மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 30 ஜூலை, 2019

பிக்பாஸ் : புலம்பவிட்ட நாமினேசன்

Image result for bigg boss day 36 images
நேற்றைய பிக்பாஸில் என்ன நடந்துச்சுன்னு எழுதலாம்ன்னா... இன்னைக்கு முழுவதும் வேலை கூடுதல்... கடந்த பத்து நாட்களாக வேலையில்லாததால் அலுவலகத்தில் உட்கார்ந்து ஆற அமர பதிவெழுத முடிந்தது. இன்று எங்கள் பிளாக்கில் சிறுகதை ஒன்று பகிரப்பட்டிருக்கிறது... எப்பவுமே எங்கள் பிளாக் சிறுகதை எழுதுபவர்களுக்கு விஷேசமான தளம்தான்... என்னைப் போல் வாசித்து நல்லாயிருக்கு என்று கடந்து செல்பவர்கள் அங்கில்லை... சரி, தவறென அக்குவேற் ஆணிவேராக கதையினைப் பற்றிக் கருத்துக்களும் அவர்களுக்கு இடையேயான கருத்துக்களுமாக நம்மைச் செதுக்க ஒரு நல் இடமாக அமையும். அங்கும் அவர்களின் கருத்துக்களுக்கு விரிவாக கருத்திட நேரமில்லை. நன்றி ஸ்ரீராம் அண்ணா.

பிக்பாஸ்ல என்ன நடந்தது..?

பிரச்சினைக்குரிய வனிதாவும் மீராவும் போயச்சு.. இனிப் பிரச்சினைகளை யார் ஆரம்பிப்பது..? கவினைப் பொறுத்தவரை பிரச்சினையைப் பெரிதாக்குவான்னு பார்த்தா எண்ணெய்க்குள்ள கிடக்கும் வரை 'புஸ்'ன்னு ஊதியும் வெளிய எடுத்துப் போட்டதும் காற்றுப் போன பலூன் மாதியும் மாறும் பூரி மாதிரித்தான் இருக்கான்... சக்களத்தி சண்டைக்கு காரணமாக இருப்பான்னு பார்த்தா மச்சான்னு மடியில படுத்துடுறான்.. அவன் வேலைக்கு ஆகமாட்டான்... நியூட்ரல் ரேஷ்மா நீ வேஸ்டும்மான்னு சொல்லிடலாம்.. மது எதை எடுத்தாலும் வேகமாக எடுத்து மெதுவா வச்சிடுது, சாக்சிக்கு கவின் பற்றி மட்டுமே பேச வாய்க்கிறது. லாஸ்லியா எப்பவோ கவினுக்கிட்ட லாஸ் ஆயிருச்சு... அப்புறம் ஷெரின், அபி, முகன், தர்ஷன், சாண்டி, சேரன், சரவணன்னு எல்லாருமே எதுக்கும் பயன்படமாட்டாங்க... அப்ப எப்படித்தான் டிஆர்பிக்காக அடிச்சிக்க வைக்கிறது அப்படின்னு தொழில் நடத்துறவனுக்கு யோசனை வரும்ல்ல... செமையா வந்துச்சே.

கூட்டுடா சபையை... எல்லாரையும் உட்கார வையுடா... நாமினேசனை ஆரம்பிப்போம்... எப்பவும் போல அறைக்குள்ள போயி அள்ளிவிட்டுட்டு வெளியில வந்து வெள்ளக்கோழி எப்பக் கூவுச்சுன்னு சீனைப் போட்டுக்கிட்டு சீட்டியா அடிச்சிக்கிட்டுத் திரியிறிய... இந்தா இவரை ஏன் நாமினேட் பண்றேங்கிற காரணத்தோட ரெண்டு பேரை எல்லாருக்கும் முன்னால சொல்லுங்கன்னு ஆட்டத்தை ஆரம்பிச்சி வச்சிட்டு அமைதியாயிட்டாரு பிக்பாஸ்.

எல்லாருடைய முகத்துலயும் கலவர ரேகை... என்னத்தைச் சொல்லி எப்படித் தப்பிக்கன்னு யோசனை முதல்ல வா மூத்தவளேன்னு சாக்சியை ஏத்திவிட அது முதல்ல சரவணனையும் அடுத்து கவினையும் சொல்லிருச்சு... கவினுக்கு என்னடா கிருஷ்ணனுக்கு வந்த சோதனையின்னு ஆயிருச்சு... அப்புறம் எல்லாரும் மாத்தி மாத்தி கவின், மது, ரேஷ்மான்னு அள்ளி வச்சாங்க... லாஸ்லியா மதுவை நாமினேட் செய்யச் சொன்ன காரணம் சம்பந்தமில்லாதது. சாண்டியுடன் சண்டை போட்ட சூழல்... அதன் பின்னான மன்னிப்பு என எல்லாமே கடந்து சென்ற பின்னும் முதல்நாள் சாண்டியை தப்பாச் சொன்னதைச் சரிக்கட்ட மதுவை மாட்டி விட்டுருச்சு... அதேபோல் சாக்சியைச் சொன்ன காரணமும் சாக்சி கவினை நாமினேட் பண்ணியதால்தான் என்பதாகவே இருந்தது.

