பிரச்சினைகளுக்கு இடையே நகரும் வாழ்க்கையில் நேற்றைய நாள் நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களைச் சந்தித்து நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நாளாக அமைந்தது. சகோதரர் பிலால் அலியார் துபையிலிருந்து பஹ்ரைனுக்குப் பதவி உயர்வுடன் மாறிச் செல்வதற்காக ஆசிப் அண்ணனின் 'சத்திரத்தில்' சிறியதாய் ஒரு பிரிவு உபச்சார விழா, மனநிறைவாய் நடந்தது.
மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 7 நவம்பர், 2021
வெள்ளி, 17 பிப்ரவரி, 2017
மனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்
இன்று சிற்றிதழ்கள் என்னும் ஒரு பக்கம் மெல்ல மெல்ல அழிந்து வரும் நிலையில் அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக இருப்பவர்தான் அலைனில் இருக்கும் அன்பின் ஐயா பெரம்பலூர் கிருஷ் ராமதாஸ் அவர்கள். இதற்கான முயற்சியாய் சிற்றிதழ்களைத் தொகுப்பதும் அவை குறித்து விரிவாய் முகநூலிலும் தனது வலைப்பூவிலும் எழுதி சிற்றிதழ் ஆசிரியர்களை ஊக்குவிப்பதில் எனக்குத் தெரிந்து மிக முக்கியமானவர் ஐயாதான். சிற்றிதழ்களை பரவலாய் வெளிவரச் செய்து அவற்றின் உயிர்ப்பை பிரகாசமாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். அதன் ஒரு முயற்சியாக ஜனவரி மாதத்தில் 'சிற்றிதழ்கள் உலகம்' என்னும் சிற்றிதழை ஆரம்பித்து இருக்கிறார். முதல் இதழின் வெளியீடு எல்லா நாட்டிலும் நண்பர்களால் நிகழ்த்தப்பட்டது.

சிற்றிதழ்கள் எதுவானாலும் அவற்றின் பிடிஎப் அவர் கைக்கு கிடைத்ததும் நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பிக் கொடுப்பார். அப்படி அவர் அனுப்பும் பலரில் அடியேனும் ஒருவன். எத்தனையோ இதழ்களை எனக்கு அனுப்பியிருக்கிறார். அவற்றை வாசித்தாலும் அவற்றைக் குறித்து இதுவரை நான் அவரிடம் பேசவில்லை என்பது எனக்கு வருத்தமே. ஒருவர் நமக்கு தொடர்ந்து அனுப்பும் போது அதுகுறித்தான நமது பார்வை என்ன என்று அறியும் ஆவல் அவருக்கு கண்டிப்பாக இருக்கும், அப்படியிருக்க நாம் அது குறித்து பேசவில்லை என்றால் நமக்கு அவர் அனுப்பும் இதழ்கள் மீது ஆர்வமில்லை என்றுதான் எடுத்துக் கொள்வார்கள். ஐயாவுடன் முகநூலின் மூலமாக நிறைய பேசியிருக்கிறேன் ஆனாலும் இதழ்கள் குறித்து அவருடன் பேசவில்லை என்பதே உண்மை.
சிற்றிதழ்கள் உலகம் வெளியாகும் போது என்னை அபுதாபியில் நண்பர்களை வைத்து வெளியிட்டு போட்டோ அனுப்பச் சொன்னார். நானும் புத்தகத்தை பிரிண்ட் எடுத்து வந்தேன். கனவுப் பிரியன் அண்ணாவுடன் சேர்ந்து செய்யலாம் என்று நினைத்திருந்தபோது சல்லிக்கட்டு பிரச்சினை வர, களத்தில் இருந்த நண்பனுடன் தொடர்பில் இருந்த நிலையில் புத்தக வெளியீடு பற்றி யோசிக்கவில்லை. சிற்றிதழ்கள் உலகம் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்து சில எதிர்பாராத சுனாமியால் பல பிரச்சினைகளைச் சந்தித்து பழைய அறையில் இருந்து வெளியாகி புதிய அறைக்குச் சென்ற சூழலில் எழுத முடியாமல் அடுத்தடுத்து பல நிகழ்வுகள், பண நெருக்கடி பிரச்சினைகள் எழ, முகநூலில் ஐயாவின் பகிர்வுகளைப் பார்க்கும் போதெல்லாம் அபுதாபியில் வெளியிட்டு போட்டோ அனுப்புங்கள் என்று சொன்னவருக்கு நாம் கொடுத்த மரியாதை இதுதானா என்று மன வருத்தம் கொண்டது உண்மை. இனிமேல் அதை வெளியிட்டு போட்டோ எடுத்து அனுப்புவது சரியல்ல... காரணம் உலகளவில் சிற்றிதழ்கள் உலகம் பிரபலமாயாச்சு...
சிற்றிதழ்கள் இப்போது பரவலாய் வர ஆரம்பித்திருக்கின்றன... நிறைய சிற்றிதழ்கள் இலங்கையிலிருந்தோ... உலக நாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் மூலமாகவோ வருகின்றன என்று நினைக்கிறேன். சிற்றிதழ்கள் கவிதை, கட்டுரைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. கதைகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். ஐயா தனது இதழில் சிறுகதைகளுக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தார். அதுவும் அவர் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை முதல் இதழில் வெளியாகியிருந்தது. இதழ் மிக சிறப்பாக வந்திருந்தது. இதழ் குறித்தான விரிவான பார்வை ஒன்றைப் பகிரத்தான் ஆசை... அது குறித்து எழுதவே எண்ணியிருந்தேன். இப்போதைய சூழல் வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் இன்னும் பற்றற்ற நிலையையே அளித்திருக்கிறது, அதனால்தான் வாசிப்பில், எழுதுவதில் சிறு தடங்கல்.

கல்லூரியில் படிக்கும் போது 'மனசு' அப்படின்னு கையெழுத்துப் பிரதி நடத்தி, கல்லூரியில் ஆசிரியர், மாணவர்களிடம் மனசுக்கு செல்வாக்குப் பெற்று வைத்திருந்தோம். மிகச் சிறப்பான இதழாக 12 காப்பிகள் போட்டோம். கையினால் எழுதி, அதை பிரிண்ட் எடுத்து புத்தகமாக்கி வெளியிட்டு வந்தோம். ஆறு நண்பர்களின் கூட்டு முயற்சியால் மிகச் சிறப்பான இதழாக மனசு வெளியானது. அப்போது எங்கள் கல்லூரியில் ஏகப்பட கையெழுத்துப் பிரதிகள்... சீனியர்ஸ், ஜூனியர்ஸ் என ஆளாளுக்கு புத்தகம்... நூலகத்தில் எல்லா இதழ்களும் இருக்கும். இதழாளர்களுக்குள் போட்டியும் இருந்தது. நவநீ, கவி'தா', ரோஜா என இன்னும் இன்னுமாய் பல இதழ்கள். கவி'தா' இதழ் நடத்திய நண்பர் பரக்கத் அலி சிறுகதைப் போட்டி வைத்து அதில் தேர்வான கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கி வெளியீட்டு விழா எல்லாம் வைத்தார். இப்போது கல்லூரியில் அப்படி கையெழுத்துப் பிரதிகள் இருக்கான்னு தெரியலை. மனசுங்கிற பேர் என் மனசுக்குள் ஓட்டிக் கொள்ள என் வலைப்பூவும் 'மனசு' ஆனது,
சிற்றிதழ்கள் உலகம் மிகச் சிறப்பான சிற்றிதழாய் வெளிவர வாழ்த்துவதுடன் இன்னும் நிறைய படைப்புக்களுக்கும் சிற்றிதழ்களுக்கும் அது வாசல் திறந்து விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
அவரின் வலைப்பூ... சிற்றிதழ்கள் உலகம்
சிற்றிதழ்கள் உலகம் இதழை வாசிக்க விரும்பும் நண்பர்கள் எனக்கோ அல்லது ஐயாவின் தளத்திலோ விருப்பம் தெரிவித்து மின்னஞ்சல் முகவரி அனுப்பினால் உடனே அனுப்பி வைக்கப்படும்.
-'பரிவை' சே.குமார்.
வெள்ளி, 17 ஜூலை, 2015
தமிழ்க்குடில் நடத்தும் கட்டுரைப் போட்டி

அன்புத்தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகியின் அன்பு வணக்கம்.
திரு. காமராசர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப்போட்டியின் விவரங்களைத்தங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தங்களுடைய தொடர்ந்த ஒத்துழைப்பை வேண்டுகிறோம். தங்கள் நட்புகளிடமும் போட்டி பற்றிய விவரங்கள் பகிரவும்.
திரு காமராசர் அவர்களின் 112வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப்போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
தலைப்பு
1. தனி மனிதனாகக் காமராசர்
2. தேசியத் தலைவராகக் காமராசர்
3. நிர்வாகியாகக் காமராசர்
4. அரசியல்வாதியாகக் காமராசர்
விதிமுறைகள்
1. போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்.
2. குறைந்தது 3 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
3. படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்காக பிரத்யேகமா எழுதி அனுப்பவேண்டும்.
4. கட்டுரைகள் காப்பி பேஸ்ட்டாக இல்லாமல் தங்கள் வாழ்வில், உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில் கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.
5. படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச் செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.
6. படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்ப வேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.
7. படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 15.08.15
8. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தனிச்சின்னம் பொறிக்கப்பட்ட பதக்கம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி போட்டிக்காக வரும் கட்டுரைகளில் சிறந்தபடைப்புகள் தேர்வு செய்யப்பட்டு நூலாகவும் அச்சிடப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும் ,பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.
நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் மற்றவர்களையும் எழுத ஊக்குவித்து இந்தப்போட்டியினை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.
அனைவரும் கல்ந்து கொண்டு போட்டியினை சிறப்பித்து பரிசுகளை வெல்லுங்கள்...
நன்றி.
நட்புக்காக இந்தப் பகிர்வு....
-'பரிவை' சே.குமார்.
ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013
நண்பா... நண்பா...
இன்று நண்பர்கள் தினமாம்... முதலில் அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

கல்லூரியில் சேர்ந்த முதல் நாள்.. வகுப்பறையில் எனக்கு அருகில் அமர்ந்திருந்தவன் மெதுவாக நான் அண்ணாத்துரை, காளையார் கோவிலுக்கு அருகே கடம்பங்குளம் என்றான் சினேகமாக... நானும் சினேகமானேன். பின்னர் அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தவன் நான் சேவியர், சூராணத்துல இருந்து வாரேன் என்றான். மூவரும் நண்பர்களானோம்.. அண்ணாத்துரையும் சேவியரும் இராம்நகரில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து சமைத்து சாப்பிட்டு தங்கிப் படித்தனர்.
சில நாட்கள் மெதுவாக நகர, ராமகிருஷ்ணன், முத்தரசு பாண்டியன், ஆதிரெத்தினம், திருநாவுக்கரசு, பிரான்சிஸ், நவநீதன் என எங்கள் நட்பு வட்டம் விரிந்தது. எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை திருவாடானை, தேவகோட்டை எனத்தான் அணிகள் பிரியும்... பின்னர் அடித்துக் கொள்ளவும் செய்யும். ஆனால் எங்கள் வகுப்பில் புதுமையாக தேவகோட்டையே இரண்டு பிரிவாக ஆகி இதில் ஐந்து... அதில் ஐந்து... என மோதிக் கொண்டிருந்தது. எங்கள் அணி ஆசிரியர்களுக்குப் பிடித்த அணியாக இரண்டு துருவங்களுக்கும் நடுவில் பொதுவான அணியாக இருந்தது.
எப்பவும் ஜாலிதான்... பங்காளி, மாப்பிள்ளை என்ற உறவு முறைகளுடன் சந்தோஷமாக கழிந்தன கல்லூரி நாட்கள். எங்கள் நட்பு வட்டத்தில் எல்லாருடைய வீட்டிலும் சென்று தங்கி சந்தோஷமாகக் கழித்திருக்கிறோம். எங்களுக்குள் சாதி மதங்கள் எல்லாம் தடையாக வரவில்லை. மதியம் சாப்பிடும் போது யாருடைய சாப்பாடு யாருடைய கையில் என்றெல்லாம் பார்ப்பதில்லை எல்லாருடைய சாப்பாட்டையும் எல்லாரும் பகிர்ந்து சாப்பிடுவோம். எப்பவும் ஆதியின் சாப்பாடு அவன் கைக்குச் செல்வதே இல்லை... எங்களிடமே முடிந்துவிடும்.
காலையில் நானும் ராம்கியும் பேருந்து நிலையத்துக்கு எதிரே சைக்கிளில் காத்திருப்போம். நண்பர்கள் பேருந்தில் வந்து இறங்க, எல்லாப் பிரிவு பசங்களும் எங்களுடன் நட்பாக இருப்பார்கள் பதினைந்து இருபது பேர் கூட்டாக வருவோம். நான் சைக்கிளில் இருக்க, சைக்கிள் கேரியர் எல்லாம் நண்பர்களின் நோட்டுக்களால் நிறைய இரண்டு பக்க தோளிலும் நண்பர்கள் கை போட்டுக்கொள்ள சைக்கிளை ஓட்டாமலே கல்லூரி வந்து சேரும்... முத்தரசும் திருநாவும் அரசியலை அக்குவேர் ஆணிவேராக ஆராய்வார்கள். மெதுவாக எதையாவது கிளப்பிவிட்டுவிட்டால் போதும் கல்லூரி வந்து சேர்வதே தெரியாது. அனல் பறக்கும் விவாதத்தின் முடிவு எப்பொழுதுமே தெரிவதில்லை.
தீபாவளி வருகிறது என்றால் ஊதுபத்தியும் வெடியும் ஆதியின் கைகளில் எப்பவும் இருக்கும். எங்கு வைப்பான் எப்படி வைப்பான் என்பது எங்களைத் தவிர யாருக்கும் தெரியாது. சரியாக வெடிக்க வேண்டிய நேரத்தில் வெடிக்கும். அதே போல் ஏப்ரல் முதல் தேதி பெரும்பாலும் உஜாலா பாட்டில் வாங்கி வந்துவிடுவார்கள். பிரின்ஸ்பால்கூட உஜாலாவில் குளித்திருக்கிறார்.
வகுப்புக்குக் கட் அடித்து விட்டு பிள்ளையார்பட்டிக்கு சைக்கிளில் பயணித்தது, பிரான்சிஸ்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது எல்லாரும் அவன் வீட்டில் போய் இருந்தது, கல்லூரிக் கடைசி நாளில் காரைக்குடிக்கு சினிமாவுக்குச் சென்றது, கவிதைப் போட்டிகள் கட்டுரைப் போட்டிகள் மாறு வேடப் போட்டிகளில் யாராவது ஒருவர் கலந்து கொள்ள எல்லாரும் தூண்டுதலாய் இருந்தது... கல்லூரி ஆசிரியரைப் பார்த்து சில்வர் பிளஸ் என்று சொல்லி அதற்காக ஒருநாள் பேருந்து நிலையத்துக்கு எதிரே வாங்கிக் கட்டிக் கொண்டது என இன்னும்... இன்னும்... சொல்லிக் கொண்டே போகலாம்.
அண்ணாத்துரையை எனது திருமணத்திலும் பின்னர் அவனது திருமணத்திலும் சந்தித்ததோடு சரி. சேவியர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்திருப்பதாகக் கேள்வி, ஆதி திருவாடானையில் ஐயப்பன் கோவில் பூசாரியாக இருக்கிறான். திருநாவின் திருமணத்திற்கு ஊருக்குப் போய் வந்தேன். பிரான்சிஸ் பெங்களூரில் இருக்கிறானாம். ராம்கி எங்கிருக்கிறான் யாருக்குமே தெரியவில்லை, நவநீதன் அ.தி.மு.க. வழக்கறிஞராக காளையார்கோவிலில் இருக்கிறான். போனில் சிலமுறை பேசியிருக்கிறேன். முத்தரசு பாண்டியனை அடிக்கடி சந்திப்பேன். ஏனென்றால் தேவகோட்டையில் வழக்கறிஞராக இருக்கிறான்.
எல்லாருடனும் மீண்டும் உறவைப் புதுப்பித்துக் கொள்ள ஆசை அதிகமிருக்கிறது. ஒரு மாதம் விடுமுறையில் ஊருக்குச் செல்லும் போது நமக்கான வேலைகள் திரும்பி வரும்வரை சிறகடித்துப் பறக்கின்றன... எங்கே தேடுவது. பங்காளிகளும் மாப்பிள்ளைகளும் இன்னும் மனசுக்குள் அதே உரிமைகளையும் நட்பையும் கொண்டிருக்கிறார்கள்.
நண்பர்களே எங்கிருந்தாலும் சந்தோஷமாய் இருக்கள்... உங்கள் வாழ்க்கை சிறக்கட்டும்.
ம்.... இன்னும் சிலரை சொல்லமல் போவது நட்புக்கு அழகல்லவே... என்னில் கரைந்த மற்றவர்களில் முக்கியமானவன் கரு.முருகன், படிக்கும் காலத்திலும் கல்யாணத்துக் முன்னரும் எந்நேரமும் இருவரும்தான் ஒன்றாகச் சுற்றுவோம். தேவகோட்டைக் கல்லூரி தமிழ்த்துறையில் பணிபுரிகிறான். எங்கள் நட்பில் இடையில் சிறிய விரிசல் வந்து தற்போது எப்பவும் போல் தொடர்கிறது.
மனசு கையெழுத்துப் பிரதி நடத்த நாங்கள் ஆசிரியர் குழு அமைத்து வெற்றிகரமாக இரண்டு வருடங்கள் இதழ் நடத்தினோம். அதில் ஆசிரியர்களாக இணைந்த இளையராஜா, அம்பேத்கார், பிராபாகரன் மூவரும் அருமையான நண்பர்கள்... இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்கு மட்டுமல்ல முருகனும் தெரியவில்லை.
மேலும் எங்கள் இதழில் ஆசிரியராக இருந்த சுபஸ்ரீ, நல்ல தோழி, எதற்கும் பயப்படாதவர். தற்போது வங்கிப் பணி, இடையில் தேவகோட்டைக்கு வருவாராம் ஐயா வீட்டிற்குச் செல்லும் போது அம்மா சொல்வார்கள்.
தினமும் கல்லூரி முடிந்ததும் நாங்கள் கூடும் இடம் எங்கள் ஐயா வீட்டில்தான். ஐயாவுடன் சில பல விவரங்கள் பேசுவதுடன் எங்களுக்குள் பேச்சு அரட்டை என சந்தோஷமாக கழிந்த தினங்கள் அவை. முருகன், சுபஸ்ரீ, கனிமொழி, அன்பு அண்ணன், தமிழ்குமரன், பார்த்தீபன், மணிவாசகன், மணி மேகலை என தனி நட்பு வட்டம் கல்லூரிக்கு வெளியேயும் இருந்தது.
எத்தனை சந்தோஷமான நாட்கள் அவை.... நட்பே எங்கிருக்கிறாய்....?
இணைய நட்புக்களுக்கும் என் இனிய நட்புக்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
-'பரிவை' சே.குமார்.
ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011
இதயத் துடிப்பே...
காலத்தின் பயணத்தில்
வசந்தங்களும்
கோடைகளும்
வந்து வந்து போகும்...
வசந்தங்களும்
கோடைகளும்
வந்து வந்து போகும்...
வாழும் வாழ்வில்
சொந்தங்கள் எல்லாம்
பல நேரம் சுடராகவும்
சில நேரம் சுடவும் செய்யும்...எதிர்பார்ப்புகளைத் துறந்து
இதயத்தில் அமர்ந்து
இன்பத்தில் இணைந்தும்
துன்பத்தை தனதாக்கியும்
வாழும் உறவு...
மறைத்து வாழத் தெரியாமல்
மறுத்து வாழ நினைக்காமல்
உயிரோடு உயிராய்
வாழும் உறவு...
எத்தனை கோபம்
என்றாலும்
அத்துனையும் மறந்து
அரவணைக்கும் உறவு...
நீ...நான்...
உன்னது... என்னது...
உனக்கு.. எனக்கு...
என்ற பதங்கள் துறந்து
நாம்... நமது...
நமக்கு...
என வாழும் உறவு...
சுக துக்கத்தில்
நம்மோடு வாழும்
முகம் தெரிய
கணிப்பொறி உறவு...
ரத்த உறவுக்கு மத்தியில்
அழுத்த உறவாய் வாழும்
அமுத உறவே நட்பு...
(ஆகஸ்ட் முதல் ஞாயிறு (07/08-2011) நண்பர்கள் தினம். என் இனிய நட்புக்களுக்கு நம் நாள் வாழ்த்துக்கள்.)
-'பரிவை' சே.குமார்.
Thanks - Photos From Google
வியாழன், 11 நவம்பர், 2010
நண்பேன்டா...
நெருக்கமாக... பாதியாக... பார்த்துப் பழகிய... பயணங்களில் வாய்த்த பக்கத்து இருக்கை நட்புக்கள் என நம்முடைய நட்புத்தான் எத்தனை ரகம்... மனதில் பூத்த நட்புக்கள் எல்லாம் மனசுக்குள் இறங்கி செல்லத்தான் செய்கின்றன நினைவுகளில்...
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்கு நட்பாய் இருந்தவர்கள் பலர் கல்லூரிக் காலத்தில் கரைந்து போனார்கள். புதிய நட்புக்கள் உதயமாயின... மூன்றாண்டுகளில் எத்தனையோ நட்புக்கள் எனக்குள் பதியமிடப்பட்டாலும் வெளியில் வரும்போது சில நட்புக்கள் மட்டுமே முளை விட்டிருந்தன.
எங்கள் வகுப்பில் மொத்தம் இருபது மாணவர்கள் பதினோரு மாணவிகள் எல்லாரும் முதல் மூன்று மாதங்கள் நட்பாய்த்தான் இருந்தோம். அதன்பின் மாணவர் அணியில் ஐந்து ஐந்தாய் இரண்டு பிரிவுகள் உதயமாகி அடிதடிகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. மிஞ்சிய பத்துப் பேரில் நானும் ஒருவன். நாங்கள் பத்துபேரும் நகமும் சதையுமாக இருந்தோம். ஒன்றாக கல்லூரி செல்வது... ஒன்றாக சாப்பிடுவது என்று இருந்தோம்... ஏனோ தெரியவில்லை கல்லூரி படிப்பிற்குப் பிறகும் தொடர்ந்த எங்கள் நட்புக்கள் இன்னும் மனசுக்குள் பூத்திருந்தாலும் சந்திப்புக்களும் பேச்சுக்களும் குறைந்து நாளாகிவிட்டன என்பதே உண்மை.
இன்றும் தேவகோட்டை கல்லூரிப் பக்கம் போகும்போது அந்த மரத்தடி அரட்டைகள் மனதை நனைக்கத்தான் செய்கிறது. இந்த நண்பர் வட்டத்தில் குறிப்பிடத்தக்கவன் ஆதிரெத்தினம், திருவாடானையில் இருந்து வந்த நண்பர்கள் வட்டத்தில் மிகவும் அன்னியோனமானவன். பெரும்பாலான நாட்கள் என் வயிற்றை நிரப்பியது அவன் கொண்டு வரும் சாதம்தான். எங்களுக்காகவே பெரிய டிபனில் கொண்டுவருவான். எங்கள் சாதத்தை அவன் சாப்பிடுவான். நல்லா கவிதை எழுதுவான். நாங்கள் நடத்திய 'மனசு' கையெழுத்துப் பிரதியில் ஆதவன் என்ற பெயரில் அவன் எழுதிய கவிதைகள் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.
கலாட்டாவுக்கு பெயர் போன நண்பன். போலீஸ் விசிலை வைத்துக் கொண்டு மதியவேளைகளில் அவன் செய்யும் ரகளைக்கு அளவேயில்லை. இன்றும் திருவாடானையில் அய்யப்பன் கோவிலில்தான் இருக்கிறான். அவனுக்கு குழந்தை பிறந்தப்போ தேவகோட்டையில் வைத்துப் பார்த்தது. தொடர்பு எல்லைக்கு உள்ளே இருந்தாலும் தொடர்புக்கான எண் இல்லை. ஒவ்வொரு முறை செல்லும் போதும் திருவாடனை சென்று ஆதி, திருநாவை சந்திக்க மனசு நினைக்கும் ஏனோ தட்டிக்கொண்டே போய்விடும்.
எங்களது துறையின் செயலராக இருந்தவன் நாச்சாங்குளம் ராமகிருஷ்ணன். இவனது வீட்டில நாள் கணக்காக தங்கியிருந்திருக்கிறோம். இவனது குடும்பத்தினர் வெள்ளந்தி மனிதர்கள். இவனுக்கு கல்லூரி முடியப் போகும்போது எங்களுடன் படித்த தோழியுடன் காதல் வந்தது. ஏனோ தெரியவில்லை சில மாதங்கள்கூட நீடிக்கவில்லை. இவனை செயலராக்கியதில் மட்டுமே எங்கள் சூரத்தனம் இருக்கும். மற்றவற்றில் நாங்கள் தலையிடுவதில்லை.
செயலர் தேர்தல் என்றதும் அஞ்சு குழு ரெண்டும் தனித்தனியே எங்களிடம் வந்து ஆதரவு கேட்டது. அப்பதான் யோசித்தோம். அவங்க அஞ்சு, நாம பத்து... நாம யாருக்கு சப்போர்ட் பண்றோமோ அவங்க ஜெயிப்பாங்க... அத ஏன் நம்மள்ள ஒருத்தன் நிக்கக்கூடாது என்று நாங்கள் முடிவெடுத்து இவனை நிறுத்தினோம். தோழியரின் ஆதரவும் எங்களுக்கே... அஞ்சு குழுக்களும் சரி நாம நின்னா ஜெயிக்க முடியாது என்று எங்களை ஆதரிப்பதென முடிவெடுத்ததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவன். இப்போது நினைவில் நின்றாலும் நிஜத்தில் நாங்கள் சந்தித்து காலங்கள் ஆகிவிட்டன.
அண்ணாத்துரை... எனக்கும் இவனுக்குமான நெருக்கம் சற்றேவித்தியாசமானது.. ஏனோ அப்படி ஒரு நெருக்கம்... பரமக்குடி ரோட்டில் சிலுக்குவார்பட்டியில் இருந்து தாயமங்கலம் போகும் ரோட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து வந்து அறை எடுத்து தங்கியவன் எனக்குள் ஐக்கியமாகிவிட்டான். அவன் என் வீட்டிலும் விடுமுறைகளில் நான் அவன் வீட்டிலும் தங்கிய நாட்கள் அதிகம். உறவுகள் விரிந்து அக்கா வீடுகள் வரை சென்றது. அவனது தந்தை விளையும் பொருட்களை எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வருவதும் என் தந்தை அவன் இல்லம் போய் வருவதும் தொடர்ந்தது. அவனது திருமணத்தில் பார்த்தது... பின்னர் போனில் சில காலம் வரை தொடர்பில் இருந்தோம்... அதன்பிறகு அதுவும் குறைந்து மனங்களில் மட்டுமே வாழ்கிறோம். கண்டிப்பாக எனக்குள் இருக்கும் அவனின் நினைவுகளைவிட அதிகமாய் அவன் இதயத்தை நான் ஆக்கிரமித்திருப்பேன். அண்ணாத்துரையுடன் இருந்த சேவியர், சிவகங்கையில் வழக்கறிஞராக இருக்கும் எனது ஒரே மாப்பிள்ளை உருவாட்டி நவனீதன் எல்லாரும் என் மனதுக்குள் ஓவியமாய் இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் எங்கள் நட்பில் தேவகோட்டையில் வழக்கறிஞராக இருக்கும் முத்தரசு பாண்டியனை மட்டுமே நான் ஊருக்குச் செல்லும் போது சந்தித்து வருகிறேன். ராம்நகர் பிரான்ஸிஸை அவன் மனைவியுடன் ஒருமுறை பார்த்தேன், இப்போ அவன் பெங்களூரில் இருப்பதாக கேள்விபபட்டேன். காளையார் கோவில் பச்சைமுத்து முன்பு அங்கு மெடிக்கல்ஸ் வைத்திருந்தான். இப்போ எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை.
கல்லூரி முடியும் காலத்தில் அவர்களெல்லாம் பக்கம் பக்கமாக வரைந்த ஆட்டோகிராப் டைரியை எடுத்து வாசிக்கும் போது என் சுவாசத்தில் இவர்களது வாசம் வீசினாலும் மனசுக்குள் மறுகும் நினைவுகளால் கண்களில் கண்ணீரின் ஊர்வலம் வருவதை தடுக்கவும் முடியவில்லை... தவிர்க்கவும் முடியவில்லை...
இவர்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நண்பர்கள் கல்லூரி வாசத்தில்... என்னுடன் பத்திரிக்கை நடத்திய இயற்பியல்துறை நண்பர்கள் இளையராஜா, அம்பேத்கார், பிரபாகர், கனிமொழி, சுபஸ்ரீ உள்பட இன்னும் நிறைய நண்பர்கள் மனதில் வாழ்கிறார்கள்.
இது தவிர ஐவர் குழுவில் இருந்த நண்பர்களில் என்னுடன் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிவரை இணைந்தே படித்த சிவபாலமூர்த்தியும் எனது ஆட்டோகிராப் நோட்டில் பரிட்சையில் பேப்பரை காட்ட மறுத்த கோவத்தில் ' நண்பா... நீதி நேர்மை என்று இருந்தால் நடுத்தெருவில்தான் நிற்பாய்' என்று எழுதிக் கொடுத்த ராசுவும் பசுமையாய்...
இவர்களெல்லாம் தவிர்த்து தனித்து என்னுள்ளே ஆக்கிரமித்து இருந்தவன்... என் நண்பன் என்பதைவிட என்னில் பாதியாய் வாழ்ந்தவன்... என்னவன் ஒருவன் இருக்கிறான்... இருந்தான்... அவனைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது எனவே தனிப்பதிவில் பார்ப்போம்.
சரி விஷயத்துக்கு வருவோம்... என் வலை நட்புக்களே தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார நட்புக்கள் எனது நண்பர்களை பார்க்க நேர்ந்தால் என் வலையில் அவர்களை கால் பதிக்கச் செய்யுங்கள். மனசுக்குள் மறுகும் நட்பை மீண்டும் மழைக்கால காளானாய் மட்டுமல்லாமல் ஆல விருட்சமாய் வளர்க்க முயல்கிறேன்... செய்வீர்களா?
பாசங்களுடன்...
-'பரிவை' சே.குமார்.
வியாழன், 28 அக்டோபர், 2010
மனசின் பக்கம் 28/10/2010
சிவகெங்கை சோழபுரம் தந்த எங்கள் சித்தப்பு கருவேல நிழல் பா.ரா. அவர்கள் இல்லத் திருமண விழாவிற்கு சென்று வந்த சந்தோஷத்தைக் கொடுத்தது மாதவராஜ் அண்ணன் அவர்களின் பகிர்வும் போட்டோக்களும். அதில் அண்ணன் அவர்களை சித்தப்பா, தங்கையிடம் அறிமுகம் செய்யும்போது மாதவராஜ் என்றதாகவும் தங்கையும் அண்ணனை முன்பே அப்பா மூலம் அறிந்திருந்ததால் புன்சிரிப்புடன் பேசியதாகவும் தெரிவித்திருந்தார்.
வலையுலக நட்பு ஒரு பந்தமாக எப்படி இறுகிக்கிடக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதும். மேலும் திருமணப் போட்டோக்களை அகநாழிகை வாசு அவர்களும், பாசத்துடன் கூடிய நெகிழ்ச்சியான பதிவை சிவாஜி சங்கர் அவர்களும் பகிர்ந்துள்ளனர்.
இவர்களைப் போல் பலர் அந்தத் திருமண நிகழ்வைப் பகிர்ந்துள்ளனர். குறிப்பாக கவிதையில் வாழ்த்துச் சொன்ன தேனக்கா, ராகவன் அண்ணா எல்லோரிடமும் அன்புடன் பாசமும் பந்தமும் கலந்திருந்தது. நான் முன்பு ஒருமுறை எழுதியதுபோல் வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்வோம்.
*****
எனக்கு சில நாட்களுக்கு முன் கல்லூரியில் நாங்கள் படிக்கும்போது படித்த அண்ணன் ஒருவர் புதுக்கோட்டையில் இருந்து பின்னூட்டமிட்டிருந்தார். எங்கள் ஆசானில் அரவணைப்பில் நாங்கள் எல்லாம் ஒன்றாக பாரதி விழாக்கள், கவியரங்கம் என எல்லாவற்றிலும் இணைந்திருந்தோம். அதை நினைவு கூர்ந்து என்னை நீங்கள் யார் என்று கேட்டிருந்தார்கள்.
பின்னர் நான் மின்னஞ்சலில் உங்களுடன் பழகியவன்தான் நான் என்பதையும் அந்த நாள் நினைவுகள் சிலவற்றையும் பகிர்ந்த உடன் மிகவும் மகிழ்வுடன் பதிலனுப்பினார். எங்கள் நட்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பூக்க இணையம் உதவியது.
*****
2010 – உலகின் தலை சிறந்த ஹீரோவாக ஒரு தமிழரை உருவாக்குவோம் வாருங்கள். நாம் திரை நாயகர்களுக்கு பாலாபிஷேகம், மதுக்குடம், பால்க்குடம் எல்லாம் எடுப்போம். அவர்கள் உண்மையில் ரியல் நாயகர்கள்தானா? கண்டிப்பாக இல்லை... இங்கே... மதுரையில் 29 வயதேயான இளைஞர், உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
அதற்கு காரணம்... அவருடைய 21 வயதில் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைக்க, தனது பெற்றோரிடம் சொல்லிக் கொள்ள வந்தவரின் வாழ்க்கை ஒரு மனநலம் குன்றியவர் மாற்றிவிட்டார். ஆம்... ஒரு மனநலம் குன்றிய வயதான மனிதர் அவரது மலத்தையே உணவாக உண்ணும் அவலத்தைக் கண்டு அவரை சுத்தப்படுத்தியதுடன் அவருக்கு உணவும் வாங்கி ஊட்டியிருக்கிறார். இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இது. அன்று முதல் மனநலம் குன்றியவர்களுக்க்காக இவர் தன் வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார்.
இந்த மனிதரின் பெயர் நாராயணன் கிருஷ்ணன். தலை சிறந்த மனிதரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு வலையில் நடக்கிறது. வாக்குப் பதிவுக்கான கடைசி நாள் : 25/11/2010. எதற்காகவோ மணிக்கணக்கில் நம் நேரத்தைச் செலவழிக்கும் நாம் ஒரு வாக்கிற்காக சில நிமிடங்களை செலவழிக்கலாமே.
இது குறித்த விரிவான இடுகைகள் நம் நண்பர்கள் பலரின் வலைப்பூவில் வந்துள்ளது. சகோதரி கௌசல்யா அவர்களின் பதிவைப் படிக்க....
*****
சச்சின் மட்டும்தான் சதம் அடிப்பாரா... நாமளும் அடிச்சாச்சுல்ல... அதாங்க நம்ம நட்பு வட்டம் 100ஐ புடிச்சாச்சு... முகம் அறியாமல அம்மா, அப்பா, சித்தப்பா, சகோதரன், சகோத்ரி, நண்பன் என ஒரு அன்பு வளையத்துக்குள் நம்மை வரவைத்த வலைப்பூவில் என் உறவுகள் நான்கு வலையிலுமாக 200 தொட்டாலும் கடந்த சில மாதமாக வேலைப்பளூவின் காரணமாக மனசில் மட்டுமே எழுதுகிறேன். எனவே என் மனசைத் தொடரும் 100 உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்... நன்றியும்... தொடருங்கள் தொடரட்டும் நம் நட்பு என்றும் நட்போடும் சந்தோஷத்தோடும்....
-'பரிவை' சே.குமார்.
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
மனசு முழுதும் வாழ்த்து..!
நண்பா...
உறவுகள் எல்லாம் ஒரு புள்ளியில் நிற்க
நீ மட்டும் நெஞ்சுக்குள் அழியாத கோலமாய்..!
ரத்த சொந்தம் ரகசியங்கள் காக்கா...
என் இரகசியங்கள் உன் இதயம் சுமப்பவன் நீ..!
எத்தனை முறை எனக்காக நீயும்
உனக்காக நானும் வாழ்ந்திருப்போம்...
கணக்கிடமுடியாத கணக்கு இது..!
ஒளிவு மறைவில்லா நமக்குள்
எப்படி ஒளிந்தது நட்பு..?
விரிசல்கள் புரையோடினாலும்
நாளில் பலமுறை
வந்து செல்கிறாய் எனக்குள்...
நானும் வாழ்வேன் உனக்குள்..!
நமக்குள்தானே பிரிவு
நட்புக்குள் இல்லையே...
என் இதய நட்புக்களுக்கும்... முகமறியாவிட்டாலும் மனம் அறிந்த நட்புகளுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.
புதன், 16 டிசம்பர், 2009
கல்லூரிக்காலம் -V
எனது முதல் கதைக்கு ஐயாவிடம் இருந்து ஐம்பது சதவிகித மார்க் கிடைத்ததால் சந்தோஷம் அடைந்தேன். நாமும் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் கவிதை எழுதுவதில் நாட்டம் போனது. ஆனால் சிறிய கவிதைகளை எழுதுவது எப்படி என்று தெரியவில்லை.நான் எழுதிய கவிதைகள் எல்லாமே நீளமாக இருந்தன.
அப்போதுதான் எனக்கும் முருகனுக்கும் ஒரு எண்ணம் உதித்தது, அது கையெழுத்துப் பிரதி ஒன்று ஆரம்பிக்கலாம் என்பதே. ஆவலுடன் அதற்கான ஆயத்தப்பணிகளில் இறங்கினோம். எனது நண்பர்கள் யாரும் வருவதாக இல்லை, முருகன் பக்கமும் அதே நிலை. என்ன செய்யலாம் என்று நினைத்தபோது, பெண்களுக்கு இடமளிக்கலாமே என்று சுபஸ்ரீ மற்றும் கனிமொழியை கைகாட்டினார் ஐயா. அவர்களிடம் பேசியதில் கனிமொழி மறுத்துவிட, சுபஸ்ரீ இணைந்து கொண்டார்.
நாங்கள் மூவரும் இணைந்து 'மனசு' என்ற பெயரில் கையெழுத்துப் பிரதி நடத்த முடிவு செய்து களத்தில் இறங்கினோம். அப்போது சுபஸ்ரீ வகுப்புத் தோழர்களும் எங்களின் நண்பர்களுமான அம்பேத்கார் மற்றும் இளையராஜா (நல்லா படம் வரைவான்) இருவரும் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று வந்தார்கள். மூவர் ஐவரானோம்.
அதன் பிறகு பிரபாகரன் என்ற நண்பரும் இணைந்து கொண்டார். முதல் பிரதி வெளிவருவதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டோம். மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவன் கேசவனும் அவரது நண்பர் நவனீதன் என்பவரும் 'தென்றல்' (பேர் சரியா என்று தெரியவில்லை) என்ற கையெழுத்துப் பிரதி நடத்தி வந்தனர். அவர்களது பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து அமர்களமாக முதல் பிரதி கொண்டு வந்தோம்.
கல்லூரி நூலகம், பொது நூலகம், துறைகள் சுற்றுக்கு, பெண்கள் ஓய்வறை, ஆசிரியர் குழுவுக்கு என ஐந்து பிரதிகள். முதல் முயற்சியில் பேராசிரியர்களின் பாராட்டுடன் வெற்றி பெற்றோம். எல்லோருக்கும் சந்தோஷம்.
அதன் பிறகு தொடர்ச்சியாக நிறைய கையெழுத்துப் பிரதிகள் வர ஆரம்பித்தன.
அதில் குறிப்பிடத்தக்கது எனது சகோதரர் பழனியப்பன் (தற்போது பத்திரிக்கை துறையில் நல்ல பொறுப்பில் இருக்கிறார்) தனது நண்பர்களுடன் இணைந்து நடத்திய 'ரோஜா', எல்லா கையெழுத்துப் பிரதியும் 40 பக்க நோட்டு வடிவில் இருக்க, ரோஜாவோ கிராப் நோட்டு வடிவில் வந்தது. பழனியின் கையெழுத்து அச்சில் வார்த்தது போல் இருக்கும். சும்மா சொல்லக்கூடாது அவரது எழுத்தில் ரோஜா அழகாய் மலர்ந்தது. (மனசுக்கு போட்டியாய் ரோஜா மலர்ந்தது என்றால் மிகையாகாது). பின்னர் மனசுக்கும் அவர்தான் அச்சுக்காரர் ஆனார். எனோ தெரியவில்லை நீண்ட நாட்கள் ரோஜா மலரவில்லை (ரோஜாவின் முள் நட்புக்குள் குத்தியதோ?)
மற்றொன்று நணபர் பரக்கத் அலி நடத்திய கவி'தா', (அவரது காதலி பெயர் என்று வதந்தி பரவியது. உண்மையா என்பது தெரியவில்லை). உன்மையை சொன்னால் நாங்கள் குழுவாக நடத்தியதை அவர் ஒருவராக நடத்திக் காட்டினார். கவி'தா' சார்பாக சிறுகதைப்போட்டி வைத்து அதில் வெற்றி பெற்ற கதைகளை தொகுத்து தேனப்பன் ஐயா மூலமாக புத்தகமாக கொண்டுவந்தார். அதில் முருகன், மற்றும் பழனியின் கதைகளும் பிரசுரமாயின என்பது சந்தோஷமான நினைவுகள்.
அதே நேரத்தில் கலையிலக்கியப் பெருமன்றத்திலும் உறுப்பினரானோம். ஐயா வசம் இருந்த தாமரை, செம்மலர், சுபமங்களா ஆகியவற்றின் ஏஜென்ஸி உரிமையை எங்களிடம் கொடுத்தார். ஒரு புத்தகத்துக்கு 25 பைசா கிடைக்கும். மன்றத்தில் உள்ள எல்லோருக்கும் புத்தகம் போட வேண்டும். புத்தகம் வந்துவிட்டால் போதும் அன்று மாலை கல்லூரி முடிந்ததும் சைக்கிளில் வீதிவீதியாக சுற்றுவோம். அதன் மூலம் காசு கிடைத்ததோ இல்லையோ மனசுக்கு நிறைவும், நல்லோர்களின் நட்பும் கிடைத்தது.
எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளிவந்து கொண்டிருந்த மனசுக்குள் விரிசல் வந்தது. யாரோ ஏதோ சொன்னார்கள் என ஆசிரியை குழுவில் இருந்து சுபஸ்ரீ விலகினார். அவரைத் தொடர்ந்து அம்பேத்காரும், பிரபாகரனும் விலகினர்.
அறுவர் குழு மூவர் குழு ஆனது. அதன் பிறகு ஒரு பிரதி மட்டுமே வந்தது என்று நினைக்கிறேன். அத்தோடு மனசுக்கு மூடுவிழா நடத்திவிட்டோம்.
பல வருடங்கள் கழித்து அதே கல்லூரியில் சுயநிதிப் பிரிவான கணிப்பொறியியல் துறையில் நானும், முருகனும் (இப்போது அதே கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியராக இருக்கிறான்) வேலை செய்த போது அப்போதைய முதல்வர் எங்களிடம் நீங்கள் நடத்திய மனசு போல் இப்ப உள்ள பசங்க நடத்த முன் வரமாட்டேங்கிறாங்க என்றார் (அப்போது எங்கள் கல்லூரியில் கையெழுத்துப் பிரதிகளே இல்லை).
அவர் அப்படி சொன்னது எங்கள் மனசுக்கு கிடைத்த வெற்றி என்றே நாங்கள் நினைத்தோம். அதன் பிறகு முருகன் அது போல் ஒரு பத்திரிக்கை கொண்டுவர முயற்சித்தான். கொண்டு வந்தானா தெரியவில்லை அதற்குள் நான் கல்லூரியில் இருந்து வெளியே வந்து விட்டேன்.
எனக்குள் என்றும் மறக்கமுடியாத பெயர் 'மனசு'. அதனால்தான் இந்த வலைப்பூவிற்கு அதே நாமகரணம். இப்போதும் மனசை நினைத்தாலே என் எண்ணங்கள் கல்லூரிக்குள் பட்டாம்பூச்சியாய் வலம் வர ஆரம்பித்துவிடும். ம்... அது ஒரு கனாக்காலம்.
-சே.குமார்
வியாழன், 10 டிசம்பர், 2009
கல்லூரிக்காலம் - IV
இது கொஞ்சம்... இல்ல அதிக நீளமான பதிவு... அறுவையா இருந்தாலும் பொறுமையா படிங்க... வாழ்த்துறவங்க ஓட்டப் போடுங்க. திட்ட முடிவு பண்ணிட்டா பின்னூட்டத்துல வாங்க. என்னை திருத்திக் கொள்ள வசதியா இருக்கும்.
இரண்டாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கையில் எனது நண்பர்கள் வட்டம் இன்னும் இறுக்கமானது. நவநீயை தவிர மற்ற அனைவருக்கும் நான் பங்காளியானேன். நவநீ மட்டும் என்னை மாப்ள என்று அழைத்தான். என்னை மாப்ள என்றதால் மற்றவர்களுக்கு அவன் மாப்ளயானான்.
தினமும் கல்லூரிக்கு நாங்கள் செல்வதே ஒரு ஊர்வலம் போல் இருக்கும். ஆதி, திருநா, கண்ணன், நவநீ, முத்தரசு உள்ளிட்ட நண்பர்கள் பேருந்தில் வருவார்கள். நான் சைக்கிளில் வருவதால் அவர்களுக்காக பேருந்து நிலைய வாயிலில் காத்திருப்பேன். எனது நண்பர்கள் மற்றும் அவர்களுடன் வரும் மற்றதுறை நண்பர்கள் என ஒரு கூட்டமே கல்லூரி நோக்கி நடக்க ஆரம்பிக்கும். நான் எனது சைக்கிளில் இருபுறமும் திருநா மற்றும் நவநீ பிடித்துக் கொள்ள (ஓட்ட வேண்டியதே இல்லை... தள்ளியே கொண்டு போய் விடுவர்) காரசார விவாத்துடன் கல்லூரி சென்றடைவோம். (மாலையும் விவாதம் தொடரும்).
எங்களுக்கு போரடித்தால் முத்தரசுபாண்டியன் (நல்ல வழக்கறிஞர்) மற்றும் திருநா (கல்யாணத்துக்கு போனது. பிறகு நினைவில் உண்டு... தொடர்பில் இல்லை...) இருவரையும் எதாவது ஒன்றை ஆரம்பித்து கோர்த்து விட்டு விடுவோம். (அந்த வேலையைதான் நல்லா செய்வோமே...) அப்பா... காரசாரமான விவாதம் நடக்கும் (நமக்கும் நல்லா பொழுது போகும்). இருவரும் அரசியலை அலசி ஆராய்வார்கள் (நமக்கு அப்பல்லாம் அரசியல் தெரியாது. இப்பவும்தான்) அப்பவே நாங்க முடிவு பண்ணினோம் ரெண்டும் வழக்கறிஞராத்தான் வருங்கன்னு (அப்ப நாங்க என்னபாடு பட்டிருப்போம்) முத்தரசு வழக்கறிஞராகி எங்க எண்ணத்தை காப்பாத்திட்டான். ஆனா குடும்ப கஷ்டத்தினால திருநாவால மேல படிக்கலை (நிறைய பேருக்கு அமையும் வாழ்க்கைதான் அவனுக்கும்).
நாங்க யாரையும் லந்து அடிக்க மாட்டோம் ஆனா எங்களுக்குப் பேரு லந்துக் கோஷ்டி. அப்ப முதல்வரா பழனியப்பன் சார் இருந்தாருங்க. ரொம்ப............. பயந்தவருங்க (வடிவேலுக்காவது பிரேஸ் மட்டம் மட்டும்தான் வீக்.இவருக்கு மொத்தமும் வீக்...). அதனாலதானோ என்னவோ ஒரு பிரச்சினையில் சொல்லாமல் கொள்ளாமல் முதல்வர் பதவியை விட்டுட்டு ஓடிவிட்டார்.
ஏப்ரல் மாதம் ஒண்ணாம் தேதி (முட்டாள்கள் தினம்) உஜாலா சொட்டு நீலம் வாங்கி (மை அடிக்க) முதல்வர் பழனியப்பன் சாருக்கே அடித்திருக்கிறோம். அப்ப சந்தோஷமாக இருந்தது இப்ப நினைக்கும் போது வலிக்கிறது (சொல்லப்போனா அன்னைக்கு நாங்கதான் முட்டாள்களா இருந்திருக்கோம்).
தீபாவளிக்கு வெடி ரெடியானதும் முதலில் வெடிக்கும் இடம் எங்கள் கல்லூரியாகத்தான் இருக்கும். விளையாட்டுத்திடல், கேண்டீன், மாணவிகள் ஓய்வறை, டாய்லெட், சைக்கிள் நிறுத்துமிடம் என எல்லா இடத்திலும் வெடிக்கும். வைத்ததும் வெடிக்கக்கூடாது என்பதற்காக ஊதுபத்தியில் கட்டி வைப்போம் (எல்லாம் முன்னோர் காட்டிய வழி) .அதற்காக வாங்கும் ஊதுபத்தி வாசனையில்லாததாக (குறைந்த விலைக்கு ) வாங்குவோம். முதல்வர் அறைக்குள் பின்புறம் ஒரு தடுப்பு இருக்கும் அதற்கு பின்பக்கமாக ஒரு சன்னல் உண்டு. அதற்குள்ளும் எங்கள் கூட்டணி வெடி வச்சதுன்னா பாருங்களேன்.
ஒருபுறம் நண்பர்கள், அரட்டை என்று நாட்கள் நகர்ந்தாலும் மறுபுறம் ஐயாவுடனான நட்பும் இறுகியது. ஒருநாள் முருகன் கதை ஒன்றை எழுதி ஐயாவிடம் கொடுத்தான். அதை வாங்கியபடி என்னய்யா நீங்க எதுவும் எழுதுவிங்களா? என்றார். "இல்லைய்யா... அதுக்கும் நமக்கும் வெகுதூரம்." என்றேன். "எழுதிப்பாருங்க வரும்" என்றார்.
அதன் பிறகு எனக்கும் தமிழ் மீது பற்று வந்தது. ஐயா எழுதிய புத்தகங்களையெல்லாம் வாசிக்கலானேன். ஒருநாள் கதை எழுதிப் பார்ப்போமே என்று 'மண்ணில் இந்த காதலின்றி...' பாட்டு வரிகளுடன் ஆரம்பித்து 'மனிதர் உணர்ந்து கொள்ள...' என்ற பாடலில் முடித்தேன் (என்ன செய்ய வயசு அப்படி...).
முருகனிடம் காட்டியபோது 'ஆஹா...ஓஹோ... என்று புகழ்ந்தான் (எனக்காக பொய் சொன்னான் என்று எனக்குத் தெரியும்). ஐயாகிட்ட காட்டு என்றான் நான் மறுத்துவிட்டேன். எனக்கு தெரியும் ஐயா நிச்சயம் நல்லாயிருக்குன்னு சொல்லமாட்டார். ஆனா முருகன் ஐயாவிடம் எனது கதையை போட்டுக் கொடுத்துவிட்டான். என்னய்யா நான் படிக்ககூடாதா? என்று வினவ, அப்படியில்லையா... நல்லாயில்லை... என்று இழுத்தேன். பரவாயில்லை கொடுங்க என்று வாங்கி படித்தவர். என்னிடம் "எழுத்து நடை நல்லாயிருக்கு...ஆனா காதல்.. கத்திரிக்காய்ன்னு வயசுக்கு தகுந்த மாதிரி எழுதாம வித்தியாசமாக எழுதுன்னிங்கன்னா நல்லாயிருக்கும் என்றபடி கதையை என்னிடம் கொடுத்தார்.
அவரது கையில் என் முதல் கதை பட்டதாலோ என்னவோ அதன் பிறகு நல்ல கதைகளை எழுத ஆரம்பித்தேன் (படிச்சவங்க சொல்லணுமுன்னு நீங்க சொல்லுறது கேக்குது என்ன செய்ய... எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்).
நம்ம கதையை படிச்சுட்டு முகம் தெரிஞ்சவங்க நிறைய பேரு நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்காங்க. எனது 'சிறுகதைகள்' வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த பிறகு நிறைய முகம் தெரியாத நண்பர்களிடம் இருந்து பாராட்டுக்கள்.
அதில் குறிப்பா நண்பர் 'நாடோடி இலக்கியன்' அவரது வலைத்தளமான 'நாடோடி இலக்கியன் பக்கத்தில்' பதிவர் அறிமுகத்தில் 'நொறுக்குத் தீனி' எனற தலைப்பில் எழுதியிருந்தார். அது......
"ஆரவாரமில்லாமல் அசத்தலான பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கும் மேலும் இரண்டு பதிவர்களை இந்த நொறுக்குத் தீனியில் குறிப்பிடுவதில் பெருமையடைகிறேன்.
ரகுநாதன்: இவரின் சுழற்பந்து என்ற சிறுகதையைத்தான் முதலில் வாசித்தேன். அருமையான நடையில் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார்.எல்லாவிதமான இடுகைகளும் எழுதுகிறார்.எழுத்து நடையால் எவ்வளவு பெரிய இடுகையானாலும் ஒரே மூச்சில் படிக்க வைத்துவிடுவார்.
சே.குமார்: கவிதை,சிறுகதை,நெடுங்கவிதைகள் எனப் பிரித்து மூன்று வலைப்பூக்களில் எழுதுகிறார். சிறுகதைகளுக்கு இவர் எடுத்துக் கொள்ளும் கதைக் களங்களும், உரையாடல்களும் மிக யதார்த்தமானதாகவும்,ரசிக்கும் படியும் இருக்கின்றன. இவரின் கவிதையொன்று,
விளைநிலம்:
விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..! "'
அடுத்தவங்களை பாராட்ட நல்ல மனது வேண்டும். என்னை அறிமுகம் செய்த இந்த முகம் அறியா நட்புக்கு நன்றி (என்னப்பு நம்ம சுயவிளம்பரம் சரிதானுங்களா..).
சரி... சரி... இவ்வளவு தூரம் இந்த மொக்கையை மேஞ்சுட்டிங்க... அப்படியே 'செந்தமிழ் பைந்தமிழ் மன்ற சிறுகதை' போட்டியிலயும் காலை விட்டிருக்கோம். கொஞ்சம் அங்க போயி பார்வைகள் கதையை படிச்சுட்டு கருத்த சொல்லிட்டுப் போங்களேன்.
கல்லூரிக்காலம் - V ல் சங்கமிப்போம்
இரண்டாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கையில் எனது நண்பர்கள் வட்டம் இன்னும் இறுக்கமானது. நவநீயை தவிர மற்ற அனைவருக்கும் நான் பங்காளியானேன். நவநீ மட்டும் என்னை மாப்ள என்று அழைத்தான். என்னை மாப்ள என்றதால் மற்றவர்களுக்கு அவன் மாப்ளயானான்.
தினமும் கல்லூரிக்கு நாங்கள் செல்வதே ஒரு ஊர்வலம் போல் இருக்கும். ஆதி, திருநா, கண்ணன், நவநீ, முத்தரசு உள்ளிட்ட நண்பர்கள் பேருந்தில் வருவார்கள். நான் சைக்கிளில் வருவதால் அவர்களுக்காக பேருந்து நிலைய வாயிலில் காத்திருப்பேன். எனது நண்பர்கள் மற்றும் அவர்களுடன் வரும் மற்றதுறை நண்பர்கள் என ஒரு கூட்டமே கல்லூரி நோக்கி நடக்க ஆரம்பிக்கும். நான் எனது சைக்கிளில் இருபுறமும் திருநா மற்றும் நவநீ பிடித்துக் கொள்ள (ஓட்ட வேண்டியதே இல்லை... தள்ளியே கொண்டு போய் விடுவர்) காரசார விவாத்துடன் கல்லூரி சென்றடைவோம். (மாலையும் விவாதம் தொடரும்).
எங்களுக்கு போரடித்தால் முத்தரசுபாண்டியன் (நல்ல வழக்கறிஞர்) மற்றும் திருநா (கல்யாணத்துக்கு போனது. பிறகு நினைவில் உண்டு... தொடர்பில் இல்லை...) இருவரையும் எதாவது ஒன்றை ஆரம்பித்து கோர்த்து விட்டு விடுவோம். (அந்த வேலையைதான் நல்லா செய்வோமே...) அப்பா... காரசாரமான விவாதம் நடக்கும் (நமக்கும் நல்லா பொழுது போகும்). இருவரும் அரசியலை அலசி ஆராய்வார்கள் (நமக்கு அப்பல்லாம் அரசியல் தெரியாது. இப்பவும்தான்) அப்பவே நாங்க முடிவு பண்ணினோம் ரெண்டும் வழக்கறிஞராத்தான் வருங்கன்னு (அப்ப நாங்க என்னபாடு பட்டிருப்போம்) முத்தரசு வழக்கறிஞராகி எங்க எண்ணத்தை காப்பாத்திட்டான். ஆனா குடும்ப கஷ்டத்தினால திருநாவால மேல படிக்கலை (நிறைய பேருக்கு அமையும் வாழ்க்கைதான் அவனுக்கும்).
நாங்க யாரையும் லந்து அடிக்க மாட்டோம் ஆனா எங்களுக்குப் பேரு லந்துக் கோஷ்டி. அப்ப முதல்வரா பழனியப்பன் சார் இருந்தாருங்க. ரொம்ப............. பயந்தவருங்க (வடிவேலுக்காவது பிரேஸ் மட்டம் மட்டும்தான் வீக்.இவருக்கு மொத்தமும் வீக்...). அதனாலதானோ என்னவோ ஒரு பிரச்சினையில் சொல்லாமல் கொள்ளாமல் முதல்வர் பதவியை விட்டுட்டு ஓடிவிட்டார்.
ஏப்ரல் மாதம் ஒண்ணாம் தேதி (முட்டாள்கள் தினம்) உஜாலா சொட்டு நீலம் வாங்கி (மை அடிக்க) முதல்வர் பழனியப்பன் சாருக்கே அடித்திருக்கிறோம். அப்ப சந்தோஷமாக இருந்தது இப்ப நினைக்கும் போது வலிக்கிறது (சொல்லப்போனா அன்னைக்கு நாங்கதான் முட்டாள்களா இருந்திருக்கோம்).
தீபாவளிக்கு வெடி ரெடியானதும் முதலில் வெடிக்கும் இடம் எங்கள் கல்லூரியாகத்தான் இருக்கும். விளையாட்டுத்திடல், கேண்டீன், மாணவிகள் ஓய்வறை, டாய்லெட், சைக்கிள் நிறுத்துமிடம் என எல்லா இடத்திலும் வெடிக்கும். வைத்ததும் வெடிக்கக்கூடாது என்பதற்காக ஊதுபத்தியில் கட்டி வைப்போம் (எல்லாம் முன்னோர் காட்டிய வழி) .அதற்காக வாங்கும் ஊதுபத்தி வாசனையில்லாததாக (குறைந்த விலைக்கு ) வாங்குவோம். முதல்வர் அறைக்குள் பின்புறம் ஒரு தடுப்பு இருக்கும் அதற்கு பின்பக்கமாக ஒரு சன்னல் உண்டு. அதற்குள்ளும் எங்கள் கூட்டணி வெடி வச்சதுன்னா பாருங்களேன்.
ஒருபுறம் நண்பர்கள், அரட்டை என்று நாட்கள் நகர்ந்தாலும் மறுபுறம் ஐயாவுடனான நட்பும் இறுகியது. ஒருநாள் முருகன் கதை ஒன்றை எழுதி ஐயாவிடம் கொடுத்தான். அதை வாங்கியபடி என்னய்யா நீங்க எதுவும் எழுதுவிங்களா? என்றார். "இல்லைய்யா... அதுக்கும் நமக்கும் வெகுதூரம்." என்றேன். "எழுதிப்பாருங்க வரும்" என்றார்.
அதன் பிறகு எனக்கும் தமிழ் மீது பற்று வந்தது. ஐயா எழுதிய புத்தகங்களையெல்லாம் வாசிக்கலானேன். ஒருநாள் கதை எழுதிப் பார்ப்போமே என்று 'மண்ணில் இந்த காதலின்றி...' பாட்டு வரிகளுடன் ஆரம்பித்து 'மனிதர் உணர்ந்து கொள்ள...' என்ற பாடலில் முடித்தேன் (என்ன செய்ய வயசு அப்படி...).
முருகனிடம் காட்டியபோது 'ஆஹா...ஓஹோ... என்று புகழ்ந்தான் (எனக்காக பொய் சொன்னான் என்று எனக்குத் தெரியும்). ஐயாகிட்ட காட்டு என்றான் நான் மறுத்துவிட்டேன். எனக்கு தெரியும் ஐயா நிச்சயம் நல்லாயிருக்குன்னு சொல்லமாட்டார். ஆனா முருகன் ஐயாவிடம் எனது கதையை போட்டுக் கொடுத்துவிட்டான். என்னய்யா நான் படிக்ககூடாதா? என்று வினவ, அப்படியில்லையா... நல்லாயில்லை... என்று இழுத்தேன். பரவாயில்லை கொடுங்க என்று வாங்கி படித்தவர். என்னிடம் "எழுத்து நடை நல்லாயிருக்கு...ஆனா காதல்.. கத்திரிக்காய்ன்னு வயசுக்கு தகுந்த மாதிரி எழுதாம வித்தியாசமாக எழுதுன்னிங்கன்னா நல்லாயிருக்கும் என்றபடி கதையை என்னிடம் கொடுத்தார்.
அவரது கையில் என் முதல் கதை பட்டதாலோ என்னவோ அதன் பிறகு நல்ல கதைகளை எழுத ஆரம்பித்தேன் (படிச்சவங்க சொல்லணுமுன்னு நீங்க சொல்லுறது கேக்குது என்ன செய்ய... எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்).
நம்ம கதையை படிச்சுட்டு முகம் தெரிஞ்சவங்க நிறைய பேரு நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்காங்க. எனது 'சிறுகதைகள்' வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த பிறகு நிறைய முகம் தெரியாத நண்பர்களிடம் இருந்து பாராட்டுக்கள்.
அதில் குறிப்பா நண்பர் 'நாடோடி இலக்கியன்' அவரது வலைத்தளமான 'நாடோடி இலக்கியன் பக்கத்தில்' பதிவர் அறிமுகத்தில் 'நொறுக்குத் தீனி' எனற தலைப்பில் எழுதியிருந்தார். அது......
"ஆரவாரமில்லாமல் அசத்தலான பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கும் மேலும் இரண்டு பதிவர்களை இந்த நொறுக்குத் தீனியில் குறிப்பிடுவதில் பெருமையடைகிறேன்.
ரகுநாதன்: இவரின் சுழற்பந்து என்ற சிறுகதையைத்தான் முதலில் வாசித்தேன். அருமையான நடையில் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார்.எல்லாவிதமான இடுகைகளும் எழுதுகிறார்.எழுத்து நடையால் எவ்வளவு பெரிய இடுகையானாலும் ஒரே மூச்சில் படிக்க வைத்துவிடுவார்.
சே.குமார்: கவிதை,சிறுகதை,நெடுங்கவிதைகள் எனப் பிரித்து மூன்று வலைப்பூக்களில் எழுதுகிறார். சிறுகதைகளுக்கு இவர் எடுத்துக் கொள்ளும் கதைக் களங்களும், உரையாடல்களும் மிக யதார்த்தமானதாகவும்,ரசிக்கும் படியும் இருக்கின்றன. இவரின் கவிதையொன்று,
விளைநிலம்:
விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..! "'
அடுத்தவங்களை பாராட்ட நல்ல மனது வேண்டும். என்னை அறிமுகம் செய்த இந்த முகம் அறியா நட்புக்கு நன்றி (என்னப்பு நம்ம சுயவிளம்பரம் சரிதானுங்களா..).
சரி... சரி... இவ்வளவு தூரம் இந்த மொக்கையை மேஞ்சுட்டிங்க... அப்படியே 'செந்தமிழ் பைந்தமிழ் மன்ற சிறுகதை' போட்டியிலயும் காலை விட்டிருக்கோம். கொஞ்சம் அங்க போயி பார்வைகள் கதையை படிச்சுட்டு கருத்த சொல்லிட்டுப் போங்களேன்.
கல்லூரிக்காலம் - V ல் சங்கமிப்போம்
செவ்வாய், 8 டிசம்பர், 2009
கல்லூரிக்காலம் - III
முதலாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை சந்தோஷம் , சங்கடம், அடிதடி, ஸ்டிரைக், ஐடிசி என கரைந்தது. விடுமுறைக்குப் பின்னர் இரண்டாம் ஆண்டில்... என்ன ஒரு சந்தோஷம் என்றால் அரியர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நட்பு பிரியாமல் ஒரே வகுப்பறையில்... (பள்ளிக்கூடத்தில் அப்படியில்லாமல்தான் பல நட்புகளை இழக்க நேரிடுகிறது இல்லையா?)
எனது நண்பர்கள் அண்ணாத்துரையும், சேவியரும் கல்லூரிக்கு அருகில் அறை எடுத்து தங்கி இருந்தனர். அவர்கள் சமைத்து சாப்பிட்டனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அறையில்தான் நான். (ஐயோ... சத்தியமா சாப்பாட்டுக்காக இல்லைங்க...) . தங்கும் அறையை அண்ணாத்துரை அந்த இடத்தில் எடுக்க வரலாற்றுச் சிறப்புமிக்க காரணம் ஒன்று உண்டு. அது அவனது காதலி தங்கிப் படித்த அக்கா வீட்டின் அருகில் என்பதே. (இப்ப இருவரும் குடும்ப பாரத்தை சுமக்கிறார்கள். வேறு வேறு குடும்பத்தில்...)
எனக்கும் வகுப்பறை தோழர்களுடன் மற்ற துறையிலும் தோழர்கள் கிடைத்தனர். இயற்பியல் துறையில் அம்பேத்கார் (இப்ப எம்சிஏ முடித்துவிட்டு பெங்களூரில் இருப்பதாக கேள்வி), இளையராஜா (உள்ளூரிலே கடை வைத்திருப்பதாக நண்பன் ஒருவன் சொன்னான்) , சுபஸ்ரீ, கனிமொழி (ஐயா இல்லத்தில் உருவான நட்பால் கிடைத்த நல்ல தோழியர்) , விலங்கியல் துறையில் பிரபாகரன், தமிழ்த்துறையில் சங்கர், ரவி(தற்போது ஆசிரியர்) , ஜஸ்டின் (தற்போது ஆசிரியர்) ,ரவி, முருகன் (தற்போது பேராசிரியர்) , சிவகுமார், ஆங்கிலத்துறையில் ரமேஷ் (ஆசிரியர்), சூசை மாணிக்கம் (நல்லா பாடுவான். கல்லூரியில் இவன் குரலுக்கென்று ரசிகைகள் உண்டு) , கண்ணன் (என் நண்பன் ஆதியால் கிடைத்த நல்ல நண்பன்) வணிகவியல் துறையில் சில நண்பர்கள். இதில் முருகன் தவிர மற்ற நண்பர்கள் தொடர்பில் இல்லை.
எங்கள் வகுப்பறை முதல்வர் அறைக்கு அருகில் இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கில பாட வேளைகளில் எங்களுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை மாணவர்களும் கலந்து விடுவர். அரட்டைக்கு கேட்கவா வேண்டும்.
தமிழ்த்துறையில் இருந்து எங்களுக்கு பாடம் எடுக்க வந்தவர்களில் ஆறுமுக ஐயா, நகைச்சுவை என்று எதாவது சொல்லி அவரே சிரிப்பார். நாங்கள் அனைவரும் ரொம்ப சீரியஸாக அவரையே பார்ப்போம். உடனே சிரிப்பை நிறுத்தி எங்களைப் பார்த்து சிரிப்பு வரலை என்று கேட்பார். அவர் சீரியஸாக பாடம் நடத்தும் போது திடீரென எல்லோரும் சிரிப்பார்கள். இது தினமும் தொடரும்.
சுந்தரமூர்த்தி ஐயா, இவர் பாடம் எடுக்கும் போது லண்டன் என்று யாராவது கத்தினால் போதும் மனுசனுக்கு கோபம் வரும் பாருங்க. அப்பா... ஒரே ருத்ரதாண்டவம்தான் போங்க. (எங்க முன்னோடிகள் சொல்லிச் சென்றார்கள். நாங்கள் தொடர்ந்தோம்... எதுக்கு கோபம் கொள்கிறார் என்பது யாருமே அறியாத சிதம்பர ரகசியம்)
சுப்பிரமணியன் ஐயா (RMS என்று சொல்லுவோம். பெயர் சரிதானா என்பது தெரியவில்லை) , இவரை பாடமே எடுக்க விடமாட்டார்கள். இவருக்கு தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முடி இருக்கும். ஒருநாள் அவர் சிரத்தையுடன் பாடம் எடுக்கும் போது ஒருவன் எழுந்து உங்க தலை முடியெல்லாம் எங்கய்யா என்று வினவ, கோபத்தில் வீட்டிலிருந்து கல்லூரி வரும் வழியில் புறா பொறக்கி தின்னுருச்சு என்றாரே பார்க்கலாம் வகுப்பில் எழுந்த சிரிப்பொலி அடங்க அதிக நேரம் ஆனது. அது முதல் அவரது பெயர் புறா பொறக்கியானது. (கல்லூரி சுவர், வகுப்பறை எல்லா இடங்களிலும் கல்வெட்டாய்...)
பழனி ஐயா, மற்ற துறை மாணவர்களிடம் எப்படியோ தெரியவில்லை. எங்கள் வகுப்பறையில் பாடத்துடன் பொது அறிவும் கலந்து கொடுத்து மாணவர்களை கட்டிப் போட்டிருந்தார் (ஐயா பற்றி இன்னும் நிறைய இருக்கு).
சிங்காரவடிவேலன் ஐயா, நல்ல கவிஞர். நம்ம குடும்பத்தில் ஒருவர் போல நடந்து கொள்வார். நல்லா நடத்துவார். சில காலம் முதல்வராகவும் இருந்தார்.
தேனப்பன் ஐயா, நல்ல இலக்கியவாதி, நகைச்சுவையுடன் பாடம் நடத்தும் கலை அறிந்தவர்.
எல்லோரிடமும் வகுப்பறையில் மாணவர்களாக (நாங்களெல்லாம் வாயே திறப்பதில்லை) நடந்து கொண்ட விதம் மோசமாக இருந்தாலும் பாடம் நடத்துவதிலோ பழகும் விதத்திலோ எங்கள் பேராசிரியர்கள் என்றைக்குமே எவரெஸ்ட்டாய்தான் இருந்திருக்கிறார்கள். (நம்ம அனுபவிக்கும் போதுதான் அவங்க கஷ்டம் நமக்கு புரியுது) .
ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் பெரிய திருவடி, வாசுதேவன், தண்ணீர்மலை என எல்லா பேராசிரியர்களுமே நல்லா நடத்தினார்கள். இன்றைக்கும் என் பேராசிரியர்களை மனதில் மரியாதையுடனதான் வைத்துள்ளேன்.
என் நண்பன் முருகன் தமிழ்த்துறை என்பதால் பழனி ஐயாவிடம் நல்ல நட்பு உண்டு. அவன் மூலமாக ஐயாவுடன் பழகும் வாய்ப்பு கிட்டியதுடன் அவர் வீட்டில் அவரது பிள்ளைகளில் ஒருவனாய் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே ஏற்கனவே ஒரு கூட்டம் இருந்தது. அந்த ஜோதியில் நானும் ஐக்கியாமானேன்.
கல்லூரிக்காலம் - IV ல் சங்கமிப்போம்
எனது நண்பர்கள் அண்ணாத்துரையும், சேவியரும் கல்லூரிக்கு அருகில் அறை எடுத்து தங்கி இருந்தனர். அவர்கள் சமைத்து சாப்பிட்டனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அறையில்தான் நான். (ஐயோ... சத்தியமா சாப்பாட்டுக்காக இல்லைங்க...) . தங்கும் அறையை அண்ணாத்துரை அந்த இடத்தில் எடுக்க வரலாற்றுச் சிறப்புமிக்க காரணம் ஒன்று உண்டு. அது அவனது காதலி தங்கிப் படித்த அக்கா வீட்டின் அருகில் என்பதே. (இப்ப இருவரும் குடும்ப பாரத்தை சுமக்கிறார்கள். வேறு வேறு குடும்பத்தில்...)
எனக்கும் வகுப்பறை தோழர்களுடன் மற்ற துறையிலும் தோழர்கள் கிடைத்தனர். இயற்பியல் துறையில் அம்பேத்கார் (இப்ப எம்சிஏ முடித்துவிட்டு பெங்களூரில் இருப்பதாக கேள்வி), இளையராஜா (உள்ளூரிலே கடை வைத்திருப்பதாக நண்பன் ஒருவன் சொன்னான்) , சுபஸ்ரீ, கனிமொழி (ஐயா இல்லத்தில் உருவான நட்பால் கிடைத்த நல்ல தோழியர்) , விலங்கியல் துறையில் பிரபாகரன், தமிழ்த்துறையில் சங்கர், ரவி(தற்போது ஆசிரியர்) , ஜஸ்டின் (தற்போது ஆசிரியர்) ,ரவி, முருகன் (தற்போது பேராசிரியர்) , சிவகுமார், ஆங்கிலத்துறையில் ரமேஷ் (ஆசிரியர்), சூசை மாணிக்கம் (நல்லா பாடுவான். கல்லூரியில் இவன் குரலுக்கென்று ரசிகைகள் உண்டு) , கண்ணன் (என் நண்பன் ஆதியால் கிடைத்த நல்ல நண்பன்) வணிகவியல் துறையில் சில நண்பர்கள். இதில் முருகன் தவிர மற்ற நண்பர்கள் தொடர்பில் இல்லை.
எங்கள் வகுப்பறை முதல்வர் அறைக்கு அருகில் இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கில பாட வேளைகளில் எங்களுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை மாணவர்களும் கலந்து விடுவர். அரட்டைக்கு கேட்கவா வேண்டும்.
தமிழ்த்துறையில் இருந்து எங்களுக்கு பாடம் எடுக்க வந்தவர்களில் ஆறுமுக ஐயா, நகைச்சுவை என்று எதாவது சொல்லி அவரே சிரிப்பார். நாங்கள் அனைவரும் ரொம்ப சீரியஸாக அவரையே பார்ப்போம். உடனே சிரிப்பை நிறுத்தி எங்களைப் பார்த்து சிரிப்பு வரலை என்று கேட்பார். அவர் சீரியஸாக பாடம் நடத்தும் போது திடீரென எல்லோரும் சிரிப்பார்கள். இது தினமும் தொடரும்.
சுந்தரமூர்த்தி ஐயா, இவர் பாடம் எடுக்கும் போது லண்டன் என்று யாராவது கத்தினால் போதும் மனுசனுக்கு கோபம் வரும் பாருங்க. அப்பா... ஒரே ருத்ரதாண்டவம்தான் போங்க. (எங்க முன்னோடிகள் சொல்லிச் சென்றார்கள். நாங்கள் தொடர்ந்தோம்... எதுக்கு கோபம் கொள்கிறார் என்பது யாருமே அறியாத சிதம்பர ரகசியம்)
சுப்பிரமணியன் ஐயா (RMS என்று சொல்லுவோம். பெயர் சரிதானா என்பது தெரியவில்லை) , இவரை பாடமே எடுக்க விடமாட்டார்கள். இவருக்கு தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முடி இருக்கும். ஒருநாள் அவர் சிரத்தையுடன் பாடம் எடுக்கும் போது ஒருவன் எழுந்து உங்க தலை முடியெல்லாம் எங்கய்யா என்று வினவ, கோபத்தில் வீட்டிலிருந்து கல்லூரி வரும் வழியில் புறா பொறக்கி தின்னுருச்சு என்றாரே பார்க்கலாம் வகுப்பில் எழுந்த சிரிப்பொலி அடங்க அதிக நேரம் ஆனது. அது முதல் அவரது பெயர் புறா பொறக்கியானது. (கல்லூரி சுவர், வகுப்பறை எல்லா இடங்களிலும் கல்வெட்டாய்...)
பழனி ஐயா, மற்ற துறை மாணவர்களிடம் எப்படியோ தெரியவில்லை. எங்கள் வகுப்பறையில் பாடத்துடன் பொது அறிவும் கலந்து கொடுத்து மாணவர்களை கட்டிப் போட்டிருந்தார் (ஐயா பற்றி இன்னும் நிறைய இருக்கு).
சிங்காரவடிவேலன் ஐயா, நல்ல கவிஞர். நம்ம குடும்பத்தில் ஒருவர் போல நடந்து கொள்வார். நல்லா நடத்துவார். சில காலம் முதல்வராகவும் இருந்தார்.
தேனப்பன் ஐயா, நல்ல இலக்கியவாதி, நகைச்சுவையுடன் பாடம் நடத்தும் கலை அறிந்தவர்.
எல்லோரிடமும் வகுப்பறையில் மாணவர்களாக (நாங்களெல்லாம் வாயே திறப்பதில்லை) நடந்து கொண்ட விதம் மோசமாக இருந்தாலும் பாடம் நடத்துவதிலோ பழகும் விதத்திலோ எங்கள் பேராசிரியர்கள் என்றைக்குமே எவரெஸ்ட்டாய்தான் இருந்திருக்கிறார்கள். (நம்ம அனுபவிக்கும் போதுதான் அவங்க கஷ்டம் நமக்கு புரியுது) .
ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் பெரிய திருவடி, வாசுதேவன், தண்ணீர்மலை என எல்லா பேராசிரியர்களுமே நல்லா நடத்தினார்கள். இன்றைக்கும் என் பேராசிரியர்களை மனதில் மரியாதையுடனதான் வைத்துள்ளேன்.
என் நண்பன் முருகன் தமிழ்த்துறை என்பதால் பழனி ஐயாவிடம் நல்ல நட்பு உண்டு. அவன் மூலமாக ஐயாவுடன் பழகும் வாய்ப்பு கிட்டியதுடன் அவர் வீட்டில் அவரது பிள்ளைகளில் ஒருவனாய் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே ஏற்கனவே ஒரு கூட்டம் இருந்தது. அந்த ஜோதியில் நானும் ஐக்கியாமானேன்.
கல்லூரிக்காலம் - IV ல் சங்கமிப்போம்
ஞாயிறு, 6 டிசம்பர், 2009
கல்லூரிக்காலம் - II
சில பல காரணங்களால் கல்லூரிக்காலம் இரண்டு எழுத நீண்ட நாட்களாகி விட்டது.
முதலாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை மிகவும் நன்றாக சென்று கொண்டிருந்தது. கல்லூரி வாழ்க்கைக்குள் செல்லும் முன்...
எனது துறை பேராசிரிய பெருமக்களைப் பற்றி சில வரிகள் (குரு மரியாதை...) பேராசிரியர் நா.சீனிவாசன் (துறைத்தலைவர்) - நாங்கள் கல்லூரியில் சேரும் முன்னர் முதல்வராக இருந்து நாங்கள் சேர்ந்த பொழுது சில காரணங்களால் நீக்கப்பட்டு (எங்க ராசி நல்ல ராசி...) நாங்கள் கல்லூரியில் இருந்து வெளியேறும் போது எங்கள் மாற்றுச் சான்றிதழில் முதல்வராக கையெழுத்துப் போட்டவர் (நாங்க ரொம்ப நல்லவங்க).
பேராசிரியர் கே.வி. சுப்ரமணியன் (செல்லமாக கேவிஎஸ்) - நடந்தே தான் கல்லூரிக்கு வருவார். எல்லோருக்கும் உதவும் நல்லகுணம் கொண்டவர். யாரையும் கடிந்து பேச மாட்டார். ஆரம்பம் முதலே என் மீது அதிக பாசம் கொண்டவர்.
பேராசிரியர் ஏ.வெங்கடாசலம் - நல்ல மனிதர். ஆமாங்க நாம இந்தா வர்றேன் சார் என்று சொல்லிச் சென்றால் (திரும்ப வரவில்லை என்றாலும்) வருகை பதிவில் கைவைக்கவே மாட்டார்.
பேராசிரியர் அமலசேவியர் - மிகவும் நல்லவர். எட்டாம் நம்பர் மீது அதிக பற்றுக் கொண்டவர். (அவரோட ஸ்கூட்டர் நம்பர் 0440ன்னா பார்த்துக்கங்க)
பேராசிரியர் சேவியர் - எங்கள் துறையின் கடைக்குட்டி (மேல சொன்ன பேராசிரியர்களிடம் படித்து அதே துறையில் வேலை). பசங்களுக்கு உதவ தயங்காதவர். தம்பி... என்று பாசத்துடன் அழைப்பவர்.
இவர்கள் போக இன்னும் தமிழ் மற்றும் ஆங்கிலம் எடுத்த பேராசிரியர்கள் பற்றி பின்னர் பார்க்கலாம்.
முதல் பருவத்தேர்வுகள் முடிந்து எல்லா பாடத்துலயும் தேர்ச்சி. (ஆங்கிலத்துல எழுதி அரியர் இல்லாம வெற்றி... சத்தியமா நம்ப முடியலைங்க...) எங்கள் நட்பு வட்டத்தில் ஒரு சிலர் தவிர மற்றவர்களுக்கு அரியர் இல்லை (நல்ல நட்பு).
அடுத்த பருவம் தொடங்கிய போது எங்கள் வகுப்பிற்குள் கோஷ்டி முளைத்தது. ஆறுமுகம் தலைமையில் சிவபாலமூர்த்தி (நம்ம ஆளுதாங்க) உள்ளிட்ட 5 நண்பர்கள் ஒரு கோஷ்டியும் (அடிதடிக்கு முன் நிற்கும் கோஷ்டி) இளங்கோ தலைமையில் ஒரு கோஷ்டியும் (அடியும் வாங்கும் கோஷ்டி) உருவானது. எங்க கோஷ்டி (அதிகம் ஆளு இருந்த கோஷ்டி) தனி. இரண்டு பக்கமும் பேசுவோம் (மத்தளம் மாதிரி).
எங்களை பேராசிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். சண்டை வரும் போது எங்களை வீட்டுக்குப் போகச்சொன்ன நாட்களும் உண்டு. (உண்மையை சொன்னா நாங்கள்ளாம் கைப்புள்ள மாதிரி...)
எங்க கூடப் படித்த தோழியருக்கும் எங்களை மட்டுமே பிடிக்கும். (உண்மையான நட்புங்க). நல்லா போச்சுங்க முதல் வருடம்.
முதல் வருடத்தில் எனக்கு மற்ற துறைகளிலும் முத்தான நட்பு கிடைத்தது. எனக்கும் தமிழ்த்துறை பேராசிரியர் பழனி ஐயாவுக்கும் இடையில் நண்பன் முருகன் மூலம் நட்பு ஏற்பட்டது. (இன்றுவரை அப்பா ஸ்தானத்தில் உரிமையுடன் தொடரும் நட்பு) ஐயா, முருகன், மற்ற நண்பர்கள், முதல் கதை, மனசு இதழ் பற்றி விரிவாக அடுத்த கட்டுரையில்... கல்லூரிக்காலம் இன்னும் பசுமையுடன் தொடரும்.
முதலாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை மிகவும் நன்றாக சென்று கொண்டிருந்தது. கல்லூரி வாழ்க்கைக்குள் செல்லும் முன்...
எனது துறை பேராசிரிய பெருமக்களைப் பற்றி சில வரிகள் (குரு மரியாதை...) பேராசிரியர் நா.சீனிவாசன் (துறைத்தலைவர்) - நாங்கள் கல்லூரியில் சேரும் முன்னர் முதல்வராக இருந்து நாங்கள் சேர்ந்த பொழுது சில காரணங்களால் நீக்கப்பட்டு (எங்க ராசி நல்ல ராசி...) நாங்கள் கல்லூரியில் இருந்து வெளியேறும் போது எங்கள் மாற்றுச் சான்றிதழில் முதல்வராக கையெழுத்துப் போட்டவர் (நாங்க ரொம்ப நல்லவங்க).
பேராசிரியர் கே.வி. சுப்ரமணியன் (செல்லமாக கேவிஎஸ்) - நடந்தே தான் கல்லூரிக்கு வருவார். எல்லோருக்கும் உதவும் நல்லகுணம் கொண்டவர். யாரையும் கடிந்து பேச மாட்டார். ஆரம்பம் முதலே என் மீது அதிக பாசம் கொண்டவர்.
பேராசிரியர் ஏ.வெங்கடாசலம் - நல்ல மனிதர். ஆமாங்க நாம இந்தா வர்றேன் சார் என்று சொல்லிச் சென்றால் (திரும்ப வரவில்லை என்றாலும்) வருகை பதிவில் கைவைக்கவே மாட்டார்.
பேராசிரியர் அமலசேவியர் - மிகவும் நல்லவர். எட்டாம் நம்பர் மீது அதிக பற்றுக் கொண்டவர். (அவரோட ஸ்கூட்டர் நம்பர் 0440ன்னா பார்த்துக்கங்க)
பேராசிரியர் சேவியர் - எங்கள் துறையின் கடைக்குட்டி (மேல சொன்ன பேராசிரியர்களிடம் படித்து அதே துறையில் வேலை). பசங்களுக்கு உதவ தயங்காதவர். தம்பி... என்று பாசத்துடன் அழைப்பவர்.
இவர்கள் போக இன்னும் தமிழ் மற்றும் ஆங்கிலம் எடுத்த பேராசிரியர்கள் பற்றி பின்னர் பார்க்கலாம்.
முதல் பருவத்தேர்வுகள் முடிந்து எல்லா பாடத்துலயும் தேர்ச்சி. (ஆங்கிலத்துல எழுதி அரியர் இல்லாம வெற்றி... சத்தியமா நம்ப முடியலைங்க...) எங்கள் நட்பு வட்டத்தில் ஒரு சிலர் தவிர மற்றவர்களுக்கு அரியர் இல்லை (நல்ல நட்பு).
அடுத்த பருவம் தொடங்கிய போது எங்கள் வகுப்பிற்குள் கோஷ்டி முளைத்தது. ஆறுமுகம் தலைமையில் சிவபாலமூர்த்தி (நம்ம ஆளுதாங்க) உள்ளிட்ட 5 நண்பர்கள் ஒரு கோஷ்டியும் (அடிதடிக்கு முன் நிற்கும் கோஷ்டி) இளங்கோ தலைமையில் ஒரு கோஷ்டியும் (அடியும் வாங்கும் கோஷ்டி) உருவானது. எங்க கோஷ்டி (அதிகம் ஆளு இருந்த கோஷ்டி) தனி. இரண்டு பக்கமும் பேசுவோம் (மத்தளம் மாதிரி).
எங்களை பேராசிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். சண்டை வரும் போது எங்களை வீட்டுக்குப் போகச்சொன்ன நாட்களும் உண்டு. (உண்மையை சொன்னா நாங்கள்ளாம் கைப்புள்ள மாதிரி...)
எங்க கூடப் படித்த தோழியருக்கும் எங்களை மட்டுமே பிடிக்கும். (உண்மையான நட்புங்க). நல்லா போச்சுங்க முதல் வருடம்.
முதல் வருடத்தில் எனக்கு மற்ற துறைகளிலும் முத்தான நட்பு கிடைத்தது. எனக்கும் தமிழ்த்துறை பேராசிரியர் பழனி ஐயாவுக்கும் இடையில் நண்பன் முருகன் மூலம் நட்பு ஏற்பட்டது. (இன்றுவரை அப்பா ஸ்தானத்தில் உரிமையுடன் தொடரும் நட்பு) ஐயா, முருகன், மற்ற நண்பர்கள், முதல் கதை, மனசு இதழ் பற்றி விரிவாக அடுத்த கட்டுரையில்... கல்லூரிக்காலம் இன்னும் பசுமையுடன் தொடரும்.
ஞாயிறு, 29 நவம்பர், 2009
கல்லூரிக்காலம் - I
கல்லூரிக்காலம்... அந்த நாட்கள்தான் எத்தனை இனிமையான நாட்கள். எங்கிருந்தோ வந்து எனக்குள் ஐக்கியமான நட்புகள்... எனது படைப்பு பத்திரிக்கைகளில் வெளிவந்தது... இலக்கியப் போட்டிகளில் வென்ற பரிசுகள்... எனக்குள் நுழைந்து என்னை மகன் போல் நடத்திய பேராசிரியப் பெருமக்கள்... இன்னும் எத்தனை எத்தனையோ அந்த வசந்த காலத்தில்...
பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேர காரணமாக இருந்தவர் எனது மூத்த அண்ணா. இல்லையென்றால் பனிரெண்டாம் வகுப்பு முடிக்குமுன்னரே எனது தந்தை எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் நூற்பாலையில் எனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டார். எனது அண்ணாவிடம் அழுது புலம்ப, அவர் நாங்கள்தான் படிக்கவில்லை (அவர் +2 வரை படித்தார். குடும்ப கஷ்டத்தால் மேல படிக்கவில்லை) அவங்க ரெண்டு பேரும் (நானும், தம்பியும்) நல்லா படிக்கட்டும் என்று சப்தம் போட, அப்பா அதற்கு மேல் ஒண்றும் சொல்லவில்லை.
ரிசல்ட் வந்ததும் கல்லூரியில் விண்ணப்பம் செய்தோம். கணிப்பொறியியல் துறைக்கும் விண்ணப்பித்தேன். 6000 ரூபாய் கட்டினால் இடம் தருவதாக தெரிவித்தனர். குடும்ப சூழல் இடம் தரவில்லை. (சில காலங்களுக்குப் பிறகு அதே கணிப்பொறியியல் துறையில் நான்கு வருடம் வேலை செய்து எனது ஆசையை தீர்த்துக் கொண்டேன்) கல்லூரியில் இடம் கிடைத்து. என்னுடன் படித்த நண்பர்கள் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் வேறு பாடப்பிரிவுகள், வேறு கல்லூரி என பிரிந்து சென்றனர்.
எனது கல்லூரி வாழ்வின் முதல் நாள் எனது அட்லஸ் சைக்கிளில் கிளம்பினேன்.வகுப்பறைக்கு சென்றால் எல்லோரும் புது முகம். எனக்கு கடைசி பெஞ்சில் உட்காரும் பழக்கம் இல்லை என்பதால் இரண்டாவது பெஞ்சில் அமர்ந்தேன். வகுப்பு தொடங்கிய போது என்னுடன் படித்த சிவபால மூர்த்தி வந்தான் (என்னுடன் ஒண்ணாப்பு முதல் கல்லூரி வரை படித்த நண்பன்). அப்பா ஒருத்தன் வந்துட்டான் என்று நினைத்த மனசு அவனுக்கு உட்கார இடம் கொடுத்தது. ஆனால் அவனோ ஒரு புன்னகையுடன் கடைசி பெஞ்சுக்கு போய்விட்டான். (மூன்று வருடங்கள் அவனுக்கும் எனக்குமான உறவில் அதிகம் பேசியதென்னவோ புன்னகை மட்டும்தான்.)
பிறகு மரியக்கண்ணு, தேவசகாயம் என எனது பள்ளித்தோழர்கள் வந்தனர். எனக்கு அருகில் அமர்ந்திருந்த்வர்கள் இருவரும் (அண்ணாத்துரை மற்றும் சேவியர்) எனக்கு அறிமுகமாயினர். எனக்குள் ஒரு புதிய நட்பு வட்டம் உருவாகியது. எங்கள் வகுப்பில் பத்து பெண்கள் உள்பட 33 பேர் சேர்ந்திருந்தோம் (பின்னர் 3 பேர் விலகி சென்றுவிட 30 ஆனோம்).
எல்லாக் கல்லூரியையும் போல எங்கள் கல்லூரியிலும் ராகிங் நடந்தது. பாடவேளை முடிந்து அடுத்த ஆசிரியர் வருவதற்குள் வந்து எங்களை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். அன்று மதியம் சாப்பாட்டு இடைவேளையில் ஒரு பெண்கள் குழு வந்தது, எல்லோரிடமும் பேரு என்ன அப்பா பேரு என்ன என்று கேட்டது. (அப்பா... காளிக் கூட்டம்) என்னிடம் கேட்க, அமர்ந்தபடி சொல்ல,எந்திரிடா என் டுபுக்கு என்றது ஒண்ணு... எழுந்து சொன்னேன். (ம்... என்ன செய்ய... அவள்கள் அனுபவித்ததன் எதிரொலி.... என்ன செய்யட்டும். ) பெண்களிடம் கேள்வி கேட்கும் போது பல புரியாத கேள்விகள். (ஹி.... ஹி.... இப்ப புரியும்) ஒருவழியாக சமாளித்தாயிற்று.
கல்லூரி முடிந்து வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தபோது நாலு பேர் வந்து எங்களை அப்படியே கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் முந்திரிக் காட்டுக்கு ஓட்டிச் சென்றனர். (பசங்களை மட்டும் தான்). அங்கு எங்களுக்கு முன்னர் பல பேர் ராகிங்கில் சிக்கி சீறழிந்து கொண்டிருந்தனர். என்னவோ தெரியவில்லை நான் சின்ன ஆளாக் இருக்கவும் என்னை பேர் கேட்டதோடு ஓரமாக நிற்க சொல்லி விட்டனர் (சத்தியமா உண்மைங்க. நம்பினால் நம்புங்க).
என்னுடன் வந்த மரியக்கண்ணு பெரிய ஆளா இருப்பான். அவனை எல்லோருக்கும் ஒரு யுனிவர்சிட்டி சல்யூட் அடி என்றனர். அவன் முழிக்க, ஒருவன் எழுந்து எப்படி என்று சொல்லிக் கொடுத்து அவனை அடிக்கச் சொல்ல, அவனும் அடித்தான். (கருமம்... கண்றாவி...).
இன்னொருவனை பாடச் சொல்ல, அவனும் 'ஆயிரம் நிலாவே வா...' என்ற பாடலை பாடினான். என்னடா ஆயிரம் நிலவைக் கூப்பிடுறே... சரி அப்படியே இற்ங்கு வரிசையில ஒரு நிலா வரைக்கும் வா என்று ஒருவன் கூற். 999 நிலவே வா... 998 நிலாவே வா... என்று ஒரு ஒரமாக நின்று அவன் பாடினான். ஒருவனை கோழி பிடிக்கச் சொன்னார்கள். அவனும் 'பேக்.. பேக்.. என்று ஓடினான். என்னும் எத்தனை..? (சில நாட்களில் அவர்களெல்லாம் நண்பர்களாக மாறினர்).
மறுநாள் காலை ஒரு கூட்டத்திடம் மாட்டிக் கொண்டோம். அவர்கள் சட்டையை இன் பண்ணி வந்தவர்களை எடுத்து விடச்சொன்னதோடு முதலாம் ஆண்டில் இன் செய்யக் கூடாது என மிரட்டல் வேறு விட்டனர். (நம்ம எப்பவும் இன் பண்றதேயில்லை. அதனால கவலையே படலை). இந்த மிரட்டல் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடித்தது என்பது வேற விஷயம்.
ஒருவன் ஒரு பொண்ணை (இரண்டாம் ஆண்டு மாணவிகளில் அழகான பெண் என்ற வர்ணனை வேறு) எனது வகுப்புத் தோழனிடம் காட்டி ரோஸ் கொடுக்கச் சொல்ல, அவனும் அந்த அண்ணன் கொடுத்ததாக சொல்லி கொடுத்து விட்டான்.(சில நாளில் ரோஸ் கொடுத்தவனுக்கும் வாங்கியவளுக்கும் லவ்விருச்சுங்க...)
ராகிங்கெல்லாம் முடிந்து கல்லூரி ஸ்டிரைக், அடிதடி எனத் தொடர்ந்த போது அண்ணாத்துரை, ராமகிருஷ்ணன், பிரான்சிஸ், முத்தரசு பாண்டியன், ஆதி ரெத்தினம், நவனீதன், திருநாவுக்கரசு, சேவியர் என புதிய நட்புவட்டம் உருவாகியது. இந்த நட்பு வட்டம் எனக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.
கல்லூரிக்காலம் தொடரும்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேர காரணமாக இருந்தவர் எனது மூத்த அண்ணா. இல்லையென்றால் பனிரெண்டாம் வகுப்பு முடிக்குமுன்னரே எனது தந்தை எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் நூற்பாலையில் எனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டார். எனது அண்ணாவிடம் அழுது புலம்ப, அவர் நாங்கள்தான் படிக்கவில்லை (அவர் +2 வரை படித்தார். குடும்ப கஷ்டத்தால் மேல படிக்கவில்லை) அவங்க ரெண்டு பேரும் (நானும், தம்பியும்) நல்லா படிக்கட்டும் என்று சப்தம் போட, அப்பா அதற்கு மேல் ஒண்றும் சொல்லவில்லை.
ரிசல்ட் வந்ததும் கல்லூரியில் விண்ணப்பம் செய்தோம். கணிப்பொறியியல் துறைக்கும் விண்ணப்பித்தேன். 6000 ரூபாய் கட்டினால் இடம் தருவதாக தெரிவித்தனர். குடும்ப சூழல் இடம் தரவில்லை. (சில காலங்களுக்குப் பிறகு அதே கணிப்பொறியியல் துறையில் நான்கு வருடம் வேலை செய்து எனது ஆசையை தீர்த்துக் கொண்டேன்) கல்லூரியில் இடம் கிடைத்து. என்னுடன் படித்த நண்பர்கள் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் வேறு பாடப்பிரிவுகள், வேறு கல்லூரி என பிரிந்து சென்றனர்.
