மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 17 மே, 2017

18.என்னைப் பற்றி நான் - இராய.செல்லப்பா


ந்த வாரம் என்னைப் பற்றி நான் பகுதியில் தன்னைப் பற்றி வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறார் அன்பின் ஐயா. இராய. செல்லப்பா அவர்கள். ஐயாவின் தளம் செல்லப்பா தமிழ் டயரி 

ஐயாவைப் பற்றி சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. மிகச் சிறந்த எழுத்தாளர். வலையில் எழுதியவர்களை ஊக்குவித்து எழுத வைப்பவர்களில் இவரும் ஒருவர். இவர் தளத்திற்கு நான் அதிகம் செல்வதில்லை என்றாலும் என் தளத்திற்கு தொடர் வருகை தருபவர். குறிப்பாக சாண்டில்யன் கதைகள் பற்றிய பகிர்வுகளை வாசித்து கருத்து இடுவதுடன் இதுபோல் நிறைய எழுதுங்கள் என அடிக்கடி சொல்பவர்.

தன் மனதில்பட்ட கருத்தை மறைக்காமல் சொல்பவர். நிறைய... நிறைவாய் எழுதக் கூடியவர். பல புத்தகங்களின் ஆசிரியர்... இன்னும் இன்னுமாய் நிறையச் சொல்லலாம் என்றாலும் என்னைப் பற்றி நான் என அவர் சொல்வதைப் பார்க்கலாமே.


என்னைப் பற்றி நான் 

துரையைச் சேர்ந்த ஒரு தம்பதியரை இன்று சந்திக்க நேர்ந்தது. இருவரும் அறுபது வயதுவரை பணிசெய்து முறையாக ஓய்வுபெற்றவர்கள். மகன் இப்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்திருக்கிறார்கள். மரியாதை நிமித்தமான சந்திப்பு.

இருவரும் பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டோம். சொந்த ஊர் எது, மனைவியின் ஊர் எது, எங்கு வேலை செய்தோம், எத்தனை முறை அமெரிக்கா வந்துள்ளோம் போன்ற தகவல்கள். அடுத்து வழக்கமாக அமெரிக்கா வருபவர்கள் கேட்கும் கேள்வி: எப்படிப் பொழுது போகிறது உங்களுக்கு?

அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவிலும் இது ஒரு முக்கியமான கேள்வி. ஒருவன் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால் அவனுக்கு நிறைய நேரம் இருப்பதுபோலவும், என்ன செய்வதென்று தெரியாமல் அவன் விழிப்பதுபோலவும் ஒரு பிரமையான எண்ணம் பலருக்கும் இருக்கிறது. கண்ணாடியில் பார்க்கிறவனுக்குத் தன்முகமே தெரிவது போல, பணியிலிருந்த போதும் ஓய்வெடுத்தே பழகிவிட்டவர்களுக்கு, யாரைப் பார்த்தாலும் அவர்களும் கை நிறையப் பொழுதை வைத்துக்கொண்டு செலவழிக்கும்விதம் அறியாமல் இருப்பதாகவே தோன்றிவிடுகிறது.  

இப்படிக் கேள்வி கேட்பவர்களை நான் எளிதாகச் சமாளித்துவிடுவேன்: “இன்னும் ஒரு மாதம் கழித்து நாம் சந்திக்கலாமா? அப்போது, உங்களுடைய பொழுதை நீங்கள் எப்படிக் கழித்தீர்கள் என்று எனக்குச் சொல்வீர்களா?” என்று எதிர்க் கேள்வி எழுப்புவேன். அவ்வளவே.

இன்று சந்தித்த தம்பதியரிடம் சொன்னேன்: “நான் ஒரு எழுத்தாளனும் கூட. எனவே படிப்பதிலும் எழுதுவதிலும் எனக்குப் பொழுது செலவாகிறது. இருபத்துநாலு மணிநேரமே போதுமானதாயில்லை” என்றேன். அந்தப் பெண்மணி ஆர்வத்துடன் கேட்டார்: எந்தப் பெயரில் எழுதுகிறீர்கள் என்று. சொன்னேன். 

