மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 22 ஜூலை, 2013

கோச்சடையான் கைவிடப்பட்டதா?- தயாரிப்பாளர் விளக்கம்

கடந்த சில தினங்களாக ரசிகர்கள் மத்தியில் உலாவரும் பரபரப்பு கேள்வி கோச்சடையான் படத்தை கைவிட்டுவிட்டார்களாமே என்பதுதான். ஆரம்பத்தில் இந்தக் கேள்வியை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் நாளாக ஆக, இந்த கேள்விகள் ஒரு செய்தியாகவே மாறும் அளவுக்கு பெரிதாகிவிட்டன. 

சில இணையதளங்களும் அதேபோல செய்தியை வெளியிட்டு வருகின்றன. ஆனால் ரஜினி தரப்பிலோ, படத்தின் இயக்குநர் சௌந்தர்யா தரப்பிலோ எந்த விளக்கமும் இல்லை. 

என்னது... கோச்சடையான் கைவிடப்பட்டதா?- தயாரிப்பாளர் விளக்கம்

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு நாம் விசாரித்தோம். இதுகுறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் கூறுகையில், 

"இதெல்லாம் மிகத் தவறான செய்திகள். இந்தப் படத்தின் ப்ரமோஷனை மனதில் வைத்து நாங்கள் திட்டமிட்ட ஓரிரு நிகழ்ச்சிகளை தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் மிக நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். 

படத்தின் பிரமாண்டம் பார்த்தவர்களை பிரமிக்க வைத்துள்ளது. ரஜினி சார் டப்பிங்கைக் கூட முடித்துவிட்டார். இன்னும் கொஞ்சம் வேலைகள் முடிந்த பிறகு இசை மற்றும் பாடல்களை வெளியிடவிருக்கிறோம். ஆனால் அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால், பொறுமை காக்கிறோம். ரஜினி சார் ரசிகர்கள் புரிந்து கொண்டு ஒரு நல்ல படத்துக்காக காத்திருப்பார்கள் என நம்புகிறேன்," என்றார்.

நன்றி : தட்ஸ் தமிழ் இணையம்
-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி!திரைப் படத்தையும் ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கிறோம்!/காத்திருப்போம்!