மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

கலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஜூலை, 2015

கலாம் உனக்கு சலாம்...

குழந்தைகளில்
உலகில் மகிழ்ந்த
இதயம் 
அமைதித் துயிலில்...

மதங்களைக் கடந்த
மனங்களை வென்ற நீ
மண்ணுக்குள்
புதைக்கப்பட்டாய்
என்கிறார்கள்...
இல்லை... இல்லை...
விதைக்கப்பட்டாய்...

அன்று
உன்னைத் தவழவிட்டு
சந்தோஷம் கொண்ட
தாய் பூமி...
இன்று
தன்னுள் தாங்கி
பெருமை தேடிக்கொண்டது...

நீ உறங்கும்
பேக்கரும்பு ...
ஆகலாம் இனி
புண்ணியபூமியாய்...

உன்னை
மனுஷ்ய புத்திரர்களுக்கு
பிடிக்காமல் இருக்கலாம்...
மனித புத்திரர்களுக்கு
ரொம்பப் பிடிக்கும்...

 மனுஷ்ய புத்திரர்களின்
தலைவன் அல்ல...
மக்களின் தலைவன் 
நீ என்பதை
சொல்லாமல் சொல்லியது...
வழியனுப்ப வந்த
மக்கள் வெள்ளம்...

வாழும் காலத்தில் 
ஓய்வெடுக்காதவனே...
இனியேனும் 
நிம்மதியாய் உறங்கு...

சாதி... மதம்...
அழிக்க - நீ
விதைக்கப்பட்ட
உன் பூமியில் இருந்து
கிளம்பட்டும்...
அக்னிச் சிறக்கொன்று...

விதையாய் நீ...
உன்னில் இருந்து
வீரியமாய் கிளம்பட்டும்
விருட்சங்கள்...!
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

அக்னிச் சிறகு காற்றிலே...


தங்களைக் கடந்து மனிதம்
கண்டவன் மாமனிதன் நீ..!
மாணவர்கள் உலகத்தில்
மகிழ்ந்து கிடந்தவன் நீ..!
வல்லரசு ஆகும் நல்லரசு
காண ஆசைப்பட்டவன் நீ......
ஜனாதிபதிக்கான இலக்கணத்தை
மாற்றி எழுதியவன் நீ..!
குரான்... கீதை... பைபிளை
படித்து அறிந்தவன் நீ..!
அழகனில்லைதான் ஆனால்
அறிவு நிறைந்தவன் நீ..!
அக்னிச் சிறகாய் உலகை
வலம் வந்தவன் நீ..!
நீண்ட முடியும்
தவழும் புன்னகையுமாய்...
உனக்கு நிகர் நீயென வாழ்ந்து
கனவு காணச் சொல்லி
நனவாகும் முன்னே
ஏவுகணையாய் பறந்தவனே...
அக்னி சிறகொன்று
காற்றிலே கரைந்ததேயென
மனசு மறுதலித்தாலும்
நீ நிரந்தரமானவன்
உனக்கு மரணமில்லை...
-'பரிவை' சே.குமார்.