“தெரியுமே! பல வருடங்களாக நீங்கள் தினமலர் வாரமலரில் தெய்வீகம் பற்றி எழுதிவருகிறீர்களே! ஞாயிற்றுக்கிழமை வந்தால் உங்கள் கட்டுரையைத்தான் நான் முதலில் படிப்பேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

எனக்கு வெட்கமாகப் போனது. ஏனெனில் அந்த செல்லப்பா நான் அல்லன். இன்னொருவர். அந்தப் பெண்மணியால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 

**** 

ல வருடங்களுக்கு முன்பு எனது கவிதைத்தொகுதி ஒன்று வெளியானபோது, சென்னையில் ஒரு புத்தகக்கடையில் என்னைப் பார்த்த (அப்போதே) முதுபெரும் எழுத்தாளர் ஒருவர், “நலமாக இருக்கிறீர்களா? உங்கள் கவிதைகளையும் கட்டுரைகளையும் நான் தொடர்ந்து படிக்கிறேன். தமிழுக்கு உங்களால் இன்னும் நிறைய சேவைகள் பாக்கியிருக்கிறது” என்றார். இந்தியில் இருந்து தமிழுக்கு ஏராளமான  கதைகளை மொழிபெயர்த்து கல்கி, கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி போன்ற இதழ்களில் வெளியிட்டுவந்தவர் அவர். எனக்கு மகத்தான அதிர்ச்சி. ஏனென்றால் அதுவரை நான் எந்தப் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக எழுதியதில்லை. அவ்வப்போது ஒன்றிரண்டு வந்திருக்கும். அதையும் படித்தவர்கள் உடனே மறந்திருப்பார்கள். அமர இலக்கியம் எதையும் அப்போது நான் படைத்திருக்கவில்லை. இவர் சொல்வதைப் பார்த்தால் நிச்சயம் இது அவர் நினைவில் எழுந்த ஆள்மாறாட்டம்தான் என்று தெரிந்துவிட்டது.     

‘மன்னிக்க வேண்டும் ஐயா, அது நானாக இருக்கமுடியாது. ஏனென்றால்...” என்பதற்குள் அவர் இடைமறித்தார். “இப்படித் தன்னடக்கத்துடன் இருந்துதான் இந்த நிலைமையில் இருக்கிறீர்கள். இல்லையென்றால் உங்களுக்கு எப்போதோ சாகித்ய அக்கடெமி கிடைத்திருக்காதா? இவ்வளவு வருடங்கள் நீங்கள் காத்திருக்கவேண்டுமா?” என்றார் அவர். அப்பொழுதுதான் அவர் யாரைச் சொல்கிறார் என்று புரிந்தது. தமிழின் மூத்த எழுத்தாளரும், ‘மணிக்கொடி’ பரம்பரையைச் சேர்ந்தவரும், ‘எழுத்து’ இதழின் ஆசிரியருமான சி.சு.செல்லப்பா அவர்களைத்தான் நான் என்று நினைத்துக்கொண்டுவிட்டார், பாவம்! சில மாதங்களுக்கு முன்புதான் சி.சு.செல்லப்பா தமிழ் எழுத்தாளர் என்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிவலோகப் பதவியை அடைந்திருந்தார்.  அந்த விஷயமே அவருக்குத் தெரியவில்லை என்பது எவ்வளவு சோகமான செய்தி!

**** 

சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இந்து சீனியர் உயர்நிலைப் பள்ளியில் அடிக்கடி பேச்சு, கவியரங்கம் என்று ஏதாவதொரு நிகழ்ச்சிக்கு என்னை அழைப்பார்கள். கம்பீரமான ஷெர்வாணி அணிந்து சிங்கம் மாதிரி நடைபோடுவார் அந்தப் பள்ளியின் முதல்வராக  இருந்த வெங்கடாசலம் அவர்கள். ஒரு கவியரங்க நிகழ்ச்சியின் இடைவெளியில் இரண்டு ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். ‘இவரை நாம் அடிக்கடிக் கூப்பிடுகிறோம் அல்லவா? போன மாத நிகழ்ச்சிக்கும் இவர் தானே வந்திருந்தார்?”

