மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 9 ஏப்ரல், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-12)

முந்தைய பகுதிகள்:
    பகுதி-1         பகுதி-2         பகுதி-3            பகுதி-4           
    பகுதி-5        பகுதி-6          பகுதி-7         பகுதி-8       

ண்பனின் தங்கை கல்யாணத்துக்குப் போன இடத்தில் சுபஸ்ரீயை பார்ப்போம் என்று கண்ணன் நினைக்கவில்லை. தோழிகளுடன் நின்ற அவளைப் பார்த்ததும் அம்பேத்காரிடம் “டேய் அது நம்ம சாரதியோட அத்தை பொண்ணு சுபஸ்ரீதானே...?” என்றதும்  அம்பேத்கார் அவனை முறைப்பது போல் பார்த்தான்.

“என்னடா முறைக்கிறே... ஆமான்னா ஆமான்னு சொல்லு இல்லேன்னா இல்லேன்னு சொல்லு...”

“பாவம் அவ சாரதி அத்தை பொண்ணுன்னு உனக்குத் தெரியாதுல்ல...” கடுப்பாகக் கேட்டான்.

“நாம எல்லாரும் அவங்களை ஒரு தடவைதானேடா பார்த்திருக்கிறோம்... அதான்...”

“அடேய்... அடேய் நிறுத்துடா... போதும்... அவளோட பேஸ்புக்ல அரட்டை அடிச்சிட்டு... தினமும் இன்னைக்கு இந்த டிரஸ் போட்டுப் போனேன் நல்லாயிருக்கான்னு அவ போட்டோ அனுப்ப... நீங்க அதுக்கு பதில் சொல்ல... எல்லாம் செய்வீங்க... ஆனா அவளை உங்களுக்குத் தெரியாது... நல்லாயிருக்குடா....”

“உனக்கிட்ட வந்து எல்லாம் சொன்னேன் பாரு... அவ எங்கிட்ட ரொம்ப நெருங்கிப் பேசுறான்னுதானேடா இப்பல்லாம் நான் சென்டர் பக்கமே போகலை...”

“இங்கரு அது எனக்கும் தெரியும்... ஆனாலும் சொல்றேன்... அதை நம்ம நண்பனுக்கு கட்டணுமின்னு சின்ன வயசுலயே முடிவு பண்ணி வச்சிருக்கானுங்க... இதுல நீ அவ மனசுல தேவையில்லாம எதையாவது விதைச்சி வைக்காதே... அவ்வளவுதான் சொல்லுவேன்...”

“நான் என்னடா பண்ணினேன்... பிரண்ட்லியா பேசுறா... நானும் அப்படித்தான் எடுத்துக்கிறேன்...”

“இன்னைக்கு இந்த டிரஸ் போட்டேன்... என்னோட பிரண்ட்ஸ் இதைச் சொன்னாங்கன்னு என்னைக்காச்சும் சாரதிக்கிட்ட சொல்லியிருப்பாங்கிறே... எனக்கென்னவோ தப்பாத் தெரியுது... அவ்வளவுதான்... பாத்துக்க... அவ நம்மளைப் பார்த்தா சாதாரணமா பேசிட்டு விலகிப் போய்க்கிட்டே இருக்கணும் சரியா...?”

“சரிடா... நீ வேற எங்கப்பா மாதிரி உயிரை எடுக்காம... அங்க நிக்கிறது அவளான்னுதானே கேட்டேன்... அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய லெக்சர் அடிக்கிறே.... அவ எப்படி இங்க வந்திருக்கான்னு ஆச்சர்யத்துலதான் கேட்டேன்...”

“ஆச்சர்யமா... இல்லை அன்பா...?”

“டேய்...”

“சரி விடு...”

அவர்களைப் பார்த்ததும் ஓடிவந்த நண்பன் “வாடா... அம்மாவையாச்சும் கூட்டியாந்திருக்கலாம்ல்ல...”  என்றபடி எதிர்கொண்டான். அம்பேத்காரை கண்ணன் அறிமுகப்படுத்த “வாங்க” என்றபடி கைகொடுத்தான்.

“அம்மா எங்கடா வர்றேன்னு சொல்லுது... அதுக்கு அந்த வீடும்... வயலும்... ஆடு மாடுகளும்தான் உலகம்... அப்படித்தான் எங்கப்பா வச்சிருக்காருன்னு தெரியும்ல்ல...”

“ம்...”

“வாடா... தங்கச்சியைப் பார்த்திட்டு வரலாம்...”

