மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 1 ஜூலை, 2013

'அன்னக்கொடி' விஷமிகள் புகுகிறார்கள் உஷார்: பாரதிராஜா வேண்டுகோள்!

அன்னக்கொடி திரைப்படம் தொடர்பாக சிலர் விஷமத்தனமான காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இதை மக்கள் உணர்ந்து, உண்மை தெரிந்து செயல்பட வேண்டும். அவர்களின் விஷமத்தனத்திற்கு பலியாகி விடக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா கோரியுள்ளார்.


இதுகுறித்து பாரதிராஜா கூறியிருப்பதாவது: மனிதர்கள் எல்லோருக்கும் வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு தெய்வங்கள் இருக்கிறது. இந்துக்களுக்கென்றும், கிறிஸ்தவர்களுக்கென்றும், முஸ்லீம்களுக்கென்றும் வெவ்வேறு வழிபாடுகள் இருக்கிறது. ஆனால், என்மீதும் என் படைப்பின் மீதும் குற்றம் கண்டுபிடித்துள்ள என் மக்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள், 

நாம் மதங்களற்ற மனிதர்களென்பதை. நம் முன்னோர்கள் வழிபடும் குலதெய்வங்கள், அதற்கு முன்னோடியாக உள்ளவர்களைத்தான் நாம் வழிபடுகிறோம் என்பதும் எனக்கு தெரியும். இது தாய் வழி தெய்வங்களையும், தந்தை வழி தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். அதன் வழியிலே மாமன், மச்சான் பங்காளி உறவுகளை கொண்டாடி வருகிறோம். 

"ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்" என்பது பழமொழி. கண்ணகி காலத்தில் திருட்டு சிலம்பு என சந்தேகப்பட்டதனாலே "கோவலனை கொண்டு வா" என்ற வார்த்தையை தவறாக கொண்டு, " கொன்று வா" என திருத்திச் சொன்னதால் மதுரை எரிந்த கதை உண்டு.


எம் மண்ணின் தெய்வங்களை, எம் முன்னோர்களை, வணங்குதல்குரிய தெய்வங்களை, எந்த காலத்திலும் நான் களங்கம் ஏற்படுத்தியதில்லை. கருமாத்தூர் கோவிலை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்று, ஒரு அறக்கட்டளையை நிர்மாணிக்க இருந்தவன்தான் இந்த பாரதிராஜா என்பதும் எம் மக்களுக்குத் தெரியும். 

நாம் வணங்கும் மூனுசாமிக்கும், முனிசாமிக்கும் வித்தியாசம் உண்டு. மூனு சாமி என்பது முக்குலத்தோர் சாமி. முனிசாமியை முனி என்றும் சொல்கிறோம். என் "அன்னக்கொடி" திரைப்படத்தை பார்த்து, அந்த வார்த்தையை உற்று கவனித்து, முனிசாமியா, மூனுசாமியா என்பதை தீர்க்கமாக தெரிந்துகொண்டு, அதன்பின் என் மக்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். 

இன்னொன்று, வட்டார வழக்கில் வந்துள்ள என் "அன்னக்கொடி" படைப்பு எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல் இது எந்த ஒரு தனிப்பட்ட வட்டாரத்திற்கும் சொந்தமானதல்ல. இது அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து வட்டாரங்களுக்கும் சொந்தமான ஒரு பொதுவான கதை.


சமூகம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் எம் மக்கள் அதை உணர்ந்து கொள்ளவேண்டும். திட்டமிட்டு சிலர் செய்யும் விஷமதனத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

அன்னக்கொடி படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பார்வர்ட் பிளாக் கட்சியினர் சிலர் நேற்று தேனியில் உள்ள பாரதிராஜாவின் வீட்டைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தி பரபரப்பைக் கிளப்பினார்கள் என்பது நினைவிருக்கலாம்.


-கட்டுரைக்கு நன்றி  : தட்ஸ் தமிழ் இணைய இதழ்
-படங்களுக்கு நன்றி : இணையம்
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

வாயை கொடுத்து வாங்கிக்கட்டிக்கொல்வதில் பாரதிராஜாவை அடிச்சிக்க ஆளே இல்லை...

ttpian சொன்னது…

always drunkard

ம.தி.சுதா சொன்னது…

பாரதிராசு மௌனவிரதம் இருந்தாலே தேறிடும்..

ம.தி.சுதா சொன்னது…

உங்கள் புறோபைலை புளொக்கருக்கு மாத்துங்கண்ணா அல்லது கூகுல் பிளசில் புளொக் விபரங்கள் இடுங்கள் அடிக்கடி வந்து புளோக் லிங எடுக்க முடியாமல் ஏமாந்து போயிருக்கிறேன் (மொபைலில்)