இல்லை நண்பரே, போன மாதம் வந்தவர் ‘சிலம்பொலி’ செல்லப்பன்; நான் வெறும் செல்லப்பா மட்டுமே; அவர் வேறு, நான் வேறு; அவர் என்னைவிட பதினைந்து வருடமாவது பெரியவர் – என்று சொல்லவிரும்பினேன். அதற்குள் அவர்கள் கலைந்துவிட்டார்கள்.

****

ங்கிப்பணியில் இருக்கும்போது எமது வங்கியின் அப்போதைய தலைவர் ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தார். தம் கீழ்ப் பணியாற்றும் மேலாளர் பொறுப்பில் இருந்தவர்களுக்குத் தம் கைப்படப் பிறந்தநாள் வாழ்த்துக்  கடிதங்களை அனுப்புவார். பிறந்தநாளன்று சரியாக வந்துசேரும்.  அதில் சிறு தவறு நடந்தாலும் பொறுக்கமாட்டார்.  என் பிறந்த நாளுக்கும் அதுபோல் வாழ்த்துக் கடிதங்கள் வரும். ஆனால் என் விஷயத்தில் மட்டும் அவருடைய செயலாளர்கள்  ஒரு சிறிய தவறு செய்துவிடுவார்கள். ‘To’ என்ற இடத்தில் செல்லப்பாவிற்குப் பதில், ‘புல்லப்பா’ என்று ஒருமுறை அடித்திருந்தார்கள். 

வங்கியின் தலைவர் இம்மாதிரி வாழ்த்து அட்டைகள் அனுப்பிப் பெயர்வாங்கிவிடுவதைப் பொறுக்காத ஒரு பொதுமேலாளர், தாமும் இம்மாதிரி வாழ்த்து அட்டைகளை  அனுப்பத்தொடங்கினார். அவருடைய செயலாளர் என் பெயரை ‘எல்லப்பா’ என்று டைப் செய்திருந்தார். புல்லப்பா என்று ஒருவர் நிச்சயமாக வங்கியில் இருந்தார். ஆந்திராவைச் சேர்ந்தவர். என்னைவிட பணிமூப்பு மிகுந்தவர். ஆனால் எல்லப்பா என்று ஒருவரும் வங்கியில் இல்லை. மேலும், செல்லப்பா என்ற பெயரில் கடந்த நாற்பது ஆண்டுகளில்  வங்கியில் இருந்தவன் நான் ஒருவனே. ஆனால்...?  இம்மாதிரிச் சின்ன விஷயங்களை நாம் பெரிதுபடுத்தினால் தொலைந்தோம். பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புகள் ஆயிற்றே,  கருடனைப் பார்த்து சௌக்கியமா என்றல்லவா கேட்கும்?  

****

மிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி. ‘சாகித்ய அகாடமி’, ‘சம்ஸ்கிருதி சம்மான்’ விருதுகளைப் பெற்றவர். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் ஆகிய படைப்புத்துறைகளில் சிறந்து விளங்குபவர். ‘குருதிப்புனல்’ நாவல், ஒளரங்கசீப்’, ‘ ராமானுஜர்’ நாடகங்கள் போன்றவை, இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

அண்மையில் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானபோது, அஞ்சலி செலுத்தப்போயிருந்தார், இந்திரா பார்த்தசாரதி. அப்போது நடந்ததை அவருடைய  வார்த்தைகளிலேயே பார்ப்போமா? 

நண்பரைப் பனிப்பெட்டியில் பார்த்துவிட்டு கனத்த நினைவுகளுடன் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று கேமராவுடன் இரண்டு இளைஞர்கள் என் முன் முளைத்தார்கள்.

‘‘அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?’’ என்றார் ஒருவர்.

கேமரா என்னை உற்றுப் பார்த்தது. தொலைக்காட்சி சேனல் பெயரைச் சொன்னார் இன்னொரு இளைஞர்.

முதலில் மறுத்துவிடலாம் என்ற எண்ணம் தலைத்தூக்கியது. இது நான் என் நண்பருக்குச் செய்யும் தர்மம் அன்று என்ற எண்ணம் அதைத் தடுத்தது. நான் யாரென்று தெரிந்து கேட்கிறார்கள் என்ற லேசான பெருமையும் என் முகத்தில் புன்னகையாக அடையாளம் கொண்டது.

நான் அவரைப் பற்றி இரண்டு நிமிடங்கள் என் கருத்துகளைச் சொன்னேன்.

