இன்று மாட்டுப் பொங்கல்... மனம் முழுவதும் ஊரில்தான் இருந்தது... சென்ற ஆண்டு சிரமங்களுடன் பயணித்தபோதும் பொங்கலுக்கு ஊரில் இருந்தேன்... மாட்டுப் பொங்கல் என்பது ஊரே கூடிக் கொண்டாடும் ஒரு நிகழ்வு என்பதால் மகிழ்வுக்குக் குறைவிருக்காது. அதை அனுபவித்து வாழ்ந்திருந்தால் மட்டுமே அதன் மகிழ்வுக்கு எல்லையே இல்லை என்பது புரியும்.
வெள்ளி, 15 ஜனவரி, 2021
வெள்ளி, 8 ஜனவரி, 2021
மனசின் பக்கம் : மன நிறைவான செய்திகள்
பிக்பாஸ் தொன்னூறு நாட்களைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட 50 பதிவுகள் எழுதியிருக்கிறோம் தமிழ்டாக்ஸ் தளத்தில்... உண்மையிலேயே தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிருப்பவர் தமிழ்டாக்ஸ் தளத்தின் இணையாசிரியர் சிவமணிதான்... இப்ப இருக்கும் ஏழு பேரில் ஆரிக்கே வெளியில் வாக்குகள் அதிகம் கிடைப்பதைப் பார்க்கலாம்... ஆனால் வீட்டுக்குள் எல்லாருக்குமே பிடிக்காத ஒரு மனிதர் என்றால் அது ஆரிதான்.
வெள்ளி, 1 ஜனவரி, 2021
மனசு பேசுகிறது : 2020 - இழந்ததும் பெற்றதும்
கொரோனாவின் வருடமான 2020-ன் ஆரம்பத்தில் ஊருக்கு வரும்போது இங்கு மிகப்பெரிய பிரச்சினை... அதிலிருந்து வெளிவந்து அதன் பின் ஊருக்கு வந்தபின் உடல் நிலையின் காரணமாக தேவகோட்டைக்கும் மதுரைக்கும் அலைந்ததுதான் மிச்சமாய் இருந்தது.
செவ்வாய், 22 டிசம்பர், 2020
மனசு பேசுகிறது : போட்டிகளும் நாவலும்
Bharatwriters.com இணையதளத்தில் எனது மூன்றாவது கதை 'வாழ்க்கைச் சக்கரம்' இந்த வாரம் வெளியாகியிருக்கிறது. ஒரு வாரம் இந்த இதழ் பார்வைக்கு இருக்கும்... அதாவது ஞாயிறு முதல் வரும் சனி வரை... இந்த ஒரு வாரத்தில் கிடைக்கும் விருப்பக்குறியின் அடிப்படையில் மதிப்பெண்ணும் அதற்கான வெகுமதியும் உண்டு என்பது அவர்களின் விதிமுறை.
வெள்ளி, 27 நவம்பர், 2020
மனசு பேசுகிறது : வரவேற்பைப் பெற்ற மின்னிதழ்கள்
கொரோனா காலத்தில் உதயமான இரண்டு இணைய மின் இதழ்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. ஒன்று புதிய தலைமுறையில் ஆசிரியராய் இருந்த பெ.கருணாகரன் சாரின் கல்கோனா... மற்றொன்று பாக்யா வார இதழில் பணிபுரியும் எஸ்.எஸ்.பூங்கதிர் சாரின் கதிர்'ஸ்.
ஞாயிறு, 22 நவம்பர், 2020
மனசு பேசுகிறது : எதிரொலி முதல் கறுப்பி வரை
Bharatwriters.com என்னும் தளத்தில் எனது இரண்டாவது சிறுகதை வெளியாகியிருக்கிறது. Mini Stories என்னும் தலைப்பின் கீழ் இருக்கும் ஐந்து கதைகளில் ஐந்தாவது கதையாக வெளியாகியிருக்கிறது. 'எதிரொலி' என்னும் தலைப்பில் இருக்கும் கதையை வாசித்து, மறக்காமல் விருப்பக்குறி இடுங்கள்... வரும் விருப்பக்குறிகளைப் பொறுத்து அந்தக் கதைக்கான சன்மானம் அமையும்...