மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 5 அக்டோபர், 2019

பிக்பாஸ் : காதலே... காதலே...

காதலே... காதலே...
தனிப் பெருந்துணையே...
கூட வா... கூட வா...
போதும்... போதும்...

Image result for காதலே காதலே 96 பாடல் வரிகள்

ந்தப் பாடலை கவின் உள்ளே வந்ததும் லாஸ்லியாவின் கண்கள் பாடியது என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் 96 படம் வந்து ஓராண்டுகள் முடிந்திருந்தாலும் இந்தப் படம் கொடுத்த தாக்கம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது... போற்றினாலும் தூற்றினாலும் ஏதோ ஒரு விதத்தில் மனசுக்குள் உட்கார்ந்து இருக்கத்தான் செய்கிறது. ஒராண்டுகள் கடந்தும் மக்கள் மத்தியில் நின்ற படங்களில் சமீபமாக எதுவும் இல்லை 96த் தவிர... 

ஜானகி கணவனுக்குத் தெரியாமல் ராமுடன் சுற்றினாள் என்றோ... ஒரு வருடம் முடிந்து திவசம் வைக்கும் போதும் இதற்காக அழுகிறார்கள் என்றோ எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்... சாதாரணமாகக் கடந்து விடக் கூடிய படமே என்றாலும் மக்கள் மனதை விட்டுக் கடந்து செல்லாமல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இருக்கக் கூடிய வகையில் படமெடுத்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள்... அப்படியே விஜய் சேதுபதிக்கும் த்ரிஷாவுக்கும் ராம்-ஜானுவாக வாழ்ந்ததற்க்கு...

இந்த ராம்- ஜானு. ஜானுவின் மகளை வைத்து நான் எழுதிய மூன்று பதிவுகளையும் மறுபடியும் வாசிக்க நினைத்தால் கீழே இருக்கிறது இணைப்பு... தமிழ் ஒன் இண்டியா தளத்தில் ராமின் கடிதத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்... (எல்லாம் ஒரு விளம்பரம்தான்).




வாங்க பிக்பாஸ் வீட்டுக்குள் 103 நாள் நிகழ்வுகளுக்குப் போவோம்...

Image result for biggboss-3 day 103 images

இந்த வாரம் பூராவுமே வெளியில இருந்து ஆட்களை வாடகைக்குப் பிடிச்சாந்துதான் ஆட விடுறானுங்க... இன்னைக்கும் அப்படியே... வந்தவனுகளோட இருக்கவனுக எல்லாரும் செமையா ஒரு ஆட்டம் போட்டானுங்க... வனிதாக்கா நேற்று தூங்கியதால் இன்னைக்கு ஆடணும்ன்னு சொல்லிட்டானுங்க போல அதுவும் தைய்யத் தக்கான்னு குதிச்சிச்சு... எல்லாருமா ஆடிட்டுப் போய் அவனவன் வேலையைப் பார்க்கப் பொயிட்டானுங்க...

கவின் இல்லாததால் கக்கூஸ்க்கும் சிவப்புக் கேட்டுக்கும் வேலையில்லை... நூறு நாள் வேலைக்கு லீவு விட்டுட்ட மாதிரி, வெயில் காலத்து வயல்வெளி மாதிரி காஞ்சி போயிக் கிடந்துச்சு.

போட்டியாளர்கள் நால்வரும் வீடியோ போன் பேசலாம்... பஸ்ஸர் டூ பஸ்ஸர் மட்டுமே... செயல்முறை அரங்குல போயித் தனியாப் பேசலாம்ன்னு பிக்பாஸ் சொல்லி வச்சாரு... முதல்ல போனது ஷெரின், அம்மாக்கிட்ட பேசினாங்க... சேரன் சார் வாங்கி வந்த சேலைன்னு கட்டியிருந்த சேலையைக் காட்டினாங்க... நல்லாயிருந்தது... நாயைப் பற்றியே பேசிக்கிட்டு இருந்தாங்க... நேரம் முடிந்தது லவ் யூம்மான்னு சொன்னாங்க.