கேமரா கண் மூடியது. என்னைப் பேசச் சொன்ன இளைஞர் மிகவும் இயல்பான, யதார்த்தமான குரலில் என்னைக் கேட்டார்:

“உங்கள் பெயர் என்ன?”

நான் யாரென்று தெரியாமலா என்னைப் பேசச் சொன்னார்கள்? புதிதாக வெளியிடப்படும் திரைப்படத்தின் முதல் ‘ஷோ’ முடிந்தவுடன் வெளியே வரும் ரசிக மக்களைத் தொலைக்காட்சி விமர்சகர்கள் கேட்பது போன்ற கேள்வியா என்று எனக்குத் தோன்றிற்று.

அவர்களுக்கு யாரோ சொல்லி யிருக்க வேண்டும். என் பெயரைச் சொல்லி, ‘‘அவர் அதோ போகிறார். கேளுங்கள்’’ என்று கூறியிருக்கக்கூடும். ஒன்று, கேமரா இளைஞர்கள் அந்தப் பெயரை மறந்திருக்கக்கூடும். அல்லது, அந்தக் குறிப்பிட்ட பெயரை உடையவர் நான்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்காகக் கேட்ட கேள்வியாகவும் இருக்கலாம்.

நான் என் பெயரைச் சொன்னதற்கு, ‘‘தேங்க்ஸ்’’ சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

இந்த அனுபவம் எனக்குத் தேவை யென்று எனக்குத் தோன்றிற்று. என்னைப் பற்றி நானே மிகைப்பட நினைத்துக் கொண்டிருந்தால், என்னை பூமியின் தளத்துக்குக் கொண்டுவரும் அனுபவம்.

**** 

ந்த நிமிடத்திலும் ‘நான்’ என்று கர்வப்படுவதற்குத் தமிழ் எழுத்தாளனுக்கு அதிகாரமில்லை என்பதைப் புரிந்துகொண்டீர்கள் அல்லவா? ‘என்னைப் பற்றி நான்’ என்று பெருமையோடு என்னத்தை எழுதுவது? 

என்றாலும், என்மீது மிகுந்த பிரியம் கொண்டு பரிவை சே.குமார் அவர்கள் என்னை எழுதச் சொன்னதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக என்னைப் பற்றி இதோ சில வரிகள்:

கவிஞராக அறிமுகம் ஆகி, கதாசிரியராகவும் கட்டுரையாளராகவும் தன் எழுத்துப் பரப்பை விரித்துக்கொண்டிருக்கும் இராய செல்லப்பா, இதுவரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராவார். (‘இரா’ என்பது அவருடைய சொந்த ஊரான இராணிப்பேட்டையைக் குறிக்கும். ‘ய’ என்பது தகப்பனார் யக்யஸ்வாமி என்பதின் முதலெழுத்து. மற்றபடி, பழம்பெரும் எழுத்தாளரான ராய சொக்கலிங்கத்திற்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை)  வங்கி அதிகாரியாக இருந்து, இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றவர். அந்த அனுபவங்களைத் தமது எழுத்துக்களில் தக்க முறையில் வெளிப்படுத்துபவர். ‘செல்லப்பா தமிழ் டயரி’ என்ற இணையதளத்தின் மூலம் தொடர்ந்து எழுதிவருபவர். மனித உணர்வுகளும் தனிமனிதப் பிரச்சினைகளும், மனிதாபிமானமும் இவரது எழுத்துக்களின் ஆதாரமாக இருப்பவை.

இவருடைய ஆறு புத்தகங்கள் விரைவில் புஸ்தகா நிறுவனத்தின்மூலம் வெளியாகவுள்ளன. (புஸ்தகா- மின்னூல் பதிப்பாளர்கள்). 

1  ஊர்க்கோலம் -கட்டுரைகள்;    
2 உண்மைக்குப் பொய் அழகு – சிறுகதைகள்;  
3  சொல்லட்டுமா கொஞ்சம்? -கட்டுரைகள்;   
4  காதல் பூக்கள் உதிருமா? -சிறுகதைகள்;  
5 அபுசி-தொபசி-பகுதி 1;   
6  அபுசி-தொபசி-பகுதி 2.

