மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 23 டிசம்பர், 2010

குப்பையும் கோபுரமும்



 "சும்மா இருக்கமாட்டே... பாட்டி மாதிரி தொணத்தொணன்னு..." துருவித்துருவி கேட்டுக் கொண்டிருந்த தங்கை துர்காவை கடிந்து கொண்டான் ரமேஷ்.

"எனக்கு தெரியுது உனக்கு என்னமோ பிரச்சினையின்னு... என்னன்னு கேட்டா பாட்டி... அது இதுன்னு பேசுறே... நீ சரியில்லைங்கிறத உன் முகமே காட்டிக் கொடுக்குது.... இரு அம்மாவை கூப்பிடுறேன்..."

"ஏய்... சும்மா இரு... எதுக்கு அம்மாவை கூப்பிடுறே... இப்ப என்னோட பிரச்சினை என்னன்னு உனக்கு தெரியணும் அவ்வளவுதானே..."

"ஆமா... சொல்லு..."

"தெரிஞ்சு என்ன பண்ணப்போறே?"

"எதாவது சொல்யூசன் சொல்வேன்..."

"நீ... சரித்தான் போ.. ஆமா உனக்கு உண்மையான காரணம் வேணுமா... பொய்யான காரணம் வேணுமா..?"

"எப்படியிருந்தாலும் பொய்யான காரணம்தான் சொல்லுவே... சொல்லித்தொலை... எனக்கும் பொழுது போகணுமில்ல..."

"ஏண்டி எம் பிரச்சினை உனக்கு பொழுதுபோக்கா... சொல்லமாட்டேன் போடி..."

"டேய் சொல்றியா... இல்ல அம்மாவை கூப்பிடட்டுமா.... அம்ம்ம்ம்...." துர்க்காவின் வாயை பொத்தியபடி "சனியனே... எதுக்கெடுத்தாலும் எதுக்கு அம்மாவை கூப்பிடுறே... சொல்லித் தொலையிறேன்.." என்றான் கடுப்பாக.

அவனின் கையை தட்டிவிட்டவள் "அப்படி வா வழிக்கு..." என்றாள்.

"என்னய சங்கர் அடிச்சிட்டான்"

"டேய்... என்னடா சொல்றே... பொய் சொல்லாதே... அவன் ஏண்டா உன்னைய அடிக்கணும்..."

"உண்மைதாண்டி...நல்லா அடிச்சிட்டான்... அவன் கூட ரெண்டு மூணு பேரும் இருந்தாங்க... இங்க பாரு... " என்றபடி சட்டைய கழட்டி முதுகை காட்டினான்... கோடு கோடாய் செவந்திருந்தது. அவளைப் பார்ப்பதைத் தவிர்த்த அவனது கண்கள் கலங்கின.

அவனது முதுகைப் பார்த்தவள் "ஏண்டா... அடிச்சான்..." அவளுக்கும் அழுகை வந்தது.

"அது... அது வந்து..."

"என்னடா தயங்குறே... ஆளக்கூட்டியாந்து அடிக்கிற அளவுக்கு சங்கர் போயிருக்கான்னா உங்களுக்குள்ள எதோ பெரிய பிரச்சினை இருக்கணும்... என்ன சொல்லு..."

"நான்... நான்..."

"இங்க பாரு... அடிவாங்கிக்கிட்டு வந்து நிக்கிறே... அதுவும் காலேசுப் பிரச்சினையின்னா ரெண்டு குரூப்தான் மோதுவீங்க... ஆனா இங்க உன்னோட பிரண்ட் அடிச்சிருக்கான்... அப்ப உங்களுக்குள்ள நடந்த எதோ ஒரு பிரச்சினைதான் காரணமா இருக்கணும்... சொல்றியா... இல்ல அவனுக்கு போன போட்டு எங்க அண்ணனை ஏண்டா அடிச்சேன்னு கேக்கவா..."

"வேணாண்டி... சங்கர் தங்கச்சி மலரத் தெரியுமில்ல..."

"ஆமா... எங்க ஸ்கூல்லதான் லெவன்த் படிக்கிறா... அவளுக்கு என்ன?"

"அவளும்... நானும்..."

"அவளை லவ் பண்ணிறியா... அவளும் உன்னை லவ் பண்றாளா..."

"ஆமா..."

"டேய் அவ இப்பத்தாண்டா லெவன்த் வந்திருக்கா... அதுக்குள்ள அவ எப்படி உன்னை..."

