மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 15 டிசம்பர், 2010

மனசின் பக்கம் 15/12/10


இன்றைய மனசின் பக்கத்தில் கடந்த வெள்ளியன்று அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பினரால் திரு.எஸ்.பி.பி. அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் என் கண்களில் விழுந்த சிலவற்றையும் பாரதி அமைப்பினர் இப்படி செய்திருக்கலாம் என்று நினைத்த சிலவற்றையும் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

எனது பக்கத்து இருக்கையில் ஒரு நண்பர் அமர்ந்திருந்தார். அவர் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வந்திருந்தார். அவரது மகனுக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். அவன் மேடையில் வைக்கப்பட்டிருந்த பாரதி நட்புக்காக அமைப்பின் பேனரில் இருந்த ஆங்கில எழுத்துக்களை அவரிடம் வாசித்துக் காட்டிவிட்டு அதன் கீழே இருந்த தமிழ் எழுத்துக்களை வாசிக்கத் தெரியாமல் அவரிடமே கேட்டான். அவர் கடைசி வரை அதை என்னவென்று சொல்லிக் கொடுக்கவேயில்லை. மேலும் அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளித்தார்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால் அவருடைய மகளுக்கு 2 வயதுக்குள்தான் இருக்கும். அது தமிழில் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஆங்கிலத்தில்தான் பதிலளித்தார். ஆங்கிலம் முக்கியம்தான் ஆனால் தமிழ் நமது தாய்மொழி என்பதை மறக்கக் கூடாது. பள்ளியில் தமிழ் இல்லை என்றால் வாசிக்கும் அளவுக்காகவாவது வீட்டில் சொல்லிக் கொடுக்கலாம் அல்லவா...

எதோ அமெரிக்காவில் பொறந்து வளர்ந்தது போல் அவர் பண்ணிய அல்டாப்பு.... அப்பா... சாமி... தாங்கலை... நம்ம தமிழகத்தில் எதாவது ஒரு குக்கிராமத்தில் பிறந்துதானே வந்திருப்பார். அரபு நாடு வந்த உடன் எல்லாமே மாறிவிடும் போல... அவர் பண்ணின அலப்பறையால் முன் இருக்கை நண்பர்கள் ரொம்ப கஷ்டப்பட்டார்கள் என்பது அவர் பாதியில் விழாவில் இருந்து கிளம்பிய போது அவர்களின் முகத்தில் தெரிந்த சிரிப்பில் தெரிந்தது. என்ன செய்ய இப்படியும் மனிதர்கள்.

***************

எங்கள் இருக்கைக்கு முன்னர் ஒரு நடுத்தர வயது குடும்பம் ஒண்ணு அமர்ந்திருந்தது. அவர்களுக்கு அருகில் இரண்டு இருக்கைகள் கிடந்தன. அதில் எங்கள் நண்பர்களை அமரச் சொல்லலாம் என்று அவர்களிடம் ஆள் வருகிறதா என்று கேட்டபோது ஆள் வருவதாக சொன்னார்கள். நாங்களும் சரியென்று நண்பர்களை பின்னால் சென்று அமரச் சொன்னோம்.

நீண்ட நேரமாக யாருமே வராத இருக்கையை கடந்து ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட்டில் வந்த அம்மாவும், இளம் பெண்ணும் சென்ற போது அந்தப் பெண் எழுந்து ஓடிப்போய் அவர்களை அழைத்து வந்து அமரச் செய்தார். இவ்வளவுக்கும் அவருக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களும் பாதியில் எழுந்து போக, சும்மா கிடந்த இருக்கையில் எங்களுக்கு தெரிந்த நண்பர் மனைவியுடன் வந்து அமர்ந்தார். இதை முன்னமே எங்களிடம் சொல்லியிருந்தால் நண்பர்கள் அமர்ந்திருப்பார்கள். இவர்களை என்ன சொல்வது?

***************

அன்றைய தினத்தில் விழா நடந்த நேஷனல் தியேட்டருக்கு அருகில் இருந்த கால்பந்து மைதானத்தில் நடந்த போட்டியை காண கேம்பில் தங்கியிருப்பவர்களை பேருந்தில் அழைத்து வந்து சாப்பாடு கொடுத்து கூட்டம் சேர்த்தார்கள். அதனால் பாதைகள் அடைக்கப்பட்டு சுற்றி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தும் விழா அரங்கம் நிறைந்து பெரும்பாலான நண்பர்கள் நின்று கொண்டு பார்த்தார்கள். இதற்கு தமிழ் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

***************

இனி, விழாவை நடத்திய பாரதி நட்புக்காக அமைப்பினரின் திட்டமிடல் அருமையாக இருந்தது... சில இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று என்ன வைத்தன... அவை.

