மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 29 ஜூலை, 2019

பிக்பாஸ் : வெளியே போன 'மாறாத' மீரா

Image result for bigg boss day 35 meera images
நேற்றைய பிக்பாஸ் ஆரம்பிக்கும் போது மீரா தான் சொன்னது தப்பில்லை... சேரன் தப்பானவர்தான்... கமல் ஆடுனது போங்காட்டம் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். சாண்டி கூட இத்தனை கேமரா இருக்குடா... அதுல தெளிவாத் தெரியுதுடா... அவர் தப்பில்லைன்னு தெரிஞ்சிருச்சுடா... பின்னே நீ அவர்கிட்ட சாரி கேட்டிருக்கலாம் என்று சொன்னபோதும் இல்ல அந்த வலியை நான் உணர்ந்தேன்... என்னால சாரி கேட்க முடியாது. நான் யார் மேலயும் தப்புச் சொல்லி உயரணும்ன்னு நினைக்க மாட்டேன் என்று பிடித்த முயலுக்கு அம்பது கால்தான்டான்னு நின்னார். இதுக்கு மேல இதுக்குப் புரிய வைக்கணும்ன்னா நம்ம தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் முடியாதுன்னு அந்த வானத்தை பார்... உன் மூடு மாறும்ன்னு சொல்லிட்டு வாயை மூடிக்கிட்டார்.

அடுத்து கமலின் வருகை... ஒரு நாள் அழகான உடையில் அம்சமாய் மனம் கவர்வார்... அறுபது வயதிலும் ஆணழகன் என்று தோன்றும்... சில நாள் மொக்கையாய் உடை அணிந்து வருவார்.... அப்படி மொக்கையான உடையில் நேற்று... கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்... என்பதற்கிணங்க படம் போட்டுக் காட்டினாலும், ஏன் செய்தியில் சொன்னால் கூட ஒத்துக்கமாட்டாங்க போல என்றார்... உடனே கூட்டத்தில் கைதட்டல்... எதுக்கு இப்ப கை தட்டுறீங்க... நான் வீட்டுக்குள் இருப்பவர்களைச் சொன்னேன்... நீங்க வேறு எதையாவது நினைச்சிக்கிட்டா நான் பொறுப்பில்லை என்றார்... எதுக்குக் கை தட்டினார்கள்... கமல் வேறு என எதைச் சொன்னார் என எனக்கெல்லாம் ஒண்ணும் புரியலை.

அப்புறம் சீக்ரெட் அறையை பயன்படுத்துவார்களா...? பயன் படுத்த வேண்டுமா...? என்றெல்லாம் கேட்க, செம்மறி ஆட்டுக் கூட்டம் ஆமென்று சொல்ல, உங்களை எல்லாம் திருத்த முடியாதுன்னுட்டு அகம் டிவி வழியே அகத்துக்குள் பொயிட்டார். கூட்டமாக் கோரஸ் போட்டுக்கிட்டு செம்மறி ஆடா இருக்கீங்களேன்னு திருத்த முடியாதுன்னு சொன்னாரா.. இல்ல வேற எதுக்காச்சும் சொன்னாரா... அப்படின்னு மூளையைப் போட்டுக் குழப்புறதைவிட நாமளும் அவர் பின்னே அகம் டிவி வழியே அகத்துக்குள்.

அம்புட்டுப் பேரும் செமையான மேக்கப்போட கமலுக்காய் காத்திருந்தார்கள்... சேரன் நீக்கம் மற்ற ஐவரும் கவலையோடு இருந்தார்கள்... சரவணன் என்னை போச் சொல்லுங்கள் என்று சொன்னாலும் அப்படித்தான் சொல்லுவேன் அதுக்காக போகச் சொல்லிடாதீங்கடா என்பது போல் உட்கார்ந்திருக்க, எல்லாருக்கும் வணக்கம் சொல்லி இந்த வாரம் தொலைபேசி வழி தொல்லை கொடுக்க வந்த பெண் பேசியது சாண்டியிடம்... கேட்டது எல்லாரையும் சிரிக்க வைக்கிறீங்க... ஆனா சண்டையின்னா ஒதுங்கி நிக்கிறீங்களே ஏன்..? என்பது. இனி இறங்கி ஆடுறேன் என்று மொக்கையாய் பதில் சொல்ல, அதை வைத்துக் கமல் கலாய்க்க, உள்ள போனா சேதாரமில்லாமல் திரும்ப முடியாது சார் என ஒரு வழியாக ஒரு பதிலைச் சொல்லித் தப்பித்தார்.

