மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 31 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : கலாய்த்த பிக்பாஸ்

Image result for biggboss 30th august 2019 images
காலையில் திருப்பள்ளி எழுச்சியாய் 'லாலா கடை சாந்தி...' பாட்டு எப்பவும் போல் லாஸ்லியா, முகனுடன் சாண்டியும் தர்ஷனும் ஆடினார்கள். சேரனும் ஷெரினும் கக்கூஸில் ஆடினார்கள். ஆட்டம் முடிந்தது அடுத்து என்னன்னு யோசிக்கவெல்லாம் வேண்டாம்... பிக்பாஸ் காதல் வளர்த்தேன் கவின் பின்னால போயிடுவாருதானே...

ஆமா... லாஸ்லியாவும் கவினும் அந்த சிகப்புக் கேட்டும்... கவின் வெளியில ஒருத்திய அத்துவிட்டுட்டு வந்துட்டேன்னு சொல்லிட்டு லாஸ்லியா அதன் காரணமாக தன்னைவிட்டுப் போயிடக் கூடாதுங்கிற முனைப்புல இருக்கிறார். நாம் செய்யும்... செய்த தவறுகளால் இந்த வாரம் வெளியில போயிருவோமோங்கிற பயமும் இருக்கு... அப்படிப் பொயிட்டா லாஸ்லியா மனசை உள்ள இருக்கவங்க மாத்திருவாங்களேங்கிற நினைப்பும் இருக்கு... எப்படியும் உன்னைத் தான்டா லவ்வுறேன்னு சொல்ல வைக்க படாதபாடு படுகிறார்.

சோகமாய் இருப்பது போலவும் நீங்க விளையாடுங்க... நாந்தான் எல்லாம் சொல்லிட்டனே... நீங்க உங்க முடிவைச் சொல்லுங்க... அப்படி இப்படின்னு நடிகர் திலகமாய் மாறிக்கிட்டு இருக்கிறார். லாஸ்லியா எந்த ஒரு விஷயத்தையும் மனசுக்குள் ஆராய்ந்தே முடிவைச் சொல்லும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறார். கவின் அத்துவிட்ட காதலை ஆயிரம் சிவாஜியாய் மாறிச் சொன்ன பின் லாஸ்லியா ரொம்ப யோசிக்க ஆரம்பித்து விட்டார். கவினை விட்டு விலகவும் முடியாமல் நான் உன்னைக் கட்டிக்கிறேன்னு சொல்லவும் முடியாமல் தவிக்கிறார்.

கவின் தன்னை ஒதுக்குவது போல் நடிப்பதை அவர் உண்மை என்று நம்பி அழ, கவின் கண்ணைத் துடைத்து விட்டு செமையா ஒரு நடிப்பைப் போட்டிருக்கிறார். கவினைப் பொறுத்தவரை லாஸ்லியாவை விட்டு விடக்கூடாது என்பதில் முனைப்புடன் இருக்கிறார். லாஸ்லியாவுக்கு மனம் கடிகாரப் பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருக்கிறது.

இவர்களின் காதல் வெர்சன் இப்போதெல்லாம் ரொம்பவே போரடிப்பதுடன் கடுப்பாகவும் இருக்கிறது. பிக்பாஸ் வேற காட்சிக்குப் போங்க பிக்பாஸ்ன்னு கத்தணும் போல இருக்கு. இவர்கள் வெயிலில் அமர்ந்து காதல் வளர்ப்பதை சாண்டி, தர்ஷன் எல்லாம் கேலியாப் பேசுகிறார்கள். 

வனிதாவை காலைக்கடனாய் ஜூம்பா சொல்லிக் கொடுன்னு பிக்பாஸ் சொன்னாரு. என்னைக்குச் சொன்னதைக் கேட்டிருக்கிறோம் இன்னைக்குக் கேட்க... நீ என்னய்யா ஜூம்பா சொல்லிக் கொடுக்கச் சொல்றது நான் வம்பா சொல்லிக் கொடுக்கிறேன் என வம்பா நின்னு முகனை வைத்து ஏதோ சொல்லிக் கொடுத்தார். ரொம்ப நேரமா வம்பாவை வம்பாச் சொல்லிக் கொடுத்திருப்பார் போல கவின் போதுங்க்கா என்றார். சேரனெல்லாம் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். வனிதாக்கான்னா சும்மாவா..?