இவை தவிர மேலும் ஆறு புத்தகங்கள் இன்னும் சில மாதங்களில் தயாராகிவிடும் நிலையில் உள்ளன. 2013 இல் வலைத்தளம் தொடங்கியிருந்தாலும் 2016 முழுவதும் எழுதாமல் இருந்துவிட்டார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் புத்துணர்ச்சியோடு எழுத ஆரம்பித்துவிட்டார். இதுவரை முப்பத்தெட்டு பதிவுகள் வெளியாகியுள்ளன.

****

ரி, பொழுது எப்படிப் போகிறது என்ற கேள்விக்கு சற்றே நேர்மையான பதிலைச் சொல்லிவிடலாமா?

கணினித்துறையில் ஆர்வம் உள்ளவன் என்பதால், கடந்த பன்னிரண்டு மாதங்களாக, கணினி மொழிகளைப் படிப்பதில் எனது நேரத்தை அதிகம் செலவிட்டிருக்கிறேன். 

(1) சென்னை ஐஐடி நடத்தும் ஆன்லைன் படிப்பான IMAD- Introduction to Modern Application Development  என்ற படிப்பை வெற்றிகரமாக முடித்தேன்.

(2)  IIT Kharagpur நடத்தும்  Natural Language Processing  என்ற மிகக் கடினமான படிப்பையும் படித்தேன். தேர்வு மட்டும் எழுதமுடியவில்லை. தேர்வுத் தேதியில் அமெரிக்கா வந்துவிட்டேனே.  

(3) Chennai Mathematical Institute  நடத்தும்   Design and Analysis of Algorithms என்ற மேலும் கடுமையான படிப்பில் பதிவு செய்துகொண்டேன். ஆனால் முந்தைய மூன்று படிப்புகளுக்கும் கொடுத்த நேரம்போக, நேரம் மீதி இல்லாததால் அதை முடிக்கமுடியவில்லை. இந்த ஆண்டு முடிப்பேன். 

(4) பைத்தான் என்ற -இன்று மிகவும் அதிகம் டிமாண்டு உள்ள - கணினி மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். 

(5)  Python Language  -Harvard University ( edX course). 

இதைத்தொடர்ந்து 

(6) Big Data Analytics  என்ற இன்னொரு மிகுந்த டிமாண்டு உள்ள படிப்பையும் ஆரம்பித்துள்ளேன். முடிக்க ஆறேழு மாதங்கள் ஆகலாம்.

இவை எல்லாமே கணித மற்றும் கணினித்துறையில் மிக நுட்பமான, அதே சமயம் மிகுந்த உழைப்பைக் கோருகின்ற படிப்புகளாகும். ஆர்வத்தின் காரணமாகவே படிக்கிறேன். எனவே வாரத்தில் ஒன்றுக்குமேல் வலைப்பதிவு எழுதவும் கூட எனக்கு நேரம் இல்லை என்பதுதான் உண்மை நிலை.

நன்றி குமார் அவர்களே!

-இராய். செல்லப்பா
நியூஜெர்சி

Image result for இராய.செல்லப்பா

ந்த வாரம் எழுத முடியுமா என்று கேட்டதும் அடுத்த நாளே அனுப்பிக் கொடுத்த ஐயாவுக்கு நன்றி.

என்னைப் பற்றி நான் பகுதிக்கு தொடர்ந்து உறவுகள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

இதுவரை எழுதித்தரக் கேட்டவர்கள் பலருக்கு விருப்பமில்லை போலும். இனி புதிதாய் சிலரிடம் அழைப்பு விட வேண்டும். ஊருக்குச் செல்வதால் அது முடியாத காரியம். விடுமுறைக்குப் பின் தொடர முடியுமா பார்க்கலாம். நாலைந்து வாரங்கள் போகுமா என்று யோசித்து ஆரம்பித்த ஒரு பகுதியை தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் நடத்த வைத்த, இதில் தங்களைப் பற்றி பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

சொல்ல மறந்துட்டேனே... நாளை இரவு ஊருக்குப் போகிறேன்... ஒரு மாதத்துக்கு மேல் இருப்பேன். முடிந்தவரை இந்த முறையேனும் உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் + ஆவா.