எனது கல்லூரி வாழ்வின் முதல் நாள் எனது அட்லஸ் சைக்கிளில் கிளம்பினேன்.வகுப்பறைக்கு சென்றால் எல்லோரும் புது முகம். எனக்கு கடைசி பெஞ்சில் உட்காரும் பழக்கம் இல்லை என்பதால் இரண்டாவது பெஞ்சில் அமர்ந்தேன். வகுப்பு தொடங்கிய போது என்னுடன் படித்த சிவபால மூர்த்தி வந்தான் (என்னுடன் ஒண்ணாப்பு முதல் கல்லூரி வரை படித்த நண்பன்). அப்பா ஒருத்தன் வந்துட்டான் என்று நினைத்த மனசு அவனுக்கு உட்கார இடம் கொடுத்தது. ஆனால் அவனோ ஒரு புன்னகையுடன் கடைசி பெஞ்சுக்கு போய்விட்டான். (மூன்று வருடங்கள் அவனுக்கும் எனக்குமான உறவில் அதிகம் பேசியதென்னவோ புன்னகை மட்டும்தான்.)
பிறகு மரியக்கண்ணு, தேவசகாயம் என எனது பள்ளித்தோழர்கள் வந்தனர். எனக்கு அருகில் அமர்ந்திருந்த்வர்கள் இருவரும் (அண்ணாத்துரை மற்றும் சேவியர்) எனக்கு அறிமுகமாயினர். எனக்குள் ஒரு புதிய நட்பு வட்டம் உருவாகியது. எங்கள் வகுப்பில் பத்து பெண்கள் உள்பட 33 பேர் சேர்ந்திருந்தோம் (பின்னர் 3 பேர் விலகி சென்றுவிட 30 ஆனோம்).
எல்லாக் கல்லூரியையும் போல எங்கள் கல்லூரியிலும் ராகிங் நடந்தது. பாடவேளை முடிந்து அடுத்த ஆசிரியர் வருவதற்குள் வந்து எங்களை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். அன்று மதியம் சாப்பாட்டு இடைவேளையில் ஒரு பெண்கள் குழு வந்தது, எல்லோரிடமும் பேரு என்ன அப்பா பேரு என்ன என்று கேட்டது. (அப்பா... காளிக் கூட்டம்) என்னிடம் கேட்க, அமர்ந்தபடி சொல்ல,எந்திரிடா என் டுபுக்கு என்றது ஒண்ணு... எழுந்து சொன்னேன். (ம்... என்ன செய்ய... அவள்கள் அனுபவித்ததன் எதிரொலி.... என்ன செய்யட்டும். ) பெண்களிடம் கேள்வி கேட்கும் போது பல புரியாத கேள்விகள். (ஹி.... ஹி.... இப்ப புரியும்) ஒருவழியாக சமாளித்தாயிற்று.
கல்லூரி முடிந்து வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தபோது நாலு பேர் வந்து எங்களை அப்படியே கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் முந்திரிக் காட்டுக்கு ஓட்டிச் சென்றனர். (பசங்களை மட்டும் தான்). அங்கு எங்களுக்கு முன்னர் பல பேர் ராகிங்கில் சிக்கி சீறழிந்து கொண்டிருந்தனர். என்னவோ தெரியவில்லை நான் சின்ன ஆளாக் இருக்கவும் என்னை பேர் கேட்டதோடு ஓரமாக நிற்க சொல்லி விட்டனர் (சத்தியமா உண்மைங்க. நம்பினால் நம்புங்க).
என்னுடன் வந்த மரியக்கண்ணு பெரிய ஆளா இருப்பான். அவனை எல்லோருக்கும் ஒரு யுனிவர்சிட்டி சல்யூட் அடி என்றனர். அவன் முழிக்க, ஒருவன் எழுந்து எப்படி என்று சொல்லிக் கொடுத்து அவனை அடிக்கச் சொல்ல, அவனும் அடித்தான். (கருமம்... கண்றாவி...).
இன்னொருவனை பாடச் சொல்ல, அவனும் 'ஆயிரம் நிலாவே வா...' என்ற பாடலை பாடினான். என்னடா ஆயிரம் நிலவைக் கூப்பிடுறே... சரி அப்படியே இற்ங்கு வரிசையில ஒரு நிலா வரைக்கும் வா என்று ஒருவன் கூற். 999 நிலவே வா... 998 நிலாவே வா... என்று ஒரு ஒரமாக நின்று அவன் பாடினான். ஒருவனை கோழி பிடிக்கச் சொன்னார்கள். அவனும் 'பேக்.. பேக்.. என்று ஓடினான். என்னும் எத்தனை..? (சில நாட்களில் அவர்களெல்லாம் நண்பர்களாக மாறினர்).
மறுநாள் காலை ஒரு கூட்டத்திடம் மாட்டிக் கொண்டோம். அவர்கள் சட்டையை இன் பண்ணி வந்தவர்களை எடுத்து விடச்சொன்னதோடு முதலாம் ஆண்டில் இன் செய்யக் கூடாது என மிரட்டல் வேறு விட்டனர். (நம்ம எப்பவும் இன் பண்றதேயில்லை. அதனால கவலையே படலை). இந்த மிரட்டல் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடித்தது என்பது வேற விஷயம்.
ஒருவன் ஒரு பொண்ணை (இரண்டாம் ஆண்டு மாணவிகளில் அழகான பெண் என்ற வர்ணனை வேறு) எனது வகுப்புத் தோழனிடம் காட்டி ரோஸ் கொடுக்கச் சொல்ல, அவனும் அந்த அண்ணன் கொடுத்ததாக சொல்லி கொடுத்து விட்டான்.(சில நாளில் ரோஸ் கொடுத்தவனுக்கும் வாங்கியவளுக்கும் லவ்விருச்சுங்க...)
ராகிங்கெல்லாம் முடிந்து கல்லூரி ஸ்டிரைக், அடிதடி எனத் தொடர்ந்த போது அண்ணாத்துரை, ராமகிருஷ்ணன், பிரான்சிஸ், முத்தரசு பாண்டியன், ஆதி ரெத்தினம், நவனீதன், திருநாவுக்கரசு, சேவியர் என புதிய நட்புவட்டம் உருவாகியது. இந்த நட்பு வட்டம் எனக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.
கல்லூரிக்காலம் தொடரும்.
-சே.குமார்
ஞாயிறு, 22 நவம்பர், 2009
பள்ளிப்பருவம் - III
நடுநிலைப் பள்ளி முடித்து மேல்நிலைப் பள்ளிக்குப் பயணம். அதற்கென நுழைவுத்தேர்வு வேறு. தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். சிபாரிசிலும் சிலர் சேர்த்துக் கொள்ளப்படுவதுண்டு. (ஏழைக்களுக்கு அந்த கொடுப்பினை எங்கும் இல்லை. அரசியல்வாதியாகவோ அல்லது அந்த ஏரியாவில் செல்வாக்கு மிகுந்தவரின் பிள்ளையாகவோ அல்லது ஆசி பெற்றவரின் பிள்ளையாகவோ இருக்க வேண்டும்.)
பரிட்சை எழுதிவிட்டு தினமும் தபால்காரரை எதிர்பார்த்து காத்திருக்க, ஒருநாள் லெட்டர் வந்தது. பிரிக்கும்வரை இதயம் எக்ஸ்பிரஸ் ரயிலாய் தடதடத்தது. (பெயிலா இருந்தா அம்மா கொன்னுபுடுவாங்களே...)நல்லவேளை தேறிவிட்டேன். பள்ளியில் சேர்க்க வரச்சொன்ன அன்று அம்மா என்னை பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டு போய் சேர்த்துவிடும்படி சித்தப்பாவிடம் கூற, அவர் வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார். (அன்று அவர் மீது கோபம் வந்தது. ஆனால் இன்றும் அவர் மீது உள்ள மரியாதை மட்டும் குறையவில்லை.)
எங்கள் ஊரில் இருந்து குறுக்காக நடந்து கூட்டிக்கொண்டு போய் அம்மா சேர்த்துவிட்டார். எங்கள் படிப்புக்காக அதிகம் கஷ்டப்பட்டவர் எங்கள் அம்மாதான். (அப்பா வேலை காரணமாக வெளியூரில் இருந்தார்.)
பெரிய பள்ளியில் சேர்ந்தாச்சு. ஒண்ணாப்பு முதல் எட்டாப்பு வரை எங்கூட படித்த நண்பர்களைப் பிரிந்து புது இடம். மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும் புது பள்ளிக்கூடம் போற சந்தோஷம்.முதல் நாள் பள்ளிக்கு சென்றால் இருவரைத்தவிர அனைவரும் புதுசு. என்னுடன் ஒண்ணாப்பு முதல் படித்த சிவபாலமூர்த்தியும் சுந்தரும் என் வகுப்பில். குத்தாலத்தில் குளித்தது போல் இருந்தது. (இருக்காதா பின்னே... யார்கிட்ட போயி பேச முடியும்... நமக்கு ஒரு துணைதானே.)
அது ஒரு கனாக்காலம் தான் போங்க. நாலு கிலோ மீட்டர் சைக்கிள் பயணம். பரிட்சை முடிந்து பள்ளிக்குப் போனா பரிட்சைப் பேப்பர் கொடுக்குறதுக்குப் பதிலா தலைமை ஆசிரியர் கிளாசுக்கு வந்து மார்க்கை வாசிக்கிறாருங்க. (என்ன கொடுமை சார் இது.) எந்திரிக்கச் சொல்லி வாசிச்சு, கடைசியில எல்லாப் பாடத்திலயும் பாசனவங்க எந்திரிங்க... ஒரு பாடம் பெயிலானவங்க எந்திரிங்க... ரெண்டுபாடம் பெயிலானவங்க... எல்லாத்திலயும் பெயிலானவங்க எந்திரிங்கன்னு சொல்லி நோகடிச்சுடுவாரு. (சை... அந்த அனுபவம் இருக்கே... நல்லவேளை பசங்க மட்டுமே படிக்கும் பள்ளியாப்போச்சு.)
எப்படியோ நாலு வருசம் அப்புடியே ஓடுச்சுங்க, நம்ம நல்லநேரம் பெயிலாகாமல் படிச்சு வெளியில வந்துட்டோம். (சாதனைதான் போங்க). ஒரு சில ஆசிரியர்கள் மேல் என்னை அறியாமல் ஈர்ப்பு வந்தது.
அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயா, ராய் சார், ஜோசப் ராஜ் சார், சொக்கலிங்கம் சார், ஜோசப் சார் (இவரு இங்கிலீஷ் எடுத்தாரு. பரிட்சையில பிட் அடிச்சவனை பேப்பர் கொடுக்கும் போது கரெக்டா புடிப்பாரு. அனா அவனை அடிக்கமாட்டாரு. யாரப்பா பார்த்து எழுதினேன்னு கேட்டு அவனை வரச்சொல்லி பளார்ன்னு ஒரு அறை விடுவாரு பாருங்க. அப்பா... நானும் வாங்கியிருக்கேன். அப்புறம் யாருக்கும் காட்டுறதில்லையில்ல...எப்புடி மனசு வரும்... ). சாமிநாதன் சார் (புளியங்குச்சிய எடுத்தா குச்சி நொறுங்கிறவரை அடிதான் போங்க), ஆகியோர்.
இவர்களில் நான் கல்லூரியில் படிக்கும் போது கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருந்த போது சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயாவுடனான தொடர்பு தொடர்ந்தது. அது இன்றுவரை தொடர்கிறது. அது எனது பாக்கியம்.
அடுத்த கட்டுரையில் மறக்க முடியாத கல்லூரிக்காலம் பற்றி பார்ப்போம்.
பரிட்சை எழுதிவிட்டு தினமும் தபால்காரரை எதிர்பார்த்து காத்திருக்க, ஒருநாள் லெட்டர் வந்தது. பிரிக்கும்வரை இதயம் எக்ஸ்பிரஸ் ரயிலாய் தடதடத்தது. (பெயிலா இருந்தா அம்மா கொன்னுபுடுவாங்களே...)நல்லவேளை தேறிவிட்டேன். பள்ளியில் சேர்க்க வரச்சொன்ன அன்று அம்மா என்னை பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டு போய் சேர்த்துவிடும்படி சித்தப்பாவிடம் கூற, அவர் வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார். (அன்று அவர் மீது கோபம் வந்தது. ஆனால் இன்றும் அவர் மீது உள்ள மரியாதை மட்டும் குறையவில்லை.)
எங்கள் ஊரில் இருந்து குறுக்காக நடந்து கூட்டிக்கொண்டு போய் அம்மா சேர்த்துவிட்டார். எங்கள் படிப்புக்காக அதிகம் கஷ்டப்பட்டவர் எங்கள் அம்மாதான். (அப்பா வேலை காரணமாக வெளியூரில் இருந்தார்.)
பெரிய பள்ளியில் சேர்ந்தாச்சு. ஒண்ணாப்பு முதல் எட்டாப்பு வரை எங்கூட படித்த நண்பர்களைப் பிரிந்து புது இடம். மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும் புது பள்ளிக்கூடம் போற சந்தோஷம்.முதல் நாள் பள்ளிக்கு சென்றால் இருவரைத்தவிர அனைவரும் புதுசு. என்னுடன் ஒண்ணாப்பு முதல் படித்த சிவபாலமூர்த்தியும் சுந்தரும் என் வகுப்பில். குத்தாலத்தில் குளித்தது போல் இருந்தது. (இருக்காதா பின்னே... யார்கிட்ட போயி பேச முடியும்... நமக்கு ஒரு துணைதானே.)
அது ஒரு கனாக்காலம் தான் போங்க. நாலு கிலோ மீட்டர் சைக்கிள் பயணம். பரிட்சை முடிந்து பள்ளிக்குப் போனா பரிட்சைப் பேப்பர் கொடுக்குறதுக்குப் பதிலா தலைமை ஆசிரியர் கிளாசுக்கு வந்து மார்க்கை வாசிக்கிறாருங்க. (என்ன கொடுமை சார் இது.) எந்திரிக்கச் சொல்லி வாசிச்சு, கடைசியில எல்லாப் பாடத்திலயும் பாசனவங்க எந்திரிங்க... ஒரு பாடம் பெயிலானவங்க எந்திரிங்க... ரெண்டுபாடம் பெயிலானவங்க... எல்லாத்திலயும் பெயிலானவங்க எந்திரிங்கன்னு சொல்லி நோகடிச்சுடுவாரு. (சை... அந்த அனுபவம் இருக்கே... நல்லவேளை பசங்க மட்டுமே படிக்கும் பள்ளியாப்போச்சு.)
எப்படியோ நாலு வருசம் அப்புடியே ஓடுச்சுங்க, நம்ம நல்லநேரம் பெயிலாகாமல் படிச்சு வெளியில வந்துட்டோம். (சாதனைதான் போங்க). ஒரு சில ஆசிரியர்கள் மேல் என்னை அறியாமல் ஈர்ப்பு வந்தது.
அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயா, ராய் சார், ஜோசப் ராஜ் சார், சொக்கலிங்கம் சார், ஜோசப் சார் (இவரு இங்கிலீஷ் எடுத்தாரு. பரிட்சையில பிட் அடிச்சவனை பேப்பர் கொடுக்கும் போது கரெக்டா புடிப்பாரு. அனா அவனை அடிக்கமாட்டாரு. யாரப்பா பார்த்து எழுதினேன்னு கேட்டு அவனை வரச்சொல்லி பளார்ன்னு ஒரு அறை விடுவாரு பாருங்க. அப்பா... நானும் வாங்கியிருக்கேன். அப்புறம் யாருக்கும் காட்டுறதில்லையில்ல...எப்புடி மனசு வரும்... ). சாமிநாதன் சார் (புளியங்குச்சிய எடுத்தா குச்சி நொறுங்கிறவரை அடிதான் போங்க), ஆகியோர்.
இவர்களில் நான் கல்லூரியில் படிக்கும் போது கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருந்த போது சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயாவுடனான தொடர்பு தொடர்ந்தது. அது இன்றுவரை தொடர்கிறது. அது எனது பாக்கியம்.
அடுத்த கட்டுரையில் மறக்க முடியாத கல்லூரிக்காலம் பற்றி பார்ப்போம்.