ஒரு இசை... ஆஹா அடுத்து ஒரு கூட்டத்தை அனுப்பப் போறானுங்க போலன்னு நினைக்கும் போதே, ஏய் ஏதோ ஒரு கூட்டத்தை அனுப்பிட்டான் பிக்பாஸ்... வாடின்னு வனிதாக்கா சொல்லிக்கிட்டு இருந்தாங்க... வீட்டுக்குப் போனவங்களை மறுபடியும் விடாமப் பிடிச்சாந்துட்டாரு பிக்பாஸ்... ஆமா மோகன், சாக்சி, மீரா, பாத்திமா பாபுன்னு மறு வரவு... இப்பவும் கட்டிக் கட்டிப் புடிச்சானுங்க... நேற்றுக் கொடுத்துட்டுப் போன முத்த ஈரமே காய்ந்திருக்காது... அது மேலயே முத்தம் கொடுத்தானுங்க.

சாப்பாடு வந்தது... வச்சிச் சாப்பிட்டானுங்க... இந்த ஒரு வாரமாக் கூட்டம் கூட்டமா ஆள் அனுப்பிக்கிட்டு இருக்காரு பிக்பாஸ்... ஒரு வேலை இல்லை... உணர்ச்சிகரமான படங்களையும் வீடியோவையும் வச்சி ஓட்டுறானுங்க... பிக்பாஸ் படுத்துக்கிச்சுன்னு நல்லாவே தெரியுது... இன்னும் ரெண்டு நாளுத்தான்னு முடிஞ்சளவு தள்ளிக்கிட்டே போறானுங்க கரகாட்டகாரன் காரு மாதிரி.

அடுத்து ஒரு இசை... பிரண்டப் போல யாரு மச்சான்னு போட்டானுங்க... அப்ப யாரு வருவான்னு தெரியாதா என்ன... பிக்பாஸ்க்கு காதல் எபிசோட் கொடுத்த கவினும் தர்ஷனும் வந்தாங்க.... கவினைச் சாண்டி தூக்க, தர்ஷனை முகன் தூக்க.... லாஸ்லியாவின் கண்கள் 'கண்ணாளனே... எனது கண்ணை நேற்றோடு காணவில்லை' என கவினையே தேடின... அந்த க் கண்ணுக்குள்ளதான் எத்தனை காதல்... கண்களால் காதலை பிக்பாஸ் வீடெங்கும் பரவ விட்டபடி நின்றார்.

நீங்க ரெண்டு பேரும் பேசுங்கன்னு எல்லாரும் காதல் ஜோடியைத் தனியே விட்டுட்டுப் போக,  காதல் வானிலே... காதல் வானிலேன்னு பறக்க ஆரம்பிச்சிட்டாங்க... ரொம்ப நல்லா விளையாடுறீங்க... இருந்த 16ல நாம ரெண்டு பேர் மட்டுமே உண்மையா இருந்திருக்கோம். மத்தவங்க எல்லாருமே பொய்... பித்தலாட்டம்... எல்லாம் செஞ்சவனுங்கன்னு கவின் அள்ளி விட்டாரு... நீ எதை வேணுமின்னாலும் சொல்லு நான் உன்னை மட்டும் பருகிக்கிறேன்னு சிரித்தபடியே கண்களால் கவினைப் பருகிக் கொண்டிருந்தார் லாஸ்லியா.

போன் பேச முகன் சென்றார்... அவருக்குப் பிடித்த அண்ணனுடன் பேசினார்... இந்தப்பய பொசுக்குப் பொசுக்குன்னு அழுதுடுறான்... பாசக்காரப் பய போல... மலேசிய, தமிழக மக்களுக்கு நன்றி சொன்னான்.... வெளியில வந்து அண்ணனுடன் பேசியதைச் சொன்னான்... பிக்பாஸ்க்கு நன்றி சொன்னான்... சேரனை கட்டி அணைத்தான்.