தொடர்புக்கு : 91 9629215744

என்னைப் பற்றி நான் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

-'பரிவை' சே.குமார்.

32 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

திறந்த மடலாய் தங்களைப்பற்றி அருமை நண்பரே...

ஸ்ரீராம். சொன்னது…

சுவையான பகிர்வு. இபா சொல்லியிருக்கும் பகிர்வு புன்னகைக்க வைத்தது.

ஸ்ரீராம். சொன்னது…

* இபா பற்றி என்று இருக்கவேண்டும்!

தமிழ்நாட்டை வெய்யில் கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருக்கும்போது ஊருக்கு வருகிறீர்கள் குமார். குடும்பத்துடன் விடுமுறையை இனிமையாகக் கழிக்க வாழ்த்துகள்.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் ஐயா அவர்களுக்குப் பணிவான வணக்கங்கள்..
நல்ல கலகலப்புடன் கைவரிசையைக் காட்டும் வெகு சிலருள் தாங்களும்!..

கல்விக்குக் கரையில்லை என்பார்கள்..
தாங்கள் இன்னும் மாணவன்..

இறைவன் தங்களுக்கு எல்லா நலன்களையும் அருள்வானாக!..

இனிய பதிவுகளை வழங்கிய
அன்பின் குமார் அவர்களுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்..

G.M Balasubramaniam சொன்னது…

நேரிடையாகத் தொடர்பு இருந்தும் நான் அறியாத பல தகவல்களுக்கு நன்றி செல்லப்பா சார்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

THE VERY GREAT MAN இராய செல்லப்பா அவர்களின் MATURED எழுத்துக்கள் உச்சி முதல் பாதம் வரை அருமையாக உள்ளன.

படித்ததும் உச்சி குளிர்ந்து போனேன்.

அவரைப் பாதம் பணிந்து வணங்கிடுகிறேன்.

பகிர்வுக்கு நன்றிகள்.

இராய செல்லப்பா சொன்னது…

மிக்க நன்றி நண்பரே!

இராய செல்லப்பா சொன்னது…

மிக்க நன்றி நண்பரே!

இராய செல்லப்பா சொன்னது…

நேரில் பார்க்கும்போது இன்னும் பல சங்கதிகள் சொல்வேன். கவலை வேண்டாம். ஐயா!

இராய செல்லப்பா சொன்னது…

ஆகா, என்னே உங்கள் பணிவு! உங்களைப் பார்த்தல்லவா நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருகிறேன்! வாழ்க நீங்கள்!

இராய செல்லப்பா சொன்னது…

மிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே!

கோமதி அரசு சொன்னது…

செல்லப்பா சார் அருமையாக பகிர்ந்து கொண்டார்.
படிப்புக்கு வயது தடை அல்ல என்பதை அழகாய் சொல்லி இருக்கிறார்.
எல்லோரும் கேட்கும் கேள்வியை மதுரை தம்பதியினர் கேட்டது புன்னகை வரவழைத்தது.
இந்திரா பார்த்தசாரதி அவர்கள் சொன்னதை பகிர்ந்து கொண்டது அருமை.


குமார், குடும்பத்தினர்களுடன் மகிழ்ச்சியாக விடுமுறையை கழித்து வாருங்க்கள் (களித்து இருங்கள்) வாழ்க வளமுடன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உள்ளதை அப்படியே பகிர்ந்துகொள்ளும் இயல்பான குணம் திரு செல்லப்பா அவர்களுடையது. அப்பெயரால் அவர் எதிர்கொண்ட நிகழ்வுகளை அவர் எழுதியுள்ள விதம் அருமை. அவரைப் பற்றிய பகிர்வுக்கு உங்களுக்கு நன்றி.

இராய செல்லப்பா சொன்னது…

தங்கள் வரவுக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே!

