மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 6 ஜூலை, 2015

மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு

சேனைத்தமிழ் உலா நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதையும் அந்தக் கதையையும் மனசில் பகிர்ந்திருந்தேன். அதற்கான பரிசுத் தொகையை நிர்வாகத்தினர் தில்லியில் இருக்கும் காயத்ரி அக்காவுக்கு அனுப்பி அவர் மூலமாக எனது மனைவியின் வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்துவிட்டது. சிறப்பாக போட்டியினை நடத்தி பரிசுத் தொகையையும் விரைவாய் அனுப்பி வைத்த சேனைத்தமிழுக்கு நன்றி.

கோதரர் ரூபன் அவர்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பெற்ற பரிசுக்கான பதக்கமும் சான்றிதழும் நான் ஊருக்குப் போவதற்கு முன்பே வந்து எங்கள் வீட்டில் ஆள் இல்லை என தபால்காரர் கொடுக்க மறுத்தபோதும் மனைவியின் அம்மா சண்டை போட்டு வாங்கி வைத்திருந்தார்கள். தற்போது அந்தப் பதக்கமும் சான்றிதழும் எங்கள் வீட்டு ஷோகேசை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. சிரத்தையுடன் அதுவும் அடிக்கடி போட்டிகள் நடத்தி சிறப்பாக செயல்படும் சகோதரர் ரூபன் மற்றும் நண்பர் யாழ்பாவாணன் அவர்களுக்கும் நன்றி.

ப்ரதிலிபி இணையத் தளத்தில் நானும் இணைந்திருக்கிறேன். என்னைப் பற்றியும் எனது பதிவுகளில் சிலவற்றையும் அங்கு பகிர்ந்திருக்கிறார்கள். அதற்கான இணைப்பையும் அவர்களது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். என்னைப் பற்றிய பகிர்வுக்கு இங்கே சொடுக்குங்கள். 
ப்ரதிலிபி தளம் அறிய இங்கு சொடுக்குங்கள். 

பாக்யாவில் தொடர்ந்து எனது கருத்துக்கள் மக்கள் மனசு பகுதியில் வெளிவந்து கொண்டிருக்கிறது. முகநூலில் கேள்வியைப் பகிர்ந்து அதற்கு வரும் கருத்துக்களில் சிறந்தவற்றை அழகாக தொகுத்தளிக்கும் திரு. எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு வாழ்த்துக்கள். 

திருச்செந்தூர் செல்லும் போது அங்கிருந்து ஒரு இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வனதிருப்பதி சென்று பெருமாளை தரிசித்து வந்தோம். இந்தக் கோவில் நம்ம சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி அவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு உண்டியல்கள் இல்லை. சிலைகள் அனைத்துமே மிக அழகாய் தத்ரூபமாய் இருக்கின்றன. மிகப்பெரிய இடத்தில் கோவில் அமைந்துள்ளது. உள்ளே ஹோட்டல்கள் கடைகள் எல்லாம் இருக்கின்றன. இருபது மாடுகளுக்கு மேல் வைத்துப் பராமரிக்கிறார்கள். மாட்டின் பால் அனைத்தும் அபிஷேகத்துக்கு மட்டும்தான் பயன்படுத்துகிறார்களாம். 

காக்கா முட்டை படம் பார்த்தேன். சேரிச் சிறுவர்கள் இருவரின் பீட்சா ஆசையும் அதன் பின்னான நிகழ்வுகளும் அதை அரசியலாக்கி லாபம் சம்பாதிக்க நினைக்கும் அல்லக்கைகளும், எம்.எல்.ஏவும் என நகரும் படத்தில் அந்த இரண்டு சிறுவர்களும் அருமையாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள். அதிலும் சின்னவன்... நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறான். கூடை மேல கூடை வச்சு கூடலூரு போன ரம்யா இதில் சேரிப்பெண்ணாக, வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பத் தலைவியாக அருமையாக நடித்திருக்கிறார். பேரன்களுக்கு பீட்சா செய்கிறேன் என தோசை மீது குடை மிளகாய் வைத்து செய்து கொடுக்கும் பாட்டி, பேரனின் கேள்வியோடு மரணத்தைத் தழுவி எல்லார் மனதிலும் நிற்கிறார். நல்லதொரு படம்.

போன வருடம் எனது சான்றிதழுக்கு அரபியில் சான்றிதழ் வாங்கும் முயற்சி எடுத்து ஒவ்வொரு படியாக மேலேறி கடையில் கல்வி அமைச்சகத்தில் எனது படிப்புக்கான அரபி சான்றிதழை வெற்றிகரமாக இன்று பெற்றுவிட்டேன். இதற்கான செலவு அதிகம்தான் என்றாலும் இனி அரசாங்க அலுவலத்தில் வேலைக்கு தீவிரமாக முயற்சிக்கலாம். சென்ற முறை இந்தச் சான்றிதழ் இல்லாமல்தான் கிடைக்க வேண்டிய வேலை கிடைக்காமல் போனது. பார்க்கலாம் இறையருள் இருந்தால் மீண்டும் அந்த அலுவலகத்திலே வேலை கிடைக்கும்.

ருக்குப் போகும்போது நிறுத்திச் சென்ற வேரும் விழுதுகளும் தொடர்கதையை மீண்டும் தொடரலாம் என்று நினைக்கிறேன். அடுத்த பதிவோ அல்லது அதற்கடுத்த பதிவோ இல்லை முன்பு போல் சனிக்கிழமையோ அடுத்த பகுதியைப் பதியலாம் என்று நினைக்கிறேன். இனிமேல்தான் எழுதணும்... எப்பவுமே அந்தந்த வாரம்தான் எழுதுவது வழக்கம் என்பதால் எழுதி பதிவிடுகிறேன். நான்கு அல்லது ஐந்து பகுதிகளோடு முடித்துவிடலாம் என்ற எண்ணம்... பார்க்கலாம் மனசுக்குள் வேர்விடுகிறதா என்பதை...

ந்த குருபெயர்ச்சியில் கடனை அடைக்க வேண்டும், நகைகளை திருப்ப வேண்டும், கிராமத்தில் வீடு கட்ட வேண்டும், நல்ல வேலையில் அமர வேண்டும், சிறுகதை தொகுப்பு கொண்டு வரவேண்டும், தொடர்கதையையோ அல்லது கிராமத்து நினைவுகளையோ புத்தகமாக்க வேண்டும் என ஏகப்பட்ட வேண்டும்... நிறைவேற வேண்டும்... குருவின் பார்வை கிடைக்கிறதா பார்ப்போம்.

மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.

24 எண்ணங்கள்:

சென்னை பித்தன் சொன்னது…

குருவருள் நிச்சயம் உண்டு
சாதனைகள் தொடரட்டும்

ஸ்ரீராம். சொன்னது…

ப்ரதிலிபி பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

மற்ற விஷயங்களும் சுவாரஸ்யம். எனக்கு இந்த குருப்பெயர்ச்சி போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை. எல்லா நாட்களும் நாளே என்று உங்களுக்கும் எல்லா நாட்களும் இனிதாக அமைய வாழ்த்துகள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

எல்லா வேண்டும் களும் நிச்சயம் நிறைவேறும். பல்வேறு பரிசுகள் வென்றமைக்கு வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அரசாங்க வேலை கிடக்கட்டும்... கிடைக்கும்...

எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்... வாழ்த்துகள்...

சாரதா சமையல் சொன்னது…

எல்லா ஆசைகளும் நிறைவேற வாழ்த்துக்கள் !!

Tamizhmuhil Prakasam சொன்னது…

பரிசுகள் பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள். உங்களது எண்ணங்கள் அனைத்தும் ஈடேறட்டும்.

இனிய வாழ்த்துகள் சகோதரரே.

Unknown சொன்னது…

#நம்ம சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி#
எல்லாம் தெரிந்த நீங்களுமா :)

UmayalGayathri சொன்னது…

முதலில் வாழ்த்துக்கள்

எல்லா ஆசைகளும் இவ்வருடம் நிறைவேறட்டும்...தொடர்கதையை தொடருங்கள்....நிறைய எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம் சகோ.

தம +1

துபாய் ராஜா சொன்னது…

விருதுகளுக்கு வாழ்த்துக்கள். விருப்பங்கல் நிறைவேற வேண்டுதல்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஒரே பதிவில் எவ்வளவு செய்திகள்? ஆச்சர்யம். தங்களின் முயற்சி இதுவரை வெற்றி பெற்றதுபோல தொடரந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Kavinaya சொன்னது…

பரிசுகள் பெற்றமைக்கும், மென்மேலும் சாதனைகள் படைக்கவும் மனமார்ந்த வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஜி...
ஜெயலெட்சுமியை மறக்க முடியுமா என்ன?
எல்லாரும் நன்கு அறிந்தவர் என்பதால் இந்த 'நம்ம்'
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

தெய்வத்தால் ஆகாது எனினும் உங்கள் முயற்சி, மனஉறுதி, வெற்றியைத் தரும்! வாழ்த்துகள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பரிசுகள் பல வென்றமைக்கு வாழ்த்துகள் நண்பரே! மேலும் மேலும் பல சாதனைகள் படைக்கவும், தாங்கள் விரும்பும் பலவும் நிறைவேறவும் குரு அருள்வார்....எங்கல் மனமார்ந்த வாழ்த்துகள்!