மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 ஜூலை, 2019

பிக்பாஸ் : முன்முடிவுடன் 'போட்ராய்' மீரா

Image result for bigg boss 3 day 30 photos

ரண்டு சீசன்களில் மக்களிடம் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்கள் இன்னும் எதிர்பார்ப்பைக் கூட்டுவதாக இருக்க வேண்டுமேயொழிய மரண மொக்கையாக நகரக்கூடாது. 

இந்த சீசனில் கடந்த வாரங்களில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்குகள் எல்லாமே மொக்கையாகத்தான் இருந்தது என்றால் இந்த வாரம் மரண மொக்கையான டாஸ்க்கைக் கொடுத்திருக்கிறார். சேரன், மது, தர்ஷன், மீரா தவிர மற்றவர்கள் எல்லாம் பிக்பாஸ் என்ன சொன்னாரோ அதைச் செய்வதை விடுத்து மொக்கை போடுகிறார்கள். 

இப்படியே போய்க் கொண்டிருந்தால் சீரியல் பார்ப்பதே மேல் எனப் பெண்கள் சன் டிவிப் பக்கமாப் போயிருவாங்க பிக்பாஸ்... திரைக்கதையில் மாற்றம் கொண்டு வாங்க பிக்பாஸ்... அரைத்த மாவையே அரைக்காதீங்க பிக்பாஸ்... காதலை வைத்துக் கல்லாக் கட்டலாம்ன்னு மனப்பால் குடிக்காதீங்க.

எப்பவும் போல் கெட்ட ஆட்டத்துக்கு அப்புறம் பாம்புப்பட்டி, கீரிப்பட்டின்னு ரெண்டு அணியாப் பிரிஞ்சி பட்ஜெட் டாஸ்க்குக்கான விளையாட்டை ஆட வேண்டும் என்று சொன்ன பிக்பாஸ் ஒவ்வொருவரும் எப்படி விளையாட வேண்டும் எனச் சொன்னார். 

பாம்புப்பட்டிக்கு நாட்டாமை சேரன், கீரிப்பட்டிக்கு நாட்டாமை மது.

பாம்புப்பட்டியில வ.வா.ச உறுப்பினர்களாக கவின் - சாண்டி, வ.வா.ச தலைவியாக சாக்சி, கணவன் மனைவியாக முகன் - அபிராமி. நாட்டாமைக்கு அடுத்த நிலை மற்றும் திருடியாக ரேஷ்மா... 

அப்புடியே அந்தப்பக்கம் போனாக்க அம்மாவாக மீரா, மகனாக தர்ஷன், மருமகளாக ஷெரின், மைனராக சேரன், எதுலயும் சேத்தியில்லாம துறுதுறுன்னு திரிய வேண்டிய லாஸ்லியா.

சேரன் குழுவுக்கு பாத்ரூமூம் பாத்திரம் கழுவுமிடமும்... ரெண்டுமே கழுவுற இடம்தான்... மதுமிதா குழுவுக்கு ஹாலும் சமையல் இடமும்... சாப்பாடு வேணுமின்னா தட்டத் தூக்கிட்டுப் போயி அவங்க கொடுக்கிற சின்ன டாஸ்க்கை செஞ்சிட்டு வாங்கிக்கணும்... அதே போல அவங்க பாத்ரூம் போகணுமின்னா குடத்தை எடுத்துக்கிட்டுப் போய் அவங்க சொல்ற டாஸ்கைச் செஞ்சிட்டு போகணும். 

பிக்பாஸ் சொன்னதை உள்வாங்கியது மதுவும் சேரனும்... ஆனா கடைசி நாளில் யார் நல்லா நடிச்சாங்கன்னு கேட்டதும் மத்தவங்கள்ல யாரையாச்சும் ரெண்டு பேரைத் தூக்கிட்டு நிப்பானுங்க பாருங்களேன்... ஏன்னா மதுவும் சேரனும் பெரும்பாலானோரின் மனசுக்கு ஆகாதவர்கள். 

கவினும் சாண்டியும் என்ன செய்யணும்ன்னு சொன்னதை விட்டுட்டு ஏதோ செஞ்சிக்கிட்டு இருக்காங்க... அவங்க சித்தப்பு சரவணன் எதிரணி என்பதால் அங்கிட்டு ஒடுறானுங்க... சேரனையும் சந்தடி சாக்கில் திட்டுறானுங்க... முந்தைய பகுதியில் நைனாவாய் கலக்கிய சாண்டி இந்த டாஸ்கில் செய்வதெல்லாம் எரிச்சல் வருவதாய்த்தான் இருக்கிறது.

விளையாட்டின் விதியே ஜாலியான டாஸ்க்குக்களைக் கொடுப்பதுதான் என்பதை சேரன், மது தவிர யாரும் உள்வாங்கலைன்னுதான் தெரியுது. சாக்சியெல்லாம் என்ன செய்யுறோம்ன்னே தெரியாம செய்யுது... அபிக்கு முகனை கணவனாய் கொடுத்துவிட்டதால் முகத்தில் பூரிப்போ பூரிப்பு...  அம்புட்டுப் பூரிப்பு... முகனும் கட்டிப் பிடித்து நிற்பதில்தான் கவனம் செலுத்துகிறான்... கவினுக்கு சாக்சி பின்னே திரியவே சரியா இருக்கு... கவின் அழுதான்... இனி திருந்திருவான்னு நினைச்செல்லாம் பிக்பாஸ் பாக்காதீங்க... அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க.

முன்முடிவுகளுடன் ஒரு விஷயத்தையோ ஒரு மனிதரையோ எதிர்க்கொள்பவர்கள் எப்பவுமே நான் பேசுவதுதான் சரியெனவே நிற்பார்கள்.. அடுத்தவரைப் பேச விடமாட்டார்கள்... அப்படியான ஒரு ஆள்தான் மீரா.... சேரனுடன் சண்டை போட வேண்டும் என்பதே அவரின் எண்ணமாய்... அந்த எண்ணத்துக்கு எண்ணெய் ஊத்த சரவணன்... எல்லாரும் கொடுத்தபடி நடக்கிறார்கள் என்பது தெரியாமலேயே விளையாடினால் என்னாகும்... அதுதான் நடக்கிறது. சம்பந்தமில்லாமல் சேரனுடன் மோதுகிறார். மனுசனுக்கு மரியாதை இல்லை என்றாலும் வயசுக்குக் கொடுக்கலாம்... ஒவ்வொரு வார விளையாட்டிலும் ஏதேனும் பண்ணி தான் இருக்கும் இடத்தை எல்லாருக்கும் காட்டுவதில் குறியாக இருக்கும் மீரா, என்ன ஏது என்பதைப் புரிந்து சண்டை போடலாம்.

சேரன் சரியாய்ப் பயணிக்கிறார்... என் முகத்தை இன்னும் காட்டலை எனக் கோபத்துடன் பேசுகிறார்... மது அடுத்தவர் முகத்தை வைத்து அவரின் குண நலனைச் சொல்லும் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். மீரா சரியாகப் பயணித்துச் சேரனை தாக்குகிறேன் என தன் கதாபாத்திரத்தில் இருந்து இறங்கிவிட்டார். மீராவைச் செமையாகத் தாக்குகிறான் தர்ஷன். 

'உனக்கு நாந்தானேம்மா கொள்ளி வைக்கணும்..? வைக்கிறேன் வைக்கிறேன்...' என்ற தர்ஷனின் டைமிங்க் காமெடியும் 'எந்தக் கையைப் புடிச்சி இழுத்தான்... வலது கையைத்தானே... அப்ப இடது கையையும் புடிச்சி இழு... அதுதான் தண்டனை...' என்ற சேரனின் தீர்ப்பும் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி இருந்தது.

அப்புறமெல்லாம் மரண மொக்கை... இதே மொக்கைதான் இன்றும் தொடரும் என்றால்... சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்றாகும்.

தர்ஷனுக்கு ஷெரினையும் முகனுக்கு அபிராமியையும் மனைவியாக்கியதுதான் பிக்பாஸ் இந்தப் போட்டியில் செய்த மிகப்பெரிய தவறு. முகனுக்கு லாஸ்லியாவையும் தர்ஷனுக்கு சாக்சியையும் ஆக்கியிருந்தால் கவினும் அபிராமியும் படும்பாட்டை ரசித்திருக்கலாம்... இப்ப முகனும் அபியும் லவ்வோ லவ்வு... கவினும் சாக்சியும் மறுக்கா லவ்வு... அப்புறம் எங்கிட்டு இந்தத் டாஸ்க் மக்களை லவ்வும்.

மதுவின் பேச்சு டாஸ்க் தாண்டி பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்... மீராவின் செயல் எல்லாருக்கும் எரிச்சலூட்டும்.

இனிமே வயசுக்கு வந்து என்ன வராட்டி என்னன்னு கவுண்டமணி சொல்றது போல சரவணனன் எந்தப் போட்டியிலும் தீவிர நாட்டமெல்லாம் கொள்வதில்லை... தன்னோட டார்க்கெட் சேரனை ஒரு அடி அடிச்சாலோ போதும்ன்னு தள்ளியே நிற்கிறாரு.

போன பதிவில் சொன்னது போல் வெளியேற்றப்படலாம் என்ற எண்ணத்தில் மக்கள் மனதில் நல்ல பேர் வாங்க கவினோடு குலாவ ஆரம்பித்துவிட்டார் சாக்சி. லாஸ்லியா எந்த வேலையும் பார்க்காம அப்படியேதான் நாலு வாரமாச் சுத்திக்கிட்டு இருக்கு. எப்பத்தான் வேலையெல்லாம் பாக்குமோ தெரியலை. இந்த வாரமும் செல்லப்பிள்ளை கதாபாத்திரம்... வெளங்கிடும்.

ரேஷ்மாவுக்குப் பொறந்தநாளாம்.... ராத்திரி 12 மணிக்கு பாட்டுப் போட்டு...  கேக் அனுப்பி... கூடவே பையன் பேசிய வீடியோவும் போட்டு எப்பவும் போல மகிழ்வாய் கொண்டாட வேண்டிய பிறந்த தினத்தை எழவு வீடாக்கி தன் கடமையை நிறைவேற்றிக் கொண்டார் பிக்பாஸ். சாண்டி அழுது தொலைச்சார்... இப்ப எல்லாரும் அழ ஆரம்பிச்சிட்டானுங்க... அதுவும் ரேஷ்மா அழுததையெல்லாம் பார்க்கும் போது... ஏன் பொறந்தோமுன்னு அழுகுறாங்களோன்னு தோணுது...

நாட்டுப்புறச் சேலைக்கட்டு அங்க இருக்க ஒருத்தருக்குக் கூட கட்டத் தெரியாதுன்னு ஊருக்கே தெரியும்... இவங்களுக்கெல்லாம் சேலை கட்டிவிட்டு மேக்கப் போட்டு விட்டங்க பட்ட கஷ்டத்துக்குக் கூட பலனில்லை... செத்தவன் கையில வெத்தலை பாக்கு வச்ச மாதிரி இந்தத் டாஸ்க்கை ஏனோதானோ செஞ்சிக்கிட்டு இருக்காங்க... 

பிக்பாஸ் கொஞ்சம் அடிச்சி ஓட்டுங்க இல்லேன்னா சண்டி மாடுங்க அந்த இடத்தை மட்டுமே சுத்திச் சுத்தி வரும் என்பதை மனசில வையுங்க...

