மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 25 ஜூலை, 2010

பயணம் எதுவரை..?


ஏதோ நினைவில் எங்கோ பயணம்...
போகுமிடம் மனதில் இல்லை...
திரும்பி வரும் எண்ணம்
இதுவரை எழவேயில்லை..!

இலக்கில்லா இந்தப் பயணம்
எதுவரை போகும்..?

வாழ்வின் எல்லை வரையிலா..?
வயதின் முதிர்ச்சி வரையிலா..?
தெரியாமலே பயணம்...

எப்படிப்பட்ட பாதை
என்பது தெரியாது..!

எங்கே போய் எங்கே முடியும்
என்பது தெரியாது...

இலக்கில்லா பயணத்தில்
எதையோ தேடி...

இதுவரை பயணித்தோரின்
வழித்தடத்தில் பயணம்...

நாளைய பயணத்தில்
எத்தனை வழித்துணை....
என்பதறியா பயணம்..!

நாளை பய(ண)த்தில் நான்...?

-'பரிவை' சே.குமார்

29 எண்ணங்கள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//
இலக்கில்லா பயணத்தில்
எதையோ தேடி...//

அந்த "எதையோ தேடி" இதுவரைக்கும் யாருக்கும் கிடைக்கவில்லை. அல்லது எதைத் தேடி அலைகிறோம் என்பதை அவர்கள் அறியவுமில்லை.

அருமை குமார்.

நல்ல சிந்தனை.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வாழ்க்கைப்பயணம் என்பது ஒரு இலக்கை நோக்கியே..>>> இலக்கு தவறுமானால் பாதையும் மாறும். இவை இரண்டும் ஒன்றொடொன்று ஒத்தவை நேர்மாறல்.

நல்ல கவிதை. அருமை..

Chitra சொன்னது…

வாழ்வின் எல்லை வரையிலா..?
வயதின் முதிர்ச்சி வரையிலா..?
தெரியாமலே பயணம்...

..... எங்கே செல்கிறோம் - எப்படி செல்கிறோம் - யாருடன் செல்கிறோம் - எப்பொழுது செல்கிறோம்...... ம்ம்ம்ம்ம்ம்.....
ஆனால் பயணம் நிச்சயம். செல்கிறோம்..... நல்ல சிந்தனை கவிதை. :-)

பத்மா சொன்னது…

அருமை குமார்.

நல்ல சிந்தனை.

vasu balaji சொன்னது…

/இலக்கில்லா பயணத்தில்
எதையோ தேடி...

இதுவரை பயணித்தோரின்
வழித்தடத்தில் பயணம்...//

அவர்கள்தான் சமூகம் என்பவர்கள். மாறிப் பயணித்தால்?:)))))

Unknown சொன்னது…

முதல் முறையாக இங்கு வருகிறேன்.......
//வாழ்வின் எல்லை வரையிலா..?
வயதின் முதிர்ச்சி வரையிலா..?
தெரியாமலே பயணம்...//அனைத்து வரிகளும் அழகான வரிகள்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்பர்...
ஆம் அக்பர் யாருக்கும் கிடைக்கவில்லை என்பதைவிட அறியவில்லை என்பதே உண்மை.

கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்டார்ஜன்...
கருத்துக்கு நன்றி.

உங்கள் கூற்று சரியே.

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Menaga Sathia சொன்னது…

நல்ல சிந்தனையுள்ள கவிதை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ரா...
பயணம் நிச்சயமானது என்பதே நிதர்சனமானது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பத்மா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் ஐயா...
ஆம் சமூகத்தின் பின்னேதான் நாம்... அதை விடுத்து மாறிப் பயணித்தால் இலக்கை அடைய முடியுமோ என்னவோ... ஆனால் யாரும் அந்தப் பாதையை விரும்புவதில்லையே ...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சிநேகிதி...
முதல் வருகைக்கு மிக்க நன்றி...
கருத்துக்கு இரண்டாவது நன்றி...

தொடர்ந்து வாங்க கருத்துக்களோடு..!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகாக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

ஹேமா சொன்னது…

குமார்...எம் வாழ்வின் திருப்பம்,முடிவு,எல்லை தெரிந்திருந்தால் துன்பம்,
கஸ்டம்ன்னு இருந்திருக்காது !

sakthi சொன்னது…

அருமை குமார்.

vanathy சொன்னது…

super! well written.

r.v.saravanan சொன்னது…

நாளைய பயணத்தில்
எத்தனை வழித்துணை....
என்பதறியா பயணம்..!

நாளை பய(ண)த்தில் நான்...?


நாங்களும் குமார்
நல்ல கருத்து
நேரமிருக்கும் போது என் தளத்திற்கு வருகை தாருங்கள்

Karthick Chidambaram சொன்னது…

//
இலக்கில்லா பயணத்தில்
எதையோ தேடி...//

super!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹேமா...
உங்கள் கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சக்தி...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்.

கருத்துக்கு மிக்க நன்றி.
கண்டிப்பாக உங்கள் தளம் வருகிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கார்த்திக்...

கருத்துக்கு நன்றி.

சௌந்தர் சொன்னது…

பயணம் பற்றி நல்ல கவிதை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சௌந்தர்...
கருத்துக்கு நன்றி.

விக்னேஷ்வரி சொன்னது…

இது தானே வாழ்க்கைப் பயணம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

Thanks vigneswari.