மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 19 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : லாஸ்லியாவின் 'காதல் விளையாட்டு'

வா... நா...வரவா வரவா... 
உன்ன தொரத்தி வரவா... 
நீ வெதச்ச வலிய ... 
உனக்கு திருப்பி தரவா...


Image result for bigg boss 87th day images lossliya

87-ம் நாள் காலை...

திருப்பள்ளி எழுச்சிக்குப் போடுற பாட்டாய்யா இது... இப்பல்லாம் பிக்பாஸ் சூழலுக்குத் தகுந்த பாடல்ன்னு சொல்லிட்டு சுரத்தில்லாத பாடலாப் போடுறார்... எவனும் ஆடலை... இவனுக விளையாட்டே ஒழுங்கா விளையாடலை... பின்னே பாட்டுக்கு எப்படி ஆடுவானுங்க... செத்தவன் கையில வெத்தலை பாக்கு வச்ச மாதிரி எந்திரிச்சி வந்தானுங்க...

சாண்டிமான் கதையை இன்னைக்கு பாட்டி கதாபாத்திரத்தை வச்சி, பக்குவமாச் சொல்லிகிட்டு இருந்தார் சாண்டி... அதையும் ரசிச்சி, சிரிச்சி, வாத்தியார் பாடம் நடத்தும் போது படிப்புக்குப் பொறந்தவன் பக்கத்துல உக்காந்து கேட்கிற மாதிரி சேரனும் , முகனும் கேட்டுக்கிட்டு இருந்தாங்க... 

ஒரு கதையில பாட்டி குச்சியால இரயிலை நிறுத்தி, இன்னொரு குச்சியால தண்டவாளத்துல மாட்டிக்கிட்ட யானையை எடுத்து விட்டாளாம். அடுத்த கதையில மாவரைச்சிக்கிட்டுப் போற பய மழையில நனையாம குச்சியால மேகத்தைக் கலைச்சி விட்டாளாம். ஸ்ஸப்ப்பா முடியல... ஊருல மொக்கை போடுற ஆளுங்களைப் பார்த்திருக்கிறேன்... மொக்கையை மட்டுமே தொகுப்பாக்குற பிக்பாஸையும் பார்க்க வேண்டிய நிலமையாகிப் போச்சே...

பிக்பாஸ்க்கு கண்டெண்ட் இல்லை... இதையெல்லாம் போட்டு நேரத்தைப் போக்கணும்... என்ன செய்யிறது... கவின்-லாஸ்லியா மணிக்கணக்குல லவ்வுறதைக் காட்டிப் பொழுதைப் போக்கிக்கிட்டு இருந்தார்... இப்ப அவங்க லவ்வுறதைக் காட்டினா எங்கே மறுபடியும் அப்பனும் ஆத்தாளும் வந்து பிரச்சினை பண்ணுவாங்களோன்னு பயந்துக்கிட்டு அவங்களைத் தனியா விளையாட விட்டுட்டு சேவல்கள் பின்னாலயே திரியிறாரு... சும்மா சொல்லக்கூடாது பிக்பாஸ் செம பாதுகாப்பு கொடுக்குறாரு 'காதல் 'கவிராஜனுக்கு... சாண்டி கதை சொல்லி முடிக்கும் வரை ரெண்டு பேரும் சீன்லயே இல்லை.

இந்தக் கதையையும் சிறந்த திரைக்கதை எழுதி படமெடுத்த சேரன், அர்ப்பணிப்பு உணர்வோட கேட்டுக்கிட்டு இருந்ததெல்லாம்... முடியலை.  இதுல கேள்விகள் வேற... இந்த மனுசன் ஏன் இந்த மாதிரி ஆயிட்டாரு... 

சாண்டி சேரப்பா உங்க காதல்ல குறுக்க வராம நான் பாத்துக்கிறேன்னு கவினுக்கிட்ட சத்தியம் பண்ணிக் கொடுத்திருப்பாரோ..?டவுட்டு # 1.