அதேபோல் ரேஷ்மா சேரனைச் சொன்னதும் சேரன் ரேஷ்மாவைச் சொன்னதும் மொய்க்கு மொய் பாலிசிதான்... பெரும்பாலும் ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையுமே சொன்னார்கள். எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சிப் பார்த்தப்போ கவின், மது, அபி, சாக்சி மற்றும் ரேஷ்மான்னு ஐந்து பேர் வெளியே போகக் காத்திருப்போர் பட்டியலில் இடம் பிடித்தார்கள்.

இதுக்கு அப்புறம் என்னாச்சுன்னா... பெண்கள் எல்லாம் தன்னை நாமினேட் பண்ணுனவங்ககிட்டப் போயி ஏன் அப்படிப் பண்ணுனே... என்னோட எப்படியெல்லாம் இருந்தே... என்னைய அத்தையின்னு சொன்னே... நான் உன்னை மகனா நினைச்சேன்... நீ இப்படிச் சொல்வேன்னு நினைக்கலைன்னு அரைமணி நேரத்துக்கு மேல அழுகாச்சிக் காவியம்தான் எல்லாப் பக்கமும்.. இதையெல்லாம் விரிவா எழுதி... அட அழுத கதைதாங்க... அதெதுக்கு விரிவா... என்ன அழுதாலும் ஆட்டையில எறக்கி விட்டுட்டானுங்க... போகமா இருக்க முயற்சிக்கணுமே... எனக்கென்னவோ இந்த வாரம் சாக்சியை வெளிய எடுத்து சீக்ரெட் ரூம்ல தள்ளி, கவின் பண்றதை எல்லாம் பாருன்னு சொல்லுவாங்கன்னு தோணுது. ரேஷ்மாவைப் பொறுத்தவரை டபுள் கேம் ஆடுதுன்னாலும் தனி மனுசியாய் வாழ்க்கைப் போராட்டம் செய்பவர் என்பதால் இன்னும் சில வாரம் இருக்க வைத்தால் ஏதோ தன் பிள்ளைகளின் வருங்காலத்துக்கான பணத்தைச் சம்பாரித்துக் கொள்ளும்.

மதுவுக்கு எப்பவுமே நாக்குல சனி... கவினுக்கு ஆண்கள் யாரும் ஓட்டுப்போடலை... அவன் பண்ணினது தப்புன்னு ரேஷ்மா, சாக்சியோட பேச, ரேஷ்மாதான் நியூட்ரலாச்சே... சரவணன்கிட்ட கேட்க, அவர் உடனே இன ஒற்றுமையின்னு சொல்லிட்டாரு... அப்புறம் பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருந்துச்சு... கவின் மிக நீண்ட விளக்க உரை கொடுத்தான். கொஞ்ச நேரத்துல ரேஷ்மா, கவினைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு சாரி சொல்லி, தன்னோட பையனுக்கு நீதான் காலேஜ் பீசெல்லாம் கட்டணும்ன்னு கட்டையைப் போட்டுக்கிட்டு நின்னுச்சு.

கவினைப் பற்றி மட்டுமே புகார்களைத் தள்ளிக்கொண்டு திருந்தார் சாக்சி, மனவலியோடு மல்லுக்கட்டுகிறார்... கவின் தன்னை விட்டு விலகி லாஸ்லியாவுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்திருப்பதை அவர் விரும்பவில்லை... மீண்டும் வேண்டும் கவின் என்பதாய்த்தான் திரிகிறார்... கிட்டத்தட்ட பைத்தியநிலை... ஏதோ கோபத்தில் நாமினேட் பண்ணிவிட்டார்... இப்போ அவன் பேசலைன்னு வருந்தப்படுகிறார். ரேஷ்மாகிட்ட அவந்தானே பிரச்சினை அவங்கிட்ட எல்லாரும் பேசி நல்லவங்களாயிடுறீங்க... நான் மட்டும் கெட்டவளான்னு கேட்க, ரேஷ்மாவோ உங்கிட்ட நடந்துக்கிட்டு எங்களுக்குப் பிடிக்கலை அவனை நாமினேட் பண்ணினோம்... அவங்கிட்ட பேசக்கூடாது எப்படிச் சொல்வே... எங்களுக்கும் அவனுக்கும் என்ன பிரச்சினை... உனக்கும் அவனுக்கும் உள்ளது வேற பிரச்சினை... புரிஞ்சிக்க என சரியான பதிலைச் சொன்னார். சாக்சியைப் பொறுத்தவரை எப்ப கவினோடு குலாவும்ன்னு எல்லாம் சொல்ல முடியாது. நேரங்காலம் எல்லாம் இரண்டுக்கும் இல்லை... கோபம் கூட அடுத்த நிமிடமே அப்பீட்டாயிரும்.

