மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 25 நவம்பர், 2014

வேண்டுமடி மழை எனக்கு


மழை-
விவசாயிக்கு பருவ காலத்தில்
சந்தோஷத்தையும்...
அறுவடை காலத்தில்
வருத்தத்தையும் கொடுக்கும்...

மழை-
குடை விற்பவனுக்கு
சந்தோஷத்தையும்...
உப்பு விற்பவனுக்கு
வருத்தத்தையும் கொடுக்கும்...

மழை-
பள்ளிக் குழந்தைக்கு
சந்தோசத்தையும்
பெற்றவளுக்கு
வருத்தத்தையும் கொடுக்கும்...

மழை-
எருமைக்கு
சந்தோஷத்தையும்
பசுவுக்கு
வருத்தத்தையும் கொடுக்கும்...

சிலருக்கு சந்தோஷத்தையும்
சிலருக்கு வருத்தத்தையும்
கொடுக்கும் மழை...

அது
சாரலோ....
தூறலோ...
பெருமழையோ
எதுவாகினும்

ஒரு மழை நாளில்
மலர்ந்த நம் காதல்
நினைவுளை
நீர்க்குமிழிகளாய்
நீந்த விடுவதால்...

எப்போதும் வேண்டுமடி
மழை எனக்கு..!
-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…


நல்ல வைரவரிகளை செதுக்கிய கவி
அருமை நண்பரே....

KILLERGEE Devakottai சொன்னது…


த,ம, 1

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விசும்பின் துளி
அமிர்தத்துளி அல்லவா?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்றுமே வேண்டும்...!

மகிழ்நிறை சொன்னது…

இந்த அழகிய கவிதைகாகவாவது மழை வரட்டும்:)

துரை செல்வராஜூ சொன்னது…

உங்களுக்கு மட்டுமா மழை வேண்டும்!..
- எங்களுக்கும் தான்!..

கோமதி அரசு சொன்னது…

மழை கவிதை அருமை.
இது முன்பு எழுதிய கவிதையா?
அல்லது புதிதாக எழுதிய கவிதையா குமார்?

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

Geetha சொன்னது…

உங்கள் வேண்டுகோள் நிறைவேறட்டும்.

ஸ்ரீராம். சொன்னது…

மழை
சாலைகள் கந்தலாய் ஆனாலும் சென்னைக்காரர்களுக்கு எப்போதுமே தேவையான ஒன்றுதான்.

:)))

Unknown சொன்னது…

நீர்க்குமிழிகளாய் நினைவுகளை நீந்த விடும்போதே இப்படின்னா .காதலியை கட்டியிருந்தா புயல் வெள்ளமே வந்தாளும் வரவேற்பீங்க போலிருக்கே :)
த ம 5

தினேஷ்குமார் சொன்னது…

மழை மழைக்காதல் நனையாது குடையோது போனது பிழை ....



சும்மா எழுதி பார்த்தேன் அண்ணே ... நல்லாருக்கு

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வெளியே செல்லும் போது மழை வேண்டாம். வீடு திரும்பும்போது மழை வந்தால் நிச்சயம் நன்றாக இருக்கும்!

நல்ல கவிதை.... பாராட்டுகள் குமார்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மழை பொழியட்டும்
அருமை நண்பரே
நன்றி
தம +1

Kasthuri Rengan சொன்னது…

உங்கள் மழை எனக்கு மகிழ்வு ...
தொடரட்டும் கவிப்பணி

Kasthuri Rengan சொன்னது…

வோட்டு எட்டு...
ஓக்கேயா..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மழை! இயற்கையின் வரப்பிரசாதம். அது யாருக்கு வேண்டுமோ வேண்டாமோ, மனிதர் வாழும் வறண்ட பூமிக்கு, வானம் பார்த்து வாழும் பூமிக்கு வேண்டும் மழை!!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல கவிதை வரிகள் நண்பரே!

yathavan64@gmail.com சொன்னது…

அன்பு தமிழ் உறவே!
வணக்கம்!

இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"மழை" யில்

சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!

வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

Unknown சொன்னது…

வணக்கம்சகோ,
அருமை,எப்போதும் வேண்டும் மழை
ஆழ்குழாய்க்கிணறுகளில்
நீர் வற்றிப்போகிறது.