மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 2 செப்டம்பர், 2010

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(யார் மனதையும் புண்படுத்தாது என்ற மிகுந்த நம்பிக்கையில் எழுதப்பட்ட நகைச்சுவைப் பகிர்வு)

வருடம் : 2016
இடம் : சட்டசபை, சென்னை

'மத்தியில் கூட்டாச்சி... மாநிலத்தில் சுயாட்சி' என்ற தீவிர கொள்கைப் பிடிப்போடு இருக்கும் 'குடும்பக் கட்சி'யின் ஆட்சியில் எதிர்கட்சித் தலைவராக 'மலைநாடு மங்கை' கட்சியின் 'சும்மா'வுக்கு பிடித்தமான 'குங்குமப் பொட்டு' வெந்நீர் தனது பரிவாரங்களுடன் அடிக்கடி வெளி நடப்பு வெடியை பத்தவைத்துக் கொண்டிருந்தார். சும்மாவின் சுமைதாங்கிகளாய் 'இரண்டுங்கெட்டான்' கட்சியின் மகத்துவரும் 'மறுமலர்ச்சி'யே இல்லாத கட்சியின் கள்ளத்தோணியும் ஒரு சில எம்.எல்.ஏக்களுடன் கூட்டாஞ்சோறு ஆக்கிக் கொண்டிருந்தனர். 'ஆங்க்' கட்சித்தலைவர் விழிச்சகாந்த் மட்டும் 'நான் ஒருத்தந்தான் ஊரு...' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.மத்தியில் ஆட்சியை பகிர்ந்து கொடுத்தாலும் மாநிலத்தில் ஐஸ்கிரீமுக்கு ஏங்கும் குழந்தையாக இருக்கும் 'கதர்சட்டை' ஜால்ராவை தட்டும் பணியை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

சரி, இனி அங்கே என்ன நடக்குதுன்னு பார்ப்போம். காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை, இலங்கை பிரச்சினை என மூன்று முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் சன்லின் அழைப்பு விடுத்திருந்தார்.

கூட்டத்தில் பேசிய அழகர் (அப்பவும் இவரான்னு கேக்குறது தெரியுது... என்ன செய்ய வழி நடத்த ஆள் வேணுமே) நமது கழகத்தையும் நாட்டு மக்களையும் கட்டிக்காத்த நம்ம தலைவர் மஞ்சள்துண்டு அவர்கள் மக்களுக்காக வண்டியில் அமர்ந்தும் உழைத்தார்கள். அவர்களுக்கு இன்னும் மக்கள் சேவை..."

"எந்த மக்களுக்காக உழைத்தாருங்க..." முணங்கினார் இரண்டுங்கெட்டான் மகத்துவர்.

"என்ன மகத்துவரே... சொல்ல வர்றதை சத்தமா சொல்லுங்க"

"ஒண்ணுமில்லை யூ கண்டினியூ"

"மக்கள் சேவை செய்ய இன்னும் எண்ணமிருந்தாலும் அவரது உடல் ஒத்துக் கொள்ளவில்லை. மக்கள் சேவை மட்டுமே எனது தேவை என்றுதான் இருக்கிறார். அவர் விடும் மூச்செல்லாம் மக்கள் நலனுக்காத்தான் என்பதை நாடே அறியும்.இந்த நூற்றண்டில் மக்களே எல்லாம் என்று இருக்கும் இவரைப்போல் இன்னொரு தலைவர் பார்க்க முடியுமா? படுத்துக் கொண்டு எங்களுக்கெல்லாம் மக்களை வழி நடத்தும் முறைகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்."

'அவரா வீட்டுல இருப்பேன்னாரு... மவனே செத்தா முதல்வராத்தான் சாவேன்னு அடம்பிடிச்சவரை ஆண்டது போதுமுன்னு அடக்கியில்ல வச்சிருக்கோம்' மனசுக்குள் சொல்லிக் கொண்டார் முதல்வர் சன்லின்.

"அவரின் வாரிசு நம்ம முதல்வர் அப்பாவின் பாணியில் மக்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

"ஐயா அழகரே... உங்க குடும்பக்கட்சி புராணம் கேட்க நாங்க வரலை... முக்கிய பிரச்சினை குறித்து பேச வந்திருக்கோம். அதை விட்டுட்டு இதை பேசிக்கிட்டு... மக்கள் மக்கள்ன்னு மக்களை மாக்கானாக்காதீங்க... ஆங்க்..." கடுப்பில் கத்தினார் விழிச்சகாந்த்.

"இருங்க தம்பி... அவசரப் படாதீங்க... எங்க குலப் பெருமைய சொல்லிட்டு ஆரம்பிப்பமுல்ல..."

"அதுக்குள்ள நான் ஒரு தூக்கம் போட்டுடுவேன்" என்று பக்கத்திலிருந்த கிழங்கோவிடம் கொட்டாவி விட்டபடி முணங்கினார் வாசம்.

"சரி... மக்கள் பிரச்சினைக்கு வாறீங்களா வெளிநடப்பு செய்யட்டுமா" முணுங்கி முணுங்கி பேசினார் குங்குமப் பொட்டு வெந்நீர்.

"சரி... மக்கள் பிரச்சினை குறித்து முதல்வர் பேசுவார்"

"வணக்கம்... நமக்கு இப்ப இருக்கிற மூன்று முக்கிய பிரச்சினை இது. ஒண்ணு காவிரி நீர், இரண்டாவது முல்லைப் பெரியாறு, மூன்றாவது இலங்கை..."

"இதை வச்சே எத்தனை காலம்தான் ஓட்டுறது..." முனங்கினார் கண்மூடி.

"சும்மா இருமய்யா... நம்ம ஆட்சி நடக்குது எதிர் கட்சி மாதிரி பேசுறே..." கடிந்து கொண்டார் சங்கிலி கருப்பன்.

"ஆமா... குடும்பத்துல்ல உள்ளவன் எல்லாம் அமைச்சராயிட்டான். உனக்கு அறங்காவல்துறை எனக்கு தமிழ் வளர்ச்சித்துறையின்னு ஒண்ணத்துக்கும் உதவாத துறைகள்... இதுல கட்சிக்கு சப்போர்ட் பண்ணனுமாக்கும்..." கண்மூடி.

"என்ன பண்றது... சுகமா பொழச்சோம்.... இப்ப வாழவாவது வழி பண்ணிக் கொடுத்து இருக்காங்கள்ல... அதுக்காச்சும் சும்மா இருப்போம்" - சங்கிலி கருப்பன்

"அங்க பாரு... அடிகிரி நிதியமைச்சராம், குருவி போக்குவரத்துத் துறை, அடிகிரி மைந்தன் கல்வி அமைச்சர்... அப்புறம் அங்க பாரு மத்தியிலதான் ஜவுளிக்கு இடமுன்னா மாநிலத்துல சட்டத்துறை அமைச்சர் சூர்யநிதி, இதுக்கு மேல வம்சம் சுகாதரத்துறை, வம்சத்தை உருவாக்கிய கோவை கில்லாடி பொதுப்பணித்துறை..."

"என்னய்யா உங்கிட்ட வந்து உட்கார்ந்தது தப்பா போச்சு... அடிகிரி வேற ஒரு மாதிரி பாக்குது. தென்மாவட்டத்துல அது கால்ல கிடந்து நல்ல பேரு வாங்கி வச்சிருக்கேன். கெடுத்துடாதய்யா... சத்த சும்மா இருய்யா..." பதவிக்கு ஆப்பு அடிச்சிடுவாங்களோன்னு பயத்தோட முணங்கினார் சங்கிலி கருப்பர்.

"என்ன சங்கிலி, கண்மூடி என்ன சொல்றாரு..." என்றார் அடிகிரி.

"ஒண்ணுமில்லேன்னே... பைபாஸ் சர்ஜரி பண்ண எடத்துல வலிக்கிற மாதிரி இருக்காம்... அதான் சொன்னாரு..."

"நீங்க வேணா போய் ரெஸ்ட் எடுங்க" என்றார் அடிகிரி நக்கலாக.

"இல்ல இப்ப பரவாயில்லை..." எங்கே நம்ம போனா நிரந்தரமாக ஓய்வு கொடுத்துடுவாங்களோ என்ற பயத்தில் வேகமாக மறுத்தார் கண்மூடி.

"கேரளா பிரச்சினைக்கு நான் புதுசா ஒரு சொல்யூசன் வச்சிருக்கேன். அது என்னன்னா..." முதல்வர் சன்லின் பேச

"என்ன சம்மந்தம் பண்ணலாம்ங்கிறீங்களா?" நமட்டுச் சிரிப்புடன் கேட்டார் வெந்நீர்.

"கரெக்ட் வெந்நீர்... சும்மாகிட்ட சும்மா இருந்தாலும் அப்பப்ப உங்க மூளையும் நல்லா வேலை செய்யுது...அதுக்கு பாராட்டுக்கள்"

"பாராட்டு இருக்கட்டும்... இதெல்லாம் நடக்கிற வேலையா?"

"ஏன் முடியாது நாம முதல்ல பொண்ணெடுப்போம். அப்புறம் பொண்ணு கொடுப்போம்... சம்மந்திங்களா ஆயிட்டமுன்னா நமக்குள்ள சண்டை வராதுல்ல... இது குறித்து கேரள முதல்வருக்கு விரிவா ஒரு லெட்டர் எழுதியிருக்கேன்."

"நீயும் லெட்டர் கதை விடுறவன்தானா... ஐயோ" புலம்பினார் வாசம்.

"என்ன வாசம் தலைவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டது அதை அவ்வளவு சீக்கிரம் விட முடியுமா? சொல்லுங்க."

"அது சரி"

"அவருகிட்ட இருந்து நல்ல பதில் வருமுன்னு நினைக்கிறேன். அவரு ஓகே பண்ணிட்டா இரண்டு அரசும் சேர்ந்து ஒரு சட்டம் ஒன்று இயற்றி அப்புறம் சம்மந்தம் வச்சிக்கலாம்."

"சரி காவிரிக்கு என்ன திட்டம் இருக்கு... பேசாம ஒகேனக்கல்ல கொடுத்துட்டு காவிரி வாங்கிடலாமா..." கிழங்கோவன் கிளறினார்.

"அதுக்கு அவசியம் இல்லை... எப்பிடி இருந்தாலும் காவிரி டெல்டா பகுதிகள்ல நல்ல மழை பேஞ்சா அவங்கதானா திறந்து விடப்போறாங்க. அதனால வருஷா வருஷம் நல்ல மழை பெய்யணுமின்னு கோவில்கள்ல கெடாவெட்டி பூஜை போடச்சொல்லுங்க... அது போதும். "

"பார்றா... நல்ல திட்டமாவுல்ல இருக்கு. ஆமா குடும்பக்கட்சி ஆடு இலவசமா கொடுக்குமா?" மகத்துவர் கிண்டலடிக்க

"ஆமா கொடுத்த டிவி எல்லாம் ஓடாம கிடக்கு... இதுல ஆடு வாங்கி கொடுத்துட்டாலும்.. ஆங்க்..." விழிச்சகாந்த் மகத்துவருக்கு பதில் சொன்னார்.

"இலங்கை மக்கள் நலனுக்கான திட்டம் என்னன்னு சொல்லுங்க..." கள்ளத்தோணி.

"கள்ளத்தோணி இதுல எப்பவும் ஆர்வமானவரய்யா.... இது குறித்து பேச கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பிசின் தலைமையில ஒரு குழு இலங்கை போயிருக்கு. அதுல மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவிதாயினியும் தகவல் தொழில் நுட்ப அரசரும் போயிருக்காங்க..."

"ரெண்டு பேருமா... அது சரி... பேமிலி டிரிப்பா..." வெந்நீர் கேட்க

"ஏய் அதிகம் பேசாத மரியாதை கெட்டுடும்... யாரை தப்பா பேசுறே..." குதித்தது அடிகிரியும் வம்சமும்.

"விடுங்கப்பா... அவரா பேசுறாரு... சும்மா சொல்லிவிட்டிருக்கும்"

"இந்த பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?" என்றார் விழிச்சகாந்த.

"உங்ககிட்ட விட்டா இலங்கைக்கு நேர போயி ஒரே ஆளா தீர்த்து வச்சிருப்பீங்க... யாருக்கு தெரியுது" மகத்துவர் பிட்டைப் போட

"சும்மா இருய்யா... நம்ம பிரச்சினைக்கு விருதாச்சலம் இருக்கு... இங்க வேண்டாம்"

"சரி... முக்கிய பிரச்சினையின்னு சொல்லிட்டு கோமாளித்தனமா பேசத்தானா கூப்பிட்டிங்க. நாங்க கிளம்புறோம்" வெந்நீர் எழு,பின் தொடர்ந்த சும்மாவின் அடிபொடிகளிடம் "இப்பவே அம்மாவுக்கு போனைப் போட்டு நாளைக்கு யார் பேர்ல இது குறித்து கட்டுரை எழுதலாமுன்னு கேட்டு குடும்பக்கட்சியை கிழிக்கிறோம்". மெதுவான குரலில் சொன்னார்.

"அப்பா எனக்கு அஜீத் பட சூட்டிங் இருக்கு... இப்பவே லேட்டாயிடுச்சி... வரட்டா..." குருவி பறக்க,

"ஐய்யய்யோ... இன்னும் ரெண்டு நாள்ல லண்டன்ல நடக்குற தந்திரன் பாடல் கேசட் வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு இருக்கு அதுக்கு லண்டன் போகனும் நான் கிளப்புறேன்" என்றது சூர்யநிதி.

சூட்டிங் போகணும் என்று வம்சமும், விஜய்கிட்ட அடுத்த படம் குறித்த டிஸ்கஷன் இருக்கு என்று அடிகிரி மைந்தனும் பறக்க

"இன்னேரம் ரெண்டு கட்டப் பஞ்சாயத்து பண்ணி காசு பாத்திருக்கலாம்" என்று அடிகிரியும், கோவை கில்லாடியும் கிளம்ப

"பாரு எல்லா அமைச்சரும் தொழிலுக்கு போயாச்சு. மக்கள் பிரச்சினை ஊறுகாய் மாதிரி அப்பப்ப இப்படி ஒரு அலம்பல். இனி அடுத்து எப்பன்னு தெரியலை இதை நாம செய்தியா போடணும், நாம போடலைன்னாலும் இன்னேரம் குடும்பத் தொலைக்காட்சியில பிளாஷ் நியூஸ் வந்திருக்கும். அப்புறம் நாளை கரனும், முரசும் பக்கம் பக்கமா எழுதும்... நாமலும் எழுதத்தானே வேணும்." என்று முணங்கியபடி இரண்டு நிருபர்கள் வண்டியை எடுத்தனர்.

-'பரிவை' சே.குமார்.

போட்டோஸ் : கூகிள்

16 எண்ணங்கள்:

Priya சொன்னது…

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...சோ ரியலி என்ஜாய்ட்!

Chitra சொன்னது…

ஆட்டோ அனுப்புவதும், சகஜமப்பா! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

vanathy சொன்னது…

அரசியலா? எனக்கு ரொம்ப அலர்ஜியான டாப்பிக்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரியா மேடம்....
ஆமா.... இதெல்லாம் தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ரா மேடம்
ஆட்டோவா...
அதுசரி...
எப்ப வரும்?
நமக்கு பிளைட் அனுப்பனுங்கோ.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
இது அரசியல் இல்லைங்க... சும்மா தமாஷூ... அம்புட்டுத்தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெறும்பய சார்...
சாரி நண்பர் வெறும்பயன்னு சொல்ல முடியலை. யாரும் வெறும்பய கிடையாது. திறமையுள்ள ஆள் தான் நீங்கள். அதனால்தான் இந்த சார்.
ஆமா... எல்லாம் சகஜம்தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vinu சொன்னது…

captionai "no politics please" appudeenu pottu irrukalam poruthama irunthu irrukkum

சுசி சொன்னது…

அரசியல்.. ஹிஹிஹி..

நல்லா எழுதி இருக்கீங்க குமார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வினு...
அதுசரி... இதுவும் நல்லாத்தான் இருக்கு.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசி மேடம்....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Menaga Sathia சொன்னது…

சூப்பர்ர் நல்லா எழுதிருக்கிங்க...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

எனக்கு இந்தக் கதை புரியவேயில்லை!
(ஐ ஆம் எஸ்கேப்!)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகா மேடம்..
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாமுதீன்...
இது அரசியல் இல்லைங்கண்ணா... நகைச்சுவைதானுங்கண்ணா...
நம்பி படிக்கலாம்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.