ஷெரினிடம் ஏன் அழுதுக்கிட்டு இருக்கே... நான் போனதுக்கு நீ காரணமில்லை... அதுக்கு காரணம் நானுமில்லை... லாஸ்லியாவுக்காக பிக்பாஸ் என்னைப் பலியாக்கினான். அதனாலதான் சேரன் அண்ணனிடம் வரலைன்னு சொன்னேன்... அப்புறம் வனிதா உன்னைய அழ வச்சதைப் பார்த்து ரெண்டு வாங்கிட்டுப் போகலாம்ன்னுதான் வந்தேன் அப்படின்னு சொல்லி ஷெரினுக்கு உற்சாகமூட்டினான்.

சாண்டி பேசப் போனார்... சாண்டியோட டிரேட் மார்க் என்னன்னு நமக்குத் தெரியாதா...? அதே... மகளைப் பார்த்ததும் விஸ்வாசம் அஜீத் மாதிரி 'ஏஞ்ச்ச்ச்சாமி'ன்னு அழ ஆரம்பிச்சாச்சு... அப்புறம் பொண்டாட்டிக்கிட்ட பேசும் போது முகத்தைத் தள்ளி வையி... பயமா இருக்குன்னு சொன்னதும் உங்களால நாங்க ரொம்பப் பெருமையா (proud) உணர்றோம்ப்பான்னு மனைவி சொன்னதும் என்னது பவுடரா... ஆமாமா முகத்துல அதிகமாத்தான் இருக்குன்னு சொன்னது ரசிக்க வைத்தது என்றாலும் இப்படி அழுது சீன் போடுவதைத் தவிர்த்தல் நலம்... இன்னும் ஒரு நாள் இவனுக தவிர்த்தா என்ன தவிர்க்காட்டி என்ன... சீசன்  4லை எல்லாரும் தவிர்த்திருவாங்கங்கிறது மட்டும் நிச்சயம்.

எல்லாரும் பேசிக்கிட்டு இருக்கும் போது கவின் லாஸ்லியாவைக் காணோம்... அட விடுங்கப்பா பிரிந்தவர் கூடினால்... அதே... பேசிட்டுப் போகட்டும். அவங்களைக் காட்டி நம்மளைப் படுத்தாமல் இருந்தாலே போதும்.

லாஸ்லியா அப்பாக்கிட்ட பேசினார்... மரியநேசன் நான் சொன்ன மாதிரி இரு... இப்ப இருக்க மாதிரி இரு... விளையாடிட்டு வா... அப்படின்னு பேச, அப்ப மத்தவங்களை விடுங்க... நான் வெளியில் வந்து எல்லாம் சொல்றேன்... என்னைப் பற்றித் தெரியும்ல்லன்னு சொல்ல, என்னைப் பற்றி உனக்கும் தெரியும்ன்னு சொன்னார். மரியநேசன் இன்னும் மனமின்றி இருக்கிறார்... மரியநேசனின் மகளோ எப்படியும் மனதை மாற்றுவேன் என இருக்கிறார். வெளியில் போனதும் அப்பனுக்கும் மகளுக்கும் நீயா நானா இருக்கும்... ஜெயிக்கப் போவது யாரு..? அப்படின்னு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், குறிப்பாக யூடியுப் சேனல்கள் விவாதங்கள் நடத்தலாம்... கூடவே கவினையும் இருத்தலாம்.

சரி உங்களுடைய அழுகாச்சி காவியத்தைப் பாருங்கன்னு சொல்லி அழற சீனையெல்லாம் அழகா எடுத்து ஒட்டி ஒரு வீடியோ போட்டார் பிக்பாஸ்... ஆளாளுக்கு அழுதானுங்க... கவின் லாஸ்லியா கையை விடவே இல்லை... ஆறுதலாய் இருக்காராமாம்... வீடியோ முடிஞ்சதும் ஆளாளுக்கு கட்டிப்புடிச்சி அழுதாங்க... ஆறுதல் சொல்லிக்கிட்டாங்க... அபிராமி அதிகமா உணர்ச்சி வசப்பட்டு அழுதாங்க... எல்லாரும் தேற்றினார்கள்.