"எப்படியோ... அது எதுக்கு உனக்கு... சரி விடு அம்மாகிட்ட சொல்லாதே..."

"இதை எப்படி விடுறது... அவளும்தானே லவ் பண்ணினா... அவளை அடிக்க வேண்டியதுதானே... எதுக்கு உன்னைய போட்டு அடிச்சான்... சரி அதைவிடு... நீ பிரண்ட் வீட்டுக்குப் போனே... அத்தோட இருக்க வேண்டியதுதானே... எதுக்கு பிரண்டோட தங்கச்சிய லவ் பண்ணினே... தப்புத்தானே... உன்னைய அடிக்கணுமுன்னு இல்லையே... எடுத்துச் சொல்லியிருக்கலாமே... அதைவிட்டுட்டு ஆள வச்சு அடிக்கிறான்னா... அவன் உன்னோட பிரண்ட் மாதிரி தெரியலையே..." பொரிந்து தள்ளினாள்.

"எம்மேல தப்புதாண்டி... அவன் எங்கிட்ட வேணாண்டா ரமேஷ்... விட்டுடு... நீ எந்தங்கை மேல வச்சிருக்கிற அன்பு வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சினையாயிடும் அப்படின்னு எங்கிட்ட சொன்னான்..."

"அப்புறம் என்ன விட்டுட வேண்டியதுதானே..."

"விட்டுடலாமுன்னு அவகிட்ட சொன்னேன்... அவ கேக்கலையே... நான் அவளை வேண்டான்னு சொன்னா செத்துருவேன்னு மிரட்டினா... அவன் அவளை கண்டித்தப்பவும் அவ என்னை விரும்புறதாவும் நான் இல்லைன்னா செத்துப் போயிடுவேன்னும் அவங்கிட்டயும் சொல்லியிருக்கா..."

"அறிவு கெட்டுப் போச்சா அந்த நாய்க்கு... நீ அவ வீட்டுக்குப் போகாம இருக்க வேண்டியதுதானே..."

"அது... இருந்திருக்கலாம்... ஆனா... என்னைய காணோமுன்னு அவங்க அப்பா அம்மா கேட்க ஆரம்பிச்சிட்டா... அவங்க காதுக்கு விஷயம் பொயிட்டா என்ன பண்றதுன்னு அந்த வீட்டுக்குள்ள எப்பவும் போல போனேன். ஆனா அவ தீவிரமா இருந்தா... இதனால எனக்கும் சங்கருக்கும் பிரச்சினை வர ஆரம்பிச்சது... அதுவே இந்தளவுக்கு வருமுன்னு நினைக்கலை..."

"சரி... அவன் பக்கம் இருந்து பாத்தா அவன் பண்ணினது சரிதான்னு படுது... ஏன்னா உன்னோட பிரண்ட் யாரையாவது நான் லவ் பண்ணினா நீ ஒத்துப்பியா... மாட்டியல்ல... அது மாதிரித்தான்... அவங்க குடும்பம் ரொம்ப ஆச்சாரமானவங்க.... நாளைக்கு உங்க காதலுக்கு எல்லாரும் எதிர்க்கிறப்போ அவன் மட்டும் ஆதரிக்க முடியாது... இல்ல யாருக்கும் தெரியாம அவளை உன்னோட அனுப்பி வைச்சான்னா அதுக்கு அப்புறம் அவங்க குடும்பத்துல என்ன நடக்கும்ன்னு அவனுக்கு நல்லா தெரியும்... அதனால அவன் உங்க காதலை எதிர்த்திருக்கான்... ஆனா அதுக்காக உன்னைய ஆள் வச்சு அடிக்கிற அளவுக்கு அவன் போயிருக்க வேண்டியதில்லை..."

"சரிடி... விடு... அம்மாகிட்ட சொல்ல வேணாம்...நான் பாலாவ பாத்துட்டு வாரேன்..."

"அவனை எதுக்குப் பாக்கப் போறே... சங்கரை அடிக்க ஆள் சேக்கிறியா?"

"இல்லடி... நீ வேற.... சும்மாதான் பாத்துட்டு வாரேன்..." என்றபடி கிளம்பினான்.

************

எதோ ஒரு புத்தகம் கையில் இருந்தாலும் அண்ணன் அடி வாங்கியது மனசுக்குள் வலியை தந்து கொண்டிருந்தது. அப்போது டெலிபோன் மணி அடிக்க

"அலோ... யாரு..."