மொத்தத்தில் மரண மொக்கை...

அப்ப இன்னைக்கு...?

பிக்பாஸ் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 23 ஜூலை, 2019

பிக்பாஸ் - மோகன் வைத்யாவாக 'மாஸ்'டர் சாண்டி

Image result for BIGGBOSS DAY 29 sandi as mohan vaidhya

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட 'கட்டிக்கொடு' நைனாவின் புகழ்(!) பாடும் தொகுப்பாய்த்தான் இருந்தது. காலையில எல்லாரும் ஒரு குத்தாட்டம் போட்டாச்சு... நைனா இல்லாததால் குத்தாட்டம் முடிந்ததும் முத்தமழை மிஸ்ஸிங்... வெளியேற்றத்தில் தப்பிப் பிழைத்தால் அபிராமியின் சோக முகத்தில் கொஞ்சம் மலர்ச்சி... டப்பாப் பாட்டுக்கு பரத நாட்டிய அபிநயம் பிடிப்பதெல்லாம் அதிகமில்லை... அதையும் தாண்டி ரொம்ப அதிகமானது... அனாவசியமானது அபி. 

கொஞ்ச நாளா 'சனியன் தொலைந்தது' என நினைத்த காலையில சொல்லிக் கொடுக்கும் கலையற்ற நிகழ்ச்சி மீண்டும் காட்டப்பட்டது. இரயில் வடை விற்றார் மது... வாடை... வாடையின்னு சொன்னதும் நீ என்ன வடை விக்கிறியா வேறெதுவும் விக்கிறியான்னு சேரன் கேட்கவும் வாடை, தொடையின்னு என்னமோ பேசுச்சு... ஷெரின் விக்க வந்ததும் எல்லாருக்கும் வடை வேணும்ன்னு அடிதடி... ரேஷ்மா வடையை சேரன்கிட்ட விற்கும் போது நீ அழகா இருக்கே சார்ன்னு சொன்னதும் சரவணனுக்கு மூச்சே நின்னது மாதிரி ஒரு ரியாக்சன். 

இதையெல்லாம்... அதாவது... சொல்லிக் கொடுக்கிற உப்புச் சப்பில்லாத நிகழ்ச்சியெல்லாம் காட்ட வேண்டிய நிலையில்தான் சீசன் - 3 இருக்கு. அடிச்சி ஆடிய வனிதாவையும் விரட்டிட்டானுங்க... 'கட்டிக்கொடு'த்து நவரசங்களைக் காட்டிய மோகனையும் விரட்டிட்டானுங்க... அப்புறம் நிகழ்ச்சி இப்படித்தானே போகும்.. ஏரோப்பிளேன்னுலயா போகும்...

அதன் பின் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வாரம் யாரை விரட்டப் போறீங்கங்ன்னு சொல்ற நேரம் வந்தாச்சுன்னு பிக்பாஸ் பில்டப்பைப் போட்டாலும் அதே மீரா, சேரன், அபிராமி, சரவணன் என அரைத்த மாவுடன் காதலில் பிரச்சினை வந்து மனதளவில் பாதித்த சாக்சி மற்றும் கவின் என அறுவர். சொன்ன காரணங்களையே சொல்லி நாமினேட் செய்வதென்பது ஏற்புடையதல்ல... சாக்சி ஜெயில்ல போட்டார் என்ற தேய்ந்த ரெக்கார்டை, தான் ஜெயிலுக்கே போகவில்லை என்றாலும் சரவணன் சொல்லும் போது அது போன வாரம் இந்த வார காரணத்தைச் சொல்லுங்கன்னு பிக்பாஸ் கேட்கலை... தூங்கிட்டார் போல...

சாக்சி, கவின் குறித்த சேரனின் பார்வை சரியானதே என்றாலும் வரும் நாட்களில் கூண்டுக்கிளிகள் மீண்டும் காதல் வானில் பறக்க ஆரம்பிக்கும் அறிகுறியே இருப்பதால் சேரனின் கவலைக்கு வேலையில்லை என்றே தோன்றியது. மதுவும் சேரனின் கருத்தை ஒத்த கருத்தையே சொன்னார். இந்த வாரம் நான் வெளியில் போகணும்... அங்க போயாச்சும் யார் என்னைச் சொல்றான்னு பார்க்கணும்ய்யா,.. என ஜாலியாக சேரன் சொன்னதிலும் ஒரு வருத்தம் இருக்கவே செய்தது. 

காலையில் நைனாவின் பெர்முடாசை எடுத்து உன் மேல எம்புட்டுப் பாசம் வைத்திருக்கிறேன் பார் நைனாவென சாண்டி செய்ததெல்லாம் ரொம்ப அதிகமாகவே இருந்தது என்றாலும் தன் இடத்தைத் தக்க வைக்க சாண்டியின் நேர்த்தியான காய் நகர்த்தல் சரியென்றும் தோன்றியது, இப்பவே சாண்டிதான் இறுதியில் வெல்வாரென இணைய ஆரூடங்கள் சொல்ல ஆரம்பித்திருக்கின்றன... அதற்க்கு ஏற்றார்போல் தன்னைத் தனித்துக் காட்டுவதில் தீவிர முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார் சாண்டி.

நாமினேசனுக்குப் பிறகு 'நீ நடிக்கலை... எனக்கு முடியாதப்போ நீ பார்த்தே... நான் நீ நடிக்கிறேன்னு சொன்னதெல்லாம் தப்புத்தான்... மன்னிச்சுக்க' அப்படின்னு லாஸ்லியா கவினிடம் சொல்ல, பரவாயில்லை மச்சான் என்பதாய் அவன் நகர்ந்தாலும் இன்னும் சிலமுறை லாஸ்லியா மன்னிப்புக் கோரினால் இந்த முக்கோணக் காதல் ஏதாவது ஒன்றை நிகழ்த்தாமல் சங்கமிக்காது என்பது மட்டும் உண்மை. 

ஒரு சீட்டெடுத்து அதில் இருக்கும் பாட்டு யாருக்குப் பொருந்தும் என்றும் அதே போல் இன்னொரு குடுவையில் இருக்கும் பஞ்ச் டயலாக் யாருக்கும் பொருந்தும் என்றும் சொல்லிச் செய்து காண்பிக்க வேண்டிய டாஸ்க் - மரண மொக்கை... அவரவர் எடுத்த சீட்டு அவரவர் சிச்சுவேஷனுக்குத் தகுந்தபடியெல்லாம் வருதல் பிக்பாஸில் மட்டுமே.... சத்தியாமாச் சீட்டை குடுவையில் இருந்துதான் எடுத்தார்கள் என்று நம்புவோமாக. கவின் பாட, சாக்சி தலையணையை விட்டு எறிய... ஆஹா... மீண்டும் பத்திக்கிச்சே... பத்திக்கிச்சேதான்... இதுல மனவலியாம்... பைத்தியம் ஆகுமாம்... சரித்தான்.

நைனா புகழைச் சாண்டியும் கவினும் பாடிக் கொண்டிருக்க, மீராவும் ஒத்திசைக்க, அடேய்ங்களா நமக்கெல்லாம் வீட்டுக்குப் போனா ஆளிருக்கு... அந்தாளுக்கு யாருடா இருக்கான்னு சரவணன் சொன்னது எதார்த்தம் என்றாலும் ஏதோ முந்தைய மோகன் குறித்தான பேச்சுக்களின் புண்ணுக்கு மருந்திடுவது போல்தான் இருந்தது. சரவணன் ரொம்ப அமைதியாய் வீட்டுக்குப் போகணும் என்று சொல்லிக் கொண்டே உள்ளிருப்புக்கான காய்களை அழகாய் நகர்த்திக் கொண்டிருப்பது போல்தான் தெரிகிறது.

மீரா எப்போதும் கட்டிலில் படுத்துத்தான் இருக்கிறார்.... கேட்டால் என்னோட வேலையை நான் சரியாகத்தான் பார்க்கிறேன்... சும்மா சும்மா போட்ரேய் பண்ணுறீங்கன்னு அந்தக்காலத்து அஞ்சலிதேவியாய் வசனம் பேசுவார். நேற்று சற்றே கண் அசர பிக்பாஸ் சுட்டார்... பின் தலைவி ரேஷ்மாவை அழைத்து யாரும் தூங்கக்கூடாது.... அதைப் பார்த்துக் கொள்வது உன் வேலை என்றதும் மீராவை எழுப்பி (இதுக்கும் அது குமுதல் ஒரு பக்க கதைக்கு மேல் கதைக்கத்தான் செய்தது) பின் யாரும் தூங்கக் கூடாதுன்னு சட்டம் போட்டார். ஆனா அபிராமியும் லாஸ்லியாவும் கார்டன் ஏரியாவில் தூங்க, சாண்டி கத்த, பிக்பாஸ் சுட, ரேஷ்மா சமைத்ததை விடுத்து ஓடிவர, ரெண்டும் பாத்ரூமுக்குள் போய் ஒழிய, உங்களுக்குச் சமைக்கணுமா வேண்டாமா..? என கத்திவிட்டுச் சென்றார் ரேஷ்மா. அதன் பின் இருவரும் மன்னிப்புக் கேட்டு உதட்டில் விரல் வைத்து பேசாது அமர்ந்திருந்தனர்.

சாண்டி நைனா வேடத்தில் போட்ட அலப்பறை செம கலக்கல்... கட்டிப்பிடி முத்தம்... ஆண்களை நிராகரித்தல்... நடை... கோபம்... மேனரிசம் என மனுசன் ஒவ்வொன்றையும் பக்காவாய்ச் செய்து விஜய் படத்தில் வடிவேலு வரும் காட்சிகளாய்... (அதுதானே படத்தைக் காப்பாத்துச்சு) செம கலக்கல்.... நேற்றைய ஒளிபரப்பின் சிறந்த நிமிடங்கள் இவை... நைனா இருக்கும் போதே செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்ன்னு யோசித்துப் பார்த்தாலும் இப்பவும் நைனா வீட்டில் டிவியை உடைக்காமல் இருந்திருந்தால் சரி என்றே தோன்றியது... இனி இந்தச் சாண்டி கெட்டபய சார்ன்னு இத்துப்போன யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து மனசைத் தேத்திப்பார்... பெண்களுக்கு அவரைப் போல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதாய் நடித்ததில் முத்தம் கொடுக்காமல் சப்தம் மட்டும் கொடுத்ததில் கண்ணியம் இருந்தது.

சாக்சி தன்னிடம் சொல்லியிருக்கலாம் சொல்லாதது குறையே என்ற விதத்தில் லாஸ்லியா காதல் மேட்டரை அவிழ்க்க, சாக்சி இருந்த நிலையில் நீ இருந்திருந்தா இந்தப் பிரச்சினை இன்னும் மோசமா இருந்திருக்கும்... நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டுருப்பீங்க என உண்மையை உள்ளபடி சேரன் சொன்னதில் ஒரு இயக்குநரின் டச் இருக்கத்தான் செய்தது. அதுதான் உண்மையுங்கூட என்றாலும் மீண்டும் கவினை நோக்கி இரு ஏவுகணைகள் திரும்பியிருக்கும் நிலையில் 'சக்களத்தி' சண்டை வரும் வாரங்களில்... அதுவும் சாக்சி இந்த வாரம் வெளியேறாத பட்சத்தில்... நிகழக்கூடிய வானிலையே காணப்படுகிறது. ஒருவேளை சாக்சி வெளியேறிவிட்டால் லாஸ்லியா-கவின் காதல் கதை சிறகு விரித்துப் பறக்கத் தடை இருக்காது.