தனித்தனியாப் பார்க்கிறவங்களுக்கு இந்த உணர்ச்சிகள் புரியாது... ஒண்ணா இப்படிப் பார்க்கும் போது அந்த வலி, உணர்ச்சி எல்லாம் புரியும்ன்னு வனிதாக்கா சொன்னாங்க... தனித்தனியாப் பார்த்து நொந்து போயிக் கிடக்குறது பத்தாதுன்னு உங்க ஓவர் சீனை எல்லாம் ஒண்ணாக் காமிச்சது பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கி நிறுத்தத்தான் என்றாலும் எங்களுக்கு ஐயா சாமி எத்தனை நாளைக்குத்தான் இப்படி அழுகாச்சிக் காவியம் வாசிப்பே... இந்த வாரம் முழுவதும் இதையே செஞ்சிக்கிட்டு இருக்கியேன்னுதான் தோணுச்சு.

தர்ஷனைக் கட்டிப் பிடித்த வனிதா சாரி... அப்படின்னு சொல்லி லவ்வி, கடவுள் உனக்கு அருள்புரிவாராகன்னு ஆசிர்வாதமெல்லாம் பண்ணுச்சு... எங்க ஷெரின் விஷயத்தைக் கையில் எடுத்துருவானோன்னு பயந்துக்கிட்டே இருந்திருக்கும் போல... ஒருவழியாச் சமாதானம் ஆயிருச்சு. இன்னொன்னு கவனிச்சுப் பார்த்தீங்கன்னா லாஸ்லியா-கவின் காதலுக்கு அக்கா இப்ப பச்சைக் கொடியை பலமாக் காட்ட ஆரம்பிச்சிருப்பது புரியும். லாஸ்லியாவை இழுத்துப் பக்கத்துல உக்கார வச்சிக்கிது... ஆதரவுக் கரம் வலுவா இருக்கும் போல.

எல்லாரையும் கிளம்புங்க... வீட்டுக்குப் பொயிட்டு குளிச்சிக் கிளிச்சிட்டு தூங்கி எந்திரிச்சி நாளைக்கு வந்துருங்க... ஆண்டவர் தரிசனமே.... உங்களுக்கு ஆனந்த தரிசனமேன்னு சொல்லி பிக்பாஸ் போகச் சொல்ல. சேரனிடம் அப்பாடான்னு சொல்லி சேரன் ஆசிர்வதிக்க, சார் ஏதோ ஒரு நினைப்புல சொல்லிட்டேன்... அதைப் புடிச்சிக்கிட்டீங்களான்னு சொல்ல, இப்ப மட்டுமேன்னு ஆசிர்வதித்தார். அதேபோல் லாஸ்லியாவிடம் தெரிந்தோ தெரியாமலோ எதாவது செய்திருந்தால், சொல்லியிருந்தால் மன்னிச்சிக்கம்மான்னும் சொன்னார் சேரன்.

மறுபடியும் கட்டிப்பிடி.. கண் கலங்கல் காட்சிகள்... நிறைய சிவாஜி படம் பார்த்த மாதிரி இருந்தது. லாஸ்லியா யார்க்கிட்ட போய் நின்னாலும் நம்ம வீட்டுல வளக்குற நாய் நம்ம பின்னால வாலாட்டிக்கிட்டு நிக்கிற மாதிரியே கவின் நின்னான். கவினுக்கிட்ட வெளியில எல்லாம் ஓகேயா... வந்த உடனே நேர கபாலீஸ்வரர் கோவில்ல போயி தாலி கட்டிக்கிட்டு இலங்கை போக எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா... அப்படின்னு எல்லாம் கேட்டாங்க லாஸ்லியா... நீ வெளிய வா... எல்லாம் பக்காவா இருக்குன்னு சொன்னான் கவின்.

ஒரு வழியா எல்லாரும் பொயிட்டாங்க... மறுபடியும் பிக்பாஸ் வீடு அமைதியாயிருச்சு... கக்கூஸ் கேமராக்கிட்ட லாஸ்லியா கதை அளந்துக்கிட்டு நின்னாங்க...

பிக்பாஸ் இன்னும் இரு தினங்கள் மட்டுமே...
-'பரிவை' சே.குமார்.

0 எண்ணங்கள்: