மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

ஏர் உழவன்


மொத உழவன்னைக்கு மறக்காம
அப்பா படத்துக்கு விளக்கேத்தும் ஆத்தா...

வெள்ளைக்காளை மயிலக்காளை ஜோடி
மச்சக்காளை அண்ணன் கையில்...

செவலைக்காளை பில்லைக்காளை ஜோடி
முத்துக்காளை அண்ணன் கையில்...

வயல் நோக்கிப் போகும் நுகத்தடி
பூட்டிய மாட்டுப் பின்னே ஏரோடு அவர்கள்...

அவர்கள் பின்னே அம்மாவும்...
மண்வெட்டியை தோளில்போட்டபடி நானும்...

வயலெங்கும் உழுது கொண்டிருக்கும்
அழகை ரசித்துக் கொண்டிருந்த என்னை...

என்னங்க உங்க மகனுக்கு என்னவோ
வரையணுமாம் என்ற குரல் எழுப்ப...

அப்பா ஏர் உழவன் படம் போடணுமாம்...
அவன் எப்படிப்பா இருப்பான்..?'

படம் கேட்டு நின்ற மகனின் கேள்வியில்
கலைந்த கனவு கண்ணீராய் இறங்கியது...

-'பரிவை' சே.குமார்.

34 எண்ணங்கள்:

எல் கே சொன்னது…

இப்படியொரு நிலை வரலாம் குமார் :(

ராமலக்ஷ்மி சொன்னது…

/மண்வெட்டியை தோளில்போட்டபடி நானும்...

வயலெங்கும் உழுது கொண்டிருக்கும்
அழகை ரசித்துக் கொண்டிருந்த என்னை.../

ம். நல்ல கவிதை.

r.v.saravanan சொன்னது…

good one kumar

ஆயிஷா சொன்னது…

நல்ல கவிதை..வாழ்த்துக்கள்.

Asiya Omar சொன்னது…

வயலான் கவிதை அருமை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

அன்று - கற்பனை!
இன்று - நிஜம்.
உண்மை சுடுகின்றது, குமார்!
வேறு என்ன சொல்ல?

Jaleela Kamal சொன்னது…

அருமையான படத்துடன் கவிதை சூப்பர்

ஆர்வா சொன்னது…

எவ்வளவு அருமையான விஷயத்தை தொலைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற ஆற்றாமையை விதைத்தது உங்கள் கவிதை

Pavi சொன்னது…

அவர்கள் பின்னே அம்மாவும்...
மண்வெட்டியை தோளில்போட்டபடி நானும்.
என்னை மிகவும் பாதித்த வரிகள்

நிலவு சொன்னது…

http://powrnamy.blogspot.com

சென்னை பித்தன் சொன்னது…

கால மாற்றத்தின் விளைவுகள் தவிர்க்க முடியாதவை,நண்பரே!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

congrats for the rhyme and 150 followers

சுசி சொன்னது…

என் பிள்ளைகளுக்கு நானும் கூகிளில் தான் வயலையும் வாழ்வையும் காட்டி இருக்கிறேன் :(

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல கவிதை குமார்

இப்பவே நிலமை இப்படித்தான் இருக்கு.

பெயரில்லா சொன்னது…

மனதை கனக்க செய்யும் பதிவு

பெயரில்லா சொன்னது…

பல ஊர்களில் பாரம்பரிய வயல்வெளிகள் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாறி வருவது கொடுமை

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

உழவர்களை இப்போதே புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் வயல்வெளிகள் எல்லாம் ரியல் எஸ்டேட் புண்ணியத்தில் அழிக்கப்பட்டு வீடுகளாகவும், கட்டிடங்களாகவும் மாறிவிடும்போது எதிர்கால சந்ததியினர்களுக்கு அந்த புகைப்படத்தை காட்டி ஆறுதலடைந்து கொள்ளலாம்.
நல்ல கவிதை....இன்றைய நிதர்சனத்தை சொல்லியது. வாழ்த்துக்கள் குமார்

Thenammai Lakshmanan சொன்னது…

ம்ம் அருமை குமார். எல்லாம் கலையும்கனவுகள்தான்..

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃவயல் நோக்கிப் போகும் நுகத்தடி
பூட்டிய மாட்டுப் பின்னே ஏரோடு அவர்கள்...ஃஃஃஃ

உண்மையில் இதிலுள்ள பழம் தமிழ் பலருக்க விளங்குமோ தெரியல.. கிராம நடையில் புளந்து கட்டுறிங்களே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)

அன்புடன் நான் சொன்னது…

மண்ணை நேசிக்கும் உங்க உணர்வுக்கு... என் மரியாதை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எல்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ராமலெஷ்மி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆயிஷா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஆசியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க நிஜாமுதீன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜலீலாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கவிதை காதலன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிலவு...
கண்டிப்பா வாரேன்... உங்க வருகைக்கு நன்றி.

வாங்க சென்னை பித்தன் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சி.பி...
முதல் வாழ்த்துக்கு நன்றி.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசிக்கா...
உண்மைதான்... இனி கூகிள்தான் காட்ட வேண்டும் நம் வயல்களை...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அக்பர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சதீஷ்குமார் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரஹீம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தேனம்மை அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ம.தி.சுதா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கவிஞரே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சித்தாரா மகேஷ். சொன்னது…

நல்லதொரு வரிக் கோர்ப்பு வாழ்த்துக்கள்..

எனது பதிவுலக அறிமுகத்தை தரிசிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன்

சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்

Pranavam Ravikumar சொன்னது…

Very Nice one Sir!

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//படம் கேட்டு நின்ற மகனின் கேள்வியில்
கலைந்த கனவு கண்ணீராய் இறங்கியது.//

...நல்ல உணர்வுள்ள கவிதை. சில நேரங்களில் கனவு கலையாமலே இருந்தால் நல்லதுன்னு தோணும்.

மோகன்ஜி சொன்னது…

உங்கள் ஏக்கமும் துக்கமும் என்னையும் தொற்றிக் கொண்டது

மனோ சாமிநாதன் சொன்னது…

கவிதையும் புகைப்படமும் மிகவும் அருமை!!

ரேவா சொன்னது…

அப்பா ஏர் உழவன் படம் போடணுமாம்...
அவன் எப்படிப்பா இருப்பான்..?'

படம் கேட்டு நின்ற மகனின் கேள்வியில்
கலைந்த கனவு கண்ணீராய் இறங்கியது...நல்ல கவிதை..வாழ்த்துக்கள்.

vidivelli சொன்னது…

நண்பரே நீண்ட நாட்களிற்கு பின் தொடர்புகொள்வதில் சந்தோசம்

நலமாய் இருக்கிறீங்களா?

நல்லாயிருக்குங்க........................நம்ம பக்கமும் வாங்க..............