அடுத்ததாக வெளியேற்றப் படலத்துக்கான காட்சிகள் என்பதாய் அபிராமி, சாக்சியிடம் பேசி யார் நாமினேட் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறீங்கன்னு கேட்க, எல்லாரும் ஒவ்வொன்றைச் சொல்ல, சரவணன் மட்டும் நாம ரெண்டு பேரை போட்டுக் கொடுக்கும் போது நம்மளை ரெண்டு பேர் போட்டுக் கொடுப்பானுங்கதானே என எதார்த்தமாய்ப் பேச, கமல் பதார்த்தமாய்ச் சிரித்தார். சரவணன் போல் மேனரிசமெல்லாம் செம... கலைஞானியின்னு கலைஞர் சும்மாவா சொன்னாரு... நடிகனய்யா.

பார்வையாளர்களிடம் யாரைக்  காப்பாற்றலாம் என்று கேட்டதும் கவின் என்று கத்தினார்கள்... மேலே சொன்னது போல் இந்தச் செம்மறி ஆட்டுக்கூட்டம் தானாக கூடிய கூட்டமல்ல... விஜய் டிவி கூட்டிய கூட்டம் என்பது தெள்ளத்தெளிவாய்த் தெரிந்தது. கவின் காப்பாற்றப்பட, அடுத்தது சித்தப்பும் காப்பாற்றப்பட்டார். முப்பெரும் தேவியர் மட்டும் களத்தில்... மூவருக்கும் மரண கலை முகத்தில்.

கமல் ரொம்ப நேரமெல்லாம் இருக்க வைத்து இதயத் துடிப்பை எகிற விடாமல் அபிராமி நீங்கதான் வெளியேறணும்ன்னா என்ன செய்வீங்க என்றதும் நான் போகமாட்டேன்... போகமாட்டேன் எனச் சின்னப்பிள்ளை போல் சொன்னதும் அப்ப மீரா வாங்கன்னு படக்குன்னு சொல்லிட்டார். எல்லாருக்கும் ஆச்சர்யம்... இங்க பிரச்சினைக்கே அவ ஒருத்திதான் அதெப்படி அவளைப் போகச் சொல்வாங்க என்ற விவாதத்தில் சீக்ரெட் அறையில் போடவா இருக்கும் என்றார் ஷெரின்... நமக்குமே ஆரம்பத்தில் சீக்ரெட் அறை குறித்த கமலின் பேச்சின் அடிப்படையில் அப்படியும் இருக்கக் கூடும் என்றே தோன்றியது.

கிளம்பும் போது கூட மனசுக்குள்ள எதையும் வச்சிக்காதிங்கன்னு யார்க்கிட்டயும் அணைச்சிக்கலை... கவின், சாண்டி, சித்தப்பு, ரேஷ்மான்னு சின்ன வட்டத்துக்குள்ளதான்  மீரா நின்னாங்க... போட்டோவுக்கு கூட யாரையும் அழைக்கலை... சாண்டியை மட்டுமே அழைத்தார்... முகனின் அழைப்பின் பேரிலே அனைவரும் வந்தார்கள். நீங்க சொன்னபடி என்னைய அனுப்பிட்டீங்க சார் அப்படின்னு சேரனிடம் மீண்டும் ஒரு முட்டுதலை வைத்தார். சேரன் சொன்னது நான் போகணும் இல்லேன்னா அந்தப் பொண்ணு போகணும் என்பதே... கடைசி வரை திருந்தாத ஜென்மமாய் மீரா.