மறுபடியும் லிவிங்க் ஏரியாவுல உக்கார்ந்து எல்லாருக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்தாச்சு... கவினுக்கு கோல்டன் லெக்குன்னு ஒரு பட்டம் கொடுத்து, கதையில சேர்த்துப்போம்ன்னு சாண்டி சொல்லிக்கிட்டு இருந்தார். அப்போது சாண்டி நீங்க என்ன பட்டம் வேணுமின்னாலும் கொடுங்க.. முதல்ல மைக்கை சரியாப் போடுங்கன்னு பிக்பாஸ் குரல் கொடுக்க, அங்கே கெக்கப்பிக்கே அடங்க வெகு நேரமானது.

முகன் மீண்டும் தான் எழுதிய அந்தக் காதல் பாடலை... பிளாஸ்டிக் நாற்காலியை வைத்துத் தாளம் தட்டிப் பாடினான்... பாட்டு நல்லாயிருக்கு... வள்ளி திருமண நாடகத்தில் நாரதராய் வரும் முத்துச்சிற்பி தன்னுடைய முதலாவது ஆல்பமான சிற்பிக்குள்ள முத்தைப்போலவில் பாடியிருக்கும் 'பொறுபுள்ள பூவழகி'யைப் போல மனதைக் கவர்ந்தது. ஷெரின் ரசித்துக் கைதட்டினார்... சாண்டி தாளம் போட்டுக் கொண்டிருந்தார்... சேரனும் ரசித்துத் தலையாட்டினார். கவின்-லாஸை இப்பவும் சீன்லயே காணோம்.

முகனின் இந்தப் பாடல் கவினுக்கானது போலவே தோன்றுகிறது... ஒருவேளை கவின் கூட அடிக்கடி பாடச் சொல்லியிருக்கலாமோ... டவுட்டு # 2

'அய்யா முகன்.... கருத்துக்கேட்பு அறைக்கு வாங்கய்யா' என்று பிக்பாஸ் அழைக்கவும், மலேசியாவுல இருக்க காதலி அன்பே முகன்னு கூப்பிட்ட மாதிரி குதிச்சி.... ஷேபாவைத் தாண்டி ஓடினான் முகன். முதல்நாள் அன்பாக் கூப்பிடுங்கன்னு சொன்னதுக்காக இவ்வளவு அன்பு போல... எல்லாரும் சிரிச்சாங்க... முகன் டாஸ்க் பைலோட வந்தார். 

இறுதிப் போட்டிக்கான டிக்கெட் டாஸ்க்கின் தொடர்ச்சியாய் ஒருவர் பின் ஒருவராய் ஓடிக்கொண்டே, முன்னால் ஓடுபவரின் முதுகில் இருக்கும் மூட்டையைக் கிழித்து உள்ளிருக்கும் தெர்மாக்கோல் பந்துகளை கீழே கொட்ட விடவேண்டும். பெரியது...நடுவுலது...சின்னது... என மூன்று வட்டம்.. மணியடித்ததும் ஓடணும்.. மணியை நிறுத்தும் போது யார் இருவரின் பைகள் காலியோ அவங்க வெளியேற்றப்பட்டு, மீண்டும் மணி அடித்ததும் மற்றவர்கள் அடுத்த வளையத்துக்குள் ஓடணும்.

எல்லாருக்கும் நம்பர் கொடுத்தாங்க... கவினும் லாஸ்லியாவும் நம்பரை மாத்திக்கிட்டாங்கன்னு இணையத்தில் பேச்சு ஓடிக்கிட்டு இருக்கு... சேரன் முதலில்... லாஸ்லியா இறுதியில்... இடையில் மற்ற ஆட்கள்... இந்த ஓட்டத்தில் சேரன் ஓடுவதென்பது முடியாத விஷயம்.. முதல் ஆளா ஓடி முதல் ஆளா வெளியே போயிட்டார். தர்ஷன் இரண்டாவது... என ஒவ்வொருவராக வெளியேற... வென்றது முகன்... இரண்டாவது கவின்.