-சே.குமார்
ஞாயிறு, 15 நவம்பர், 2009
பள்ளிப்பருவம் -II
பள்ளிப் பருவம் -II... இதுவும் நடுநிலைப்பள்ளி சம்பவங்களின் தொகுப்புதான். நாலாப்பு படிக்கும் போது பாக்யராஜின் 'தூறல் நின்னு போச்சு' படம் வந்துச்சு. ஒருநாள் அம்மா, நான், அக்கா, தம்பி எல்லோரும் படம் பார்க்க போனோம். அடுத்த நாள் பள்ளிக்கூடம் போனப்ப மத்தியானம் சாப்பிட்டுட்டு மரத்தடியில நின்னு மரக்குரங்கு (அதாங்க ஒரு கம்பை வச்சு வட்டம் போட்டு விளையாடுவாங்களே... அதான்) விளையாடுனவங்களை பார்த்துக்கிட்டிருந்தேன்.
மரத்து மேல இருந்து குதிச்ச சவரிமுத்து அண்ணன், நேரே எம்மேல வந்து விழுந்தாரு. நான் கீழ விழுந்தப்ப கை ஒடிஞ்சிருச்சு, கை வலியோட வகுப்புல இருந்துட்டு வீட்டுக்கு வந்தா கையை தொங்க விட முடியலை. வலி உயிர் போகுது. அம்மா திட்டிட்டு, ஆவரை இலையை பறித்துக் கொண்டு வந்து வேகவைத்து ஒத்தடம் கொடுத்தாங்க. சரியா வரலை. அப்புறம் காலையில திட்டிக்கிட்டே நுடவைத்திய சாலைக்கு கூட்டிக்கிட்டு போனங்க.
ரெண்டு மாசத்துக்கு மேல கட்டுப்போட்டோம். பள்ளிக்கூடத்துக்கு சட்டை போடமத்தான் போவேன். (வகுப்புல எதுவும் சொல்லுறதில்லை. தனி மரியாதைதான் போங்க). நாங்க கட்டுப்போட போறதுக்கு பக்கத்து ஊர்ல போயி பஸ் புடிக்கனும். கிளம்புறப்ப டாண்ணு தூறல் நின்னு போச்சுல இருந்து 'ஏரிக்கரை பூங்காற்றே...' பாட்டை ரேடியோவில போடுவாங்க. (அப்ப அந்த பாட்டு மேல ஒரு மோகம்)
அம்மாகிட்ட இந்த பாட்டைக் கேட்டுட்டு வர்றேம்மான்னு சொன்னாப்போதும், ஆமா இவருக்காக பஸ்காரன் நிப்பான். வாடா. பாக்யராஜ் மாதிரி சண்டை போடுறேன்னுதான் கை ஒடிஞ்சு கிடக்கு வாறியா.. இல்லையா..? என்று கத்துவார். (நாம... பாக்யராஜ் மாதிரி சண்டை... என்ன சிறுபிள்ளைத்தனமான பேச்சு பாருங்க).
இப்பவும் தூறல் நின்னு போச்சு பாட்டைக் கேட்டா மரக்குரங்கும் கையும் மறக்காமல் ஞாபகத்தில் வரும்.
ஆறாவது படிக்கும் போது அல்வா விற்பனை அமோகமா நடந்ததுங்க.(அப்பவே தொழிலதிபருங்க) ஒரு ரூபாய்க்கு வாங்கினா ஒரு ரூபாய் 20 காசுக்கு விக்கலாம். சில சமயம் லாபமான 20 காசுக்கு நாமளே சாப்பிட்டுறது. ( லாபம் நினைக்காத முதலாளி)
அப்புறம் திங்கட்கிழமை மதியம் பக்கத்துல ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடக்கிற இடத்துல போயி நான், பழனி, சேகர், முத்துப்பாண்டி எல்லோரும் காசு பொறக்கி (இப்பவும் நாம பொறுக்கிதாங்க.) கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்ட அந்த நாட்கள் இன்னும் இனிமையாய் நெஞ்சுக்குள்.
அந்த நடுநலைப்பள்ளிக்கு பின்பொரு நாள் நானும் எனது நண்பன் முருகனும் நாங்கள் நடத்திய கணிப்பொறி மையம் மூலமாக சில உதவிகளை செய்த போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களால் கௌரவிக்கப்பட்டோம்.
மரத்து மேல இருந்து குதிச்ச சவரிமுத்து அண்ணன், நேரே எம்மேல வந்து விழுந்தாரு. நான் கீழ விழுந்தப்ப கை ஒடிஞ்சிருச்சு, கை வலியோட வகுப்புல இருந்துட்டு வீட்டுக்கு வந்தா கையை தொங்க விட முடியலை. வலி உயிர் போகுது. அம்மா திட்டிட்டு, ஆவரை இலையை பறித்துக் கொண்டு வந்து வேகவைத்து ஒத்தடம் கொடுத்தாங்க. சரியா வரலை. அப்புறம் காலையில திட்டிக்கிட்டே நுடவைத்திய சாலைக்கு கூட்டிக்கிட்டு போனங்க.
ரெண்டு மாசத்துக்கு மேல கட்டுப்போட்டோம். பள்ளிக்கூடத்துக்கு சட்டை போடமத்தான் போவேன். (வகுப்புல எதுவும் சொல்லுறதில்லை. தனி மரியாதைதான் போங்க). நாங்க கட்டுப்போட போறதுக்கு பக்கத்து ஊர்ல போயி பஸ் புடிக்கனும். கிளம்புறப்ப டாண்ணு தூறல் நின்னு போச்சுல இருந்து 'ஏரிக்கரை பூங்காற்றே...' பாட்டை ரேடியோவில போடுவாங்க. (அப்ப அந்த பாட்டு மேல ஒரு மோகம்)
அம்மாகிட்ட இந்த பாட்டைக் கேட்டுட்டு வர்றேம்மான்னு சொன்னாப்போதும், ஆமா இவருக்காக பஸ்காரன் நிப்பான். வாடா. பாக்யராஜ் மாதிரி சண்டை போடுறேன்னுதான் கை ஒடிஞ்சு கிடக்கு வாறியா.. இல்லையா..? என்று கத்துவார். (நாம... பாக்யராஜ் மாதிரி சண்டை... என்ன சிறுபிள்ளைத்தனமான பேச்சு பாருங்க).
இப்பவும் தூறல் நின்னு போச்சு பாட்டைக் கேட்டா மரக்குரங்கும் கையும் மறக்காமல் ஞாபகத்தில் வரும்.
ஆறாவது படிக்கும் போது அல்வா விற்பனை அமோகமா நடந்ததுங்க.(அப்பவே தொழிலதிபருங்க) ஒரு ரூபாய்க்கு வாங்கினா ஒரு ரூபாய் 20 காசுக்கு விக்கலாம். சில சமயம் லாபமான 20 காசுக்கு நாமளே சாப்பிட்டுறது. ( லாபம் நினைக்காத முதலாளி)
அப்புறம் திங்கட்கிழமை மதியம் பக்கத்துல ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடக்கிற இடத்துல போயி நான், பழனி, சேகர், முத்துப்பாண்டி எல்லோரும் காசு பொறக்கி (இப்பவும் நாம பொறுக்கிதாங்க.) கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்ட அந்த நாட்கள் இன்னும் இனிமையாய் நெஞ்சுக்குள்.
அந்த நடுநலைப்பள்ளிக்கு பின்பொரு நாள் நானும் எனது நண்பன் முருகனும் நாங்கள் நடத்திய கணிப்பொறி மையம் மூலமாக சில உதவிகளை செய்த போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களால் கௌரவிக்கப்பட்டோம்.
-சே.குமார்
வெள்ளி, 13 நவம்பர், 2009
பள்ளிப்பருவம் - I
பள்ளிப்பருவம்... என்றும் மனதுக்குள் மழைக்கால காளானாய் மகிழ்ச்சி தரக்கூடியது. அந்தப் பருவத்து வசந்த காலத்தை அசை போட்டுப் பார்ப்பதே பள்ளிப்பருவம் - I.
நான் படித்தது நகரத்தில் இருந்தாலும் கிராமத்துப் பிள்ளைகளை நம்பி நடத்தப்பட்ட ஒரு நடுநிலைப்பள்ளி. ஆறு வயதில் ஒண்ணாப்பு சேர்க்கப்பட்டேன். எங்க ஊர்ல இருந்து மூன்று கிலோமீட்டர் நடந்தே வந்து படிக்கணும். (ம்... இப்பல்லாம் 3 வயசுல பள்ளிக்கூடம் போறாங்க. வீடு வரைக்கும் பேருந்து வசதி உண்டு. புஸ்தக முட்டையும் அதிகம். பணம் கட்டி படிக்கிறதால பொறுப்பும் அதிகம். நமக்கு அது இல்லிங்கோ).
மூணாப்பு வரைக்கும் எல்லோரும் பாசுங்க. அதனால எங்க ஊருல நிறைய பேரு நாலாப்பு வரைக்கும் படிச்சவங்க. (நாலாப்பு போயி பெயில் ஆகிட்ட மேல படிக்கிறதில்லை). எனக்கு ஆனா, ஆவன்னா எல்லாம் ஒண்ணாப்புல சொல்லிக் கொடுத்தாலும். எ, பி, சி, டி மூணாப்புலதான் சொல்லித் தந்தாங்க.
புஸ்தக மூட்டையில புஸ்தகம் இருக்கோ இல்லியோ மதிய சாப்பாட்டுக்கு தட்டு இருக்கும். (மதிய உணவுக்காகவே பள்ளிக்கூடம் வந்தவங்க பலபேரு. (வறுமைதாங்க... வேற என்ன சொல்ல...). அப்புறம் மழை வர்ற மாதிரி இருந்தா போதும் கிரமாத்துப் பிள்ளைங்கல்லாம் போங்கன்னு சொல்லுவாங்க பாருங்க பள்ளிக்கூடமே காலியாகிவிடும். (கிராமத்துப் பிள்ளைங்க தாங்க அதிகம்) .
அதுவும் மழை விழுந்தாப் போதும் புத்தகப்பைய பள்ளியிலயே வச்சுட்டு(மறக்காம தட்ட எடுத்துக்கிட்டு) ஆட்டம் போட்டுக்கிட்டு போற சுகம் இருக்கே... அத இன்னைக்கு நினைச்சாலும் மனசு கூத்தாடுதுங்க...மழைத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும் போது எதிர்த்து வரும் மீனை அடித்துப் பிடிக்கும் அந்த சந்தோஷ நாட்கள் மீண்டும் கிடைக்குமா.?
ஒண்ணாப்புல எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவங்க மரியம்மை ஆசிரியை. எனக்கு அனா, ஆவன்னா கற்றுக்கொடுத்த தெய்வம் அவங்க.(அவங்க இப்ப தெய்வமாகிட்டாங்க...). நான் சின்னப்பயல இருக்கேன்ன்னு(இப்பவும் சின்னப்பிள்ளையாவே இருக்கேன்) அம்மா என்னைய மறுபடியும் ஒண்ணாப்புல போடச் சொன்னப்ப. அவங்க நல்லா படிக்கிறவனை(!!!???)எதுக்கு பெயிலாக்கணுமுன்னு மறுத்துட்டாங்களாம். (என்ன கொடுமை சார் இது.)
அவங்க ரொம்ப நல்லவங்க. யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டங்க. குறிப்பா நல்லா பாடம் நடத்துவாங்க. அவங்கமேல எல்லோருக்கும் பாசம் உண்டு.(ஒண்ணாப்புல வகுப்பு எடுக்கிறதால பசங்க அம்மா மாதிரி நினைச்சு பழகுவாங்க). அவங்க இப்ப இல்லை. எல்லாம் காலத்தின் கட்டாயம்.
என்ன ரொம்ப நல்லவங்களான என் ஆசிரியர், என் கல்வித் தாய் நோய்வாய்ப்பட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு இறந்தாங்க. அதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவங்களுக்கு இந்த முதல் கட்டுரையில் அஞ்சலி செலுத்துறேன்.
அடுத்த கட்டுரையில் பள்ளிபருவம் II தொடரும். வாசித்து கருத்துக்களை பின்னூட்டம் செய்யுங்கள். மீண்டும் சந்திப்போம்.
நான் படித்தது நகரத்தில் இருந்தாலும் கிராமத்துப் பிள்ளைகளை நம்பி நடத்தப்பட்ட ஒரு நடுநிலைப்பள்ளி. ஆறு வயதில் ஒண்ணாப்பு சேர்க்கப்பட்டேன். எங்க ஊர்ல இருந்து மூன்று கிலோமீட்டர் நடந்தே வந்து படிக்கணும். (ம்... இப்பல்லாம் 3 வயசுல பள்ளிக்கூடம் போறாங்க. வீடு வரைக்கும் பேருந்து வசதி உண்டு. புஸ்தக முட்டையும் அதிகம். பணம் கட்டி படிக்கிறதால பொறுப்பும் அதிகம். நமக்கு அது இல்லிங்கோ).
மூணாப்பு வரைக்கும் எல்லோரும் பாசுங்க. அதனால எங்க ஊருல நிறைய பேரு நாலாப்பு வரைக்கும் படிச்சவங்க. (நாலாப்பு போயி பெயில் ஆகிட்ட மேல படிக்கிறதில்லை). எனக்கு ஆனா, ஆவன்னா எல்லாம் ஒண்ணாப்புல சொல்லிக் கொடுத்தாலும். எ, பி, சி, டி மூணாப்புலதான் சொல்லித் தந்தாங்க.
புஸ்தக மூட்டையில புஸ்தகம் இருக்கோ இல்லியோ மதிய சாப்பாட்டுக்கு தட்டு இருக்கும். (மதிய உணவுக்காகவே பள்ளிக்கூடம் வந்தவங்க பலபேரு. (வறுமைதாங்க... வேற என்ன சொல்ல...). அப்புறம் மழை வர்ற மாதிரி இருந்தா போதும் கிரமாத்துப் பிள்ளைங்கல்லாம் போங்கன்னு சொல்லுவாங்க பாருங்க பள்ளிக்கூடமே காலியாகிவிடும். (கிராமத்துப் பிள்ளைங்க தாங்க அதிகம்) .
அதுவும் மழை விழுந்தாப் போதும் புத்தகப்பைய பள்ளியிலயே வச்சுட்டு(மறக்காம தட்ட எடுத்துக்கிட்டு) ஆட்டம் போட்டுக்கிட்டு போற சுகம் இருக்கே... அத இன்னைக்கு நினைச்சாலும் மனசு கூத்தாடுதுங்க...மழைத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும் போது எதிர்த்து வரும் மீனை அடித்துப் பிடிக்கும் அந்த சந்தோஷ நாட்கள் மீண்டும் கிடைக்குமா.?
ஒண்ணாப்புல எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவங்க மரியம்மை ஆசிரியை. எனக்கு அனா, ஆவன்னா கற்றுக்கொடுத்த தெய்வம் அவங்க.(அவங்க இப்ப தெய்வமாகிட்டாங்க...). நான் சின்னப்பயல இருக்கேன்ன்னு(இப்பவும் சின்னப்பிள்ளையாவே இருக்கேன்) அம்மா என்னைய மறுபடியும் ஒண்ணாப்புல போடச் சொன்னப்ப. அவங்க நல்லா படிக்கிறவனை(!!!???)எதுக்கு பெயிலாக்கணுமுன்னு மறுத்துட்டாங்களாம். (என்ன கொடுமை சார் இது.)
அவங்க ரொம்ப நல்லவங்க. யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டங்க. குறிப்பா நல்லா பாடம் நடத்துவாங்க. அவங்கமேல எல்லோருக்கும் பாசம் உண்டு.(ஒண்ணாப்புல வகுப்பு எடுக்கிறதால பசங்க அம்மா மாதிரி நினைச்சு பழகுவாங்க). அவங்க இப்ப இல்லை. எல்லாம் காலத்தின் கட்டாயம்.
என்ன ரொம்ப நல்லவங்களான என் ஆசிரியர், என் கல்வித் தாய் நோய்வாய்ப்பட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு இறந்தாங்க. அதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவங்களுக்கு இந்த முதல் கட்டுரையில் அஞ்சலி செலுத்துறேன்.
அடுத்த கட்டுரையில் பள்ளிபருவம் II தொடரும். வாசித்து கருத்துக்களை பின்னூட்டம் செய்யுங்கள். மீண்டும் சந்திப்போம்.
-சே.குமார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