1. பாரதியாரின் பாடலுக்கு நடனமாடிய போது பின்புறத் திரையில் பாரதியின் ஒரு போட்டோ மட்டும் காட்டப்பட்டது. அதையே பாரதியின் போட்டோக்களைத் தொகுத்து ஒரு ஸ்லைடு ஷோவாக காட்டியிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.

2. இசை நிகழ்ச்சி நடத்திய வைத்யாமேடையில் இடமிருந்தும் பின்புறமாக தள்ளி உட்கார வைக்கப்பட்டிருந்தார். இன்னும் முன்னே வந்து நடத்தியிருக்கலாம். நடன் நிகழ்ச்சி நடக்கும் போதே அவருக்கான மேடை தயார் செய்யப்பட்டது என்று நினைக்கிறேன்.

3. விழாவில் பாடிய வைத்யாவின் இசையை ரசித்த எஸ்.பி.பி மற்றும் பாரதிராஜாவை ரசிக்கவிடாமல் மொபைல், கேமரா என்று துரத்தினர். பின்னர் பாரதி அமைப்பினர் அரண் அமைக்க கூட்டம் குறைந்தது.

4. பாலுவின் திரையுலக வாழ்க்கையை அழகாக தொகுத்திருந்த திரு.சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. மேலும் அவர் வாசித்த கவிதை அழகாக போய்க் கொண்டிருக்கும் போதே மேடையின் கீழே இருந்த ஒருவர் கையைக்காட்ட அவசரமாகக்கூட அல்லாமல் அப்படியே முடிக்கப்பட்டது.

5. பாரதிராஜா வைத்யாவை பாராட்டிப் பேசும்போது அவர் கைகாட்டிய திசையில் வைத்யாவின் வீணை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அவர் குறித்து பாரதிராஜா நீண்ட நேரம் பேச ஒரு வழியாக வைத்யாவை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். மேடையில் ஒரு சேர் போட்டு அவரையும் அமர வைத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? கல்யாணக்கார வீட்டில் மேளக்காரர்கள் வாசிப்பது போல்தான் அன்று அவரது நிலை.

6. பாரதி அமைப்பினர் விழாவிற்கு வந்த பிரபலங்களுடன் போட்டோ எடுப்பதெல்லாம் விழா முடிந்தோ அல்லது விழாவிற்கு முன்னரோ முடித்து விட்டால் நல்லா இருக்கும் சென்ற வருடம் சுசிலாம்மா வந்த போது எப்படியோ அதே போல்தான் பாலு அவர்களிடமும் நடந்து கொண்டார்கள். மேடைக்கு கீழே பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த அவரைச் சுற்றி கூட்டமாய் நின்று விழாவின் சுவராஸ்யத்தை கெடுப்பதில் அவர்களே தலைமை ஏற்கிறார்கள். இந்தத் தவறை அடுத்த முறை சரி செய்தால் நல்லது.

7. விழா நடக்கும் போது அரங்கத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு மெலிதான வெளிச்சமே இருக்க நல்லாயிருந்தது. தீடீரென விளக்குகள் எல்லாம் போடப்பட்டு பின் அதன் வெளிச்ச அளவு மெதுவாக குறைக்கப்படும். இதுபோல் பலமுறை செய்யப்பட்டது. அது அந்த அரங்கத்தில் தானியங்கி விளக்குகளா? அல்லது யாராவது செய்தார்களா? என்பது தெரியவில்லை.

போதும் இன்னும் உள்ளே நுழைய வேண்டாம்... ரொம்ப நல்லா நடந்த விழாவில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்வார்கள் என்பது உண்மை.

***************

சன் தொலைக்காட்சியில் தற்போது சங்கீத மகாயுத்தம் இரண்டாவது பகுதி சனி, ஞாயிறுகளில் நடத்தப்படுகிறது. மாதங்கி தொகுத்து வழங்குகிறார். சின்மயி அளவுக்கு இவருக்கு நடத்த வரவில்லை என்பதே உண்மை. ஆறு அணிகளில் நான் கிற்கு ஆண் பாடகர்களும் இரண்டிற்கு பெண் பாடகர்களும் கேப்டனாக இருக்கிறார்கள். இந்த ஆண் பாடகர்கள் நடுவர்களாக இருக்கும் போது பண்ணும் அலம்பல் தாங்கவில்லை.