இராய செல்லப்பா சொன்னது…

தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

Angel சொன்னது…

ஒரே பெயரால் ஏற்பட்ட குழப்பங்களை நகைசுவைப்பட கூறியவிதம் ரசித்தேன் ..ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு நன்றி குமார் ..பயணம் சிறக்க இனிய வாழ்த்துக்கள்

Avargal Unmaigal சொன்னது…

செல்லப்பாவை ஒரு முறை நேரில் சந்தித்து இருக்கிறேன் பழகுவதற்கு இனிமையானவர் . மற்றவர்கள் போல குறை சொல்லாமல் தன் நேரத்தை மிக அழகாக செலவழித்து வருவது கண்டு மிக மகிழ்ச்சி .......இவர் இப்போது நீயூஜெர்ஸியில் இருந்தாலும் மீண்டும் ஒரு முறை நேரில் சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை இவர் சற்று தொலைவில் இருக்கிறார். ரமணிசார் இங்கு வந்த பின் அவருடன் சேர்த்து இவரை சந்திக்கலாம் என்றாலும் நேரம் கிடைக்கவில்லை....இன்னும் நாலு ஐந்து நாட்கள் தான் இருப்பார் போல அதற்குள் நேரம் கிடைத்தால் பார்க்க வேண்டும் அப்படி இல்லையென்றால் மீண்டும் நீயூஜெர்ஸி வரும் போது பார்க்க வேண்டும்.

ரமணி சார் சென்ற முறை வந்தார் ஒரு முறைமட்டும் பார்க்க முடிந்தது, அதன் பின் மீண்டும் சந்திக்க அழைப்பு விடுவித்தை அவர் கவனிக்காமல் இந்திய்யா திரும்பிவிட்டார். இந்த தடவை நிச்சய்ம் மீண்டும் சந்திப்போம்

குமார் உங்களின் இந்தியபயணம் மிக நல்லமுறையிலும் மிக சந்தோஷமாகவும் அமைய வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

செல்லப்பா சார் அசத்திவிட்டீர்கள்! மிக மிக அருமையாக பல தகவல்களைச் சொல்லி இறுதியில் உங்களைப் பற்றி இரத்தினச் சுருக்கமாக!! அதுவும் மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் அனுபவத்தை அவர் வார்த்தைகளிலேயே விவரித்து..அவரது அந்த இறுதி வரி எத்தனை உண்மை இல்லையா?!!!..மிகவும் ரசித்தோம் சார். எழுத்தாளர் அல்லவா!! செல்லப்பா சாரும் சிறந்த எழுத்தாளர் அல்லவா!!! அதான் இத்தனை அருமையான பதிவு. நிறைய வாசிப்பவர் என்பதும் தெரியும். புதிது புதிதாகக் கற்பதிலும் ஆர்வம் உடையவர் என்பது இங்கு மேலும் புரிந்தது. பல புத்தகங்கள் வெளிவருதற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் நிறைய படைப்புகள் வெளி வர வேண்டும் சார். அதற்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

செல்லப்பா சார் எங்கள் குறும்படத்தில் நடித்திருக்கிறார் என்பதையும் இங்கு பெருமையாகக் குறிப்பிடுகிறோம்.

கீதா: எங்கள் வீட்டிற்கு அவரும் பலமுறை வந்திருக்கிறார் அவரது மனைவியுடனும் வந்திருக்கிறார். ஜாலி மனிதர். சிரிக்காமலேயே நகைச்சுவையை பேசுபவர். நான் அவரது வீட்டிற்கு ஒரே ஒரு முறைதான் போயிருக்கிறேன். அதன் பின் செல்ல முடியவில்லை.

நான் எழுதும் பதிவில் இருக்கும் பிழைகளை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரிவித்து திருத்துபவர். மட்டுமின்றி ஊக்கமும் அளிப்பவர் என்பதையும் இங்கு நான் மகிழ்வுடனும், பெருமையுடனும் சொல்லிக் கொள்கிறேன். மிக்க நன்றி சார்.
வாழ்த்துகள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நான் வீட்டுப் பெண் அதாவது வேலை செய்யவில்லை என்பதால் என்னிடமும் பலரும் கேட்பதுதான் உங்களிடம் கேட்ட அதே கேள்வி. எப்படி உனக்குப் பொழுது போகிறது என்று. இது வரை எனக்கு, அதாவது நினைவு தெரிந்த நாளிலிருந்து என்று சொல்லலாம்....எனக்குப் பொழுது போகவில்லை என்று தோன்றியதே இல்லை. பொழுது இன்னும் இருக்காதா என்று தோன்றியதுதான் அதிகம். பொதுவாகப் பலரது எண்ணமும் வீட்டிலிருப்பவள் என்றால் நேரம் நிறைய இருக்கிறது. ஜாலியாகத் தூங்கி எழுந்து அண்டை அயலாரிடம் பேசி என்று நினைத்துவிடுகிறார்கள். பார்க்கப் போனால் பல சமயங்களில் ஓய்வுக்குக் கூட நேரம் இருக்காது. நான் என்னை எப்போதுமே ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபடுத்திக் கொண்டுவிடுவதுண்டு. இப்படிக் கேள்விகள் கேட்பவர்களிடம் அதுவும் வேலைக்குச் செல்லும் சில பெண்கள் என்னிடம் வீட்டுலதானே இருக்க என்று தொடங்கிப் பேசினால் கோபப்படாமல் கடந்து சென்று விடுவேன்.!!