சாண்டி விரட்ட லாஸ்லியா கீழே விழுந்தார்... கவினுக்கு அப்படிக் கோபம் வந்தது... விளையாட்டு முடிந்ததும் சுடு தண்ணீரில் காலை வைத்து நீவி விட்டு ரொம்ப நல்லாக் கவனிச்சிக்கிட்டான். இதைப் பார்க்கும் மரியதாஸ் இப்படி மாப்பிள்ளை கிடைக்க மாட்டான்னு முடிவு பண்ணியிருக்கலாம்... 

சேரப்பா கூட என்னைக் கேர்ப்பண்ணலைப்பா.... உங்க மாப்பிள்ளைதான் காலைப்புடிச்சி... என் கண்ணுல தண்ணி வந்திருச்சுப்பா... இவரோட நம்ம அம்மா பேசமாட்டேன்னு ஒதுங்கிப் போனாங்களேப்பா... அம்மா ரொம்ப மோசம்... இவரு ரொம்பப் பாசம்ன்னு லாஸ்லியா மனசுக்குள்ளயே அப்பாக்கிட்ட சொல்லியிருக்கும்.

போட்டியின் போது தன்னை இழுத்தது... எந்த இடத்தில் ஓட்டை போடணுமோ அதை விடுத்துப் பெரியதாய் ஓட்டை போட்டதென தர்ஷன் கவினுடன் மோதினான். இருவரும் மச்சான்... மாப்பிள்ளைன்னு பேசிக்கிட்டு இருக்கும் போது 'அவுக சரியாத்தான் செஞ்சாக... அவுக மேல தப்பில்லை... எல்லாரும் அவுகளையே குத்தம் சொல்லாதீக' அப்படின்னு திருமதி கவின், ராதிகாக் கணக்கா உள்ள வர, தர்ஷன் ரொம்பக் கோபமாயிட்டான். 

சேரன் விட்டுட்டு வேலையைப் பாருடான்னு சொன்னார்.... சாண்டிதான் பிரச்சினை பூதகரமாகாமல் தடுத்தார். திருமதி நுழையலைன்னா திருவாளரே மச்ச்ச்ச்சான்னு ஒரு இழுவையைப் போட்டு ஒரு வழியா எங்கெங்கயோ சுத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்திருப்பார்... ஆனால் அன்புள்ள மன்னவரைத் திட்டுறதை திருமதியால பொறுக்க முடியலையே... 

ஊர்ல எங்க சின்னையா ஒருத்தர் இருந்தார்... அய்யாவும் அப்பத்தாவும் அம்புட்டு நெருக்கம்... விவசாய நேரத்துல ஆடு, மாடு வயல்ல இறங்கிருச்சுன்னு அப்பத்தா தைய்யத் தக்கான்னு வந்தா, பின்னாலயே அய்யாவும் தக்காத் தைய்யான்னு வருவாரு... இதே தண்ணிர் பாய்ச்சுவதில் தகராறுன்னா அய்யா தைய்யத் தக்கான்னு ஆரம்பிக்கும் முன்னே அப்பத்தா தக்காத் தைய்யான்னு களத்தில் நிற்கும். அப்படித்தான் கண்ணாடி கவினும் கண்மணி லாஸ்லியாவும்... 

சாப்பாடு எப்பவும் முட்டைதான் போல... ரொம்பப் புலம்பிக்கிட்டு இருந்தானுங்க... பிக்பாஸ் ஒரு சமையல்காரரை அனுப்பி வச்சா... நிதியைப் பாதுகாத்துக்கலாம்... அதிக சேதாரமிருக்காது... இல்லேன்னா தின்னே தீர்த்துட்டானுங்கன்னு கணக்குக் காமிக்க வேண்டியிருக்கும்.... வனிதாக்காவை வேகமாய் அனுப்பியதில் இருக்கும் சிக்கலை இப்போது உணர்ந்திருப்பார் பிக்பாஸ்... கடைப் பேரெல்லாம் சொல்லி சாப்பாடு கேக்க ஆரம்பிச்சிட்டானுங்க.

அப்புறம் ரெண்டாவது டாஸ்க், அவங்கவங்க உருவம் வரைஞ்ச பிளாக்குகளை பின்னால் இருக்கும் நம்பரின் படி அடுக்கி முழு உருவம் கொண்டு வந்து அடுத்தவர் எரியும் பந்தில் இருந்து காப்பாறிக் கொண்டு அடுத்தவர் அடுக்கும் பிளாக்கை பந்தை எரிந்து உடைக்க வேண்டும். 

