மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 2 மே, 2010

மங்கையர் சிகரம் + மெயிலில் வந்த மொக்கை

கடந்த ஒரு வாரமாக வலையில் சிறு பிரச்சினை, அதனால் பதிவிடவோ, பின்னூட்டமிடவோ முடியாத சூழ்நிலை. இன்று சரியாகிவிட்டது.

எனது சிறுகதைகள் வலைப்பூவில் பதிவிடப்பட்ட 'மனசு' சிறுகதை புதிதாக தொடங்கப்பட்டுள்ள மங்கையர் சிகரம்  என்ற பத்திரிக்கையின் முதல் பதிப்பில் வெளிவந்துள்ளது. அதற்கு காரணமான பத்திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ் சிகரம் வலைத்தளத்திற்கும் நன்றிகள்.


பெண்களுக்கான பத்திரிக்கையாக வலம் வர இருக்கும் மங்கையர் சிகரத்திற்கு தங்கள் ஆக்கங்களை அனுப்ப விரும்பும் அனைவரும் இந்த முகவரியில் அனுப்பலாம்.

admin@tamilsigaram.com

  tamilsigaram@yahoo.com


மே- 1 பிறந்த நாள் கொண்டாடிய 'தல' அஜீத்துக்கு கடந்த கால கசப்புகள் கரைந்து வரும் நாட்கள் வசந்தமாக வாழ்த்துக்கள்.


சென்னை அனி வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை தட்டிச்சென்ற அன்று நீண்ட கட்டுரை எழுதி, படங்கள் எல்லாம் சேகரித்து பதிவிட முடியாமல் போய்விட்டது. காரணம் வலையில் பிரச்சினை. அதை இனி பதிவிட்டால் வறண்ட கண்மாயில் மீன் பிடிப்பது போல் ஆகிவிடும். அதனால தோனி தலைமையில் களம் கண்ட தமிழக வீரர்கள், எங்கள் நாயகன் ரெய்னா உள்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மெயிலில் வந்த மொக்கை

பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா? (what a pity)

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?........... 
 
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்

ஹேமா சொன்னது…

குமார் மொக்கை எல்லாமே ஞாயிறு சிரிப்புன்னு சொல்ற மாதிரி சிரிக்கக்கூடியதாக இருக்கு.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ஜோக்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு.. அசத்துறீங்க குமார். எல்லாமே நல்லாருக்கு., அருமையான பகிர்வு.

Chitra சொன்னது…

Congratulations!

பத்மா சொன்னது…

all the best

'பரிவை' சே.குமார் சொன்னது…

@சின்ன அம்மிணி said...
//ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சின்ன அம்மிணி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@ஹேமா said...
//குமார் மொக்கை எல்லாமே ஞாயிறு சிரிப்புன்னு சொல்ற மாதிரி சிரிக்கக்கூடியதாக இருக்கு.//

அப்படியா ரொம்ப சந்தோஷம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா

'பரிவை' சே.குமார் சொன்னது…

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//ஜோக்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு.. அசத்துறீங்க குமார். எல்லாமே நல்லாருக்கு., அருமையான பகிர்வு.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன் (Starjan).

'பரிவை' சே.குமார் சொன்னது…

Chitra said...
//Congratulations!//
வாழ்த்துக்கு நன்றி சித்ரா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@padma said...
//all the best//
வாழ்த்துக்கு நன்றி பத்மா.

அன்புடன் மலிக்கா சொன்னது…

வாழ்த்துக்கள் குமார் சிகரத்தை தொட்டதற்க்கு.

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்..

ஜெயந்தி சொன்னது…

வாழ்த்துக்கள் சிகரத்துக்கு.