மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 13 அக்டோபர், 2016

திரைக்கதை வடிவில் 'ஜீவநதி' - 2

கதை                                              :  சே.குமார்.


திரைக்கதை வசனம்               :  ஆர்.வி.சரவணன்.

முதல் பகிர்வு                               :   ஜீவ நதி (திரைக்கதை)

சிறுகதை                                       :   ஜீவநதி

சரவணன் அண்ணன் தளம்   :   குடந்தையூர்

(ஜீவநதி சிறுகதைக்கு போட்ட படம்)
தோழி: சரி. நீ பேசு நான் வீட்டுக்கு போறேன். புருஷன் பொண்டாட்டி ஆயிரம் பேசுவீங்க நடுவுல நான் எதுக்கு?  கண் சிமிட்டினாள்

காவேரி : ம் கும் அது ஒண்ணு தான் குறைச்சல் என்று அவள் சொன்னாலும் முகத்தில்  ஒரு நொடி வெட்கம் மின்னி செல்கிறது.

சுந்தரம் : அப்பா எப்பப்பா வருவீங்க இங்க என் கிளாஸ் பசங்க எல்லாரும் டிரஸ் எடுத்துட்டாங்கப்பா 

மலையப்பன்  : நான் வரேன் கண்ணா. வந்து எடுத்து தரேன்  (குரல் மட்டும்) 

ராதா  : டேய் அண்ணா என் கிட்டே கொடுடா என்று செல் போனை பிடுங்கும் அவள் 
அப்பா எதிர் வீட்டு  கமலா இருக்கா இல்ல. அவ நான் டிரஸ் எடுத்துட்டேன் நீ இன்னும் எடுக்கலியே னு கிண்டல் பண்றப்பா.  உன்னை விட எங்கப்பா சூப்பரா எனக்கு  வாங்கி கொடுப்பாருன்னு  சொல்லிருக்கேன். வாங்கி தருவீல்லப்பா 

மலையப்பன்  : அவளை விட உன் டிரஸ்  தான் சூப்பரா இருக்க போகுது  பாரேன் 

ராதா : ஹையா  ஜாலி என் செல்ல அப்பா என்று போனுக்கு முத்தம் கொடுக்கிறாள் 

சுந்தரம் குரல் கொடுக்கிறான்  : அப்பா, அம்மா லிஸ்ட் எல்லாம் போட்டு வச்சிட்டாங்க  நீங்க வந்த உடனே கடைக்கு நாம போக வேண்டியது தான் 
பிள்ளைகளின்  பேச்சை ரசித்த படியே காவேரி : ஏய் வாண்டுகளா  என் கிட்டே கொடுங்க என்கிறாள்.

அவர்கள் கொடுக்கிறார்கள்  

காவேரி : கேட்டீங்க இல்ல. புள்ளைங்களை என்னாலே அடக்க முடியல. நாளைக்கு வந்துருவீங்க இல்ல. என்கிறாள்  ஆவலுடன்.

சுவற்றில் இருக்கும் புருஷனின் போட்டோவில் படிந்திருக்கும் தூசியை முந்தானையால் துடைத்து கொண்டே அவன் பேசுவதை கேட்கிறாள்.

மலையப்பன் : இல்லம்மா வர முடியாது. ஸ்வீட் கடை இல்லியா ஆர்டர் அள்ளுது . முதலாளி தீபாவளி அன்னிக்கு காலையிலே தான் அனுப்பறேன்னு சொல்லிருக்கார். அதுக்காக டபுள் ஓடி வேற தரேன்னு சொல்லிருக்கார் காசு நமக்கு முக்கியமில்லயா  

ராதா : ஹையா நாளைக்கு எங்கப்பா வரேன்னு சொல்லிட்டார் இதை போய் அந்த திமிர் பிடிச்ச கமலா கிட்டே சொல்லிட்டு வரேன்  ஓடுகிறாள். பின்னாடியே 

சுந்தரம் :  நீ மட்டும் தான் சொல்வியா நானும் தான் என் பிரெண்ட் கிட்டே சொல்வேன் என்று ஓடுகிறான்.

காவேரி : இன்னொருத்தர் கிட்டே பணத்தையும் லீவையும் எதிர்பார்த்துகிட்டு இருக்கிற இந்த நிலமை நமக்கு தேவை தானா. என்னை நீங்க கல்யாணம் பண்றப்ப 5 பேருக்கு உங்க கையாலே  போனஸ் கொடுத்துட்டு இருந்தீங்க ஞாபகம் இருக்கில்ல... கண்களில் கண்ணீர் வழிகிறது 

மலையப்பன் : அதை சொல்லி காட்டியே  என்னை வெறுப்பேற்றாதே. வேணும்னா உங்க அண்ணன் கிட்டே கேட்டு வாங்கிக்க. நான் வந்தவுடன் கொடுத்திடறேன்.

