மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ரசிகனாய் ரசித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசிகனாய் ரசித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 மே, 2010

மங்கையர் சிகரம் + மெயிலில் வந்த மொக்கை

கடந்த ஒரு வாரமாக வலையில் சிறு பிரச்சினை, அதனால் பதிவிடவோ, பின்னூட்டமிடவோ முடியாத சூழ்நிலை. இன்று சரியாகிவிட்டது.

எனது சிறுகதைகள் வலைப்பூவில் பதிவிடப்பட்ட 'மனசு' சிறுகதை புதிதாக தொடங்கப்பட்டுள்ள மங்கையர் சிகரம்  என்ற பத்திரிக்கையின் முதல் பதிப்பில் வெளிவந்துள்ளது. அதற்கு காரணமான பத்திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ் சிகரம் வலைத்தளத்திற்கும் நன்றிகள்.


பெண்களுக்கான பத்திரிக்கையாக வலம் வர இருக்கும் மங்கையர் சிகரத்திற்கு தங்கள் ஆக்கங்களை அனுப்ப விரும்பும் அனைவரும் இந்த முகவரியில் அனுப்பலாம்.

admin@tamilsigaram.com

  tamilsigaram@yahoo.com


மே- 1 பிறந்த நாள் கொண்டாடிய 'தல' அஜீத்துக்கு கடந்த கால கசப்புகள் கரைந்து வரும் நாட்கள் வசந்தமாக வாழ்த்துக்கள்.


சென்னை அனி வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை தட்டிச்சென்ற அன்று நீண்ட கட்டுரை எழுதி, படங்கள் எல்லாம் சேகரித்து பதிவிட முடியாமல் போய்விட்டது. காரணம் வலையில் பிரச்சினை. அதை இனி பதிவிட்டால் வறண்ட கண்மாயில் மீன் பிடிப்பது போல் ஆகிவிடும். அதனால தோனி தலைமையில் களம் கண்ட தமிழக வீரர்கள், எங்கள் நாயகன் ரெய்னா உள்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மெயிலில் வந்த மொக்கை

பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா? (what a pity)

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?........... 
 
-'பரிவை' சே.குமார்.

புதன், 24 பிப்ரவரி, 2010

சாதனை நாயகன் சச்சின்..!

சாதனைகளால் சச்சினுக்குப் பெருமை என்பதைவிட சச்சினால் சாதனைக்குப் பெருமை என்பதே சாலச்சிறந்ததாகும்.
சச்சின் சாதிக்கப் பிறந்தவர்... எத்தனை சாதனைகள்... கிரிக்கெட்டில் சாதனைகள் எல்லாம் அவர் காலடியில்...
உலக அரங்கில் அதிக ரசிகர்களை கொண்டவர் நம் சச்சின். இந்தியராய் பிறந்ததால் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை.
இந்த சாதனைகள் எல்லாம் அவருக்கு சொந்தமாக எத்தனை வசவுகள். சச்சினுக்கு வயசாச்சு... இளைஞர்களுக்கு வழி விடலாம். பழைய ஆட்டம் இல்லை... இன்னும் எத்தனை எத்தனை...?
இன்று சச்சினின் ஆட்டம் பார்த்த இளம் வீரர்கள் எல்லாம் இப்படி விளையாட முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது என்று அடித்துக் கூறலாம்.
200 ரன் எடுத்த முதல் வீரர். யாரும் எளிதில் எட்ட முடியாத சாதனைதான் இது. சாதிக்க எவனாவது பிறக்கலாம். ஆனால் காலம் உள்ளவரை நம் சச்சினே கதாநாயகனாக.
நண்பர்கள் பலர் எழுதி தள்ளிவிட்டதால் எதுவும் எழுதவில்லை. சாதனை நாயகன் தனது இரட்டைச்சதத்தை நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் சமர்பிப்பதாக சொல்லியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். இன்னும் சாதியுங்கள்... என்றும் நீங்கள் சாதனையின் குழந்தைதான்.
வாழ்த்துக்கள் சச்சின். உமது கனவாம் உலககோப்பையும் கிட்ட வாழ்த்துக்கள்.
சச்சின் 200 ரன் எடுத்த படங்கள் சில...












Thanks: cricinfo.com

'பரியன் வயல்' சே.குமார்