மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 7 மார்ச், 2013

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!


இன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. இதனால் நிறைய பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. ஆகவே பலர் ஆரோக்கியமான பழக்கங்கள் என்று அதனை கண்ட நேரங்களில் செய்கின்றனர். ஆனால் அவ்வாறு கண்ட நேரத்தில் செய்தால், எந்த ஒரு பலனும் இல்லை. மேலும் ஆரோக்கியமான பழக்கம் என்பது எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வது தான். அதைவிட்டு, மற்ற நேரங்களில் செய்தால், அந்த ஆரோக்கியமான செயல்கள் கூட, ஆரோக்கியமற்றது தான். உதாரணமாக, தூங்கினால் விரைவில் எழுவது நல்ல பழக்கம் தான். ஆனால் அதிகாலையில் எழுவது தான், காலையில் செய்யும் பழக்கங்களில் ஆரோக்கியமானது. இது போன்று சாப்பிடுவது, குளிப்பது என்று ஒருசில உள்ளன. அத்தகைய செயல்களை சரியாக காலை வேளையில் செய்து வந்தால், வாழ்க்கையே மிகவும் ஆரோக்கியமாகவும், சூப்பராகவும் செல்லும். சரி, இப்போது காலையில் செய்ய வேண்டிய ஆரோக்கியமான செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்களேன்...

அன்றைய தினமானது நன்கு ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்க வேண்டுமெனில், அதற்கு முதலில் காலையில் சீக்கிரம் எழ வேண்டும். இதனால் உடல் நன்கு சுறுசுறுப்புடன் இருப்பதோடு, புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

குழந்தைகளைத் தவிர, மற்ற அனைவருக்கும் 6 முதல் 8 மணிநேர தூக்கம் மட்டும் போதுமானது. ஆனால் அதை விட்டு, நீண்ட நேரம் தூங்கிக் கொண்டு, அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடாது. ஏனெனில் ஆரோக்கியமான பழக்கங்களில் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்து, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதும் ஒன்று.

உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்ள தினமும் யோகா செய்ய வேண்டும். இதனால் உடல் எடை குறைவதோடு, மனமானது ரிலாஸ் அடைந்து, உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கும்.

உடலில் உள்ள கழிவுகள் காலையிலேயே வெளியேறாவிட்டால், பின் அந்த நாளானது அசௌகரியமானதாக இருக்கும். எனவே உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதுவும் காலையில் செய்யும் ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்று.

காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதிலும் நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் போன்றவற்றை செய்ய வேண்டும். இல்லையெனில் ட்ரெட்மில் எனப்படும் ஜாக்கிங் செய்யும் இயந்திரத்தில் சிறிது நேரம் பயிற்சி செய்ய வேண்டும்.

எப்போதும் காலையில் எழுந்ததும் குளித்துவிட வேண்டும். இதனால் உடலில் உள்ள சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். அதைவிட்டு, தாமதமாக குளித்தால், உடலில் உள்ள அழுக்குகள் நீங்குமே தவிர, புத்துணர்ச்சி கிடைக்காது.

காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ போன்றவற்றை குடிப்பதற்கு பதிலாக, பழத்தை வைத்து ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு நல்லது. அதைவிட்டு காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் பொருளானது மூளையை தூண்டி, உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு நாளைக்கு காலை உணவு தான் மிகவும் முக்கியம். ஏனெனில் நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதால், காலையில் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டாலும் எந்த ஒரு தவறும் இல்லை. மேலும் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆகவே காலையில் ஓட்ஸ், சாண்ட்விச், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை வயிறு நிறைய சாப்பிடலாம். இதுவும் ஒரு காலையில் செய்யக்கூடிய ஆரோக்கியமான பழக்கம் தான்.

நன்றி :  மஹா
தட்ஸ் தமிழ் இணையம்
-'பரிவை' சே. குமார்

11 எண்ணங்கள்:

Philosophy Prabhakaran சொன்னது…

நல்ல பகிர்வு.... நன்றி தல...

Philosophy Prabhakaran சொன்னது…

நல்ல பகிர்வு... நன்றி தல...

துளசி கோபால் சொன்னது…

//பழத்தை வைத்து ஜூஸ் போட்டு குளித்தால், உடலுக்கு நல்லது. //

நாங்க அவ்வளோ பணக்காரங்க இல்லீங்களே :(


ச்சும்மா:-))))

தட்டச்சுப்பிழையை மாத்துங்க.

அப்புறம் இன்னொன்னும் இருக்கு காலைக் கடமைகளில்.

இமெயில் இருக்கான்னு பார்க்கணும். காலையில் எழுந்ததும் (கணினியில்) படிப்பு!!!!


ஹேவ் அ குட் டே!!!

கவியாழி சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல்.

vanathy சொன்னது…

Super post.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பழக்கம் வழக்கமாகட்டும்...

பால கணேஷ் சொன்னது…

காலையில் தவறாம நடக்கிற பழக்கத்தை வெச்சிருக்கேன் குமார். ஆனா ஜூஸ் குடிக்கிற சமாச்சாரம்... கொஞ்சம் கஷ்டம்தான்! நான் சொல்ல நினைச்ச இன்னொண்ணை துளசி டீச்சர் சொல்லிட்டாங்க காலையில தான் நான் நெட்ல உலாவுறதே...! ஸோ, அதுவும் அன்றாட பழக்கங்கள்ல சேர்ந்துடுச்சு.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

good one.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

பயனுள்ள தகவல்கள்,குமார். நன்றி பகிர்வுக்கு.

கோமதி அரசு சொன்னது…

பயனுள்ள பகிர்வு.
நன்றி.

abuthairhaja சொன்னது…

தகவல்கள் மிகவும் அருமை நன்றி நண்பரே...