காவேரி :  அண்ணன் கிட்டேயே.என்னாலே முடியாது. நீங்க எப்ப வறீங்களோ வாங்க. அது வரைக்கும் தீபாவளி கொண்டாடுற ஊரை நானும் என் புள்ளைங்களும் வேடிக்கை பார்க்கிறோம். சொல்லிய படி லைனை கட்  செய்து வைக்கிறாள் கோபத்துடன்.மீண்டும் மீண்டும் அது அடிக்கிறது

அதையே பார்த்து கொண்டிருக்கிறாள்.

தீபாவளிக்கு எழுதி வைத்த சாமான்கள் லிஸ்ட் காற்றில் படபடத்து எப்ப வாங்க போறே என்று அவளை டிஸ்டர்ப் செய்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து அடித்து கொண்டிருக்கும் போனை ஆப் செய்து வைக்கிறாள்.

அந்த தீபாவளி லிஸ்டையே வெறுப்புடன் பார்ப்பவள் அதை வேகமாய் எடுத்து கசக்கி வாசலை நோக்கி விட்டெறிகிறாள் 

காட்சி-5

சமையலறையில் காவேரி புளி கரைப்பதற்காக கிண்ணத்தை  கையில் எடுக்கிறாள். அதில் அவள் முகம் தெரிகிறது. அவள் கழுத்தில் காதில் போட்டிருக்கும் நகைகள் தெரிகிறது.  புள்ளைங்களுக்காவது கழுத்துல காதுல போட்டிருக்கிறதை அடகு வச்சிடலாமா என்று யோசிக்க ஆரம்பிக்கிறாள்.

எங்கேயாவது கல்யாணம் காட்சிக்கு போறதுன்னா என்ன பண்றது ஆமா புள்ளைங்க சந்தோசத்தை விட இது ஒண்ணும் குறைச்சல் இல்லே என்ற முடிவுக்கு வந்து அவள் சமையலறையை விட்டு வெளி வருகிறாள்.

அம்மா மாமா வராங்க என்ற படி பிள்ளைகள் ஓடி வருகின்றன.

அவளது அண்ணன் மகாலிங்கம் கீழே குனிந்து எதையோ எடுத்த படி.  உள்ளே நுழைகிறான்.

மகாலிங்கம் : பசங்களா கீழே விழுந்துட போறீங்க பார்த்து பதட்டமாய் சொல்கிறான்.

காவேரி : தூக்கி விட தான் நீங்க இருக்கீங்களே அண்ணே வாங்க . என்ற படி  சேரை எடுத்து போடுகிறாள்

பிள்ளைகள் சென்று மாமாவை கட்டி கொள்கின்றன

ராதா : மாமா எங்கப்பா வரார் உனக்கு என்ன டிரஸ் வேணும்னு சொல்லு நான் வாங்கி தரேன் என்கிறாள் அந்த பெண் 

பசங்களா அவரை விடுங்க என்று அவள் அதட்டவும் 

மகாலிங்கம்  :  புள்ளைங்களை அதட்டாதே னு சொல்லிருக்கேன் இல்லே என்கிறான்  அதட்டலாய்

காவேரி :  பின்னே வந்து உட்கார கூட இல்ல அதுக்குள்ள புடுங்குதுங்க பார் 

மகாலிங்கம்  :அதானே பாசம்கிறது. தாய் மாமன் னா சும்மாவா. இல்ல பசங்களா என்ற படி மீசையை முறுக்குகிறான் 

ஆமா என்று பிள்ளைகள் கோரஸ் பாடுகின்றன

மகாலிங்கம்  : என்னாச்சு  உன் போன்க்கு ட்ரை  பண்ணிட்டே இருக்கேன்  சுவிட்ச் ஆப்னு வருது

