மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சினிமா : டார்விண்டே பரிணாமம் (மலையாளம்)

ன்னு நிண்டே மொய்தீன், அனார்கலி, அமர் அக்பர் அந்தோணி, பாவட என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த ப்ரிதிவிராஜ் நடித்த படம் இது. மேலே சொன்ன படங்கள் அளவுக்கு பேசப்படவில்லை என்றாலும் இதுவும் வெற்றிப்படம்தான்.


அம்மாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கர்ப்பிணியான மனைவி அமலா (சாந்தினி ஸ்ரீதரன்) உடன்  வீட்டை விட்டு வெளியேறி தன் நண்பன் ஊரில் அடைக்கலமாகும் நாயகன் அணில் ஆன்டோவுக்கு (ப்ரிதிவிராஜ்) எல்லாமே நண்பன் கொடுத்து உதவ, DTH வைப்பது மற்றும் பழுது பார்ப்பது தொடர்பான பணி செய்கிறான். கர்ப்பிணியான மனைவியின் கழுத்தில் கிடக்கும் செயினை ரவுடி அறுக்கும் போது ஏற்பட்ட தகராறில் மனைவி கீழே விழுந்து கர்ப்பம் கலைந்து விடுகிறது. அந்த சோகத்தின் பிடியில் இருப்பவன் அந்த ரவுடியை சந்திக்க நேர, அவனைப் போட்டுப் புரட்டி எடுத்து விடுகிறான். 

இந்த நிகழ்வால் அந்த பகுதியின் மிகப்பெரிய ரவுடியான அவனின் அண்ணன்  டார்வின் (செம்பொன் வினோத் ஜோஸ்) மற்றும் அவனுக்கு சலாம் அடிக்கும் போலீசாரால் தொந்தரவுக்கு உள்ளாகிறான். வீட்டிலிருந்த பொருட்கள் எல்லாம் களவு போக, கையிலிருந்த பைக்கும் களவு போகிறது. இதற்கெல்லாம் காரணம் அந்த பெரிய ரவுடிதான் என்பதை அறிந்து அவனுடன் மோத தயாராகிறான். ஐயப்பன் என்பவரின் உதவியுடன் அவனின் இரண்டாவது தம்பியைக் கடத்த, அது தோல்வியில் முடிந்தாலும் தம்பிக்காரனின் செல்போனில் இருக்கும் ஒரு போட்டோவை வைத்து வில்லன் சர்ச்சில் இருக்கும் தங்கப் புண்ணியாலன் (இயேசு) சிலையைத் திருடி, அதற்குப் பதிலாக வேறு சிலையை வைத்து விட்டு அதை ஒரு வெளிநாட்டுக்காரனுக்கு கோடிக்கணக்கில் விற்க இருப்பதை அறிகிறான். அதை வைத்தே  தன்னோட வீட்டிலிருந்து எடுத்த பொருட்கள் அனைத்தையும் அவன் மூலமாக திருப்பப் பெற போடும் திட்டமே படத்தின் கதை. ஒரு பொருள் இல்லாமல் எல்லாப் பொருளையும் பெற்றானா...? புண்ணியாலன் சிலையை காப்பாற்றினானா..? பொருட்களை கொடுத்த வில்லன் இவனைப் பழி வாங்கினானா...? அல்லது இவன் வில்லனைப் பழி வாங்கினானா என்பதே மீதிக்கதை...


இதில் வில்லனை நாயகனாகவும் நாயகனை வில்லனாகவும் சித்தரித்து இருக்கிறார்கள். படம் முடியும் போது நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.  ப்ரிதிவிராஜ் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் மனைவியாக வரும் சாந்தினியும் சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன் செம்பொன்னும் அவரின் அடியாட்களும், ஐயப்பனும் அவரது குரூப்பும் சினிமா நாயகனாகத் துடிக்கும் வில்லனின் இரண்டாவது தம்பியும் கலக்கியிருக்காங்க.

பொருட்களை தேடி எடுக்கும் போது முதலிரவில் இருப்பவனிடம் இருந்து கட்டிலை வாங்கப் போவது...பிரிட்ஜை கடலில் தேடுவது போன்ற காட்சிகள் கலக்கல் காமெடி. 

கொஞ்சம் ஜாலியான வித்தியாசமான படம். ப்ரிதிவிராஜின் மற்ற படங்களுக்கு இணையானது இல்லைதான் என்றாலும் ஜாலியாக பார்க்கலாம். அதுவும் வில்லனுடன் பொருட்களைத் தேடிச் செல்லும் காட்சியில் ஆரம்பிக்கும் சிரிப்பு கடைசி வரை தொடர்கிறது.


-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

காணொளி கண்டேன் நண்பரே.....

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா
மலையாளப் படங்களாகப் பார்த்து மகிழ்கின்றீர்கள் நண்பரே
மகிழ்ச்சி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல விமர்சனம் குமார். படமும் ஜாலிதான்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு பகிர்வு.