மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 22 அக்டோபர், 2014

வலைச்சர மூன்றாம் நாள் : கவிதை பாடு குயிலே... குயிலே...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வலைச்சரத்தில் மூன்றாம் நாளான இன்று முழுக்க முழுக்க பெண் கவிஞர்களின் பதிவுகளின் அறிமுகமாய் 'கவிதை பாடு குயிலே... குயிலே...' இன்றைய பகிர்வில்...

என்னைப் பொறுத்தவரை கவிதை என்பது எல்லோராலும் எழுத முடிந்த ஒன்றுதான் என்றாலும் வார்த்தைகளை எப்படிப் போட்டு எழுதினால் எழுத்து வசமாகும் என்று தெரிந்து எழுதுபவர்கள் மட்டுமே கவிஞராக முடியும். நானும் கவிதை என்று சிலவற்றைக் கிறுக்கி வைத்துள்ளேன். ஒரு சிலரின் கவிதை படிக்கும் போதே மனசுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்ளும். அது எதாவது ஒரு தருணத்தில் ஏதோ ஒரு நினைவில் நம்முள்ளே வந்து போகும். அப்படிப்பட்ட கவிதைகளை என் நட்பு வட்டத்தில் இருக்கும் பல சகோதரிகளின் எழுத்தில் கண்டிருக்கிறேன்.  என்ன ஒரு வருத்தம்ன்னா இன்னைக்கு வலைப்பூவில் பகிர்வதைவிட முகநூலில் பகிரும் சகோதரிகள்தான் அதிகம் இருக்கிறார்கள்.


இங்கு நிறைய கவிதாயினிகளுக்கு களம் ஒதுக்க வேண்டும் என்பதால் எனது வழவழாக்களைக் குறைத்துக் கொள்கிறேன்... சரி வாங்க பாரதி கண்ட புதுமைப் பெண்களின் கவிதை மழையில் நனையலாம்.


முதலில் எனது நட்புக்கு மரியாதை...

தொடர்ந்து வாசிக்க வலைச்சரம் வாங்க...

இன்றைக்கும் ஒரு பாட்டை ரசிச்சிட்டு அப்படியே மதுரையில் வரும் ஞாயிறன்று நடக்க இருக்கும் நம்ம வலைப்பதிவர் மாநாட்டு நிகழ்ச்சி நிரலையும் தெரிஞ்சிக்கிட்டுப் போங்க...


மதுரை வலைப்பதிவர் மாநாட்டில் 'சில நொடி சிநேகம்' என்ற தனது முதல் குறும்படத்தை வெளியிடும் அண்ணன் குடந்தை சரவணன் அவர்களுக்கும்... 'கரந்தை மாமனிதர்கள்' என்ற புத்தகத்தை வெளியிடும் மதிப்பிற்குரிய ஐயா கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும்... 'துளிர் விடும் விதைகள்' என்ற புத்தகத்தை வெளியிடும் சகோதரி 'தேன்மதுரத் தமிழ்' கிரேஸ் பிரதிபா அவர்களுக்கும்... 'ஒரு கோப்பை மனிதம்' என்ற புத்தகத்தை வெளியிடும் சகோதரி. மு.கீதா அவர்களுக்கும்... 'நல்லா எழுதுங்க... நல்லதையே எழுதுங்க...' என்ற புத்தகத்தை வெளியிடும் ஐயா பி.ஆர்.ஜெயராஜன் அவர்களுக்கும்...மனசு நிறைந்த வாழ்த்துக்கள்.


-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma 2