தர்ஷனிடம் லாஸ்லியா கவின் வெயிலில் காதல் வளர்ப்பதைப் பற்றி அவர்களுக்குள் எதும் பிரச்சினையாடா என சேரன் கேட்க, அவங்க சந்தோஷமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் எங்கிட்டயே கேக்குறீங்கண்ணா... நானும் உங்களை மாதிரித்தான் அண்ணா... இதை அவங்ககிட்ட கேளுங்கன்னு சிரிச்சான். சேரனுக்கு இது தேவையில்லாத வேலை... நீ ஆணியே புடுங்க வேண்டான்னு கவினும் லாஸ்லியாவும் ஒதுங்கிப் போகும் போது புடுங்கியே ஆவேன்னு எதுக்கு நிக்கணுங்கிறேன்.

டாஸ்க் ஒன்று... வனிதா வர நேரமானதால் லாஸ்லியா அதை வாசிக்காது நானே சிறந்தவள்... பிக்பாஸ் என்னை எதுவும் கேட்கமாட்டார்... கவின் மைக்கை ஒழுங்கா வை... அது இதுன்னு அளந்து விட்டுக்கிட்டு என்னை ஒரு தரம் கூட பிக்பாஸ் மைக்கைச் சரி பண்ணுன்னு சொல்லலைன்னு சொன்னதும் லாஸ்லியா உங்க மைக்கை சரியாக வையுங்கள் என்று பிக்பாஸ் சொல்ல, எல்லாரும் ஒரே சிரிப்பு. பிக்பாஸ் முடிவு பண்ணிட்டாரு போல இன்னைக்கு லாஸ்லியாதான் நம்ம இலக்குன்னு... அடிக்கடி மைக்கை மாட்டு... மைக்கைச் சரி பண்ணுன்னு சொல்லிக்கிட்டே இருந்தார்.

தர்ஷன் சேரனுடன் ஜாலி விவாதத்தில் இருந்த லாஸ்லியா தர்ஷனை அவன் இவன் என்று சொல்லிவிட்டு கவின் பற்றிய பேச்சு வந்த போது அவர் இவர் என்றார். அதென்ன நான் அவன் இவன் கவின் மட்டும் அவர் என தர்ஷன் கொக்கி போட, கவினையும் அவன் இவன்ன்னு சொல்லுவேனே எனச் சொல்லி அழைக்க, கவின் வந்து தனியே இருக்கும் போது இதைவிட கேவலமாக கூப்பிடுறான்னு சோகமாச் சொல்லிட்டுப் போயிட்டார்.

அப்புறமும் லாஸ்லியாவைத்தான் தர்ஷன் முகன் சாண்டி சேர்ந்து ஓட்டினார்கள்... மேக்கப் போடுவதையும் சாப்பிடுவதையும் கேலி பண்ணினார்கள். சிரிக்காதீங்க என கோபமாய்ச் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தார். முகன் பாட்டுப்பாடி கேலி செய்தார். தர்ஷன் ஷெரின் பின்னால் சுத்த ஆரம்பித்திருக்கிறார். பாட்டுப்பாடி காதல் வளர்க்கிறார். வனிதாவுக்கு இவர்களின் செயல் எரிச்சலைக் கொடுப்பது அவர் பார்வையில் தெரிந்தது. ஷெரின் சாப்பாடெல்லாம் ஊட்டி விட்டார். தர்ஷனுக்கு ஷெரினை அனுப்பிடுவாங்களோன்னு மனசுக்குள் பயம்.

கக்கூஸ்ல ஷெரின் சாண்டிக்கு முடி வெட்டிக் கொண்டிருக்க, அங்கு வந்த தர்ஷன் ஷெரினுடன் காதல் சேட்டையை ஆரம்பிக்க, அடேய் இது எந்தலைடா... என்னோட முடிடா... உங்க பிரியாணிக்கு நானாடா தாளிச்சான்னு கவின் பாவமாய் உட்கார்ந்திருந்தார்.