மேடைக்குப் போனதும் மீராவைப் பேச விட்டால் தன்னை மீளாத கோமாவில் தள்ளி விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வுடன் கமலே பக்கம் பக்கமாகப் பேசினார்... மீராவைப் பாதுகாப்பது நம் கடமை என்பதாய்ச் சொன்னார். எங்கே ஜூலியை விரட்டியது போல் மீராவும் பார்க்குமிடத்திலெல்லாம் மக்களால் விரட்டப்படுவாரோ என்ற பயமே காரணமாக இருக்கக் கூடும். வரும் போது கூட சேரனை நேரடியாத் தாக்கிட்டு வாரீங்க... அவர் என்னங்க பண்ணினார்... வீட்டில் போய் உட்கார்ந்து இதையெல்லாம் பாத்தீங்கன்னா உங்களுக்குப் புரியும்... அப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்றால் இங்கு நூறு நாள் இருந்ததற்குச் சமம் என்றார்.

உங்களுக்காக ஒரு குறும்படம் என்பதில் மீராவின் மகிழ்ச்சி, சோகம், கண்ணீர், ஆட்டம் பாட்டம் எல்லாம் கலந்து காட்டி உணர்ச்சிக் குவியலுக்குள் அவரைத் தள்ளினார். அந்த அழகிய குறும்படத்தில் 'அவ நடிக்கிறா'ன்னு ரேஷ்மா சொன்னதும் இருந்துச்சு... மீரா நடிக்கலை... சேரனை வஞ்சம் தீர்க்கப் பிரயத்தனம் செய்து எதிலும் முடியாமல் இறுதியாக எந்தப் பெண்ணும் அவ்வளவு எளிதில் சொல்ல விரும்பாத குற்றச்சாட்டை வைத்தார். நேற்று வரை நான்காம் இடத்தில் இருந்தீர்கள் அதன் பிறகே உங்கள் நிலை மாறியது என கமல் சொன்னது உண்மையே... சாக்சியே வெளியேறுவார் என்ற நிலை... இடுப்பைப் பிடிச்சார் கதையினால் மீரா வெளியே... சாக்சி உள்ளே.

மீரா அகம் டிவி வழியே அகத்துக்குள் போய் எல்லாருக்கும் நன்றி சொல்லி நல்லா விளையாடச் சொன்னார். தர்ஷனை நீதான் ஜெயிக்கிறாய்... ஜெயிச்சிட்டு வான்னு சொன்னார்... அப்புறம் கமல் காட்டிய வழியில் மாடலாய் நடந்து போனார். இன்றைக்கு மீராவின் உடை அவ்வளவு கேவலமாய்.... அதுவும் வீட்டிற்குள் உட்கார்ந்திருக்கும் போது பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணமெல்லாம்... சேச்சே... அதெல்லாம் எங்ககிட்ட எதிர்ப்பார்ப்பது பார்வையாளர்கள் தப்பு என்பதை மீரா, சாக்சி இருவரும் சொல்லாமல் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள்.

அப்புறம் கமல் ஒரு விளையாட்டு வைத்தார்... ஹூரோ, வில்லன், ஜீரோ என்ற மூன்று பேட்சை ஒவ்வொருவரும் போர்டில் இருக்கும் போட்டியாளர்களில் மூவருக்கு வைத்து அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும். இந்த விளையாட்டு மீராவுக்கானதாக இருக்கக் கூடும்... எதுக்குடா தேவையில்லாம ஓணானைப் பிடிச்சி வேட்டிக்குள்ள விட்டுட்டு குத்துதே குடையுதேன்னு சொல்லணும்ன்னு தப்பிச்சி, வீட்டுக்குள்ள விளையாட வச்சிட்டாரு போல.

அதில் திறம்பட போட்டி போடும் வில்லன் என பலர் தர்ஷனைச் சொன்னாங்க.... எங்களுக்கு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும் நல்ல ஹூரோவெனச் சேரனைச் சொன்னாங்க... லாஸ்லியா எப்பவும் எனக்கு சேரப்பாதான் நாயகன் என்றார்... எனக்கு என் மகளே தேவதை என்றார் சேரன். ஒரு வழியாக அந்த விளையாட்டு முடிவுக்கு வந்தது.