லாஸ்லியாவும் அபியும் இப்போது நகமும் சதையுமாய்... அபியின் காதலன் முகனும் லாஸ்லியாவும் ஒரு பாடலைப் பாடியபடி ஆடும் போது உன்னோட ஆக்சன் வடிவேலு மாதிரியிருக்குன்னு லாஸ்லியாவைப் பார்த்துச் சொன்னதும் அம்மணிக்கு கோபம் வந்து அடுத்தவங்களை மட்டம் தட்டிப் பேசாதேன்னு சொல்லிருச்சு... அவனும் சரி சும்மா ஜாலிக்குத்தான் சொல்லுறாள்ன்னு நினைச்சுப் பேச... உண்மையிலதான் சொல்றேன்னு சொல்லிடுச்சு.... வடிவேலு காமெடி பீசென்றாலும் இன்றைய இணையத்தில் அவர்தான் ஹீரோன்னு லாஸ்லியாவுக்குத் தெரியாமப் போச்சு...

அப்புறம் பாத்திரம் கழுவும் இடத்திலும் கேட்டு உறுதிப்படுத்தி சாரி கேட்கிறான் முகன். அப்ப என்னடா அவ கூட கடலைன்னு தன் காதலைக் காத்துக் கொ(ல்)ள்(லு)ளும் விதமாக அபிராமி முகனுக்கு சாக்லெட் தரக் கூப்பிட, லாஸ்லியா சொன்ன கடுப்புல அபிக்கிட்ட கொஞ்சம் வேகமாப் பேசிட்டு... அப்புறம் கழிவறையில் அமர்ந்து விளக்கம் கொடுத்து அபியை சமாதானப்படுத்துகிறான். இந்தப் பயலுக பாவம் இவளுங்ககிட்ட மாட்டிக்கிட்டு படுறபாடு இருக்கே... யெப்பா... சாமிகளா... இந்த மெழுகுவர்த்திதான் வேணுமான்னு கொஞ்சம் யோசிங்கடா.

அப்புறம் தண்ணியில்லா நீச்சல் குளத்துக்குள்ள கவின், சாண்டி, முகனின் சங்கீதக் கச்சேரி... விளக்குகள் அணைக்கப்படுகிறது. வீடு அமைதியாகிறது.

சாண்டி ரொம்ப சாதுர்யமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்...

கவின் விலகியே நகர்ந்தால் நல்லது...

முகன் என்று எப்போது தன் நிஜ முகத்தைக் காட்டப் போகிறாரோ தெரியவில்லை...

சேரன் அப்படி நகர்தல் நலம் என்றே தோன்றுகிறது... 

சரவணன் இனியும் இப்படித்தான் இருப்பேன் என்பது நல்லதல்ல... 

சாக்சி வெளியேறப் போவோர் யார் என்ற நிலையில் இருப்பதால் கவினுடன் நெருக்கமாகக் கூடும்... 

லாஸ்லியா மீண்டும் காதலில் விழாதிருத்தல் உள்ளம் காக்கும்... 

மது அடங்கியிருப்பது அவருக்கே ஆபத்தாகும்... 

தர்ஷன் காமெடிப் பீஸாகிக் கொண்டிருப்பதில் இருந்து மீள்தல் நல்லது... 

அபிராமி ஆட்டம் பாட்டமெல்லாம் மூட்டை கட்டி வைத்திருப்பதால் என்ன லாபம் என்பதை உணர வேண்டும்... 

ஷெரின் மொழிப் பிரச்சினைக்குள் மூழ்காதிருந்தால் முன்னேறலாம்... 

ரேஷ்மா வடிவேலாக சோலோவாய் மின்னினால் வெல்லலாம்... 

மீரா பேசாதிருத்தல் எல்லாருக்கும் நலம் பயக்கும் அவருக்கும் சேர்த்தே...

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

மனசு பேசுகிறது : வேண்டாமும் மரப்பாலமும்

'பிக்பாஸ் மட்டுமே எழுதுகிறானே..?' என்றோ 'பிக்பாஸூக்கெல்லாம் எழுதுகிறானே..?' என்றோ என் நட்பு வட்டத்தில் நினைக்கலாம். எதுவுமே எழுதாமல் கிடந்த 'மனசு'க்குத் தினமும் தீனி போடுகிறது பிக்பாஸ்...  நல்லதொரு வரவேற்பும் பகிரும் தளங்களில் எல்லாம் கிடைக்கிறது என்பதும் உண்மையே.

தூங்கிக் கிடந்த தளத்தில் ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு மாதத்தில் 15க்கும் மேற்பட்ட இடுகைகளை எழுத முடிந்திருக்கிறது என்றால் பிக்பாஸூம் வேலை இல்லாமையும்தான் முக்கிய காரணிகள்... 

ஆம் கடந்த சில தினங்களாக அலுவலகத்தில் வேலை ஒன்றும் இல்லாது அமர்ந்திருக்கும் நிலையில்தான் அதிகம் எழுத முடிகிறது... கதைகள் எழுதத் தோன்றவில்லை... ஏனோ தெரியவில்லை. ஒருவேளை வேலை வரும் பட்சத்தில் எழுதுவது குறையலாம் அல்லது எழுதாமலும் போகலாம். 

பிக்பாஸ் பதிவுகள் பலரைச் சென்றடைந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் பிக்பாஸ் மட்டுமே எழுதுவதால் அடுத்த பிக்பாஸ் பதிவுக்கு முன் கொஞ்சமாய் சில விஷயங்களைப் பேசலாம்.

தென் தமிழகத்தில் தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தால் போதும் பொண்ணுன்னு வைப்பாங்க... அதுக்கு அப்புறம் ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் நாராயணபுரத்தில் தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தால் 'வேண்டாம்' என்று பெயர் வைப்பார்களாம். அப்படிப் பெயரிடப்பட்ட பெண், இன்சினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார். அவரை ஜப்பான் நிறுவனம் பல லட்சம் ஒப்பந்தத்தில் வேலைக்கு எடுத்திருக்கிறது என்பதுடன் 'பெண் குழந்தைகளைக் காப்போம்... கற்பிப்போம்' திட்டத்தின் சிறப்புத் தூதராக கலெக்டர் மகேஸ்வரி நியமித்திருக்கிறார்... வாழ்த்துக்கள். இப்படியான பெயரைத் தாங்கி அந்தப் பெண் எத்தனை வேதனையைச் சுமந்தாளோ..? இனிமேலேனும் பெண் குழந்தைகளுக்கு இப்படிப் பெயர் சூட்டுவதை நிறுத்துங்கள். பிறக்கும் குழந்தையில் ஆண் என்ன... பெண் என்ன... வளர்க்கும்... வளரும் சூழலே ஒருவரைத் திறமைசாலி ஆக்கும். சந்திராயன் விண்ணில் ஏவப்பட்டதில் இரண்டு பெண்களும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள் என்று மகிழும் போது இது போன்ற போதும்... வேண்டாம் போன்ற பெயர்கள் எல்லாம் அறியாமையின் அறிவிலித்தனமின்றி வேறென்ன..?

துரையில் ஒரு ஆசிரியை, தன் கணவனால் பசங்க முன்னிலையில் வகுப்பறையில் வைத்துக் கொல்லப்பட்டிருக்கிறாள். கருத்து வேறுபாடு காரணமான பிரிவுக்குப் பின்னர் கொலை செய்யும் அளவுக்குப் போயிருக்கிறான் அந்தக் கணவன். கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம்... அப்படித் தீர்க்க முடியாத பட்சத்தில் விலகியிருக்கலாம். ஒரு உயிரை எடுக்கும் உரிமையை மனிதர்களுக்கு யார் கொடுத்தது..? எத்தனை கனவுகளோடு அந்த ஆசிரியை திருமணம் செய்து கொண்டிருப்பார்..? எத்தனை கனவுகளோடு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்...? ஒரு சிறு முள் உயிரை எடுக்கும் வரை சென்றிருக்கிறதே.... கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் அந்த ஒரு நிமிடத்தில் ஏன் கொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் இருவரின் வாழ்க்கையும் நன்றாக இருந்திருக்கும்... இறந்த ஆசிரியையின் ஆன்மா சாந்தியடையட்டும்.

ஷார்ஜா புத்தக கண்காட்சி-2019க்கு அமீரக எழுத்தாளர் குழும ஒருங்கிணைப்பாளர் ஆசிப் அண்ணனின் முயற்சியில் வெளிவர இருக்கும் முதல் சிறுகதைத் தொகுப்புக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து அணிந்துரை கிடைக்காத சூழலில் என் கதைகளை வாசித்து தன் கருத்தை தனிப்பட்ட முறையில் என்னுடன் விவாதிக்கும் நண்பனும் இந்தப் புத்தகம் வர வேண்டும் என விரும்பிய ஆசிப் அண்ணனும் என இரண்டு அணிந்துரைகள் கிடைக்கப் பெற்றதில் மகிழ்ச்சி. அணிந்துரைகள் இரண்டும் அன்புக்காக வரவில்லை... அவர்கள் மனதில் என்ன தோன்றியதோ அப்படியேதான் வந்திருக்கின்றன என்பதில் மகிழ்ச்சி.

காதல் முன்னேற்றக் கழகம் அப்படின்னு ஒரு படம் பார்த்தேன்... தயவு செய்து யாரும் பார்த்துடாதீங்க...

ஃக்லூன்னு ஒரு படம் ZEE5 OTT முறையில் இணையத்தில் வெளியிட்டிருக்கிறது... கண்டிப்பாகப் பாருங்கள்.. ஒரு கேன்ஸர் நோயாளியின் வேதனை, வலி, இயலாமை, நிலையில்லாமை என எல்லாம் அஞ்சு குரியனின் நடிப்பில் அருமையாய்... ஒரு தளத்துக்கு இதன் விமர்சனம் எழுதியிருக்கிறேன்... அந்தத் தளம் இழுத்து மூடப்பட இருப்பதாக ஒரு அறிவிப்பு காலையில் மின்னஞ்சலாய் வந்தது. அங்கு பகிரப்படாத பட்சத்தில் இங்கு பகிர்வேன்.

முடிவு உறுத்தலாய் இருந்தாலும் ஒரு வீட்டுக்குள் இரு மனிதர்களை வைத்து இரண்டு மணி நேரம் போரடிக்காமல் நகர்த்திய 'ஹவுஸ் ஓனர்' பார்க்கலாம்... பழுதில்லை.