அடுத்து தலைவருக்கான போட்டியில் இந்தப் போட்டியில் இப்போது இருப்பவர்களில் யார் பிரபலம் என்பதாய் வரிசைப் படுத்தணும்  மற்றவர்கள் சொன்ன வரிசையை ஞாபகத்தில் வைத்து பிக்பாஸிடம் சொல்ல வேண்டும், யார் சரியாகவும் விரைவாகவும் சொல்றாங்களோ அவங்களே தலைவர்... வனிதா, சேரன், முகன் மூவருமே முதலாவதாய் தங்களைச் சொல்லிக் கொண்டார்கள். சேரன் இரண்டாம் இடத்தில் இருந்தார். மற்றவர்கள் எல்லாம் மாறி மாறி இடம் பிடித்தார்கள். வரிசையைச் சொல்லும் போது முகனிடம் சேரனின் வரிசை என்ன என்று கேட்டபோது பாட்டாய் மனப்பாடம் பண்ணியிருந்ததை மாற்றி வனிதா வரிசையைச் சொல்லிவிட்டார். சேரன் வரிசைப்படுத்தியதில் முன்பின் ஆக்கிவிட்டார். வனிதா சும்மா சரச்சரன்னு சொல்லி தலைவி ஆயிருச்சு... சும்மாவே ஆடும்... பிக்பாஸ் சலங்கை வேற கட்டிவிட்டுட்டார்... இனிமேத்தான் அக்காவின் ஆட்டத்தைப் பார்க்கணும்.

இந்த முடிவுக்குப் பின் சாண்டி குருநாதா... எங்குருநாதா இப்படிப் பண்ணிட்டே என வனிதாவை தலைவராக்கி அடுத்த வார நாமினேசனிலும் இல்லைன்னு சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார். பிக்பாஸ்க்கு இப்போதிருக்கும் ஒரேஆயுதம் வனிதாக்காதான்... அவரையும் அனுப்பிட்டு என்ன செய்ய என்பதை யோசித்தே இந்த டாஸ்க் வச்சிருக்கார். அட தலைவரைத் தேர்ந்தெடுக்கும் டாஸ்க் கூட ஒரு விறுவிறுப்பா... சுறுசுறுப்பா இல்லாம... வெண்டக்காய் சாம்பார் மாதிரி வளவளன்னு... ஏன் பிக்பாஸ் ஏன்..?

அடுத்து ப்ரூட்டிக்கான டாஸ்க்... கயிறில் கட்டி இருக்கும் புரூட்டியை கயிறை இரு கைகளாலும் இழுத்து பாட்டிலைப் பிடிக்காமல் வாயில் வைத்துக் கவ்விக் குடிக்க வேண்டும்... கவின், சேரன், முகன் மற்றும் வனிதா ஒரு அணி இவர்களில் முகன் குடித்துவிட்டார்... முதலில் பாட்டிலைக் கவ்விய சேரனால் தம் பிடிக்க முடியாமல் பாதியில் விட்டுவிட்டு மீண்டும் பிடித்துக் குடித்தார். அவர் கையால் பாட்டில் இருந்த அட்டையைப் பிடித்தது போல் இருந்தது... கள்ள ஆட்டம் ஆடினார். கவினுக்கு லாஸ்லியா, சாண்டியெல்லாம் கத்தி இறுதியில் பிடித்துக் குடித்தார். வனிதாவால் பிடிக்கவே முடியலை... இதெல்லாம் என்னடா டாஸ்க் என எப்பவும் போல் நீ என்ன சொல்றது நான் என்ன செய்யிறது பாணியில் பாட்டிலை ஆட்டி கீழே ஊற்றி விளையாண்டார்.

அடுத்த அணியில் ஷெரின் கலக்கலாய் குடித்து முடிக்க, தர்ஷனும் முடித்தார்... சாண்டி போராடி வெற்றி பெற்றார். வனிதாவைப் போல லாஸ்லியாவும் போராடிக் கொண்டிருந்தார். கவின் அப்படித்தான்... இப்படித்தான்னு கத்திக்கிட்டு இருந்தார். சேரன் போட்டின்னு வந்துட்டா சொல்லிக் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லியிருப்பார் போல கவின் சின்னதாய்  ஒரு கடி கடித்தார். ஷெரின் அணிதான் வெற்றி பெற்றது.