ஒரு அணியில் பாடும் பெண் பார்க்க அழகாக இருக்கிறார். அவர் எப்படி பாடினாலும் இவர்கள் சூப்பர்...ஆஹா... ஒஹோ... என்பது சகிக்கமுடியவில்லை. நல்லா பாடியவருக்கு மார்க்கை குறைத்து அவருக்கு அள்ளி வீசுகிறார்கள். சென்ற வாரம் இதற்கெல்லாம் மேலாக அவர் பாடியதும் பிரசன்னா என்று நினைக்கிறேன்... உங்க புன்னகை எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு என்றதும். கிரேஸ் கருணாஸ் அவர்கள் உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு நேர சொல்ல வேண்டியதுதானே என்றதும் வழிந்து கொண்டு ஒரு சிரிப்பு வேற...

அப்புறம் டூயட் பாடல் பாடும் போது பாடுபவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்டரி (அப்படின்னா என்னங்க????) ஒத்து வர வேண்டும் என்று சொல்ல, இருவரும் ரொமான்டிக்காக பாட உடனே நீ என்ன அவங்களை லவ் பண்ற பீலிங்கோட பாடுறே என்றதும் அந்த அணியில் கேப்டனான பெண் எழுந்து அவங்க பெற்றோருக்கு தெரியாம என்ன வேணாலும் பண்ணட்டும் என்கிறார். இவர்களே ஜோடி சேர்த்து விடுவார்கள் போல... என்ன செய்ய கலிகாலமாயிப் போச்சு.

***************

டிசம்பர் 26-ல் ஈரோட்டுல பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியான 'சங்கமம்-2010' நடக்க இருக்கிறது. கதிர் அண்ணா, சகோதரர் பாலாசி என எல்லாரும் தங்கள் வலைப்பூவின் மூலமாக அழைத்திருக்கிறார்கள். முடிந்தளவு எல்லாரும் கலந்து கொள்ளுங்கள். நாங்கள் விழா சிறக்க வாழ்த்துகிறோம். விழாவின் வெற்றி குறித்த பதிவுகளை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.


-'பரிவை' சே.குமார்.

19 எண்ணங்கள்:

arasan சொன்னது…

நல்ல பகிர்வு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

"ஆங்கிலம் முக்கியம்தான் ஆனால் தமிழ் நமது தாய்மொழி என்பதை மறக்கக் கூடாது."

பின்பற்றுவோர் குறைந்து விட்டனர்..
நல்ல பதிவு.....

vasu balaji சொன்னது…

beautiful narration. ty

Vidhya Chandrasekaran சொன்னது…

சன் டி.வி:(((

மோகன்ஜி சொன்னது…

சுவாரஸ்யமான பதிவு குமார்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அரசன்...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பிரஷா...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் ஐயா...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வித்யாக்கா...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மோகன்ஜி...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Chitra சொன்னது…

சில நேரங்களில் ...... சில மனிதர்கள்....... :-)

Asiya Omar சொன்னது…

உங்கள் கருத்துக்கள் அருமை.சகோ.

வைகை சொன்னது…

அவர் கடைசி வரை அதை என்னவென்று சொல்லிக் கொடுக்கவேயில்லை. மேலும் அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளித்தார்./////////////


இது அங்க மட்டும் இல்ல குமார், தமிழ்நாட்ல கூட இதே நிலைமைதான்! முடிந்த அளவு நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்போம், இது மட்டுந்தான் நம்மால் செய்யமுடியும்!

vanathy சொன்னது…

சுவாரஸ்யமான பதிவு!!

ம.தி.சுதா சொன்னது…

நல்ல எழுத்து நடையுடன் நகர்த்தியுள்ளீர்கள் அருமை....

போளூர் தயாநிதி சொன்னது…

parattugal

தமிழ்க்காதலன் சொன்னது…

nallarukku nanbare....

shabi சொன்னது…

neenga abudhabi laya irukkinga naanum inga than irukken en mail id shafiullah76@gmail.com

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஆசியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வைகை...
உண்மைதான்... எல்லா இடத்திலும் இதே கதைதான்.... நாம் கற்பிப்போம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ம.தி.சுதா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தயாநிதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஷபி...
கண்டிப்பா தொடர்பில் வருகிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.