“அவளை அப்புறம் பாத்துக்கலாம்... முதல்ல போய் சாப்பிட்டு வாங்க...” என்றான் அவன்.

“ம்... ஆமா அந்தப் பொண்ணுங்க...?”  மெல்ல இழுத்தான் கண்ணன்.

“யாரு.... தங்கச்சிக்கிட்ட நிக்கிதுகளே அதுகளா... அதெல்லாம் அதோட கிளாஸ் மெட்டுங்கடா...” என்றான்.

“கிளாஸ் மெட்டா...?”

“ஆமாடா... தங்கச்சியோட ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்ச பொண்ணுங்க...” என்று சொல்லிவிட்டு “போய் சாப்பிட்டு வாங்கடா... இந்தா வாறேன்...” என கண்ணனின் நண்பன் நகரவும், “இப்பத்தானே சொன்னேன்... அப்புறம் அவனுக்கிட்ட போயி கேட்டுக்கிட்டு இருக்கே...?” கடுப்படித்தான் அம்பேத்கார்.

“இப்ப என்ன... கேட்டாத் தப்பா... சும்மா நையி நையின்னு பேசிக்கிட்டு இருக்கே... தெரிஞ்சவங்க வந்தா பேசமாட்டியா என்ன.... என்னமோ நான் அவளைக் கூட்டிக்கிட்டு ஓடிட்ட மாதிரி பேசுறே... அவ பிரண்டுக்கு மனைவி ஆகப் போறவன்னு எனக்கும் தெரியும்... அதுக்காக இன்னைக்கு பார்த்துட்டு நாம பார்க்காத மாதிரி போனா அவ நம்ம சாரதிக்கிட்ட போயிச் சொல்லமாட்டாளா... அவன் வருத்தப்படமாட்டான்....” கோபமாய் பேசினான் கண்ணன்.

“எதுக்கு நான் அணில் வாலு மாதிரி பின்னால வந்தேனோ தெரியலை... திட்டு வாங்கத்தான் போல... இப்ப எதுக்கு கத்துறே... அவன் வருத்தப்படுவான்னு பேச நினைக்கிறியா... இல்லை அவ வருந்துவான்னு பேச நினைக்கிறான்னு அந்த சங்கரப்பதி முனியைய்யாவுக்குத்தான் தெரியும்... நான் இங்க உக்காந்திருக்கேன்... நீ போயி அவகிட்ட பேசிட்டு வா... போகும் போது வண்டியில பஸ் ஸ்டாண்டுக்கு அவளைக் கூட்டிக்கிட்டு போ... நான் எப்படியோ நடந்து வந்து சேர்றேன்... போ போயி பேசு...” கடுப்பாய்ச் சொன்னபடி அருகிலிருந்த சேரில் அமர்ந்தான் அம்பேத்கார்.

“டேய்... என்னடா நீயி... எதுக்கெடுத்தாலும் கோபப்படுறே...?” கேட்டவாறு அருகே அமர்ந்தான் கண்ணன்.

“நீ போ... போயி பேசிட்டு வா...  இனி நான் எதுவும் பேசுற மாதிரி இல்ல... உங்கூட வந்ததுக்கு லெட்சுமி தியேட்டர்ல படம் பாத்திருக்கலாம்... அப்பவே பிரவீண் கூப்பிட்டான்... வந்தேன் பாரு என்னையச் சொல்லணும்...” என்றபடி திரும்பி அமர்ந்து கொண்டான்.

கண்ணனுக்கு என்னவோ போலாகிவிட்டது. அம்பேத்கார் சொல்வதில் நியாயம் இருப்பதை அவன் அறியாமலில்லை... சுபஸ்ரீ நடந்து கொள்ளும் விதத்தை வைத்துப் பார்க்கும்போது கண்டதும் காதல் என்று இருக்கிறாளா... அல்லது நல்ல நட்பாக நினைக்கிறாளா என்பது அவனுக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. அவள் பேஸ்புக்கில் போட்டோ அனுப்பியதை வைத்துப் பார்க்கும் போது இதனால் பெரிய பிரச்சினையை எதிர்க்கொள்ள வேண்டி வரலாம் என அவன் மனசு சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது என்றாலும் ‘வந்த இடத்தில் பார்த்தும் பார்க்காமல் போவது அழகல்லவே... பேசினா இவன் கடுப்படிப்பான்...  பேசலைன்னா அவ தப்பா நினைப்பா என்ன செய்வது..?’ யோசனையோடு ஒன்றும் பேசாமல் இருந்தவன்,  அம்பேத்காரிடம் “வாடா சாப்பிட போகலாம்...” என்றபடி எழுந்தான். அப்போது சுபஸ்ரீ அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.