அப்புறம் எங்களுக்குச் சிக்கன் வேணும்ன்னு போராட்டம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க... கத்து கத்துன்னு கத்துனானுங்க... சேரனெல்லாம் கோஷம் போட்டார். கவின் மட்டுமே பேசாமல் சிரித்தபடி படுத்திருந்தார். நீண்ட போராட்டத்துக்குப் பின் பிக்பாஸ் சிக்கனை ஸ்டோர் ரூமில் வைத்துவிட்டு கதவைத் திறக்காது 'சரக்கு வச்சிருக்கேன்... இறக்கி வச்சிருக்கேன்...' பாட்டைப் போட்டு கொஞ்ச நேரம் விளையாண்டு கதவைத் திறந்துவிட்டார். சிக்கனை எடுத்துக் கொண்டு ஓடி ஆளாளுக்கு அள்ளிக் கொள்ள, ஷெரினுக்கு ஒரு பீஸ் மட்டுமே மிச்சம் போல, பரவாயில்லை எனக்கு இது போதும் என்றார்.

நல்லாத்தான் திங்கிறானுங்க... தினமும் மதியமெல்லாம் இவனுக சமைத்துச் சாப்பிடுவது போலெல்லாம் இல்லை... ஹோட்டலில் இருந்துதான் வரும் போல அப்படியிருந்து கேஎப்சி சிக்கனை காணாததைக் கண்டது போல் தின்றார்கள். சிக்கன் மட்டும் பிக்பாஸ் கொடுக்கலைன்னா ஷெரின், லாஸ்லியாவையெல்லாம் லெக் பீஸாகி கடிச்சித் தின்னிருப்பானுங்க போல. பிக்பாஸ் செமையான மகிழ்ச்சியில இருந்தாரு போல... கொஞ்சம் ஆட்டம் காட்டி விளையாண்டு சந்தோஷப்பட்டுக்கிட்டார். பின்னே போராட்டம் மட்டுமே இருபது நிமிட எபிசோடை சரிபண்ணிடுச்சுல்ல.

வனிதாவும் சேரனும் கவின் லாஸ்லியா பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கவின் இப்போது விளையாட்டில் கவனம் செலுத்துவதில்லை என்பதை வனிதா சொல்ல, காதலிக்கிறவங்க பக்கத்துல இருந்து பேசிக்கிட்டே இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா அதை மட்டுமே செய்யக்கூடாதுல்ல... எதுக்கு வந்திருக்கோங்கிறது புரியணும் அது ரெண்டு பேருக்குமே புரியலை... அது போக இது மட்டும் வாழ்க்கையில்லை இதையும் தாண்டி வெளியில ஒரு வாழ்க்கை இருக்கு... அதை முதல்ல மனசுல வச்சிக்கணும்... லாஸ்லியாவுக்கு வெளியில சினிமா வாய்ப்பு இருக்கு... காதல்ல விழுந்தவங்களால இண்டஸ்டிரியில நீடிக்க முடியாது. அதுவும் போக வாய்ப்பு காத்திருக்குன்னு சொன்ன பின்னாடிதான் கவின் ரொம்ப அதிகமாக பேச ஆரம்பித்திருக்கிறான்... அவனைப் பொறுத்தவரை அதை ஏத்துக்க முடியலைன்னு தோணுது. ஒருவேளை வெளியில போயி கல்யாணம் பண்ணிக்கிட்டா அதை நடிக்க விடமாட்டான் என்றார் சேரன். அவரது பார்வை சரியோ என்று தோன்றியது.

வனிதாவும் அது சரியென்றே பேசினார்... மேலும் சேரன் ரெண்டு பேரும் நமக்கிட்ட எதுவும் பகிர்ந்து கொள்வதில்லை... நாம எதுக்கு தேவையில்லாம மூக்கை நுழைக்கணும்... அதனால நம்ம பாதையில் நாம போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் என்றார். இந்த முடிவு நல்லதுதான்... இதையே தொடர்தல் நலம்.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்க, கவினும் லாஸ்லியாவும் அந்த சிகப்புக் கதவும் தங்கள் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

//பின்னே போராட்டம் மட்டுமே இருபது நிமிட எபிசோடை சரிபண்ணிடுச்சுல்ல//

அதானே...?