சேரன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டே வந்தார்... ரெண்டு தடவை எறிந்தார். கவினை யாரும் கண்டுக்கலை... தர்ஷனின் டார்க்கெட் முகன், சாண்டியின் டார்க்கெட் ஷெரின், ஒரு கட்டத்தில் முகன் ஆக்ரோசமாக தர்ஷனை எறிய, நமக்குத்தான் முகன் வேறொரு மனநிலைக்குப் பொயிட்டானோன்னு தோணுச்சு... 

எல்லாரையும் அடித்து உடைக்க, சேரனுக்கு முதல் மதிப்பெண்... இதில் கவினும் சேரனும் போங்காட்டம் ஆடினார்கள் என்றாலும் (யாரையும் எறியவில்லை) கவினைத் தர்ஷன் இறுதியில் உடைத்துவிட்டான்... லாஸ்லியாவுக்குத்தான் வருத்தம்... சேரனை தன் நாதன் முந்த வேண்டும் என்பதில் தீவிர முனைப்பில் இருக்கிறார் அம்மணி.

கொஞ்சம் அதிரடியான டாஸ்க் இரண்டும் முடித்த களைப்பில் எல்லாரும் தூங்க, நடுநிசியில் விளக்குகளை எரியவிட்டார் பிக்பாஸ். யோவ் லைட்டை அமத்துய்யா என்றார் ஷெரின்... கவின் அவனிடத்தில் படுத்திருந்தான்... லாஸ்லியாவின் கால் சரியாயிருக்கும் போல... ஒருக்கால் கால் சரியாகலைன்னு சொல்லியிருந்தா அங்கயே காலுக்குப் பாதுகாப்பா காமாட்டுல படுத்திருந்திருப்பான்... அப்படி நடக்காதது பிக்பாஸ்க்கு நிம்மதி.

தர்ஷனைக் கூப்பிட்டு மூணாவது டாஸ்க்கைக் கொடுத்தார் பிக்பாஸ்... அதாவது கார்டன் பகுதியில் ஆளுக்கொரு தங்க முட்டை வைக்கப்பட்டிருக்கும்... அதை மற்றவர் உடைக்காமல் பாதுகாக்கணும்... யாராவது உடைக்கும் போது பார்க்கலைன்னா உரிமையாளார் அவுட், பார்த்துட்டா உடைப்பவர் அவுட்... ஆஹா... விடியவிடிய உக்கார வச்சிருவானே இந்தப் பிக்பாஸூ... அதுக்குள்ள உச்சா போயிருவோமுன்னு பாத்ரூம்க்குள்ள போக நீ நான்னு அடிச்சிக்கிட்டானுங்க.

எல்லாரும் முட்டையைப் பாதுகாத்துக்கிட்டு விடிய விடியக் கிடந்தானுங்க... சாண்டி ஒருமுறை முட்டையைப் பார்த்துக்கிட்டே பாத்ரூம் கதவைத் திறந்து வச்சி... ராத்திரியில பயத்துல உள்ளே போயி இருக்காம வெளியில நின்னு அடிக்கிற பிள்ளைங்க மாதிரி உச்சாப் போக, ஷெரினுக்குச் செமக் கடுப்பு... சேரன் இப்படிப் பண்ணாதீங்க சாண்டின்னு சொன்னார்.

அப்புறம் முட்டையைத் தூக்கி வெளியில போட்டுடலாம்... கண்ணை ஒருவர் மூட மற்றவர் வந்து உடைக்கலாம் என்றெல்லாம் தர்ஷனும் சாண்டியும் திட்டம் தீட்டினார்கள். சாண்டி ஷெரினுக்குத் தெரியாம முட்டையை உடைக்க முயற்சிக்க, அது உடையாமல் கீழே விழும் போது பார்த்து விட்டார் ஷெரின். 