"நாந்தாண்டி... அம்மாகிட்ட சொல்லலையே..."

"இல்லடா... இதுக்காகவா போன் பண்ணினே..."

"இல்ல சங்கர் வீட்டுக்கு போன் எதுவும் பண்ணி பிரச்சினைய பெரிசாக்கிடாதேன்னு சொல்லத்தான் போன் பண்ணினேன்..."

"அவனுக்கு போன் பண்ணி கேக்கத்தான் போறேன்..."

"சொல்றதைக் கேளுடி... அவங்க வீட்டுல யாருக்கும் இந்த விசயம் தெரியாது... இது இப்படியே போகட்டும்... தயவு செய்து போன் பண்ணி மலர்கிட்டயோ இல்ல சங்கர்கிட்டயோ இது விசயமா பேசிறாத... ப்ளீஸ்..."

"சரி... பேசலை... சீக்கிரம் வந்து சேரு... அம்மா வேற எங்கடி போனான்னு நச்சரிக்கிறாங்க... இன்னம் அப்பா வரலை... அதுக்குள்ள வரப்பாரு... சும்மா பாலாகூட உருப்படாத பேச்சு பேசிக்கிட்டு இருக்காதே..."

"சரிடி... வாரேன்... போனை வையி... பொரிஞ்சு தள்ளாம..."

************



மறுநாள் பள்ளியில்...

துர்காவும் அவளது தோழி பானுவும் மலரைத்தேடி சென்றனர்.

"வாங்கக்கா..." என்றாள் மலர்.

"உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.... அந்த மரத்துக்கிட்ட போகலாமா?"

"சரி... என்ன பேசணும்..."

"வா.... சொல்றேன்..."

"ம்... சொல்லுங்க... எனக்கு மதியம் டெஸ்ட் இருக்கு... படிக்கணும்..."

"எங்க அண்ணனை லவ் பண்றியா?" நேரடியாக கேட்டாள்.

"அது.... அது...."

"சொல்லுடி..."

"ஆமா..." பட்டென்று சொன்னாள்.

"லெவன்த் படிக்கும் போதே லவ்வா..." மிரட்டல் பாணியில் பேசினாள்.

"லெவன்த் பொண்ணு லவ் பண்ணக்கூடாதுன்னு சட்டம் எதுவும் இருக்கா..." மலரிடம் இருந்து சலிக்காமல் பதில் வந்தது.

"என்னடி வாயாடுறே...?"

"நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னா வாயாடுறதுன்னு அர்த்தமா?"

"நீங்க பெரிய லைலா மஜ்னு பாருங்க... பிரச்சினை வருதுன்னு தெரிஞ்சா விட்டுட்டு போயி படிக்கிற வேலைய பாக்க வேண்டியதுதானே... அதை விட்டுட்டு செத்துருவேன்னு சினிமா வசனமெல்லாம் பேசினியாம்..."

"உங்கண்ணன் சொன்னாரா... அவரை லவ் பண்ணிட்டு எப்படி விட்டுட்டு போக முடியும்..."

"ஓ... தெய்வீக காதல்... உங்கண்ணன் சொல்லிப் பாத்திருக்கான்... ரெண்டு பேரும் கேக்கலை... கடைசியா ஆளைக் கூட்டிக்கிட்டு வந்து எங்கண்ணனை அடிச்சிட்டான்... உனக்கு தெரியுமா?"

"தெரியும்... நான் தான் அவனை அடிக்கச் சொன்னேன்..."

"என்னடி சொன்னே... நீதான் அடிக்கச் சொன்னியா... தெய்வீக காதல்ன்னு டயலாக் பேசுறே... அப்புறம் நீயே அடிக்கச் சொன்னேங்கிறே... அவன் அப்படி என்னடி பண்ணினான்... உன்னைய காதலிச்சது தப்பாடி..." கோபமாக கேட்டாள்.

