மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 18 ஆகஸ்ட், 2010

மகனுக்கு...



மூலக்கடை முனியசாமி
'மூதேவி' என்கிறார்...!

பட்டறை பழனிசாமி
'முண்டச்சி' என்கிறார்..!

சலூன் சாம்பசிவம்
'சனியனே' என்கிறார்..!

பால்க்கடை பரந்தாமன்
'எருமை' என்கிறார்..!

காபிக்கடை கந்தசாமி
'பரதேசி' என்கிறார்..!

நகைக்கடை சேட்டு
'நாயே' என்கிறார்..!

பூக்கடை புகழேந்தி
மட்டும் என்னை
'தாயி' என்கிறார்..!

அவருக்கும் உன்னைப்போல
ஒரு மகன் இருப்பான் போல..!

-'பரிவை' சே.குமார்.

வலைச்சரத்தில் எனது மூன்றாம் நாள் பகிர்வான கவி(தை) ஊர்வலம் படிக்க இங்கே சொடுக்கவும்.

*போட்டோ தந்த கூகுள் தேடுபொறிக்கு நன்றி

19 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

nice kavithai!!

vasu balaji சொன்னது…

மகனா? மகளா?

நிலாமதி சொன்னது…

கவிதை சிந்திகக் வைக்கிறது ........நல்லாயிருக்கு ..

Chitra சொன்னது…

ம்ம்ம்ம்...... :-)

vanathy சொன்னது…

nice!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானம்பாடிகள் சார்....
மகன் மருமகளின் பேச்சைக் கேட்டுத்தான் அம்மாவை விரட்டுகிறான். எனவே மகள் மருமகளாகும்போதுதான் பிரச்சினை.

அதனால் இங்க மகன் தான் என்பது என் எண்ணம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிலாமதி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சித்ரா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கண்ணகி சொன்னது…

கனக்க வைக்கிறது...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்லாயிருக்கு ..

க.பாலாசி சொன்னது…

நல்ல கவிதைங்க குமார்... அங்கொண்ணு, இங்கொண்ணுமா இந்த நிலைமை தொடர்ந்துகிட்டுதானேயிருக்கு...

VELU.G சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்குங்க குமார்

r.v.saravanan சொன்னது…

very nice kumar

அன்பரசன் சொன்னது…

சூப்பர் அண்ணே

கமலேஷ் சொன்னது…

அட்டகாசம் நண்பரே..பின்னிடீங்க போங்க...

அப்பாதுரை சொன்னது…

துணிச்சலான எழுத்து.. சுவாரசியம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கண்ணகி மேடம்...

வாங்க வெறும்பய அண்ணா...

உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க க.பாலாஜி...
ஆம்... இன்னும் இது தொடர்கதைதான்.
வருகைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வேலு...

வாங்க சரவணன்...

வாங்க அன்பரசன்...

வாங்க கமலேஷ்...

வாங்க அப்பாதுரை...

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வேலு...

வாங்க சரவணன்...

வாங்க அன்பரசன்...

வாங்க கமலேஷ்...

வாங்க அப்பாதுரை...

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.