சேரன் தன்னோட கிளினிங் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கிட்ட போயி லாஸ்லியா எங்கிட்ட பேசுறதில்லை... முகத்தைத் திருப்பிக்கிறா... என்னன்னு தெரியலை... நீங்க பேசிப்பாருங்களேன்னு கட்டையைப் போட்டார் சாக்சி, ஆரம்பத்துல பேசும் போது மீராவான்னு வேற கேட்டுத் தொலைஞ்சிட்டார்... இந்நேரம் மீரா இந்தாளு நான் வெளியில வந்தும் என்னைத்தான் போட்ரேய் பண்ணுறாருன்னு எத்தனை யூடிப் சேனலுக்குப் பேட்டி கொடுத்துச்சோ... தெரியலை. அப்புறம் சாக்சி லாஸ்லியான்னா... கவின்  என்ன சொல்லி வச்சிருக்கான்னு தெரியலைன்னு சொன்னதும் அவ எனக்கு மக மாதிரி... மக இல்லை என்பதாய் ஆரம்பித்து அவளை இந்தப் பாதையில போகாதேன்னு சொல்லலாம்... ஆனா போறவளை என்னால தடுக்க முடியாது. கவின் என்ன பேசி வச்சிருக்கான்னு தெரியலை... அவ என்ன மூடுல இருக்கான்னு தெரியலை... யாரையும் ரொம்ப நெருங்கிப் போய் கேள்வி கேட்க முடியாது. இந்த உறவுக்குன்னு ஒரு சில கோடுகள் இருக்கு... அந்தக் கோட்டை நான் தாண்ட விரும்பலை.... அது நல்லதும் இல்லைன்னு ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டாரு. சாக்சி எந்தப் பக்கம் பால் போட்டாலும் கட்டை போட்டுடுறானுங்களேன்னு ஆயிருச்சு.

ரேஷ்மா அழுததுல முகினும் நாம நாமினேட் தப்பாச் செஞ்சிட்டோமோன்னு அழுக ஆரம்பிச்சிட்டான். அபி ஒரு பக்கம் அழுதுட்டு முகினோட தோள் தேடி வந்தா கக்கூஸ்ல எப்பவும் காத்திருக்கும் கவினுக்குப் பதிலா முகின் அழுதுக்கிட்டு கிடக்கான். அபி ஆறுதல் சொல்லி கட்டி அணைச்சி அவனைத் தேத்துது... முகின் அணைச்சிக்குவான்னு வந்த புள்ள முகினை அணைச்சிக்கிற மாதிரி ஆயிருச்சு என்றாலும் எப்படியோ அணைப்புக் கிடைத்ததில் அபிக்கு மகிழ்ச்சி.

சரவணன் சாண்டிக்கிட்ட சாக்சி பண்ணினதைப் பொங்கிப் பொங்க வச்சான் கவின். அப்ப சாண்டி கொஞ்ச நாள் ஒதுங்கியிருன்னு சொல்ல, இவந்தானே அவளை விட்டுட்டு இப்ப இன்னொருத்தி பின்னால திரியிறான்னு சரவணன் சொல்ல, அது நட்புண்ணான்னு சொன்னதும் இங்கேருடி நீ ஒண்ணும் தங்கப்பதக்கம் சிவாஜியில்லை நடிச்சி நல்ல நடிகன்னு பேரு வாங்க... உன்னோட கதையெல்லாம் எனக்குத் தெரியும்... நீ எப்படிப்பட்ட தில்லாங்கடின்னு... இவளைவிட வெளிய உனக்காக நிறையப்பேரு இருப்பாளுங்க... அதைத் தெரிஞ்சிக்க.... வீணாவுல லாஸ்லியா மனசுல காதலை வளர்க்காதேன்னு சொல்ல, நானே சாக்சியை கட்டம் கட்டுறதே லாஸ்லியாவுக்குத்தானேய்யா... இதுல அவளையும் விட்டுடுன்னா எப்படிங்கிற மாதிரி பார்த்தான்.