முகிலினிக்குப் பிறகு வாசிக்க ஆரம்பித்திருக்கும் மரப்பாலமும் செய்திகள் நிறைந்த நாவல்தான். செய்திகளை அதிகம் தாங்கி கதைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காத பல பெரிய நாவல்கள் பாதிக்கும் மேல் கடக்கும் போது அயற்சியைக் கொடுக்கும் என்றாலும் முகிலினி போல் மரப்பாலமும் விறுவிறுவென வாசிக்கச் சொல்கிறது. மிகச் சிறப்பான எழுத்து... கரன் கார்க்கியின் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

அப்புறம் அடுத்து பிக்பாஸ் பதிவுதான் வரும்... :)
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 22 ஜூலை, 2019

பிக்பாஸ் : சிவாஜியை மிஞ்சிய மோகன்

Image result for bigg boss 3 day 28

னிக்கிழமை - ஆண்டவர் வரும் முன்னே அபிராமியின் ஓலத்தைக் காட்டினார்கள்... நான் என்ன செஞ்சேன்... வெளியில போகப்போறேன்னு புலம்பல்... சிலரின் ஆறுதல் வார்த்தைகளால் தேறுதல் பெற்றார். இதை நேற்றைய முன்னோட்டமாக விஜய் டிவி வெளியிட்ட போது மோகன் வெளியேறுவதற்காக அபிராமி 'அப்பா போறாரே'ன்னு அழுதுன்னு இணைய விமர்சகர்களும் இதை வைத்துப் பொழப்பை நகர்த்தும் யூடியூப் சேனல்களும் பொங்கல் வைத்தார்கள். எப்பா சாமிகளா எல்லாத்துலயும் உங்க முன் முடிவைக் காட்டாதீங்கப்பா... என்ன ஏதுன்னு கொஞ்சம் யோசிச்சி எழுதுங்க... பேசுங்க...

அப்புறம் சாப்பிடும் போது நம்ம தமிழச்சி மது தர்ஷனை அண்ணன்னு சொல்ல, கவின் அவன் எப்படி உங்களுக்கு அண்ணனாவான்... உங்க வயசென்ன என்றதும் ஒரு ஆறு மாசம்தான் எனக்கும் அவனுக்கும் வித்தியாசம்... என்ன இப்ப அவனைவிட வயசான ஷெரினை லவ் பண்ணலாம்... நான் அண்ணன்னு கூப்பிடக்கூடாதா... பேசவா... பேசவா... அப்படின்னு ஏதோ தேரை இழுத்துத் தெருவுல விடப் பார்த்துச்சு... அம்மாடி வண்டி நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு நீ எதுக்கு இப்ப தேவையில்லாம கியரை மாத்துறேன்னு கவின் பார்க்க, ஷட்டரை சாப்பாட்டுக்கு மட்டும் திறந்துக்க தாயின்னு தர்ஷனும் சொல்லிட்டான்.

கோட்டுப் போட்டு வந்தார் ஆண்டவர்... நடையில் ஒரு துள்ளல்... அதாம்ய்யா கமல்... 

'அறிவுஜீவி' கமல் இந்த நிகழ்ச்சியை நடத்தலாமான்னு ரொம்பப் பேர் கேட்கிறாங்க... இதை நடத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்... உங்களுடன் பேச எனக்குக் கிடைத்த இந்த மேடையை நான் விட்டுட்டு போகமாட்டேன்... நான் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.... நான் அறிவுஜீவி எல்லாம் இல்லை... அப்படின்னு என்னென்னமோ பேசினார்.... பார்வையாளர்கள் முகத்தில் ஈயாடவில்லை... சாமி... முடிச்சிக்கங்க... போதும்ன்னு சொல்வது போல் இருந்தது. சரி போட்ட பிளேடு போதும்ன்னு அவரே முடிவு பண்ணி அகம் டிவி வழியே அகத்துக்குள்ள பொயிட்டார்.

வாரம் ஒரு பிக்பாஸ் ரசிகர் பேசியதில் இன்று இருவர்... மீராவிடம் 'நீங்க வேலை பார்க்காமல் பார்க்கச் சொல்பவர்களிடம் சண்டை போடுறீங்களே ஏம்மா... எப்பவுமே அப்படித்தானா இல்ல இங்கதான் அப்படியா'ன்னு கேட்க, 'அப்படியில்லை நான் பார்க்க வேண்டியதைப் பார்த்துட்டுத்தான் இருக்கேன்... இவங்க கூடுதலா வேலை கொடுக்கும் போது என் உரிமை.. என் கடமையின்னு சண்டை போடுவேன்'னு சொன்னதும் கண்டிப்பா அந்தக் கேள்விகேட்ட பொண்ணு 'அடி மூதேவி... நீ வேலையே பாக்கலைங்கிறதைத்தான் நாங்க பாக்குறோமே... அதைக் கேட்டா உரிமை... எருமை'ன்னு அப்படின்னு கேட்டிருக்கலாம்... ஒரு கேள்விதான் என கட் பண்ணி விட்டார்கள்.

அடுத்த கேள்வி ரேஷ்மாவுக்கு... 'நீங்க செந்தில் மாதிரி கவுண்டமணிகளோடவே இருக்கீங்களே... எப்ப வடிவேலா மாறி சோலோ பெர்ப்பார்மன்ஸ் பண்ணப் போறீங்க...?' அப்படின்னு ஒருவர் கேட்க, 'வடிவேலு மாதிரி என்ன... செந்தாமரை மாதிரிக்கூட என்னால் பண்ண முடியும்... இருந்தாலும் தனியாவே வாழ்ந்துட்டேன்... தனிமையை போக்கும் இவர்களோட சேர்ந்து இருக்கதாலதான் இப்படியே இருக்கலாம்ன்னு எண்ணம்' என என்னவோ பேசிச் சமாளித்தார்.

அப்புறம் உங்களைப் பற்றி உங்க முதுகுக்குப் பின்னால பேசின சில வரிகளைச் சொல்லுவேன்... யார் சொல்லியிருப்பார் எனக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார் கமல். அதாவது இவன்/இவள் உன்னையை இப்படிப் பேசினார்கள் என போட்டுக் கொடுத்தல்... அடுத்த வார முட்டலுக்கான சிறு துரும்பு இது. முதலில் சேரன்... சேரன் செங்குட்டுவன் என சரவணன் பேசியது அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டாங்கன்னு சேரன் அடித்துச் சொல்ல சொன்னாங்க சார் என்றவர் அடுத்த கேள்விக்குப் போனார் 'என்ன சாத்தான் வேதம் ஓதுதா?' என சாண்டி சொன்னது... அதைச் சரியாகச் சொன்னார். அடுத்து மீரா சொன்ன 'நான் பாக்குறது வேற முகம்' அதையும் சரியாச் சொன்னார். அதேபோல் மீராவுக்கு சொன்ன போது அவர் சேரனையும் மதுவையும் சொன்னார்... கமல் அது தவறென்றார். ரேஷ்மாவை நான் நியூட்ரல் என்று சொல்லுறா ஆனா அவ இங்கிட்டும் அங்கிட்டும் போட்டுக் கொடுக்கிறான்னு மது சொன்னதை, கமல் சொன்னதும் ரேஷ்மாவோ கவின் என்றார். நான் இல்லை மச்சான்... நீ நியூட்ரல்ங்கிறதே இன்னைக்குத்தான் மச்சான் தெரியும்ன்னு போட்டானே பார்க்கலாம்... ரேஷ்மா கிளீன் போல்ட்.

இப்படி போட்டுக் கொடுக்கும் வேலையை ஆண்டவரே பார்த்தாலும் சொன்னது நண்பனா இருக்கும் காரணத்தால் பலர் தெரியாதது போலவே முழிக்க, நான்தான் சொன்னேன் என மது போன்ற சில முந்திரிக் கொட்டைகள் முந்திக் கொண்டு பதிலளித்து மாட்டிக் கொண்டன. இந்த மாதிரி வேலையெல்லாம் எதுக்கு ஆண்டவரேன்னுதான் தோணுச்சு. அதுக்கு அப்புறமும் மோகன் கிளம்பினா என்ன பாட்டுப் பாடலாம்ன்னு டியூனெல்லாம் போட்டு வச்சிருக்கும் சாண்டியையும் கவினையும் மாட்டி விடத் தவறவில்லை. மோகனுக்கு முகமெல்லாம் கோபம் முட்டிக்கிட்டு நின்னுச்சு.

அப்புறம் இப்ப வழியனுப்பு விழான்னு சொல்லிட்டு மீராக்கிட்ட 'ஏம்மா நீ எப்பவுமே பிரச்சினை பண்ணிக்கிட்டே இருக்கே'ன்னு கேக்கும் போதே காதுல ரத்தம் வர்ற அளவுக்குப் பேசுவாளேன்னு கமல் நினைச்சதை முகம் காட்டுச்சு... உடனே மீராவும் 'இங்க தொலைநோக்குப் பார்வையில்லை... தொல்லை நோக்குப் பார்வைதான் இருக்கு... எனக்கு யாரையும் உறவு வைத்துக் கூப்பிடப் பிடிப்பதில்லை... (மாச்சீ, சித்தப்பு மட்டும் பிடிக்கும் போல) அம்மா, அப்பாங்கிறது என்னைப் பெத்தவங்களுக்கு மட்டும்தான் அதை யாருக்கும் கொடுக்க மாட்டேன்... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது' அப்படின்னு கீதையெல்லாம் சொல்லி ஆத்து ஆத்துன்னு ஆத்த, ஆத்தினது போதும்ன்னு ஆண்டவர் அவசரமாக் களம் இறங்கிட்டார். அதைப் பார்த்த நமக்கே கொஞ்சம் தண்ணி தேவைப்பட்டுச்சு.

சரி இப்ப உங்களில் ஒருவர் காப்பாற்றப்படுவார்... அதுவும் என்னைப் போல் ஒருவர் அங்கு வந்து காப்பாற்றுவார் என்றதும் 'ரப்பப்பா... ரப்பப்பரி...' பாடலின் பின்னணியில் ஒரு பபூன் வந்து கொஞ்சம் நகைச்சுவை என நாரசம் பண்ணி மீராவைக் காப்பாற்றி ஒரு ஆட்டமும் போட்டார். மீராவின் ஆட்டம் காணச் சகிக்கலை...இவர்களெல்லாம் ஆடலைன்னு எவன்யா அழுதான்... மீரா உட்காருவதற்கே சென்சார் வைக்கணும் போல... இதெல்லாம்தான் மக்களிடம் தன்னை நிலை நிறுத்தும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கை ஏனோ...? 

இவர்களால் காப்பாற்றப்பட்டீர்கள்... இதே தொடரும் என நினைக்க வேண்டாம்... நாளையே காட்சி மாறலாம்... என கொஞ்ச நேர இடைவெளிவிட்டு மீண்டும் வந்து நால்வரில் அடுத்ததாய்க் காப்பாற்றப்படப் போகும் நபர் யாராக இருக்கும் எனக் கேட்டு, இதயத் துடிப்பை எகிற வைத்து சரவணனை மக்கள் வெளியே வரவேண்டாம் என்கிறார்கள் என்றதும் சரவணனுக்கு சந்தோஷமெல்லாம் இல்லை... ஏதோ பாத்துப் போட்டு அனுப்பிவிடுங்க சாமியின்னு நின்னார். அப்புறம் அபிராமியும் காப்பாற்றப்பட, அப்பாக்கள் இருவர் மட்டும் ஆப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்.

இடையில் கிடைத்த இடைவேளையில் மோகனின் மூர்க்கக் குணம் வெளிப்படையாக வெளியில் வந்தது... சாண்டி, கவின் கூட அப்படி ஒரு மோதல்... சித்தப்பு சித்தப்புன்னு அந்தாளுக்கிட்டத்தானே நின்னீங்க... எங்கிட்ட நைனான்னு நிக்கலையே.... நான் காமெடிப் பீசுன்னு கத்தி ஆட்டம் போட்டார். சேரன் இன்னைக்குப் போயிருவோம்ன்னு பேசாதீங்க... நீங்க போகாம இங்க இருக்கும் பட்சத்தில் அவங்களோடதான் பழகணும்... அப்ப எப்படி முடியும்ன்னு கேட்டு மனசைத் தளரவிடாதீங்கன்னு ஆறுதல் சொன்னார். சேரனின் முதிர்ச்சி... அனுபவம் வாய்ந்த பேச்சு... எல்லாமே சிறப்பாய்... அதுவும் தானா... அவரா... என்ற சூழலில் படபடப்பு நிறைந்த மனதுடன் இருந்த போதும் பக்குவமாய்ப் பேசுவது அவ்வளவு எளிதல்ல... ஆனாலும் கவின், சாண்டி, சரவணன், மீராவைப் போல இணைய எழுத்தாணிகளுக்கும் சேரன் கசப்பாய் இருப்பது ஏனோ?... புரியாத புதிர்.