வேலாயுதமும் பஞ்சநாதனும் திண்ணையில் அமர்ந்து இன்றைய அரசியலை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

“சந்திரகுமார் யாருய்யா... இவனை வாங்கிட்டா விஜயகாந்த் கட்சி ஒண்ணுமில்லாமப் போயிரும்ன்னு அரசியல்ல பழம் தின்னு கொட்டை போட்ட கலைஞர் நினைக்கிறாரு பாரு... அதுதான் காலக் கொடுமை... இன்னைக்கு தேதியில... அம்மா வரக்கூடாதுன்னு எல்லாரும் நினைச்சாலும் அவனவன் முதல்வர் ஆசையில தனித்தனியா கொடி பிடிக்க, அந்தம்மா மறுபடியும் கோட்டையில கொடி ஏத்தப்போகுது  நீ வேணா பாரேன்...” என்றார் பஞ்சநாதன்.

“நீங்கல்லாம் அம்மா வந்திரும்ன்னு மனப்பால் குடிக்கிறீங்க... அதெல்லாம் நடக்காதுலே... இந்தத் தடவை மாற்று அரசுதான்... அதுல மாற்றமில்லை...”

“பார்க்கலாம்... செரி அதை விடு... ஆமா சின்னவன் வீட்டுக்குப் பொயிட்டு வந்தேயில்ல.... எப்படியிருக்கான்... பேத்தியா என்ன பண்ணுறா..?”

“நல்லாயிருக்காக... பேத்திக்குட்டிதான் விடமாட்டேன்னு நின்னா... நமக்கு அங்க போயி தங்க செரியா வருமா என்ன... ஆடு, மாடுகன்னு இதுக கூட கிடந்துட்டு அங்க போயி அறைக்குள்ள கிடக்குறது எனக்கு சுத்தமாப் பிடிக்கலை... அதான் கருக்கல்ல எந்திரிச்சி ஓடியாந்துட்டேன்.... அப்புறம் எங்க வீட்டு ஓடுகாலி நாயை சின்னவன் பாத்திருக்கான்.”

“அட... எங்கயாம்...? பேசினானாமா...?” பஞ்சநாதன் சந்தோஷமாய்க் கேட்டார்.

“அவன் என்னோட ரத்தம்... அவனெப்படி பேசுவான்...” பெருமையாய் மீசையைத் தடவினார் வேலாயுதம்.

“அப்ப மூத்தவன் யாரு ரத்தம்?” படக்கென கேட்டார் பஞ்சநாதன்.

 (அடுத்த சனிக்கிழமை தொடரும்...)

-‘பரிவை’ சே..குமார்.

19 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
தொடர்கிறேன்
தம +1

துரை செல்வராஜூ சொன்னது…

கம்புக்கு களை எடுத்ததோடு தம்பிக்கும் பொண்ணு பார்த்த மாதிரி..
கதையின் ஊடாக - திண்ணையில் அரசியல் கச்சேரி!..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உரையாடல்கள் சூப்பர்ப்...!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அவ்வப்போது தங்களது பதிவுகளைப் படிக்கிறேன். நடையும், புகைப்படத் தெரிவும் அருமையாக உள்ளதை அதிகம் ரசிக்கிறேன். நன்றி.

KILLERGEE Devakottai சொன்னது…

தொடர்கிறேன் நண்பரே பஞ்சநாதனின் பஞ்ச் ஸூப்பர்

Menaga Sathia சொன்னது…

அருமை,தொடர்கிறேன் சகோ..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அதானே மூத்தவன் யாரு ரத்தம்??!!! நல்ல கேள்வி...பதில் அறிய தொடர்கின்றோம்...

Kasthuri Rengan சொன்னது…

செமை படம்
மாருதி எங்க ஊர் தெரியுமோ
தம +

Kasthuri Rengan சொன்னது…

நல்ல நடை

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
ஹா...ஹா... என்ன பண்றது... அரசியலையும் இழுத்து வைப்போம்ன்னுதான்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மனோ அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மது சார்...
உங்க ஊரு... நீங்க சொல்லித்தான் தெரியும்...
சந்தோஷம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி

நிஷா சொன்னது…

இடையில் சந்திரகுமார்,விசயகாந்து,கலைஞரையெல்லாம் இழுத்து அரசியலுடன்அக்காலம் இக்காலம் என கதையை நகர்த்தி செல்லும் பாங்கு சூப்பர்ப்பா! படம் அழகு!