பிக்பாஸின் இந்த டாஸ்க் விதிப்படிப் பார்த்தால் சாண்டி முட்டையைத் தட்டியதைப் பார்க்காத ஷெரின் அவுட்... ஆனா சேரன் போன்றோர் அவ பார்த்துட்டான்னு நிக்க, சாண்டியை அவுட்டாக்கி விட்டுடலாமான்னு எல்லாரும் யோசிக்க, பிக்பாஸ் ஒண்ணுமே சொல்லலை... எல்லாரும் அடைக்கோழி முட்டையைக் காத்த மாதிரி காத்துக்கிட்டு கிடந்தானுங்க... 

இதுவரை நடந்த சீசன்களில் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுக்காக சிநேகன் சாப்பிடாமக் கொள்ளாம நாலுநாள் கிடந்த கார் டாஸ்க்த்தான் சிறந்தது. இதென்ன முட்டையாம்... பாதுகாக்கணுமாம்.... என்ன பிக்பாஸ்... ரொம்பப் போரடிக்க ஆரம்பிச்சிருச்சே... உங்க டாஸ்க்கு... முட்டையைப் பாதுகாக்குறதை விட தன்னோட பெட்டையைப் பாதுகாக்குறதுலயே குறியா இருக்கான் கவின்... அவனுக்காகவே எல்லாரும் ஷெரினை மய்யம் கொள்கிறார்கள்.

தெர்மாக்கோல் பந்து போட்டியில் தனக்கு முன்னே ஓடிய கவினின் மூட்டையை பிடித்தபடியே ஓடினாரே தவிர பிரித்து விடவில்லை லாஸ்லியா...

போட்டிகளில் எல்லாம் கவினுக்கு முட்டுக் கொடுப்பதிலேயே கவனம் செலுத்துகிறாரே தவிர தனக்கான விளையாட்டை விளையாடவில்லை லாஸ்லியா...

கவினை யாரேனும் போட்டியில் அடித்தால் அவன் அடிக்கும் முன்னே திருப்பி அடிக்கிறார் லாஸ்லியா...

யாரெல்லாம் கவினுக்கு எதிராய் நகர்கிறார்களோ அவர்கள் எல்லாம் தனக்கும் எதிரி என்பதாய் மாறிவருகிறார் லாஸ்லியா...

சின்னப் பிள்ளைக்கிட்ட நெருப்பு சுடும்ன்னு சொன்னாத்தான் அதை உடனே தொடும்... அது போல்தான் லாஸ்லியாவும்... காதலை விட்டுவிடு என்றதால்தான் அந்தக் காதலின் வேகம் கூடிக் கொண்டிருக்கிறது... இது இன்னும் தீவிரமாகும்... கஜாவை விட வலுப்பெறும்.

ரொம்பக் கவனமாய்ப் பார்த்துக் கொள்வதாய் கவின் காட்டும் உச்சபட்ச நடிப்பை முழுக்க முழுக்க நம்ப ஆரம்பித்ததில் அப்பா, அம்மாவின் அழுகையும் அறிவுரையும் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டுவிட்டது. அவர்களையும் தூக்கி வீசும் நாள் ரொம்பத் தூரத்தில் இல்லை.

இப்போது இவர்களின் காதல் இன்னும் தீவிரமாய் இருக்கிறது... மக்களிடம் காட்டப்படுவதில்லையே ஒழிய வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே சேரன் ஒதுங்கியிருப்பதாய்த் தெரிகிறது... இந்த வாரம் முழுவதும் சேரன் லாஸ்லியா பக்கம் போகவில்லை... ஷெரினுடன்தான் அதிக நேரம் செலவழிக்கிறார். 

தான் நினைத்ததை சப்டைட்டில் போடுமளவுக்குப் பேசியே சாதித்துக் கொண்டு விட்டான் கவின். லாஸ்லியா பெற்றோரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்... விஜய் டிவியும் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது... சனிக்கிழமை கமலும் இதே வேலையைப் பார்ப்பார்... 

கவினைப் பொறுத்தவரை தன் வெற்றிக்காகவே சுற்றமும் நட்பும் எனக் களம் அமைத்து வருகிறான். தனக்கான வெற்றிக்கே லாஸ்லியா மீது தூசு விழுந்தால் கூட துடிப்பதாய்க் காட்டிக் கொள்கிறான்.