"அக்கா கூல்... எதுக்கு இத்தனை கோபம்... எனக்கு எதுவும் தெரியாத வயசுல எம்மனசுல ஆசைய வளத்தது உங்க அண்ணன்... அப்புறம் அவனோட குணத்தைப் பாத்து நானும் பழக ஆரம்பிச்சேன்... இது எங்க அண்ணனுக்கு தெரிஞ்சப்போ குடும்பத்தை காரணம் காட்டி வேண்டான்னு சொன்னான்... ஆனா நான் பிடிவாதமா இருக்கவும்... எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு குடும்ப சூழல்... படிப்பு... அது... இது...ன்னு எல்லாம் சொல்லி கொஞ்ச நாளைக்கு காதலை ஒதுக்கி வச்சிட்டு நல்லா படிச்சு ரெண்டு பேரும் நல்ல நிலைக்கு வாங்க... கண்டிப்பா ரெண்டு பேரையும் நான் சேத்து வைக்கிறேன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்தான்... அத நாங்களும் ஏத்துக்கிட்டோம். எங்க வீட்டுக்கு உங்கண்ணன் வர்றப்போ எல்லாரும் சந்தோஷமா பேசிக்கிட்டு இருப்போம்... நாங்க வெளியில சந்திக்கிறதெல்லாம் இல்லை... ஒரு நாள் உங்கண்ணன்..."

"என்னடி டுவிஸ்ட் வைக்கிறே... சொல்லுடி..."

"எங்கிட்ட வந்து நம்ம காதலை மறந்துடுன்னு சொன்னார்... நான் ஏன் திடீர்ன்னு மறக்கச் சொல்றீங்க... அதான் சுந்தர் சப்போர்ட் இருக்குல்லன்னு கேட்டேன். அதுக்கு நம்ம காதல் சரிப்பட்டு வராது... இதுக்கு மேல என்னை காதலிக்க நினைக்காதேன்னு சொல்லிட்டுப் பொயிட்டார். அப்புறம் சில நாள் எங்க வீட்டுக்கு வரலை... எங்கண்ணன் எனக்கிட்ட வந்து உனக்கும் ரமேசுக்கும் என்ன பிரச்சினை... வீட்டுக்கு கூப்பிட்டாலும் வரமாட்டேங்கிறான்னு கேட்டான்... அப்ப நான் நடந்ததை சொன்னேன்... அவன் கோபமாகி உங்க அண்ணங்கிட்ட பேசினப்போ... எதோ வயசுக்கோளாறுல்ல உன் தங்கச்சியோட பழகிட்டேன்... ஆனா இப்ப வேண்டான்னு தோணுதுன்னு சொல்லியிருக்கார். காரணம் கேட்டா அவங்ககூட படிக்கிற பொண்ணு ஒருத்தி அவருக்கு புரபோஸ் பண்ணியிருக்கதாகவும் அதனால என்னையவிட அவ பெட்டருன்னும் முடிவுக்கு வந்ததாவும் சொல்லியிருக்காரு... ஆத்திரப்பட்ட எங்கண்ணன் கோபத்துல அவரோட சட்டைய பிடிக்கப் போக, எதுக்கு கோபப்படுறே... உன் தங்கச்சி கூட பழக மட்டும்தானே செஞ்சேன்... படுக்கலையேன்னு..." கண்ணீர் வழிந்தது.

"ஏய் அழாதே...மத்தவங்க பாத்தா தப்பா போயிடும்.."

"அந்த வார்த்தைய தன்னோட பெஸ்ட் பிரண்ட் சொன்னதை கேட்டதும் மனசொடிஞ்சு பொயிட்டான் என் அண்ணன்... சரியா சாப்பிடலை... தூங்கலை... நான் அவங்கிட்ட துருவித்துருவி கேட்டு விபரத்தை தெரிஞ்சுக்கிட்டேன். நானும் உங்கண்ணனும் காதலிச்சோம்... நான் உண்மையா இருந்தேன்... ஆனா உங்க அண்ணனுக்கு பொழுது போக்கா இருந்திருக்கு எங்க காதல்... என்னால என் அண்ணன் படுற அவஸ்தைய பாக்க சகிக்க முடியலை... அவனை பழைய சங்கரா பாக்கணுமின்னா இந்த மேட்டரை முடிவுக்கு கொண்டாரணும் எனக்கு தெரிஞ்ச ஒரே வழி உங்கண்ணனை மறந்துட்டு படிப்புல கவனம் செலுத்துறது. சங்கர்கிட்ட சொன்னேன்... அவனுக்கும் சந்தோஷம்... ஆனா உங்க அண்ணன் கேட்ட அந்த கேள்வியோட வேதனை குறையல... அதைக் குறைக்க நாந்தான் உங்கண்ணன அடிக்கச் சொன்னேன்... என்ன வேணாலும் பேசலாமுன்னு நினைச்ச உங்க அண்ணனுக்கு என்னாலயும் என்ன வேணாலும் செய்ய முடியுமுன்னு நிரூபிக்கச் சொன்னேன். அவனும் ஒரு அண்ணனா போயி அடிச்சானே தவிர நண்பனா இல்ல... போதுமா நாளைக்கு இப்ப புரபோஸ் பண்ணியிருக்கவளைவிட வேற எவளாவது அழகா வந்தான்னு இவளுக்கும் எங்கதிதான்... பாத்து இருக்கச் சொல்லுங்க எங்கண்ணனாவது லேசா தட்டுனான்... அவங்க கைய காலை ஒடிச்சிரப் போறாங்க..." என்றபடி கிளம்பிய மலரின் கைகளை பிடித்துக் கொண்டு "சாரிடி... சங்கர்கிட்ட எங்க அண்ணன் சார்பா நான் மன்னிப்பு கேட்டதா சொல்லு... ப்ளீஸ்..." என்ற துர்காவின் மனதுக்குள் ரமேஷ் குப்பையாய் ஒதுங்க... சங்கர் கோபுரமாய் உயர்ந்தான்.