'அப்பாக்களில் யார்?' என கமல் ஆட்டத்தை ஆரம்பித்து சாண்டி, கவினைப் பார்த்து சரி பாடிடுங்களேன் அவரும் கேட்டுக்கட்டும் என்றதும் அவர்களும் பாட, மீரா, சரவணன் தவிர்த்து மற்றவர்களுக்கு மகிழ்ச்சிக்குப் பதிலாக எரிச்சல். அதை மாற்றும் விதமாக லாஸ்லியாவிடம் எந்தப்பா போகணும் என்ற கேள்விக்கு 'யார் போகணும்ன்னு சொல்ல மாட்டேன்... ஆனா எனக்கு சேரப்பா இருக்கணும்' என்றார். இறுதிச் சுற்றுக்குள் சேரன் வந்த போது வெடித்து அழும் நிலையிலேயே லாஸ்லியா இருந்தார்... ஒரு தகப்பனின் கதகதப்பை சரியாக கொடுத்தும் பெற்றும் கொண்டிருக்கிறார்கள் என்பது அதில் தெரிந்தது. சாண்டியோ மோகன் நைனாதான் வேண்டும் என்றார்.

ஒருவழியாக மோகன் வேளியேறுகிறார் என்று கமல் சொன்னதும் மோகனின் அழுகையும் ஆர்ப்பாட்டமான நடிப்பு ஆரம்பமானது. வாரம் ஒருவர் போய்த்தான் ஆகவேண்டும்... கமல் சொல்வது போல் உள்ளிருப்பவர்கள் முடிவில் யாரும் வெளியாவதில்லை... மக்கள் வாக்கு என்ற விஐய் டிவியின் முடிவால்தான் வெளியேற்றம்... மக்கள் வாக்கென்றால் மீராவும் மதுவும் போயிருக்க வேண்டுமே... இன்று நீ நாளை நான் என்ற கோட்பாடுதான்... இதில் அழுவதென்பது இயற்கை... ஆனால் சிவாஜிக்கே நடிப்புச் சொல்லிக் கொடுக்கும் அளவு என்றால்... செம நடிப்பு... நமக்குத்தான் சூடு கிர்ருன்னு ஏறுச்சு.

அதிலும் எல்லாருக்கும் கட்டிக்கொடு வேற... மீரா, கவின், சாண்டி ஒதுக்கப்பட, நாங்க என்ன பண்ணினோம் என அவர்கள் ஆதங்கத்துடன்... சேரன் பேசி, சமாதானப்படுத்தி மீண்டும் அவர்களுக்கும் கட்டிக்கொடு... ஓயாத அழுகை... ஒரு போட்டோ என சீனைப் போட்டுட்டு மேடைக்கு வரும் போது ஆடலுடன்... சரவணன் மட்டும் அடேய் ரொம்ப பீல் பண்ணாதீங்க... அந்தாளு நடிச்சிட்டுப் போறான்... அங்கிட்டுப் போயி சந்தோஷமா இருப்பான்னு சொன்னார்... அதே நிகழ்ந்தது.

அதன்பின் கொஞ்சம் பேச்சு... சாண்டிக்கு வரும் கைதட்டலுக்கு வருத்தமாய் சந்தோஷம் காட்டினார். ஒரு குறும்படம் போடப்பட்டது... எல்லாமே நல்லதாய்... முத்த மழைக்கு மட்டும் 'இச்' என்பது சற்றே சப்தமாய்... மோகன் கமலிடம் கைகாட்டிச் சிரித்தார்... அவருக்கு வெளியில் வந்ததும்தான் தெரிகிறது போல... மனைவி குறித்தான பேச்சைக் கேட்டதும் அழுதார்... கமல் ஆறுதலாய் அணைத்தார்... உள்ளிருப்பவர்களிடம் பேசி உருகினார்... முகின், தர்ஷனிடம் ஹீரோ ஆவீங்க எனக்குத் தங்கச் சங்கிலின்னு சொல்லி, சாமிக்குப் போடுங்க என பல்டி அடித்தார். என்னை ஏன் அனுப்பினார்கள் என்ற போது அதெல்லாம் வீட்ல போயி பாருங்க... தெரியும் என்றபோது கமலின் முகத்தில் 'முத்த' பிரகாசம்.

கமல் அடுத்த வாரம் பார்ப்போம் எனப் போனதும் ரேஷ்மா காலர் கேட்டதை வைத்துக் காமெடி பண்ணிக் கொண்டிருந்தார். சந்தடி சாக்கில் மதுவுடன் நீ சேர்ந்திருப்பதைத்தான் அப்படிக் கேட்டார்ன்னு மீரா கொழுத்திப்போட, மது கந்தர் ஷஷ்டி கவசம் படித்துக் கொண்டிருந்ததால் பேசாமல் இருக்க, சூழல் இறுக்கமாகும் தேவையில்லாத சண்டை வரும் என்பதால் ரேஷ்மா உன்னோட கா... உன்னோட கா... கா...கா... போ... அப்படின்னு காமெடி பண்ணிக் கொண்டிருந்தார்.

அப்புறம் மோகனுக்கு எழுதிய பாட்டு குறித்து ஓடி, அதில் மீதமிருந்ததைப் பாடி, மகிழ்வாய் நகர, சரவணன் எனக்குக் கூட பாட்டு எழுதி வச்சிருக்கானுங்க என்றதும் சேரன் எனக்கு அடுத்த வாரத்துக்கு எழுதுங்கன்னு கேட்டு வைக்க, சாண்டி 'ஞாபகம் வருதே...' பாடலை வைத்து வரிகள் அமைத்துப் பாட, கவினும் சரவணனும் மட்டுமே அதைக் கேட்கும் வாய்ப்பை நம்முடன் பெற்று ரசித்தார்கள்.

சாண்டி எம்புட்டு நாளைக்குத்தான் வடிவேலாவே இருப்பார்... அவரையும் வண்டியில ஏத்தப் போறது யாரா இருக்கக் கூடும்..?

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 21 ஜூலை, 2019

பிக்பாஸ் : 'அசத்தல்' கமல்..!

Related image

னிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சி முந்தைய நாட்களின் பிரச்சினைகள், கண்ணீர்க் கதைகள் எல்லாம் தாண்டி அழகான கமலுடன் ஆரம்பமானது. எப்பவும் போல் சில நிமிடங்கள் பேசிவிட்டு முந்தைய நாள் நிகழ்வாவது பிரச்சினைகளைத் தாண்டி இருக்குமா என்று பார்ப்போம் எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

தலைவர் தேர்வுக்காக ரேஷ்மா, தர்ஷன் மற்றும் சரவணன் மூவருக்குமான போட்டியாக பிளாஸ்டிக் டம்ளரைத் தன்னைப் பாதுக்காக்கும் நபர்களுடன் பந்தை விட்டு எரிந்து கலைக்க முற்படும் மற்ற நண்பர்களின் முயற்சியை முறியடித்து கோபுரமாக அடுக்க வேண்டும். யார் அதிக டம்ளரை அடுக்குகிறார்களோ அவர்களே வெற்றியாளரும் இந்த வாரத் தலைவரும் ஆவார். சரவணனுக்கு அவரின் முப்படைத் தளபதிகளான கவின், சாண்டி மற்றும் மீரா பாதுகாத்தும் அதிகமான டம்ளரை அடுக்க முடியவில்லை.. எதிர்த் தாக்குதல் அவ்வளவு தீவிரமாய் இருந்தது. தர்ஷனுக்கு சேரன், லாஸ்லியா, அபி மற்றும் முகன் முயன்றும் இறுதி நேரத்தில் தகர்க்கப்பட்டார். ரேஷ்மாவுக்கு ஷெரின், சாக்சி, மது மற்றும் மோகன் அணி மிகச் சிறப்பான பாதுகாப்புக் கொடுக்க, சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியும் பெற்றார். மோகனின் கை ஏன் இடுப்புல இருந்துச்சு... அவரு பாதுகாப்புக் கொடுக்கிறாராம்... ரேஷ்மா வெற்றி பெற்றதும் கட்டிக்கொடு ஒண்ணைக் கொடுத்து தன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்.

சாண்டி 'நானொரு டிஸ்கோ டான்ஸர்' பாடலை மோகனையும் நாலு பெண்களையும் வைத்துச் சொல்லிக் கொடுக்க, பெண்கள் நடுவே குறுந்தாடி வைத்த இளைஞனாக ஆடிய மோகனுக்குள் எத்தனை சந்தோஷம் என்பதை அவரின் முக பூரிப்பு காட்டிக் கொண்டிருந்தது. கவினும் முகனும் தனியா ஆடிக் கொண்டிருந்தனர்... முந்தைய நாள் நிகழ்வுகளினால் அதிக அழுத்தத்தில் இருந்த கவின் அதிலிருந்து சிறிதேனும் மீண்டிருப்பது நல்ல விஷயம்.

அப்புறம் கொஞ்சம் சொல்லிக் கொள்ளும்படியாக நிகழ்ந்தது ஒருத்தரைப் பற்றி உண்மையும் பொய்யும் என இரண்டு செய்திகள் சொல்லணும்... உண்மையின்னா சூப்பர்... பொய்யின்னா சூஸி... அபிராமி தொகுப்பாளர்... கொஞ்சம் ஓவராத்தான் ஆரம்பிச்சிச்சு... பட் சுரத்தில்லை... இந்த இந்த ஆட்களைப் பற்றிச் சொல்லணும்ன்னு சரியான தேர்வாய் இருந்தாலும் சாண்டியும் தர்ஷனும் போட்டதெல்லாம் மரணமொக்கை... அதனாலயே முழுமையாக காட்டவில்லை... இது கூட ஆறுதலான விஷயம்தான் பார்வையாளர்களுக்கு. 

இப்ப காலையில் இவர் இதைச் சொல்லிக் கொடுத்தார்... அவர் அதைச் சொல்லிக் கொடுத்தார்... என்பதைக் காட்டுவதை விட்டுவிட்டார்கள்... அதுபோல் மொக்கயான் நிகழ்ச்சிகளையும் காட்டாதிருக்கலாம். 

மறுநாள் காலை சாண்டி டான்ஸ் சொல்லிக் கொடுத்த 'நானொரு டிஸ்கோ டான்ஸர்' பாட்டுடன் விடிந்தது. எல்லாரும் ஆடினார்கள். லாஸ் மட்டும் சொல்லிக் கொள்ளும்படி சில நாட்களாக ஆடுவதில்லை... காதல் இல்லைன்னு ஒப்புக்குச் சொன்னாலும் அந்த வலி பெரிதுதான்... லாஸோட நிலை சாக்சியை விட மோசமாக இருப்பது போல்தான் தெரிகிறது. தன் முன் ஆடிய சாண்டியின் ஆட்டத்தைப் பார்த்து உண்மையிலேயே வியப்புடன் அமர்ந்திருந்தது.

அப்புறம் சாக்சிக்கு பிறந்தநாள்.... வாழ்த்துப் பாடல்... கேக்... அப்பா அம்மாவின் வாழ்த்துக்கள் என கொஞ்சம் மகிழ்வாய்.... கவின் எட்ட நின்று சிரித்தான்... சேரனுக்குள் இருக்கும் அப்பா மெல்லக் கலங்கினார். பிரச்சினைகள் சூழ் பிக்பாஸ் இல்லம் மகிழ்வாய்க் களித்த மணித்துளிகள் இவை. கமலும் வந்தார்... வாழ்த்தினார்... சாண்டியையே நான் கூப்பிடுவதாக குற்றம் சாட்டினீர்களே மோகன் என அதற்கான காரணத்தைச் சொல்லி, யார் சிறப்பான செயலைச் செய்தாலும் நான் பாராட்டத் தயங்குவதில்லை என்பதையும் சொல்லி வைத்தார்.

லாஸ்லியா சப்பாத்தியில் கத்தியால் குத்திய விவகாரத்தில் 'வெந்த சப்பாத்தியில் ஏன் வேலைப் பாய்ச்சினீர்கள்..?' என்றார். அதுவும் விவரமாய் சொல்ல, கமல் சப்பாத்தி மாதிரியே கடினமாயிருமோன்னு நினைத்து இடைமறிக்க, நான் கதை சொல்றேன் கேளுங்க என லாஸ் சொன்னதும் கைதட்டல், கமலும் சிரித்தார். விபரமாய் சொல்லி முடிக்க, இதுதானே உண்மை... வேறொன்றும் இல்லையே என்று முடித்துக் கொண்டார்.

மோகன் வைத்யாவின் ஓப்ராவைப் பற்றி வியந்து அதை மீண்டும் பண்ணச் சொன்னார். இது கூட சாண்டிக்கு முன்னுரிமை என்ற மோகனின் குற்றச்சாட்டுக்காக வலிந்து செய்தது போல்தான் இருந்தது.

பாத்ரூம் கழுவுனா ஒத்துக்க மாட்டேங்குதுன்னு அணி மாறியதை, இப்பல்லாம் வீட்டுக்குள்ள அடிக்கடி அணி மாறுறாங்க இல்லே என மோகனிடம் கேட்டு நீங்க ஒத்துக்கலைன்னு மாறுனீங்களா இல்லை கழுவ அசிங்கப்பட்டுக்கிட்டு மாறுனீங்களான்னு கேட்டு, மோகன் விளக்கம் கொடுத்து... கொடுத்த விளக்கம் அவ்வளவு ஒண்ணும் சரியானதில்லை என்ற போதிலும் 'கழிவை வெளியேற்றத் தெரிந்த நமக்கு அதைக் கழுவவும் தெரிந்திருக்கணும்' என்றார். செம.

அப்புறம் மீரா, சாக்சி பொதுக்குழுவைக் கூட்டுன பிரச்சினையைப் பேச ஆரம்பித்தார். மீரா வாயைத் தொறந்துச்சு... எப்ப நிப்பாட்டும்ன்னு இருந்துச்சு... சாண்டியும் சேரனும் மீரா எதற்கெடுத்தாலும் வீடியோ போட்டுப்பாருங்க என்று சொல்வதால் குறும்படம் வேண்டும் என்று கேட்க, ஒரு இடைவேளைக்குப் பிறகு இந்த சீசனின் முதல் குறும்படத்தைப் போட்டார் கமல். அதில் ஒரு மீட்டிங் போடலாமா என்று கேட்ட சாக்சிதான், முதலில் சாண்டியுடன் பேசலாம் என்றும் சொல்கிறார். ஆனாலும் மீட்டிங் என்ற வார்த்தை சாக்சியிடம் இருந்து வருவதால் அவரெ குற்றவாளி என்பதாய் தீர்ப்பானது. எல்லாரும் அதையே முன்மொழிந்தாலும் சேரன் சொன்ன மொழிப்பிரச்சினை முற்றிலும் உண்மை. சரவணனும் சேரனை வழிமொழிந்தது ஆச்சர்யம். உனக்கு மொழிப்பிரச்சினை இருக்கு எனத் தமிழ் வகுப்பெடுத்த மீரா, இப்போது பேசவில்லை... ஏன்னா வெற்றி நமக்குத்தானே.. ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம் முகத்தில்... இனி சேரன், சாக்சி என வரும் நாட்களில் பஞ்சாயத்தைக் கூட்டுவாரே... என்னைக்கோ செத்த ஆயாவுக்கு இப்ப அழுகுறவராச்சேங்கிற 'கதக்' மனசுக்குள்ள.

அப்புறம் சாக்லெட் பிரச்சினை பேச, சாக்லெட்டோட வந்தார்... வாழைப்பழ காமெடியை சாக்லெட் பிரச்சினையுடன் நினைவு கூர்ந்தார். உங்ககிட்ட ரெண்டு வாழைப்பழம் இருந்தும் குழம்பிட்டிங்களேன்னு ஜோக்கடித்தார். ஒரு சாக்லெட்டை நீங்க முக்கோணமாக்கிட்டீங்க... இனி சதுரமாகாமல் பாத்துக்கங்க என்றார். கவினும் தன் விளக்கத்தைக் கொடுத்தார். அவருக்கும் சாக்சிக்கும் இடையில் சாக்லெட் தவிர வேறு சிலவும் ஊட்டப்பட்டிருக்கிறதுதானே என்ற கேள்விக்கு கவினும் ஆமா என்க, உண்மையை ஒத்துக் கொண்டதற்கு கைதட்டினார். உணர்வுகளோட விளையாடாதீங்க என்ற கண்டிப்பையும் வைக்கத் தவறவில்லை.

சாக்சி தன் நிலை விளக்கியபோது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தார்... ஷெரின் ஆறுதலாய் அணைத்திருந்தார். தன்னோட உணர்வுகளை ரொம்பப் பாதிச்சிருச்சு... ஒரு காதலிக்கிட்ட பேச வேண்டியதை எல்லாம் பிரண்ட்கிட்ட பேசுவாங்களா என்றபோது கவினின் திருவிளையாடலில் ஒரு பெண்ணின் மனதை எந்தளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. இதிலிருந்து மீண்டு வருதல் என்பது மிகவும் கடினம்... அதுவும் தன்னை ஏமாற்றியவனுடன் ஒரே வீட்டுக்குள் இருக்கும் போது உணர்வுகளைக் கொல்லுதல் என்பது அவ்வளவு எளிதல்ல. சாக்சியின் உணர்வைப் புரிந்து கொண்ட கமல், 'இது ஒரு அடைபட்ட இடத்துக்குள் நடந்ததால் அந்தப் பாதிப்பு உங்களுக்கு அதிகமா இருக்கு... இதுவே ஒரு பஸ்ஸ்டாப்புலயோ பீச்சிலோ என்றால் கடந்து போயிருப்போம் இல்லையா..?' என்றபோது சாக்சியும் ஒத்துக் கொண்டார். வாழ்க்கையில அனுபவிக்க வேண்டிய விஷயம் உங்களுக்கு நூறு நாட்களுக்குள் கிடைக்கிறது. அதே போல் உங்க மூலமா இவங்களுக்கும் கிடைக்கிறது எனப் பார்வையாளர்களைப் பார்த்துச் சொன்னார்.

லாஸ்லியாவிடம் பட்டும் படாமல் மட்டுமே பேசினார்... சாக்சி வெளியில் வந்துவிட்டது தெரிந்தாலும் லாஸ்லியா வெளியில் வந்தது போல் தெரியவில்லை. கமல் சொன்ன மனநல மருத்துவர் கவினுக்குத் தேவையோ இல்லையோ லாஸ்லியாவுக்கு கண்டிப்பாத் தேவைப்படலாம். விழுந்தவுடன் ஏய் எனக்கு ஒண்றுமில்லை எனச் சொல்லி நகர்ந்து அதன் பின்தான் காயத்தின் தீவிரத்தை உணர்வோம்.... அப்படியான நிலையில்தான் லாஸ்லியா இருக்கிறார். கவினைப் பொறுத்தவரை பண்ணியது தவறு என உணர்ந்த நிலையில் எட்டியிருத்தல் நல்லது. செய்வாரா என்பது கேள்விக்குறியே..

இரண்டு சாக்லெட்டுக்களைக் கொடுத்து யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள் என்றபோது சாக்சி மற்றும் லாஸ்லியாதான் என்னால அதிகம் பாதிக்கப்பட்டவங்க அவங்களுக்கே கொடுக்கிறேன் என்றது மிகச் சரியானதே என்றாலும் இந்தப் பிரச்சினை இன்னும் சுற்றத்தான் செய்யும் என்பதையே காட்டியது. கவின் லாஸ் மீது சாயக்கூடும்... சாக்சி கூட இறங்கி வரக்கூடும்... அப்போது மீண்டும் மும்முனைத் தாக்குதல் நடந்தாலும் நடக்கலாம்.

இடையில் கவின் அழுதுவிட்டு வந்தார்... சாக்சிக்கு ஆறுதல் சொல்லப்பட்டது... லாஸ்லியா தனியே ஆடிக்கொண்டிருந்தார்... கவினுக்குச் சேரன் சரியான முறையில் விவரம் சொல்லிக் கொண்டிருந்தார். தீர்வு பற்றிப் பேச வேண்டும் என்றால் சேரனைத் தேடும் கவின், மற்ற நேரங்களில் சரவணன், சாண்டியின் அறிவுரைகளுக்கு மண்டை ஆட்டுவது...  சரி... சரி... அதுதானே விளையாட்டு... போன வாரம் சரவணனை நாமினேட் பண்ணியதில் கவினும் ஒருவர்தானே.

மீண்டும் அகம் டிவி வழியே அகத்துக்குள் போகும் முன் 'இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகச் செய்திருக்கிறேன். இதற்கு மேல் இதில் உள்நுழைவது நல்லதல்ல... அது மிகப்பெரிய தவறு... ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பேச வேண்டியதைப் பேசியிருக்கிறேன்... இதற்குமேல் தனி மனித உரிமையில் தலையிடுவது சரியானதல்ல...' என்ற கமல், 'இதை அம்மாக்கள் புரிந்து கொள்வார்கள்... அப்பாக்கள்...?' எனச் சொல்லிச் சிரித்தார். தான் ஒரு தகப்பனாய் பேசியதாகச் சொன்னது சரியே... சில விஷயங்களில் அளவுக்கு மீறித் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது தவறு.

அடுத்து உங்களில் யார் இந்த வாரம் என மீரா, மோகன், சேரன், சரவணன், அபிராமியிடம் வெளியேற்றப்பட்ட பெயர் தாங்கிய கார்டை வைத்துக் கொண்டு பேசி... சரி நீங்க யார் காப்பாற்றப்படுவார்ன்னு நினைக்கிறீங்க என ஐவரிடமும் கேட்க, மீரா சரவணனையும் சரவணன் மீராவையும் சொல்ல, மோகன் சேரனைச் சொல்ல, சேரன் நான் மோகனுக்குத்தான் மொய் வைக்கணும் என்றாலும் எனக்கு நானே என தன்னையே சொல்லிக் கொண்டார். அபி கூட நானே என்று நினைத்தாலும் சேரன் அண்ணாதான் என்றார்.

