மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 ஜூன், 2012

சிறு பூக்கள்..!





அலையவிட்ட மனங்களை
அறியவில்லை...
அலையும் கூந்தல்..!

***

குளிக்க மறுத்தது
உன் உதடு தொட்ட
என் கைக்குட்டை..!

***

மேகம் விலகியதால்
வெட்கப்பட்டு சிரித்தது
முழு நிலவு..!

***

உணர்வுகளெல்லாம்
அவளாகிப் போக
உறவுகள் எல்லாம்
அந்நியமாய்..!

***

ஆடும் மயிலென
நாசி தட்டிச் செல்கிறது
முன் இருக்கைப்
பெண்ணின் கூந்தல்..!

-'பரிவை' சே.குமார்

6 எண்ணங்கள்:

சசிகலா சொன்னது…

சிதறிய முத்துக்கள் அழகு.

r.v.saravanan சொன்னது…

ஒன்று, ரெண்டு, ஐந்து இம் மூன்றும் முத்துக்களாய் மனசை கவர்கின்றன குமார்

செய்தாலி சொன்னது…

எதை குறிப்பிட்டு சொல்ல எல்லாம் அஹா அழகிய கவிதைகள்

//குளிக்க மறுத்தது
உன் உதடு தொட்ட
என் கைக்குட்டை..!//



இந்த வரிகள் என்னமோ ரெம்ப நச் சார்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன். வாழ்த்துக்கள் ! நன்றி !

ம.தி.சுதா சொன்னது…

கைக்குட்டைக்கு எழுதிய கவிதை மிக மிக அருமை சகோ...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

பெயரில்லா சொன்னது…

அனைத்து ஹைகூக்களும் வெகு நேரம் வரையில்
இதயத்தில் கூவுகின்றன.