மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 24 செப்டம்பர், 2016

மனசின் பக்கம் : கிறுக்கலே சந்தோஷம்

னசின் பக்கத்தில் என்ன நினைக்கிறோமோ.... நம்மைச் சுற்றி என்ன நடந்ததோ... நடக்கிறதோ அது எல்லாவற்றையும் கிறுக்கலாம். அப்படிக் கிறுக்குவதால் சில சமயங்களில் ஏன் அப்படி எழுதினாய் என்ற கேள்விகளும் எழலாம்... எழுந்திருக்கின்றன... இருந்தாலும் மனசின் பக்கத்தில் நாம தொடர்ந்து கிறுக்குவோமுல்ல.

கிறுக்கல்

அவன் ; 'நீ என்ன நினைக்கிறியோ அதைச் செய்..'

இவன் : சரி.

அவன் : 'மனசுலபட்டதைப் பேசு...'

இவன் : சரி.

அவன் : 'அவன் என்ன நினைப்பானோ இவன் என்ன நினைப்பானோன்னு யோசிக்காதே...'

இவன் : சரி.

அவன்: 'யாருக்காகவும் எதுக்காகவும் செய்ய நினைத்ததை செய்யாமல் விடாதே...'

இவன் : சரி.

அவன் : 'எந்த விஷயத்துலயும் யார்க்கிட்டயும் யோசனை கேக்காதே...'

இவன் : சரி.

அவன்: 'இதுதான் பாதை... இதில்தான் பயணம் என்று நினைத்துவிட்டால் அதில் பயணப்படு... துணைக்கு ஆள் வேண்டுமென காத்திருக்காதே...'

இவன் : சரி.

அவன் : 'நீ இதைச் செய்யணுமின்னு நினைச்சியன்ன எவன் பேச்சையும் கேக்காதே...'

இவன் : 'ச...ரி'

அவன் : 'மற்றவன் ஆயிரத்தெட்டு அட்வைஸ் பண்ணுவான்... அதையெல்லாம் தூக்கிச் சுமக்காதே...'

இவன் : '.....'

அவன் : 'என்னடா பதில் சொல்லாம யோசிக்கிறே...?'

இவன்  : 'இம்புட்டு நேரம் நீ என்ன சொல்லிக்கிட்டு இருந்தே...?'

அவன் : 'உன்னை உன்னோட வழியில் போன்னு சொன்னேன்... நல்லதுதானே சொன்னேன்...'

இவன் ; 'அது எங்களுக்குத் தெரியாதோ...? என்ன 'டாஷ்'க்கு அறிவுரை சொல்ல வர்றே...'

அவன் ; '.....'

இவன் : 'பொத்திக்கிட்டு போ... என்னோட பாதையில எப்படி நடக்கணுமின்னு எனக்குத் தெரியும்... அட்வைஸ் பண்றேன்னு எவனுக்கிட்டயும் போயி நிக்காதே... வச்சி செஞ்சிருவானுங்க... உன்னோட பாதையில நீ முதல்ல சரியாப் போறியான்னு பாரு... முதல்ல நீங்க திருந்துங்கடா... அப்புறம் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணலாம்'

(உண்மையிலேயே இது கிறுக்கியதுதான்... உள் குத்து... வெளிக்குத்து எல்லாம் இதில் இல்லை)

அடி தூள்...1

ண்ணன் சந்தோஷிடமிருந்து 'ஸ்கை கிட்ஸ்' என்ற ஆங்கிலப் படத்தை மொபைலில் ஏற்றிக் கொண்டு வந்து பார்த்துவிட்டு அடுத்த நாள் அக்காவிடம் கொண்டு போய் 'ஏய் இந்தப் படத்தைப் பாரு... சூப்பரா இருக்கு...' என்றபடி மொபைலை நீட்டியிருக்கிறான்.