எல்லாரும் இப்பவே சொல்லுங்க சார் என்றதும் நீங்க கேட்டதும் நாங்க சொல்லிடுவோமா.. நாளைக்கு எனச் சொல்லி கிளம்பினார்.

உடைகள் எப்படிப் போட்டு அலைந்தாலும் கமல் வரும் போதேனும் நல்ல உடைகளைப் போடலாம்... மீரா போன்றோர் அமரும் முன் இது ஒண்ணும் மாடலிங், சினிமா மேடை அல்ல... அகம் டீவியை அகத்திலிருந்து சிறியவர் முதல் பெரியவர் வரை பார்ப்பார்கள் என்பதை உணர வேன்டும். கமலும் பொதுவாக இல்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் இதைக் கண்டித்தால் நல்லது, ஷோவை ஷோவாப் பாருங்கப்பா எனச் சொன்னாலும் சில விஷயங்கள், அவர்களின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவையே.. 

செந்திலின் வாழைப்பழ காமெடி, மீரா விஷயம், கவின் காதல் விவகாரம், மோகன் பாத்ரூம் விஷயம் என எல்லாவற்றிலும் பிக்பாஸ் விமர்சன எழுத்துகளில் வருபவையே மேற்கோளாய் கமலிடமிருந்து... அப்படியெனில் வரும் பதிவுகளை எல்லாம் இல்லை என்றாலும் சிலவற்றையேனும் கமல் வாசித்துவிட்டுத்தான் மேடை ஏறுகிறார் என்பது விமர்சனங்களுக்குக் கிடைக்கும் மரியாதை என்பதைவிட நான் அப்டேட்டாக இருக்கிறேன்... சும்மா ஏனோ தானோன்னு எல்லாம் நிகழ்ச்சி நடத்தலை என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் கமல் என்பதாகத்தான் தெரிகிறது. சனியும் ஞாயிறும் கமலாலேயே 'தெறி'யாய் இருப்பது உண்மையே.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 20 ஜூலை, 2019

பிக்பாஸ் : அழுகாச்சி காவியம்

Image result for பிக்பாஸ் - 3 லாஸ்லியா
பிக்பாஸ் சீசன் -3 சாக்லெட் சண்டை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே முந்தைய பதிவில் சொன்னது போல் கடிகார அலாரத்தை அடக்கும் போட்டியில் தான் மிகச் சிறப்பாக விளையாண்டதாகவும் சாண்டி அண்ணன் சூப்பரா விளையாண்டதால நீ போயிருக்க வேண்டியதில்லை என்று கவின் சொன்னது தன்னை ரொம்பப் பாதித்திருப்பதாகவும் மக்கள் மத்தியில் இந்தப் பொண்ணு ஒண்ணத்துக்கும் லாயக்கில்லை என போட்ராய் பண்ணப்படுகிறேன் என்றும் மீரா அழுகாச்சி காவியத்தைத் தொடர, ஷெரின் மற்றும் ரேஷ்மா ஆறுதல் சொல்லி தலைவி சாக்சியிடம் சொல்ல, அகப்பட்டவன் கவின் என்பதால் மீராவுக்குத் தோள் கொடுத்து அவனைச் சாய்ப்போம் என முடிவெடுத்து முதலில் சாண்டி, கவின் கிட்ட பேசுன்னு தூபம் போட்டுச்சு... ஆனா மீரா 'ஆதெல்லாம் இல்லா... நான் அல்லார்க்கிட்டயும் சூப்பர் பவருல்ல போண்ணு... நாந்தான் இங்க நல்ல்ல்லா வெள்ளாடுறேன்னு சோலோணும்'ன்னு சொல்ல, செயல் விளக்க பொதுக்கூட்டம் போட முடிவானது.

இதற்கு முன்னே 'மச்சான்... நான் ஜாலிக்குத்தான் சொன்னேன்... அது உன்னைப் பாதிச்சிருச்சு... மன்னிச்சிக்க' அப்படின்னு கவின் மன்னிப்பும் கேட்டு, மோகனைப் போல முத்தமெல்லாம் கொடுக்காமல் கையோடு கை குத்தி சமாதானக் கொடி நாட்டிட்டுத்தான் குளிக்கப் போனான். திரும்பி வரும்போது பொதுக்கூட்ட ஏற்பாடு, 'என்ன மச்சான்... இப்பத்தானே மன்னிப்பெல்லாம் கேட்டேன்... மறுக்காத் தூக்கிட்டு வந்திருக்கே... உனக்கு இப்ப என்ன பிரச்சினை'ன்னு கவின் கேட்க, 'இல்லா மாச்சீ... எல்லார் முன்னாலயும் நாந்தான் அந்தக் கடிகாரத்துக்கிட்ட போனேன்... சாண்டிக்குத்தான் எல்லாக் கிரிடிட்டும் போகுதுன்னு வெளக்கமாச் சோலோணும்.... அதான்' அப்படின்னு பஞ்சாயத்தைக் கூட்டிட்டு போற போக்குல 'மாச்சீ நா பேசோனுமுன்னுதான் சொனேன்...சாக்சிதான் இந்தக் கூட்ட ஏற்ப்பாடெல்லாம்'ன்னு பிட்டைப் போட்டுவிட, ஏழரை பனை மர உச்சியில ஏறிக்கிட்டு கள்ளுக்குடிக்க ஆரம்பிச்சிருச்சி.

சாக்சி பேச, மீரா பேசியதையே பேச, எல்லாரும் பேச, உடும்பு மாதிரி பிடிச்ச பிடியை விடாமல் 'மாச்சீ... நான் இதைச் சொன்னேன்.. அப்புறம் நீ இதைச் சொன்னே'ன்னு தேஞ்ச ரெக்கார்ட் மாதிரி மீரா பேச... ஒரு கட்டத்துல சாக்சி 'நீ என்ன லூசாப்பா... இல்ல லூசு மாதிரி நடிக்கிறியாப்பான்னு கேட்டதும் மீரா எப்பவும் போல் படுக்கையில் விழுந்து சரியாக கேமராவில் முகம் தெரிவது போல் படுத்து கண்ணீரைக் கக்கிக் கொண்டிருந்தது.

சாக்லெட் பிரச்சினையில் லாஸ்லியாவுடன் கவின் பேச, நான் வெளியில வந்துட்டேன்... எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... நீ சாக்சிக்கிட்ட பேசுன்னு சொல்லிட்டு லாஸ் போக... கவின் மீண்டும் சாக்சியிடம் பேச, அவளும் முறுக்கிக் கொண்டே நிற்க, பாத்ரூமிற்குள் இருப்பவளுக்காக கதவுக்கு வெளியே தேவுடு காத்து நின்றான். அவ உள்ள அழுக , அங்க வந்த லாஸ் எதுவும் தெரியாதுபோல நீ இப்ப சரியாயிட்டேல்லன்னு சொல்லிட்டுப் போக, அப்புறம் ஷெரின் வந்து சாக்சிக்கிட்ட பேசி, பாத்ரூமுக்குள்ள போயி ஆறுதல் சொல்லி, வெளிய வந்த சாக்சி நான் சரியாயிட்டேன்... நீ போயி சாப்பிடு என ஒரு பிட்டைப் போட, மீண்டும் லாஸ்சுடன் பேச... சாக்சி தூக்கம் வராது தவிக்க... இந்தக் கதைதான்யா ரொம்ப நேரமாத் தொடர்ந்துச்சு... பயபுள்ள நான் உங்களை லல்வலைடின்னு சொல்லித் தொலையாம மச்சான் மச்சான்னு ராவெல்லாம் சுத்துறான்.

மறுநாள் காலையில பிக்பாஸ் 'ஊருவிட்டு ஊருவந்துன்னு ' டைமிங்கா பாட்டுப் போடுறாராம்... எப்பவும் ஆடுறவங்க ஆடலை... கவின் எழவே இல்லை... சாண்டியோட சாண் டவுசரைப் போட்டுக்கிட்டு சாக்சிதான் ஆடுச்சு... அப்புறம் இந்தக் கருமாந்திரம் புடிச்ச சாக்லெட்டும் கடிகாரமும் சுற்றிச் சுற்றியே வந்துச்சு. பிரச்சினைக்கான முடிவு எட்டப்படவேயில்லை. இதுல இடையில எப்பவாச்சும் சரவணன் கம்பு சுத்துவாரு... அவருக்கு சேரனைப் பாத்தால் பத்திக்கும்... மோகனுக்கு சரவணனைப் பார்த்தால் பத்திக்கும்... இப்படிப் போன நாள்ல அடுத்த இரண்டு சுற்று கடிகார அலாரத்துல கலந்துக்கிட்டவங்க வெற்றி பெறலை என்பதால் மொத்தம் 1200 மார்க்த்தான் வாங்குனாங்க... அதுலயும் ஒவ்வொரு ஆளா சிகரெடு குடிக்கிற வச்சிருக்கிற தபால் பெட்டிக்குள்ள போகணுங்கிறதுதான் சட்டம்... கூட்டமாப் போயி குப்புக்குப்புன்னு ஊதக்கூடாதுன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன். கேக்க மாட்டேங்கிறீங்களேன்னு பிக்பாஸ், தலைவி சாக்சி செய்த தவறுக்காக 100 மார்க்கை ஆட்டையைப் போட்டுட்டாரு... அப்ப 1100 மார்க்குத்தான் இந்த வார பட்ஜெட்டுக்கு.... 2400க்கு மேல மார்க் வாங்கி பட்ஜெட்ல பக்காவா வாங்கித் தின்னவங்க அதுல பாதிக்கு எப்படி வாங்கித் திம்பாங்கன்னு நமக்குத் தோணுனாலும் மார்க்ப்படித்தான் கொடுக்கப்படும்ன்னு நம்பிக்கிட்டு இருந்தோம்ன்னா நம்மளை மாதிரி லூசு யாருமில்லை.

அப்புறம் நல்லா வெளாண்டவங்க ஆருன்னு பிக்பாஸ் கொக்கியைப் போட, ரேஷ்மா, சாண்டி அப்புறம் சரவணன்னு சொல்ல சிலர் சேரன்னு சொன்னாங்க... உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு... சரவணனுக்கு ஆறு... சேரனுக்கு அஞ்சு... உடனே தலைவி சாக்சி என் வாக்கை சேரனுக்குப் போடுறேன்னு சொன்னதும் உலகக் கோப்பை பைனல் மாதிரி திக்திக்குன்னு சூப்பர் ஓவருக்குப் போயிருச்சு...தன்னோட ஓட்டு தனக்கே என சரவணன் சொல்ல, என்னோட ஓட்டும் உனக்குத்தாய்யா என சேரன் சொல்ல, சரவணன் இந்த வாரத் தலைவருக்கான இருவரோடு மூவரானார். தனக்கான எதையும் சரவணன் விட்டுக் கொடுப்பதில்லை எப்போதும். சேரன் எதிரி என்பவர் எதிரியின் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று சொல்லவேயில்லை.

