மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

சூடான அரசியல் : சோனியா, மன்மோகன் ஊடல் - பதவி வேண்டாம்: வைகோ


மனசின் முதல் தொடர்கதை

கலையாத கனவுகள் 3-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...



பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடையே கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங் நடந்து கொண்ட விதத்தை சோனியா ஏற்கவில்லை என்றும், அதே போல நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரின் செயல்பாடுகளையும் அவர் ஏற்கவில்லை என்றும் தெரிகிறது. ஆனால், அஸ்வனி குமாருக்கு மன்மோகன் சிங் ஆதரவாக உள்ளார். நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐயின் நடவடிக்கைகளில் அஸ்வனி குமார் தலையிட்டது உறுதியாகிவிட்டது.

இதனால் அவரை பதவி விலகச் செய்ய வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால், அவர் பதவி விலகினால் மத்திய அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்து வலுப்பட்டுவிடும் என்பதால் அதை பிரதமர் விரும்பவில்லை.

அதே நேரத்தில் அஸ்வனிகுமார் பதவி விலகாவிட்டால் அது கட்சிக்கும், ஆட்சிக்கும் சேர்த்து பிரச்னையை உருவாக்கும் என சோனியா நினைக்கிறார். மேலும் சமீப காலமாக மன்மோகன் சிங் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது கவலை அளிக்கிறது என்று நேரடியாகவே சோனியா விமர்சித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் கூடிய காங்கிரஸ் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தான் இந்தக் கருத்தை சோனியா முன் வைத்துள்ளார். இக் கூட்டத்தில் சோனியா, பிரதமர் தவிர, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, நிதியமைச்சர் ப. சிதம்பரம், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் தன்னிச்சையாக செயல்பட்டதால்தான் கூட்டணியில் இருந்து திமுக விலக நேர்ந்ததாகவும் சோனியா காந்தி கருதுவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிரதமரை நீக்கும் அளவுக்கு காங்கிரஸ் தலைமையிடம் அதிகாரம் இல்லை என்றும், அந்த அளவுக்கு மன்மோகன் சிங் தனது அதிகாரத்தை நிலை நிறுத்துக் கொண்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

பதவிக்காக இந்த பாதயாத்திரை இல்லை:  வைகோ

அரசியல் நோக்கத்துடனோ பதவிக்காகவோ இந்த பாதையாத்திரை இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். பூரண மதுவிலக்கு கோரி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை வைகோ நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இவர் வியாழக்கிழமை மாலை நத்தக்காடையூரில் இருந்து புறப்பட்டு மருதுறை, கே.ஜி.வலசு வழியாக சென்னிமலைக்கு வந்தார். பின்னர் சென்னிமலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு அவர் பேசியதாவது:


நான் பதவிக்காக இந்த நடைபயணத்தை நடத்த வில்லை. மதுவை தடை செய்யகோரி நடைபெறும் இந்த நடைபயணத்திற்கு ஏராளமான தாய்மார்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். நம் எதிர்கால சந்ததியினரை காப்பாற்றவே இந்த நடைபயணம். சென்னிமலையில் கைத்தறி தொழிலை நம்பி ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. நூல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

நெசவு தொழிலாளர்கள் தங்களின் 80 சதவீத கூலியை மதுக் கடையில் கொடுத்து விடுகிறார்கள். பதவிக்காக போராடமல் கடைசி வரை நேர்மையை கடைபிடிப்பேன். மது போதை மனிதனின் உடல், ஒழுக்கம் பண்பாட்டை கெடுத்து விடுகிறது. அ.தி.மு.க.- தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் ம.தி.மு.க.வை எதிர் பார்க்கிறார்கள் இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்

1 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

அருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com) இணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது? வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...மேலும் விவரங்களுக்கு தமிழன் பொது மன்றத்தின் அறிவிப்பு பலகையை பாருங்கள்.

- தமிழன் பொது மன்றம்.