லாஸ் எங்கிட்ட பேச மாட்டேங்கிறா... என்னதான் இருந்தாலும் நாந்தானே மூத்தவ... அவ ரெண்டாவதுதானேங்கிற நினைப்புல கவின் கிட்ட கவிபாடுது சாக்சி, மூத்தவ அபிராமிடி... நீயே ரெண்டாவதுதான்... அவ மூணாவது... ஆனா அவதான் இனி எனக்கு முதல்ங்கிற முடிவோட நீ சாண்டியைச் சொல்லாம என்னைய கொள்கை பரப்புச் செயலாளர்ன்னு சொன்னதுல அவளுக்குக் கோபம் போலன்னு எதுக்கும் எதுக்குமோ முடிச்சிப் போட்டு ஒரு சிண்டை முடித்து விட்டிருக்கிறான்.

அதன் பின் கமல் விடை பெற, வீட்டுக்குள் சேரன் என் குழந்தைகள் என்னைத் தவறாக நினைத்திருக்க மாட்டார்கள் என்றார். நான் அபிராமியை விரும்பலை ஆனா அவ விரும்புறா... எனக்கு ஒருத்தி வெளியில இருக்கா... நீ என்னோட பிரண்ட்டுன்னு சொல்லிட்டேன் என்று முகன் சாண்டியிடம் சொல்கிறார். இதையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கு... அதுல நீ, முகன் எல்லாரும் வெற்றி பெறணும்... உனக்கு முகன் மட்டும் வாழ்க்கையில்லை... நீ வெளியில நிறையப் படங்களில் நடிக்கணும் என சாக்சி, அபிக்கிட்ட தூபம் போடுறார். அபி அதே தூபத்தை எடுத்துப் பட்டி டிங்கரிங் பார்த்து முகனுக்குப் போடுது. அப்படியே நெல்லுக்குப் பாயும் தண்ணி புல்லுக்கும் பாயட்டும்ன்னு லாஸ்லியாவுக்கும் அட்வைஸ்... உன்னோட பிரச்சினையை சேரன், தர்ஷன்கிட்ட பேசுன்னு சொல்ல, என்னோட பிரச்சினை எனக்குத் தெரியும்... அதை அவங்க சரி பண்ண முடியாது நாந்தான் பண்ணிக்கனும் அதுக்கு சில நாள் ஆகும்ன்னு சிரிச்சிக்கிட்டே லாஸ் சொல்லியாச்சு.

ரேஷ்மா, சாக்சி மற்றும் ஷெரின் புல்வெளியில படுத்துக்கிட்டு நட்சத்திரம் பார்க்கிறாங்க... லாஸ்லியா இப்பல்லாம் ரொம்ப ஓவராப் பண்ணுறாங்கிற செய்தியைப் பகிர்ந்து கொண்டு... அப்ப அங்க வர்ற சாண்டி, எங்க வீட்டுல சண்டையின்னாக்கூட போனை எடுத்துக்கிட்டு நான் பாட்டுக்கு சண்டைக்கு இடையில புகுந்து பேசிக்கிட்டுத்தான் போவேன்... சமாதானமெல்லாம் பண்ண மாட்டேன்... அதுதான் நான்... அப்படின்னு கமல் மாதிரிச் சொல்லிட்டு, மீரா ரொம்ப நல்லவ... என்ன கலாய்ச்சாலும் ஏத்துப்பா... இங்கயின்னு இல்ல... வெளியிலயும் கலாய்ப்பேன்... இனி யாரைக் கலாய்ப்பேன்... இனி நாங்க மூணு பேருமாக் கலாய்ச்சுக்க வேண்டியதுதான்னு சீனைப் பலமாப் போட்டாரு.

வனிதா, மீரான்னு ரெண்டு வில்லிகளையும் விரட்டிட்டியா... இனி டிஆர்பிக்கு எங்க போவோம்... உங்களை வச்சே உங்களைச் சாத்துனாத்தான் நாங்க கல்லாக் கட்ட முடியும் என்பதால் இன்று முகத்துக்கு நேரே திறந்த மனதுடன் திறந்த வெளியில் நாமினேசனாம்... குத்திக்கிட்டு சாகுங்கடா... 

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரியான பார்வை...