மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 4 நவம்பர், 2014

அழகோவியம்


நீலமும் பச்சையும்
நிறைந்து இருக்க...

சிகப்பும் வெள்ளையும்
சிதறிக் கிடக்க...

கருப்பும் மஞ்சளும்
கலந்தே இருக்க...

மற்ற கலர்களும்
எச்சமாய் கலந்திருக்க...

கிரையான்ஸ் ஜாலத்தில்
கிறுக்கிய ஓவியம்...

அவளைப் போலவே
அழகாய் இருக்க...

அழகுடாவென தலைகோதி
அன்பு முத்தமிட...

'நல்லாக்காப்பா' என
மழலையில் கேட்டபடி...

இரட்டிப்பு முத்தம்
இட்ட கன்னத்தில்...

எச்சில் ஓவியம்
இன்னும் அழகாய்..!

-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மனசு படைத்த வரிகள் அழகு.

மோகன்ஜி சொன்னது…

எளிமையான வரிகளில் அருமையான சிந்தனை !

தினேஷ்குமார் சொன்னது…

மழலை படைத்த ஓவியம் மனதை நிறைத்த கவிதை அழகுடன் அழகுச்சேர அமிர்தமாய் அள்ளி பருகும் மழலையின் எச்சில் முத்தம் ஆகா ...

கோமதி அரசு சொன்னது…

எச்சில் ஓவியம்
இன்னும் அழகாய்..!//

அருமை.
அழகு கவிதை.

KILLERGEE Devakottai சொன்னது…


நல்ல கவி வரிகள் நண்பரே,,,

ஸ்ரீராம். சொன்னது…

வண்ண அன்பு ஓவியம்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான அழகான வரிகள்! சிறப்பான படைப்பு! நன்றி!

Yarlpavanan சொன்னது…

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
தம 3

Kavinaya சொன்னது…

ச்வீட்! :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குழந்தையின் முத்தம் - அந்த ஓவியத்திற்கு ஈடேது.

நல்ல கவிதை. பாராட்டுகள் குமார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான வரிகள்! 7 ஆம் தேதிதான் பயணம்...இதை எப்படி தவற விட்டோம்....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்லாக்கப்பா ....ஆஹா ரசித்தோம்!