காலையில எம்ஜியார் பாட்டுப் போட்டதால சாண்டி எம்ஜிஆரா மாறி செம கலக்கு கலக்கினார்... கவினைக் கலாய்த்து... லாஸ்லியாயை ஓட்டி... ஷெரினை டபாய்த்து... சேரனுக்குப் பேர் வைக்க முடியலைன்னு வருத்தப்பட்டு  'சன்' சீரியலா இருந்த வீட்டை ஒரு பத்து நிமிசத்துக்கு மேல 'சிரிப்ப்பொலி' யாக மாற்றினார். 

சரவணன் பேருந்தில் பெண்களை உரசவே காலேஜ் படிக்கும் போது போனேன்னு கமல்கிட்ட சொன்னதுக்கு வலைத்தளப் பொங்கல்... என்னமோ எவனுமே செய்யாத மாதிரி... காலேஜ் படிக்கும் போது பஸ்ல வர்ற பசங்களும் பொண்ணுங்களும் பண்ணாத அலும்பு என்ன இருக்கு... எல்லாத்துக்கும் பொங்க மாட்டாங்க ஆனா சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சியின்னா பொங்கிருவோம்... உடனே பிக்பாஸ் சரவணனைக் கூப்பிட்டு மன்னிப்புக் கேட்க வச்சி, அவரும் நான் பண்ணின மாதிரி யாரும் பண்ணாதீங்கன்னு சொல்ல வந்தேன்... அதுக்குள்ள கமல் சார் அப்படியே கட் பண்ணிட்டு அடுத்ததுக்குப் பொயிட்டாங்கன்னு என்னமோ உளறி மன்னிப்புக் கேட்டார். சமூக வலைத்தளப் பொங்கலை எல்லாம் நாங்க உன்னிப்பாக் கவனிக்கிறோம்ன்னு விஜய் டிவி காட்டிக்கிட்டாலும் உடனடி அப்டேட் உள்ளிருப்பவர்களை மக்கள் கவனிக்கிறார்கள் என்பதை உணர்த்தியிருக்கும். உடனே சில இணையப் பத்திரிக்கைகள் கமல்தான் மன்னிப்புக் கேட்க வைத்தார்ன்னு கதைகதையா கட்டுரை எழுதிட்டாங்க... அட நொன்னைங்களா கமல் அன்னைக்கே மேடையில சரவணனை அப்படிச் சொல்லாதீங்க... பெண்கள் எல்லாம் பார்க்கிறாங்கன்னு சொல்லி மன்னிப்புக் கேட்கச் சொல்லியிருக்கலாமே... அவரும் இதை ரசிச்சிச் சிரிச்சிட்டுத்தானே போனாரு... இப்ப எதுக்கு மன்னிப்பு கேளுன்னு நிக்கிறாரு... அளக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்குடே... நினைச்சிக்கங்க.

அப்புறம் மதுவுக்கு பிறந்தநாள்... கேக் வந்துச்சு... கணவர் அகம் டிவி வழியே வாழ்த்துச் சொன்னார்.... மதுவும் பிக்பாஸ் வீட்டுக்கே உரிய பிறந்தநாளை எழவு வீடாக்குவதைச் செய்து அப்படியே கொஞ்சம் சிரித்து சரவணன் சேரனுக்கு கேக் ஊட்டி, இருவரின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி மகிழ்ந்தார்.

நேற்று சாக்சி ஆடலை... இன்னைக்கு காலையில குட்டை டவுசர் மாட்டி ஆடியிருக்கும்... காரணம் நாமினேசன்ல இருக்கோம்ல்ல.

கவின் ஆட்டையை ஆரம்பிச்சிருப்பான்... ஏன் மச்சான் என்னை நாமினேட் பண்ணுனேன்னு குடையாக் குடைஞ்சிருப்பான்.

என்ன பண்ணுனாங்கன்னு நாளைக்குப் பார்ப்போம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

இராய செல்லப்பா சொன்னது…

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் தளத்திற்கு வருகிறேன். தலையெழுத்து, பிக்பாஸ் பற்றிப் படிக்க வேண்டியதாகி விட்டது....

இராய செல்லப்பா (த்ற்போது நியு ஜெர்சியில் இருந்து)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பிரச்சனைகளை உண்டு பண்ண தான் Open Nomination...!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை...
பிக்பாஸ் அது தளத்தை உயிர்ப்போடு வைத்திருக்க, இப்போது நேரம் கிடைப்பதால் எழுதுவது.
தாங்கள் 'தங்க மீன்' அல்லது 'ஆடும் கூத்து' வாசித்திருக்கலாம்.
பிக்பாஸ் விரும்பும் சிலருக்கான பகிர்வு...
வருகைக்கு நன்றி ஐயா....

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் அண்ணா...
எப்படியும் அடிச்சிக்கணுங்கிறதுக்காகவே பிக்பாஸ் இந்த நாமினேசனை வைத்தார்.
எல்லாரும் அழுதுக்கிட்டு இருக்குக.
நன்றிண்ணா.