மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

கனாக் கண்டேன்...


மதம் இல்லா உலகில்
மனிதம் வாழ்வதாக..!

சாதியில்லா உலகில்
சமத்துவம் வாழ்வதாக..!

வன்முறையில்லா உலகில்
அஹிம்சை வாழ்வதாக..!

தீவிரவாதம் இல்லா உலகில்
தியாகம் வாழ்வதாக..!

கனாக் கலைக்கப்பட்டது...

காலைப் பேப்பரில்
நேற்றைய வன்முறை
நிகழ்வுகள் போட்டோவுடன்
புன்னகைத்தது...!

-'பரிவை' சே.குமார்.

25 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

அதானே பார்த்தேன்.. இதெல்லாம் மனிதர்கள் இல்லாத ஊரில்தானே சாத்தியம்...

Madumitha சொன்னது…

உங்கள் கனவு பலிக்கட்டும் குமார்.

vasu balaji சொன்னது…

கனவுல கூட இப்படி வந்தா அது அசாத்தியம்தான்:)

Chitra சொன்னது…

கலக்கல் கனவுகள்....
கலங்க வைக்கும் நிஜங்கள்..... ம்ம்ம்ம்.....

சௌந்தர் சொன்னது…

வன்முறையில்லா உலகில்
அஹிம்சை வாழ்வதாக..!

அருமையான வரிகள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில்....
ஆமாம்.. இங்கு கனவுகள் கூட கலைக்கத்தான் படும். மனிதர்கள் இல்லாத ஊரா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மதுமிதா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் சார்...
உண்மைதான் சார். கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ரா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சௌந்தர்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அம்பிகா சொன்னது…

\\அதானே பார்த்தேன்.. இதெல்லாம் மனிதர்கள் இல்லாத ஊரில்தானே சாத்தியம்...\\
வழிமொழிகிறேன்.

r.v.saravanan சொன்னது…

கனவு மெய்பட வேண்டும் குமார் நல்லாருக்கு உங்கள் கனவுகள்

எம் அப்துல் காதர் சொன்னது…

அருமை!

Thenammai Lakshmanan சொன்னது…

என்ன செய்வது யதார்தம் அப்படித்தான் குமார்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

எங்களுக்கு கனவுகள்கூட
பயங்கரக் கனவுகளாய் வர,
உங்களுக்கோ சாந்தமான
கனவுகள்...
ம்...
கொடுத்து வைத்தவர்தான்
நீங்கள்!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்பிகா...
வழிமொழிதலுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
கனவு மெய்ப்பட்டால் நல்லது நண்பரே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அப்துல்காதர்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தேனம்மை அக்கா...
யதார்த்தம் என்பதே உண்மை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாமுதீன்...
உங்களுக்கு வரும் கனவுகள் அப்படிப்பட்டவையா?
சொல்லவே இல்லை.... ஹா....ஹா... ஹாஹாஹா...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹேமா சொன்னது…

கனவிலாவது நடக்க்குதே.
சந்தோஷம்.
அருமையான கவிதை குமார்.

vanathy சொன்னது…

உங்கள் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள்! நல்ல கவிதை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹேமா மேடம்...
கனவில் மட்டுமே கிடைக்கும் என்பதே உண்மை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

அருமையான கனவுங்க.. :-))