மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 23 அக்டோபர், 2010

கவிதைகள் இரண்டு

அப்பன் புத்திடா உனக்கு
அடிக்கடி சொல்கிறார்
ஆறாப்பு சார்...

அவரு மகன் எப்பவும்
கணக்குல முட்டை
வாங்குறானே...
அது யார் புத்தி...?



******

காலை கோயில் மணி
ஒலிக்குமுன்னே
கோலமிடுவாள் கோகிலா...

கோலம் எப்படியோ...
தூக்கக் கலக்கத்திலும்
சந்திரனாய் பிரகாசிக்கும்
அவள் முகம் அழகு...!

கோலமாவு நடமிடும்
கையின் மணிக்கட்டால்
அவள் தலைமுடியை
தள்ளிவிடும் பாங்கழகு..!

எத்தனை முறை
சைக்கிளை திருப்பினாலும்
திரும்பாத அவள்
மனசும் கூட அழகுதான்..!

-'பரிவை' சே.குமார்.

போட்டோ அருளிய கூகிளுக்கு நன்றி

32 எண்ணங்கள்:

சௌந்தர் சொன்னது…

எத்தனை முறை
சைக்கிளை திருப்பினாலும்
திரும்பாத அவள்
மனசும் கூட அழகுதான்..////

இந்த வரி ரொம்ப சூப்பர்

RVS சொன்னது…

தலை முடியை தள்ளிவிடும் பாங்கழகு.. நல்லா இருக்கு சே.குமார். ;-)

எப்பூடி.. சொன்னது…

உங்க கவிதைஅழகு; கூடவே அந்த கோலம்போடிற பெண்ணும்தான்.

ம.தி.சுதா சொன்னது…

நல்லாயிருக்குங்க... வாழ்த்துக்கள்...

மதுரை சரவணன் சொன்னது…

//எத்தனை முறை
சைக்கிளை திருப்பினாலும்
திரும்பாத அவள்
மனசும் கூட அழகுதான்..!//

asaththungka .... vaalththukkal.

santhanakrishnan சொன்னது…

முதலாவது நக்கல்.
இரண்டாவது அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்தது நண்பனே..நண்பனே..

அருமை குமார்.

மோகன்ஜி சொன்னது…

//திரும்பாத அவள்
மனசும் கூட அழகுதான்..!//
நல்லா இருக்கு குமார்!

Asiya Omar சொன்னது…

கவிதை அருமை.

எஸ்.கே சொன்னது…

அழகான கவிதைகள்! மனசு தளத்தில் மனசு அழகுதான்!

vanathy சொன்னது…

super!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அழகான வரிகள்...

பெயரில்லா சொன்னது…

நைஸ் :)

r.v.saravanan சொன்னது…

எத்தனை முறை
சைக்கிளை திருப்பினாலும்
திரும்பாத அவள்
மனசும் கூட அழகுதான்..////

கலக்கல் வரிகள் குமார்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சௌந்தர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க RVS....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எப்பூடி...
எல்லாம் கூகிளில் பிடித்ததுதான்.
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ம.தி.சுதா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சந்தானகிருஷ்ணன்...
ஆஹா... நீங்க சைக்கிள் பார்ட்டியா...?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மோகன் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க Asiya அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க எஸ்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெறும்பய அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பாலாஜி சரவணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க R.V. சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Philosophy Prabhakaran சொன்னது…

நல்லா இருக்கு... Nice:)

ஜோதிஜி சொன்னது…

நாலு வார்த்தை என்ன? நாற்பது வார்த்தைகளில் பாராட்டக்கூடிய கவிதைகள். ஓகோ தேவகோட்டையா?

பின்னோக்கி சொன்னது…

ரெண்டுமே நல்லாயிருக்கு...

"உழவன்" "Uzhavan" சொன்னது…

//திரும்பாத அவள்
மனசும் கூட அழகுதான்..!//
 
சூப்பர் பாஸ்..

Thenammai Lakshmanan சொன்னது…

யார் அந்த கோகிலா.. வீட்டுக்காரம்மாவுக்குத்தெரியுமா.. குமார்..:))

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரபாகரன்...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஜோதிஜி...
நாலு வார்த்தையில நறுக்குன்னு ஒரு வார்த்தை வச்சுப்புட்டிங்களே... அதெல்லாம் சொல்லவா முடியும்?
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பின்னோக்கி...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க உழவன்...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தேனம்மை அக்கா...
வீட்டுக்காரம்மாவுக்கு தெரியிற மாதிரி பேரெல்லாம் மனசுக்குள்ள வச்சிக்கிட்டு புதுப்பேரத்தானே மனசு வலையில பயன்படுத்துவோம்... நாங்கல்லாம் யாரு...
அக்கா... உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

சைக்கிள்-ஐ எடுத்துட்டு சுத்தற அளவுக்கு போயாச்சா?? :D :D

ஓகே ஓகே..... :-))) நடக்கட்டும்.. நடக்கட்டும்...!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

very nice...really

Chitra சொன்னது…

எத்தனை முறை
சைக்கிளை திருப்பினாலும்
திரும்பாத அவள்
மனசும் கூட அழகுதான்..!

...very nice. :-)

தமிழ்க்காதலன் சொன்னது…

உங்கள் கவிதை குழந்தைக் கவிஞராக உங்களை பரிணமிக்கிறது குமார். மிக்க நன்றி. தொடருங்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

kumaar,காதல் கவிதைல பின்றீங்களே

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி ஆனந்தி...

வாங்க அப்பாவி தங்கமணி....

வாங்க சித்ரா...

வாங்க தமிழ்க்காதலன்...

வாங்க சி.பி...

உங்கள் அனைவரின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.