கவினுக்காக தர்ஷனையும் சேரனையும் கூட எதிரிப் பட்டியலில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் லாஸ்லியா...

இருவருமே காதலிக்கத்தான் வந்தோமென்றால் பிக்பாஸ் இரண்டையும் வெளியில் போய்க் காதலியுங்கள் என விரட்டிவிட்டு, வேறு இருவருக்கு வைல்ட் கார்ட்  மூலம் வாய்ப்பளித்திருக்கலாம்.

இருவருமே போட்டிகளை எல்லாம் தியாகம் செய்கிறேன் எனக் கெடுத்து வருகிறார்கள். லாஸ்லியாவைப் பொறுத்தவரை எல்லாப் போட்டிகளிலும் கவின் முன்னால் வர வேண்டும் என நினைக்க ஆரம்பித்துவிட்டார். மற்றவரை முன்னிறுத்தி ஆடிய கவினை, லாஸ்லியா முன்னிறுத்துவதுதான் கவினுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இதுவரை வாங்கிய மொத்தப் புள்ளிகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தார்கள்... சாண்டி 29 புள்ளிகளுடன் முதலிலும்... ஷெரின் 28 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்க... மற்றவர்கள் அவர்களுக்குப் பின்னே...

எல்லாப் போட்டியிலும் தர்ஷன் தானே வெளியாவதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ..? டவுட்டு # 3.

சேரனைவிட, தன்னைவிட பின்தங்கியிருக்கும் கலாபக் காதலன் கவினை முன்னுக்குக் கொண்டு வர தியாகம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் லாஸ்லியா... இதை பிக்பாஸ் இன்று கண்டிப்பார் போல் தெரிகிறது...

என்னத்தை போடுற புரோமோவுக்கு காட்டுற நிகழ்ச்சிக்கும் எங்க சம்பந்தம் இருக்கு... சூர்யா பட டிரைலர் மாதிரி சூப்பரா இருக்கு... இன்னைக்கு நிகழ்ச்சி செமையா இருக்கும் போலன்னு பார்த்தா சூர்யாவோட படம் மாதிரி விளங்காமப் போயிடுது.

ஷெரின் கக்கூஸ் கவினை என்ன சொன்னுச்சுன்னு தெரியலை... பய மெல்ல ஒதுங்கிட்டான். 'ராதே... என் ராதே... நீதானே...'ன்னு லாஸ்லியா பின்னால சுத்த ஆரம்பிச்சிட்டான்.

காதல் கண்ணை மறைக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

காதல் சுகமானதுதான்... சுமையாகாதவரை...

இப்ப நிகழும் நிகழ்வுகளைப் பார்க்கும் மரியதாஸின் மனநிலை எப்படியிருக்கும்..?

கண்ணீர் விட்டு எம்மகளை எனக்குத் தெரியும்ன்னு சொன்ன அந்தத் தாயின் மனநிலை..?

தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துட்டு விளையாடுக்கான்னு சொன்ன அந்த ரெண்டு தங்கைகளின் மனநிலை...?

எனக்கு யாரோட மனநிலை எப்படியிருக்கும்ன்னு தேவையில்லை... கவினோட மனசுல நானிருந்தாப் போதும்ன்னு நினைக்கும் லாஸ்லியாவை என்ன சொல்வது...?

லாஸ்லியா இப்போது விளையாடுவது பிக்பாஸ் விளையாட்டு அல்ல...

பின்னே...

காதல் விளையாட்டு.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// தன்னோட பெட்டையைப் பாதுகாக்குறதுலயே குறியா இருக்கான் கவின்... //

ஹா... ஹா...

முட்டை task - முட்டாள்தனமான task

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றிண்ணா...
ஆமாம்... என்ன டாஸ்க் கொடுக்குறதுன்னே தெரியாம எதோ ஓட்டுறானுங்க...
இப்ப ரொம்ப வெறுப்பாயிருக்குண்ணா...
எழுதி முடிப்போம்ன்னு எழுத வேண்டியிருக்கு....