'நான் சரவணன் மீனாட்சிதான் பார்ப்பேன்... இதெல்லாம் பார்க்கமாட்டேன்..' என்று சொல்ல, 'உன்னைய எதுக்கு இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்றேன்னு நினைச்சே... அக்கா தம்பியை எப்படிப் பாத்துக்குதுன்னு பாத்துச் தெரிஞ்சிக்கத்தான்... நீ எப்பப்பாரு அடிச்சிக்கிட்டேத்தான் இருக்கே.... அதான் கொடுத்தேன்... பாரு' என்று நீட்டியிருக்கிறான்.

'அம்மா அவனுக்கு உள்ள கொழுப்பைப் பாருங்க... என்ன சொல்லி என்னைய படம் பாக்கச் சொல்றான்னு...' என்று அக்கா கத்த... 'இந்தா பாத்துத் திருந்து'ன்னு மொபைலைக் கொடுத்திருக்கிறான்.

# விஷால் ராக்ஸ்

அடி தூள்...2

'இந்தப் படிப்பை எவன் கண்டு பிடிச்சானோ... யார் போன் பண்ணுனாலும் படி... படியின்னு...'

'பரிட்சைக்கு படிக்கத்தானே வேணும்...? மார்க் எப்படி எடுக்குறது...' நான்.

'அவன் மட்டும் கெடச்சான்..... கொலை பண்ணிடுவேன்...'

'எவன்...?' - நான்.

'பரிட்சையை கண்டுபிடிச்சவன்...'

'அது சரி... இப்பவே இப்படியா.... வாழும்...' - நான்.

'என்னைய படி படியின்னு சொல்றீங்களே... உங்களுக்கு தமிழ், இங்கிலீஸ் தெரியாது.... அம்மாவுக்கு தமிழ், இங்கிலீஸ், ஹிந்தி தெரியாது... அப்புறம் என்னைய மட்டும் படி படியின்னு...'

'இது யாருடா சொன்னா... எங்களுக்குத் தெரியாதுன்னு...' - நான்.

'அதான் எழுதிக் கொடுத்துட்டீங்களே...?'

'எங்க..? எப்ப..?' - நான்.

"எங்க டைரியில..." 

'டைரியிலயா..?'

'ஆமா... அதான் நோ லாங்குவேஜ்ன்னு எழுதிக் கொடுத்திருக்கீங்களே...?'

'அடப்பாவி... நோ லாங்க்வேஜ் இல்லடா... KNOWN (தெரிந்த) லாங்க்வேஜ்டா...'

'சும்மா போங்கப்பா...'

# விஷால் III வகுப்பு

(குழந்தைகள் குறித்து எதுவும் வலையிலோ முகநூலிலோ எழுதுவதில்லை என்றாலும் இந்த இரண்டு நிகழ்வுகளும் எழுதத் தோன்றியதால் எழுதியாச்சு.)


சந்தோஷம்

பாக்யாவில் தொடர்ந்து எனது கருத்து 'மக்கள் மனசு' பகுதியில் வந்து கொண்டிருக்கிறது.  அகலுக்காக எழுதிய 'குழலியின் தேவன்' கட்டுரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதில் சந்தோஷமே... மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் என இரண்டு கட்டுரைகள் எழுதி ரொம்ப நாளைக்குப் பின்னர் எழுதிய வரலாறு சம்பந்தமான கட்டுரை... நண்பர்கள் நல்லாயிருந்தது என்று சொன்னதில் சந்தோஷமே.

மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

உள்குத்தோ... வெளிக்குத்தோ... குத்து நன்று.

ஸ்ரீராம். சொன்னது…

ரசித்தேன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தொடரட்டும் பதிவுகள்.

விஷால் ராக்ஸ்! :)

துரை செல்வராஜூ சொன்னது…

>>> நண்பர்கள் நல்லாயிருந்தது என்று சொன்னதில் சந்தோஷமே.. <<<

எங்களுக்கும் சந்தோஷமே!..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நிஜமாகவே விஷால் ராக்ஸ்! தொடருங்கள் விஷாலின் ராக்சை!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.