டதோ
இல்லையோ - உன்
கைபட்டு வந்ததால்
என்னை கட்டிப்போட்டது.!

********

பூக்களைப் பறிக்காதீர்கள்
உடைந்த போர்டுக்கு கீழே
உயிருள்ள ரோஜா
பறிக்கப்பட்ட் போது
கண்ணீர் விட்டது காம்பு..!

********

குடைக்குள் நாம்
 உரசும் உடம்பும்...
மருகும் கண்களுமாய்...
மனசுக்குள் இதுவரை
சொல்லாத காதல்
மழைக்கால காளானாய்...!

(கிறுக்கல்கள் தளத்தில் பகிர்ந்த சிறுகவிதைகளில் சில)
-'பரிவை. சே.குமார்.

8 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

மூன்றுமே அருமை குமார்.

கும்மாச்சி சொன்னது…

\\
குடைக்குள் நாம்
உரசும் உடம்பும்...
மருகும் கண்களுமாய்...
மனசுக்குள் இதுவரை
சொல்லாத காதல்
மழைக்கால காளானாய்...!//

அருமை, பகிர்விற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கண்ணீர் விட்டது மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

கடுகு(கவிதைகள்)சிறிதானாலும்,காரம் அமோகம்!

கவிதை வானம் சொன்னது…

பூக்களைப் பறிக்காதீர்கள்
உடைந்த போர்டுக்கு கீழே
உயிருள்ள ரோஜா
பறிக்கப்பட்ட் போது
கண்ணீர் விட்டது காம்பு..!
....அருமையான குறீயீடு கவிதை வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மூன்றுமே அருமை...

மூன்றாம் கவிதை ரொம்ப பிடித்தது!

த.ம. +1

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மூன்றுமே முத்துக்கள் நண்பரே
வாழ்த்துக்கள்
த.ம.6

கோமதி அரசு சொன்னது…

மூன்று கவிதைகளும் நன்றாக இருக்கிறது.