அப்புறம் யாருடா நல்லாவே விளையாடலைன்னதும் சாக்சி, மீரா பெயர் சொல்ல, சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். ஆஹா... அடிச்சி ஆட சரியான ஆளுகளைத்தான் கூண்டுக்குள்ள போடுறாங்கன்னு தோணுச்சு. அங்க சாக்சியோட மற்றவர்கள் பேசப்பேச, மீராவுக்குள் சுனாமி சுழல ஆரம்பிக்க, பேசிக்கிட்டே இருக்காங்க... எரிச்சலா இருக்குன்னு சொல்லிட்டு பாத்ரூமுக்குள்ள போயி படுத்துக்கிச்சு... வெளிய வரவே இல்லை... பிக்பாஸ் அந்தப்புள்ள என்னாச்சுன்னு கத்த, சாண்டியோ உள்ள பால் உருட்டி விளையாடும்ன்னு சொன்னதும் சேரன் அங்க எந்தப் பாலையை உருட்டி விளையாடும்ன்னு கேட்டு வைக்க, சாண்டியோ தியானம் பண்ணும் என்பதாய் முடித்து வைத்தார்.

பாட்டரி மாத்தும்மான்னு பிக்பாஸ் மீராவை வெளியே கொண்டு வர, கேமராவுக்கு முன்னால போயி நான் ரொம்ப நல்லவ... எல்லாரும் என்னைய படையப்பா ரம்யா கிருஷ்ணனாப் பாக்குறாங்கன்னு சீனைப் போட்டுச்சு... அப்புறம் 'உன்னை விட்டால் யாருமில்லை' அப்படின்னு சாக்சியும் மீராவும் பேச, நேத்து என்னா நந்துச்சுன்னா... கவின்... அலாரம்... சாண்டி... நீ... நான்.... ரேஷ்மா... அப்ப நீ கூட... நான் இதை... அப்ப நீ அதை... அப்படின்னு மறுபடியும் ஆரம்பிச்சி எப்பவோ செத்துப்போன எங்க ஆயாவை சாவுறதுக்கு முதநாளு நீ லூசுன்னு திட்டுனியேன்னு வந்து நின்னுச்சு... இடையில ரேஷ்மா, ஷெரினெல்லாம் பேசியும் மீரா மீட்டுவதைவிடவில்லை... இந்தச் சண்டையில் கொஞ்ச நேரம் பாத்ரூமுக்குள் மகிழ்வாய் ஆட்டம் போட்டான் கவின். அப்புறம் சாக்சி அழ, எல்லாரும் ஆறுதல் சொல்ல... சேரனும் போனது சரவணனுக்கு சாண்டிக்கும் பிடிக்கலை... சண்டையப்போ எங்கோ போனானுங்கன்னு சொன்ன அவங்க ரெண்டு பேரும் வேடிக்கைதான் பார்த்தாங்க.... இங்க யாருமே எதையும் கண்டுக்கிறதில்லைன்னு ரேஷ்மா சொன்னப்போ ஆமாமா யாருமே கண்டுக்கிறதில்லைன்னு ஏதோ இவங்க ரெண்டு பேரும் எல்லாப் பிரச்சினையிலும் முன் நிக்கிறமாதிரி தலையாட்டுனாங்க.

அப்புறம்... அப்புறம்... சரி இதே புராணத்தை எவ்வளவு நேரம்தான் பேசுறது... கவினிடம் பேசிய சேரன் ரெண்டு பொண்ணுங்களோட மனசையும் நீ பாதிச்சிருக்கே.... இப்ப உன் மேல இருக்க அழுக்கைக் கழுவ, உன்னைய எல்லாரும் புறம் பேசாம இருக்க எல்லார் முன்னாடியும் உன்னோட நிலை என்னங்கிறதை எடுத்துச் சொல்லு... விரிவாப் பேசுன்னு சொல்லலை... பட் கொஞ்சமாவது பேசினால் நல்லாயிருக்கும்ன்னு சொல்ல, அதை அறிந்த சாண்டி எல்லார்க்கிட்டயும் எதுக்கு நீ சாரி கேக்கணும்ன்னு குதிச்சார். அப்புறம் கவின் என்ன நினைத்தானோ எல்லார்க்கிட்டயும் நான் விளையாட்டாத்தான் விளையாண்டேன்... இம்புட்டுத்தூரம் வந்திருச்சுன்னு சொல்லி சாரி கேட்டுட்டு, சாக்சிக்கிட்ட பேச நினைக்க, அவ முறுக்க... பய பாத்ரூம்க்குள்ள போயி கேவிக்கேவி அழுக ஆரம்பிச்சிட்டான்... அப்புறம் ரேஷ்மா, சாண்டி, முத்த  அப்பா மோகன் எல்லாம் சமாதானம் பேச, என்னைய விடுங்கடா வீட்டுக்குப் போறேன்னு நின்னான். சாக்சி பேச வர, வேண்டான்னு சொல்லிட்டான். 

ரெண்டு பொண்ணுங்களின் உணர்ச்சியோட விளையாண்ட கவின், சாக்சியை லவ்வியது உண்மையே என்பது வெட்ட வெளிச்சமாகிறது. அதேபோல் இங்க எப்பவும் போல் இருக்கலாம்... வெளியில போயி லவ்விக்கலாம்ன்னு பயபுள்ள சொல்லியிருக்கு... அப்புறம் லாஸ்வியாவோட நடத்தை, வெளியில் இருக்கும் மக்கள் செல்வாக்கு, சாக்சியோட அடிக்கடி மாறும் மனநிலை என எல்லாமாய் சாக்சியை விடுத்து லாஸ்லியாவை லவ்வச் சொல்லியிருக்கு... அதைத்தான் சாக்சியும் சேரனும் சொல்றாங்க.... ரெண்டு குதிரையை ஓட்டிட்டு மச்சான்... மச்சான்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச குற்றவாளி கவின்தான் என்பதால் அதை உணர்ந்தே எஸ்கேப் ஆகப் பார்க்கிறான்... அதுக்கே இந்த அழுகை சீனெல்லாம் என்றாலும் ஆம்பளை கேவிக்கேவி அழுததெல்லாம் வருத்தமாத்தான் இருந்துச்சு.

சேரன் சொன்னதுதான் தப்புன்னு சாண்டி ஒரு பக்கம் எல்லார்க்கிட்டயும் ஏத்திவிட்டுக்கிட்டு இருக்கார்... அவரும் எத்தனை நாள்தான் வடிவேலாவே இருக்கிறது... ரகுவரன் ஆக வேண்டாமா...? சேரனோ நான் எல்லார்க்கிட்டயும் பொதுப்படையாப் பேசு... அப்பத்தான் உம்மேல அவங்க வச்சிருக்கிற கெட்ட எண்ணம் மாறும்ன்னுதான் சொன்னேன்... சாரி கேளுன்னு சொல்லவே இல்லை என ரேஷ்மா, சாக்சியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதுதான் உண்மையும் கூட... அதை ஏன் கவின் சொல்ல மறுக்கிறான்னு தெரியலை.

இதுக்கு இடையில லாஸ்லியாவோட பேசுற கவின், ஏம்மச்சான் தள்ளி உக்காந்திருக்கே... கிட்ட வான்னு சொல்றான். அப்பவும் அவனுக்கு கிளுகிளுப்புக் கேக்குது... கொய்யால... அந்தப்புள்ளயும் நான் வெளிய வந்துட்டேன்... சாக்சிகிட்ட பேசு... ரெண்டு பேரோட உணர்ச்சி கூட உன்னால எப்படி விளையாட முடிஞ்சது... சாக்சிக்கிட்ட பேசுனப்போதான் உன்னோட உண்மை முகம் தெரிஞ்சது... நான் வெளிய வந்துட்டேன்... எங்கிட்ட சாரி கேக்காத... அதை நான் ஏத்துக்க மாட்டேன்னு... தன்னோட காதலை மறைத்து அப்படி ஒண்ணு இல்லமே இல்லைன்னு சிவாஜி மாதிரி நடிச்சிச்சு... ஆனா கையை உடம்புல போட்டு தேய்த்த தேய்ல அதோட வலி தெரிஞ்சிச்சு.

இதுக்கு இடையில நீயா நானா போட்டி வேற... நடுவர் மீரா... எப்படி நடந்திருக்கும்ன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க... இந்த மீராவை வலுக்கட்டாயமாவாச்சும் பிக்பாஸ் வெளியேத்தணும் இல்லேன்னா டிஆர்பி உயரத்துல பறக்கும்ங்கிற கனவுல மண்ணுதான் விழும். மீரா பேச ஆரம்பித்தாலே தியேட்டர்ல பாட்டு வந்ததும் பாத்ரூம் போற மாதிரி எந்திரிச்சிப் போக வேண்டியிருக்கு.

இத்தனை கலவரத்துலயும் கட்டிக்கொடு மோகன் லாஸ், சாக்ன்னு தன்னோட கடமையை நிறைவேற்றிக் கொண்டதுடன் கூடுதலாய் கவினுக்கும் கொடுத்து நாளொன்றுக்கு மூன்று என்ற தனது கணக்கை நிறைவாய் பூர்த்தி செய்து கொண்டார்.

நடிப்பே என்றாலும் இரண்டு பெண்களின் உணர்ச்சியுடன் விளையாண்டது மிகப்பெரிய தவறு என்பதை கவின் உணர்வதாய்த் தெரியவில்லை... இவ இல்லேன்னா அவ என்பதில் இருந்து அவன் வெளிவர நினைக்கவில்லை... இந்தக் காதல் கதை இன்னும் தொடரத்தான் செய்யும்... பின்னே பிக்பாஸ் விடுவாரா என்ன... அவரே எதிர்பார்க்காத திரைக்கதையாகக் கூட இது இருக்கலாம். பாவம் இரண்டு பெண்களும் தூக்கத்தைத் தொலைத்து அலைகிறார்கள்... அதுவும் ஆடிக்கொண்டு திரிந்த லாஸ்லியாவின் சோக முகம் பார்க்கச் சகிக்கலை.

இதுல லாஸ்லியாவின் செயலால் பாதிக்கப்பட்ட ஷெரின், மூணு நாளைக்குப் பிறகு மூக்கால அழுது... என்னத்தைச் சொல்ல... கேமராவை எம்பக்கம் திருப்புங்கப்பான்னு ஆளாளுக்கு அழ ஆரம்பித்ததில் மது, அபிராமியெல்லாம் வீட்டுக்குள் இருக்காங்களான்னே தெரியாமப் போச்சு... ரேஷ்மா கவின் விஷயத்தில் மிகத் தெளிவாய்ப் பேசுவது சிறப்பு.  

சாண்டி எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்க்கும் நபராய் இருத்தல் தனக்கான பாதுகாப்பு என்று நினைத்தாலும் இதுவும் தொடர்தல் நல்லதல்ல.

நேற்றும் இன்றும் என்ன நிகழ்ந்தோ தெரியவில்லை... இன்று ஆண்டவரின் வருகையில் மீரா குறும்படம் போட்டா எல்லாம் தெரியும் என ஆண்டவருக்கு கட்டளை இடுவதை நிறைவேற்றுவாரா... கவின் காதல் பிரச்சினைக்கு தீர்வு சொல்வாரா... மோகனின் கட்டிக்கொடுவை கண்டிப்பாரா... சேரன் சொன்னது சரி என்பாரா... சாண்டியின் பார்வை சரி என்பாரா... லாஸ்லியா ஷெரின் பிரச்சினையில் யார் பக்கம் நியாயம் என்பாரா... என பல 'பாரா'க்களுக்கான விடைகளுக்காக காத்திருப்போம்...

பிக்பாஸ் தொடரும்.

பிக்பாஸ் பார்ப்பது தவறா..? என்ற எனது கட்டுரை ஹிக்ஸிக் தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாசிக்க நினைத்தால்...

-'பரிவை' சே.குமார்.