இந்த வயதிலும் உங்கள் கற்கும் ஆர்வம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஊக்கமும் அளிக்கிறது. உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது..

கீதா

இராய செல்லப்பா சொன்னது…

தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

இராய செல்லப்பா சொன்னது…

விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும்படி நேர்ந்ததால் உங்களை நேரில் சந்திக்க இயலாமல் போனது. வேலூரில் சந்தித்த நினைவுகள் இனிமையானவை. எப்படியும் எங்காவது சிந்திப்போம். அதுவரை வலைத்தளம் இருக்கவே இருக்கிறது! தங்கள் வரவுக்கு நன்றி.

இராய செல்லப்பா சொன்னது…

தங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே!

இராய செல்லப்பா சொன்னது…

உண்மைதான் நண்பரே! இப்போது NPTEL என்ற IITக்களின் இணையத்தில் பல தொழில்நுட்பப் படிப்புக்களை இலவசமாகப் படிக்கலாம். கொஞ்சம் முயற்சி இருந்தால் போதும். நமது எழுத்தாளர்களில் 75 சதம் பேராவது பட்டதாரிகளே. அவர்கள் தாம் படித்த முக்கிய பாடத்தை ஒட்டி, ஏதேனும் ஒரு பாடப்பிரிவை NPTEL மூலம் கற்கலாம். பொழுதும் நன்றாகச் செலவழியும். அறிவும் வளரும். குறைந்தபட்சம், தொழில்நுட்பம் படிக்கும் நமது குழந்தைகளுடன் ஓரளவு புரிதலோடு உரையாடவாவது வழி செய்யும். உங்களைப் பொறுத்தவரை, இதனால், மற்ற பெண்களின் பொறாமையையும் சம்பாதிக்கமுடியுமே! எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் அது!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக்க நன்றி சார்! தங்களின் பரிந்துரைக்கு..முயற்சி செய்கிறேன்.

கீதா

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஐயா அவர்களின் படிப்பு ஆர்வம் போற்றுதலுக்கு உரியது

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படிக்க வயது ஒரு தடையே இல்லை என்பதை உணர்த்தியது அவரது பகிர்வு.

இங்கே வருவதற்கு முன்னர் அவர் தளத்திற்குச் சென்றதால் அங்கே படித்துவிட்டேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களின் ஆர்வத்திற்கு வாழ்த்துகள் ஐயா...

Yarlpavanan சொன்னது…

A to Z அப்படியே தங்கள் இயல்பான வெளியீடாக, தங்களைப் பற்றிப் பகிர்ந்ததில் மகிழ்ச்சி.
நானும் vb.net புரோக்கிராமர், இந்தியா வரும் வேளை சந்திக்க முயற்சி செய்கிறேன்.

Kasthuri Rengan சொன்னது…

திகீர் ...
என்னது பைத்தான் படிக்கிரீரா ...
வாழ்த்துகள்..

இராய செல்லப்பா சொன்னது…

ஆம் நண்பரே, COBOL மாதிரியே கவிதை மாதிரி அழகாக விரிகின்ற மொழி, PYTHON. அத்துடன் எளிமையானதும் கூட. அனுபவியுங்கள், தெரியும்!

-இராய செல்லப்பா நியூஜெர்சி (மே 25 முதல் சென்னை)

M0HAM3D சொன்னது…

அருமையான பதிவு
நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Nice share, good opportunity to know about writers. But why stopped this series?