காவேரி : நான் தான் ஆப் பண்ணி வச்சேன்

மகாலிங்கம் : ஏன் 

காவேரி: உங்க மச்சான் பேசினார்

மகாலிங்கம்  : என்னவாம்

காவேரி: தீபாவளி அன்னிக்கு தான் வருவாராம்

மகாலிங்கம்  : அதனாலே கோபத்துல ஆப் பண்ணிட்டியா
தலையாட்டுகிறாள்

மகாலிங்கம்  : கழுதை ஆம்பளை கஷ்டம் உனக்கு புரியாதா 

காவேரி: பொம்பளை கஷ்டம் ஆம்பளைக்கு எங்க புரியுது 

மகாலிங்கம்  : பதிலுக்கு பதில் பேசுவியே  நீ

சுந்தரம் : மாமா  உங்க வண்டில என்னை ஒரு ரவுண்டு அழைச்சிட்டு போங்க 

மகாலிங்கம்  :  பிரெண்ட் ஒருத்தன் எடுத்துட்டு போயிருக்கான்டா.  தீபாவளி அன்னிக்கு வருவேன்ல அப்ப அழைச்சிட்டு போறேன் இந்தாங்க   பட்டாசு பார்சல் என்ற படி பையை கொடுக்கிறான் 

இரண்டு பிள்ளைகளும் ஐ என்ற படி  பையை பிரித்து சோதனையில் இறங்குகின்றன 

காவேரி : எதுக்குன்னே இதெல்லாம். உன் பசங்களுக்கு, அண்ணிக்கு வாங்கி கொடுத்தியா இல்லியா

மகாலிங்கம்  : கொடுத்தாச்சு என்ற படி பணத்தை நீட்டுகிறான்

காவேரி : அண்ணே வேணாம்னே. அவர் வருவார் பின்னோக்கி நகர்கிறாள்.

மகாலிங்கம்  :  அதுக்குள்ள தீபாவளி வந்துடுதுல்லே. இதுல மூவாயிரம் இருக்கு. பக்கத்து வீட்டு  பொண்ணை  அழைச்சிட்டு போய் உனக்கு மச்சானுக்கு புள்ளைங்களுக்கு டிரஸ் எடுத்துட்டு வந்துடு  

காவேரி :  எத்தனை காலத்துக்குண்ணே இதெல்லாம் செய்வே அழுகையாய் கேட்கிறாள்.

மகாலிங்கம்: நீ கஷ்டத்துல இருக்கிற வரைக்கும் செய்வேன். நீ நல்லா வந்துட்டேன்னா எனக்கு டிரஸ் எடுத்து கொடுன்னு குழந்தைங்க மாதிரி வீட்டு  வாசல்ல தகறாரு பண்ண ஆரம்பிச்சிடுவேன் 

நெகிழ்ச்சியாய் கையெடுத்து கும்பிடுகிறாள்

காவேரி : நீ தெய்வம்ணே 

மகாலிங்கம்  : அட நீ வேறம்மா. நம்மை விட்டுட்டு மனிதனை போய் தெய்வ்ம்கிறாளே னு தெய்வம் கோபிச்சுக்க போகுது.
என்ற படி சிரிக்கிறான்

காவேரி :அண்ணிக்கு இதெல்லாம் தெரியுமா

மகாலிங்கம்  : அவ தான் பணம் கொடுத்து அனுப்பி வச்சா 
வேறெங்கோ பார்த்த படி பேசுகிறான்.

காவேரி : எதுக்கு  உதவி பண்றேன்னு அண்ணி என்னிக்கு உன்னை கேட்க போகுதோனு பயமாவே இருக்கு 

மகாலிங்கம்  : அப்படி உங்க அண்ணி சொன்னா அவளுக்கு தெரியாம கொடுத்துட்டு போறேன். பின்னாடி வந்தவளுக்காக முன்னாடி வந்த தங்கச்சி உறவை அத்து விட்டுடற  அண்ணன் நான் இல்லம்மா. 
என்ற படி பிள்ளைகளை பார்க்கிறான்.

காவேரி சமையலறையில் சென்று காபி எடுத்து வந்து கொடுக்கிறாள். குடித்து முடிக்கும் வரை இருவருக்கும் பேச்சில்லை. அவர்கள் இருவர் மனத்திலும் கவலைகள் இருப்பதை முகம் சொல்கிறது 

நிறைவுப் பகுதி நாளைக் காலை பகிரப்படும்.

ஆக்கம் : எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்.
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

அருமை. தொடர்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடர்கிறேன் நண்பரே
தம +1

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை. தொடர்கிறேன்.

KILLERGEE Devakottai சொன்னது…

மன அழுத்தமுன் செல்கின்றது... தொடர்கிறேன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஜீவநதி இப்போது நினைவுக்கு வருகிறது தங்கள் கதை! இப்போது திரைக்கதை வடிவில் நண்பர் குடைந்தையூரின் வடிவில் நன்றாகப் போகுதே! இதோ அடுத்த நிறைவுப் பகுதிக்குச் செல்கிறோம்...