-'பரிவை' சே.குமார். 

Photo From google  - Thanks

30 எண்ணங்கள்:

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃநீதான் அடிக்கச் சொன்னியா... தெய்வீக காதல்ன்னு டயலாக் பேசுறே.ஃஃஃ

நெரடலான பல விடயத்தை தொட்டுச் செல்கிறிர்கள் நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

எல் கே சொன்னது…

சூப்பர் நடை. செம பாஸ்ட் கதை

sakthi சொன்னது…

நல்லாயிருக்கு குமார்

ஹேமா சொன்னது…

தெளிவாக மனதின் குழப்பத்தையும் வாழ்வின் விளக்கத்தையும் காட்டிச் செல்கிறது சிறுகதை !

செங்கோவி சொன்னது…

நல்ல ட்விஸ்ட் நண்பரே..

-----செங்கோவி
மன்மதன் அம்பு-விமர்சனம்

Unknown சொன்னது…

நல்லா இருக்குங்க ...

Vidhya Chandrasekaran சொன்னது…

நீளமதிகமாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

காதல் - அது விளையாட்டு அல்ல!
நல்லாச் சொன்னீங்க!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

சங்கர் என்று இருந்தவன் சுந்தர் என்று
திடீரென்று மாறுகின்றான்.திரும்பவும்
சங்கர் என்று மாறுகின்றான். திருத்தம்
செய்யுங்களேன்.

மின்மினி RS சொன்னது…

கதை ரொம்ப நல்லாருக்கு..

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கதை ரொம்ப நல்லாருக்கு..:))

நசரேயன் சொன்னது…

ம்ம்ம்

vasu balaji சொன்னது…

nice:)

ராமலக்ஷ்மி சொன்னது…

நடையும் கதையும் நன்று குமார்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்லாயிருக்கு.. கதையும், நடையும்,..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ம.தி.சுதா...
நெருடலான விஷயங்கள்தானே கதைக்கான கருவாய் அமைகின்றன சகோதரா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எல்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சக்தி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செங்கோவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வித்யாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாமுதீன்...
தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. திருத்தம் செய்துவிட்டேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மின்மினி...
நலமாக இருக்கிறீர்களா? நீண்ட நாட்களாக ஆளைக்காணோம். பதிவும் எழுதவில்லை என்னாச்சு... பணி கூடுதலா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்டார்ஜன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க நசரேயன் அண்ணா...
உங்கள் வருகை ரொம்ப மகிழ்வைத் தருகிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ராம்லெட்சுமி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஜெயந்த் (வெறும்பய) அண்ணா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

வித்தியாசமா இருக்கு நண்பா.. சூப்பர்

வைகை சொன்னது…

இப்படி கூட நிஜத்தில் நடக்கலாம்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

கதை ரொம்ப நல்லாருக்கு.. குமார்

தமிழ்க்காதலன் சொன்னது…

இந்த உணர்வுகள் நல்லா இருக்கு நண்பா.. கதை விறுவிறுப்பாதான் போகுது.... பாராட்டுக்கள்.

Anbulla raji சொன்னது…

Good and nice story.......

cineikons சொன்னது…

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

cineikons சொன்னது…

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com